Jump to content

10,000 பதிவுகளை தந்த விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...........!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பொறுப்புடன் களத்தில் எழுதும் சகோதரர்களில் நீங்களும் ஒருவர் மேலும் பல ஆயிரம் கருத்து எழுதி சிறப்புற வாழ்த்துகின்றேன். [/size]

நன்றி சகோதரா

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

இந்த பொறுப்பாக இருத்தல்

எல்லோரரையும் அரவணைத்துப்போதல்

என்பனவற்றிற்காக சில நேரம் கணணியை நிறுததிவிட்டு இருந்திருக்கின்றேன்.

தமிழுக்கும் தாயகத்துக்கும் யாழுக்கும் கிடைத்த பெரும் சொத்து தாங்கள்.

அந்தவகையில் உங்களுடன் நானும் இங்கு இருக்கின்றேன் என்பது பெருமையே.

செய்திகளை இணைக்கும் முன் ஒருசிறு கண்ணோட்டம் விடுங்கள் யாழில். அது ஒரே செய்தி பலதடவை வருவதை தடுக்க ஓரளவு உதவலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா யாழ்களத்தின் உரிமைக்குரலாய் என்றும் ஒலிக்க

நன்றி சுண்டல் தம்பி

நேரத்துக்கும் வாழ்த்துக்கும் பட்டத்திற்கும்

சுண்டலிடம் உள்ள திறமைகள் கண்டு புல்லரித்ததுண்டு.

இப்பொழுது கூட

சாதாரணமாக எழுத்துப்பிழை விட்டு எழுதும் சுண்டல்

இந்த வாழ்த்தில் எவ்வளவு அழகாக தமிழ் எழுதியுள்ளார்.

உங்களிடம் பிடித்த இன்னுமொன்று

தாயகம் சம்பந்தமான தெளிவான பார்வை.

Link to comment
Share on other sites

தங்களின் வாழ்க்கையின்அடுத்தபடிக்காக வேண்டுதல் செய்கின்றேன்.

யாழில் வசனத்தின் நீளத்தைக்குறைத்து சுருக்கமாக எழுதினால் எல்லோராலும் விரும்பப்படுவீர்கள்.

வேண்டுதலுக்கு நன்றி அண்ணா :)

குமாரசாமி அண்ணாவும் ஒரு திரியில் இதனை குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு சுருக்கமாக எழுத தெரியாது... பார்க்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமென் சொல்லியே பத்தாயிரத்தைத் தொட்ட விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்துக்கும் உள்க்குத்துக்கும்

ஒரு மதம் சம்பந்தமான சொல் என்பதால் அதை பாவிப்பதை நிறுத்திவிட்டேன்.

எங்கள் சகலகலாவல்லவன் தாங்கள்.

இந்த 2 வீட்டுப்பிரச்சினையை :lol: முடித்துவிட்டு வந்து கொஞ்சம்கூடுதலாக எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :)

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை

கவிதை கட்டுரை என வளர்ந்த தாங்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் யாதோ???

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா! கனடாக் கட்டுரையை எழுதி முடிச்சிருந்தால் எப்பவோ 10,000 தாண்டி இருக்கலாம்... :D

நன்றி தம்பி குட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

கனடாக்கட்டுரை வரும்

ஆனால் அடுத்தமுறை போய் வந்ததும்.

கனடாக்கட்டுரையில் சிலவற்றை எழுதினேன். அதை வாசித்துப்பார்த்தபோது

ஒரு 15 நாள் நின்றவன் கனடா பற்றி அலசலாமா என்பது போலிருந்தது. ஒருவர் வந்து இதை கேள்வியாக்கினால் நான் வெட்கப்படவேண்டிவரும்.

எனவே அடுத்தமுறை போய் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

உங்களது எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு.

ஆனால் ஆளைக்காண முடிவதில்லை தற்போது.

