Jump to content

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 31 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 31 தொழிலாளர்கள் பலியாகினர்; 25 பேர் காயமடைந்தனர்.

மேலும் சுமார் 100 பேர் சிக்கி தவிக்கும் நிலையில்,அவர்களை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணியில் 184 தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.40-க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது.இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது.அங்கு இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக இருந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 60 தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

45 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் உள்ள 45 அறைகளில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அந்த அறைகள் முழுவதுமே தீப்பிடித்து எரிந்த நிலையில், பட்டாசு மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் வெடித்து சிதறிக்கொண்டே இருந்ததால்,தீயணைப்பு வீரர்கள் உள்ளே நெருங்க முடியாமல் தவித்தனர்.இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

ஆனாலும் கடும் சிரமத்துடன் அவர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உள்ளே வெடிசத்தம் கேட்டு கொண்டு இருப்பதால் வேலை பார்த்து கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

இந்த விபத்தில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.25 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பட்டாசுகள் நாசம்

இந்த தீ விபத்தில் தீபாவளி பண்டிகைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து நாசமானது.

வேடிக்கை பார்த்த 50 பேர் மயக்கம்

மேலும் தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்த சுமார் 50 பேர் மயங்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விகடன் செய்திகள்

Link to comment
Share on other sites

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

தீவிபத்து ஏற்படும்போது ஊழியர்கள்/மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்விதமாக (Emergency egress) கட்டடங்களை வடிவமைக்க வேண்டும். இந்திய யூனியன் இதற்கான சட்டங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாடு அரசு இந்த வரைமுறைகளைக் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே கட்டப்பட்டுவிட்ட கட்டடங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். [/size][/size]

[size=4]தமிழக அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். [/size]

Link to comment
Share on other sites

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 33 பேர் பலி

[size=2]சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் ஆலையில் தீ விபத்து நிகழ்ந்தது. ஒரு பட்டாசு அறையில் பிடித்த தீ 45 அறைகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. [/size]

[size=2]இதில் பட்டாசுகள் ஆங்காங்கே வெடிக்க ஆரம்பித்தன. இதில் 40 க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து தரைமட் டமானது. இந்த விபத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர்.[/size]

[size=2]

[size=2]விபத்தில் பலியான 19 பேர் உடல் சிவகாசி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் இறந்தவர்களில் 13 தொழிலாளர்உடல் சாந்தூர் மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன. மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவ மனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.[/size]

[/size][size=2]

[size=2]அமைச்சர்கள் ஓ.பி.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, ராஜேந்திரபாலாஜி, ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்படோருக்கு ஆறுதல் கூற சென்றனர்.[/size][/size]

[size=2]

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=82035[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட வேண்டும்..! உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் பாதுகாப்பிலாத ஏழைகளின் உயிர்ப்பலி . இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆவன செய்யப்பட வேண்டும். பட்டாசு தொழிற் சாலையின் கட்டிட நிர்மாணம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். மற்றவர் மகிழ்வுக்காக வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வெடித்துப்போன உயிர்களுக்கு என ஆழ்ந்த் அஞ்சலிகள். .

Link to comment
Share on other sites

பட்டாசு விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து மேலும் இவை நடைபெரமாலும் இறந்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க்கவும் முதல்வரும் தமிழ் நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..... ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்......! :( இப்படியான விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்புகள் இனியாவது செய்து கொடுக்கப்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... எந்தப் பண்டிகையும், இல்லாத நிலையில்... தயாரித்த பட்டாசுகளை 45 அறைகளில், தொழிலாளர் வேலை செய்யும் இடத்தில் சேமித்து வைக்காமலிருந்திருந்தால்... உயிர்ச்சேதம் குறைவாக இருந்திருக்கும். லஞ்சமும், ஊழலும்... உள்ள அதிகாரிகளால்... உயிரை இழந்தது அப்பாவி மக்களே....

இனியாவது பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து, பாடசாலை தீ விபத்து ஏற்படாமலிருக்க தீவிரமாக கண்காணியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கபட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், விபத்தில் காயமடைந்தோ விரைவாக குணமடைய பிராத்திர்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாண மண்டபத்தில் தீ.. பட்டாசு ஆலையில் தீ.. பாலம் இடிந்து வீழ்ந்து மக்கள் பலி.. வாகன விபத்தில் பலி.. ரெயில் பெட்டியில் தீ.. கடைத் தொகுதியில் தீ.. மழையில்.. குடிசைகள் இடிந்து வீழ்ந்து மக்கள் பலி.. குடிசைகள் தீயில் கருகி மக்கள் சாவு.. பள்ளிச் சிறுமி பஸ்ஸின் தூவரத்தூடு விழுந்து பலி.. ஆட்டோவில் இருந்து பயணி தவறி விழுந்து பலி... இவை போன்ற இன்னோரென்ன.. அநாவசிய பலிகளுக்கும் காரணம்.. தகுந்த பாதுகாப்பின்மையும்.. கவனம் இன்மையும்.. அரசுகளின் ஊழியர்களின் முதலாளிகளின் மெத்தனப் போக்கும் சட்டம் விதிகள் சரியான வகையில் அமுல்படுத்தப்படாமையும் ஆகும்.

தமிழகத்தை உருப்படியான ஒரு தமிழன் ஆளும் வரை இந்த நிலை தொடரும்..! எனி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களுக்கு 5 இலட்சமும்.. காயமுற்றவர்களுக்கு ஒரு இலட்சமோ.. 50,000 கொடுத்து சரிக்கட்டி விட்டு.. அடுத்த விபத்துக்கு எதிர்பார்த்திருப்பார் முதலமைச்சர்..! எதிர்கட்சிகளோ.. இரண்டு நாள் கூச்சலிட்டிட்டு 3 நாள் தாங்கள் அதில காசு பிடுங்க போயிடுங்கள்..!

என்னவோ பாவம் அப்பாவி ஏழை மக்கள் தான்.. அநியாயமாக இங்கு வாழ்வை இழக்கிறார்கள். இவற்றிற்கு முடிவு தான் எப்போ..???!

அநியாயமாய் இறந்து போன உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற எல்லோருக்கும் பொதுவான கடவுளை பிரார்த்திக்கிறோம். மனிசனை நம்பிறதிலும்.. கடவுளை நம்பலாம் போல இருக்குது..! :icon_idea::(

Blaze at India fireworks factory 'kills 34'

_62703787_015878292.jpg

http://www.bbc.co.uk/news/world-asia-india-19486175

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். நாட்டை திருடி அரசியல் நடத்தியாயிற்று. பொதுமக்கள் இப்படி அனுபவிக்க வேண்டியதாயிற்று. தமிழகத்தின் செல்வம் மிக்க குடும்பம் தான் தேடிய சொத்திலிருந்து ஏழை தொழிலாளிகள் குடும்பங்களுக்கு உதவ முன் வேண்டும். வெடித்தொழில் கம்பனி் தனது தொழிலாளிகளுக்கு முறையான காப்புறுதி தன்னும் வைத்திருந்ததோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.சிவகாசியில் மட்டும் 700க்கும் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிலகாலங்களுக்கு முன் நெதர்லாந்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

விருதுநகர்: சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஏழு அறைகள் தரைமட்டமாகின. பணியிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்ற, 35 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை, 150 பேருக்கு மேல் உயரலாம் என அஞ்சப்படுகிறது. விருதுநகர் அருகே, சாத்தூர் சாலையில் உள்ளது, கன்னிச்சேரி; இதனருகே உள்ளது, முதலிப்பட்டி. இங்கு விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலரான முருகேசனுக்குச் சொந்தமான, ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இதை, திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி, குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் முதலிப்பட்டி, சுற்று கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலை, சில மாதங்களாக, தீபாவளிக்கான பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. நேற்று மதியம், 12.10 மணிக்கு, நவீன ரக பட்டாசு தயாரிப்பதற்காக, மணி மருந்தை செலுத்திய போது, உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள, ஏழு அறைகளும் தரைமட்டமாகின; 30 அறைகள் சேதமடைந்தன. விபத்தை அறிந்து, தியாகராஜபுரம், முதலிப்பட்டி, வச்சக்காரபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர், விபத்தில் சிக்கிய உறவினர்களை காப்பாற்ற, ஓடி வந்தனர். உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அவர்களை உள்ளே விடாது, வச்சக்காரபட்டி இன்ஸ்பெக்டர் ராஜா தடுத்தார். ஆனால் கிராமத்தினர், இன்ஸ்பெக்டரை தாக்கியபடி, ஆவேசமாக உள்ளே நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த ரசாயன குடோனும் வெடித்தது. காப்பாற்ற முயன்றவர்கள் அனைவரும், காயமடைந்தனர். இவர்கள், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாலை, 3.20 மணி தகவல்படி, 35 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது.

வெடிச் சத்தம், மாலை, 3.20 மணி வரை நீடித்தது. அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வெடிச்சத்தம் கேட்டது. சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வெடித்ததால், மாலை, 3.20 மணி வரை, ஆலைக்குள் செல்ல முடியவில்லை. வெடிச்சத்தம் குறையத் துவங்கியதும், மாலை 3.20 மணிக்கு, தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்

Dinamalar

* பட்டாசு தயாரிக்கும் அறையின் தரைப் பகுதியில், "தீப்பிடிக்காத மேட்' விரிக்கப்படவில்லை.

* ஊழியர்களும் பருத்தி ஆடைகளை அணியவில்லை.

* பாதுகாப்பற்ற அறையில், சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் வைத்திருந்ததால், இதுவே பெரும் விபத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

* வெடி விபத்து நடந்த ஆலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த பட்டாசுகள் அனைத்தும், பாதுகாப்பற்ற அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

* நேற்று நடந்த விபத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் தீ பரவியிருந்தால், வாடி, முதலிப்பட்டி கிராமங்கள் அழிந்திருக்கும் என, அப்பகுதி மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

தடைக்கு பிறகும் இயங்கிய ஆலை:

விபத்து நடந்த ஆலையில், துணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் ரெங்கசாமி, கடந்த, 28ம் தேதி ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆலையில், அளவுக்கு அதிகமான வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். விதி மீறியதாகக் கூறி, இந்த ஆலை தொடர்ந்து செயல்பட, தற்காலிக தடை விதித்துள்ளார். ஆனால் இதை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், ஆலையும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த முறைகேட்டால், தற்போது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

Dinamalar

Link to comment
Share on other sites

உடனடியாகவே ஸ்போட் க்கு போய் மக்களை தடுத்து அதனால் காயமாடைந்த அந்த இன்ஸ்பெக்டர் க்கு என்னோட சலூட்.

Link to comment
Share on other sites

அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் இவ்வளவு மக்கள் இறந்துள்ளார்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.