நேரம் கிடைக்கும்போது கருத்துக்களை எழுத மறக்காதீர்கள். இங்கும் யாழ் குடும்பம் உங்களது வருகைக்காக காத்திருக்கு என்பதை நினைவில் வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு என் வாழ்த்துக்கள்! இது நீங்கள் எழுதிய பத்தாயிரத்திற்கு அல்ல.ஒரு நிஜமனிதனாக நின்று கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதிற்கு.....நன்றி ஐயா.

நன்றி அண்ணா

கருத்துக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

ஒரு நியமனிதன்.

இதைத்தான் நான் விரும்புகின்றேன். இதை அடைவதே மனித இலக்கு.

ஆனாலும் மிகவும் கடினமானது அது என்று அனுபவம் சொல்கிறது.

இருந்தாலும் யாழில் அதிலும் இங்கு அண்ணை என்று நான் அழைக்கும் தங்களிடமிருந்து அந்த வாக்கு வந்தது என் பாக்கியம்.

உடம்பைக்கவனியுங்கள் அண்ணா.

ஒரு நாள் உங்களை நான் சந்திப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் விசுகு அண்ணரோடு தீவிரமாக முரண்பட்டிருந்தாலும்.. அவரில் சில எல்லை மீறிய எழுத்துக்களுக்காக நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தாலும்.. பொதுவாக எல்லோரையும் அரவணைத்து கருத்துச் சொல்லும் அவரின் பாணி அவருக்கே உரித்தான தனி முத்திரை..!

இன்னும் பல ஆயிரங்களோடு வீறு நடை போட வாழ்த்துக்கள். அப்படியே உங்களுக்கு எழுதவும் யாழை படிக்கவும் சந்தர்ப்பம் வழங்கும் உங்க வீட்டு உறவுகளுக்கும் ஒரு நன்றியை பாஸ் பண்ணிவிடுங்க..! :):icon_idea:

நன்றி நெடுக்குத்தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும்... :lol:

பொதுவாக எனது எழுத்துக்கள் வெட்டு வாங்குவதில்லை. ஒருத்தரைக்காயப்படுத்தக்கூடாது. அவரின் மனம் புண்படக்கூடாது என்பதிலும் நிர்வாகத்தினருக்கு வேலை வைக்கக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பேன். இருந்தாலும் மறு கருத்தாளரின் வார்த்தை யாலங்கள் என்னையும் இக்கட்டுக்குள் தள்ளிவிடுவதுண்டு. இது பற்றி நானும் யோசித்ததுண்டு. அதில் வந்த பதில் நான் எல்லா திரிக்கும் எல்லா களகருத்தாளருக்கும் பதில் எழுதுவதால் தான் என்பது தெரிந்தது. அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்ப நிறுத்திக்கொண்டேன்.

தற்பொழுது தங்களையும் யாழில் காணமுடியவில்லை. ஏன்?

அத்துடன் நீங்கள்அதிகம் யாழில் பந்தி பந்தியாக எழுதும்போது ஒரு அண்ணனாக கோபம் வரும். படிப்பதை விட்டுவிட்டு இங்கு மினக்கெடுகிறரா என்று.

வயதும் பக்குவமும் வந்திருந்தாலும் அண்ணனாக அந்த கவனிப்பு என்றுமே உண்டு.

தாயகத்தின் சொத்து தாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும் [/size]

நன்றி பாட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பாராட்டுக்கும்

இவர் எனது குடும்பப்பாட்டி.

இல்லையென்றால் ஒருவரை பாட்டி என்று கருத்துக்களத்தில் எழுதமுடியுமா? எனக்கு மட்டும் அந்த அனுமதி.

பல ஆலோசனைகளை இவரிடமிருந்து பெற்றிருக்கின்றேன்.

அதனால்தான் அவர் ரீச்சர் எனக்கு.

பாட்டி

என்ன ஆளைக்காணக்கிடைக்குதில்லை.

எழுதுங்கள

வாசிக்க காத்திருக்கோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவரசங்களையும், வெளிப்படுத்தக் கூடிய, ஒரு கருத்தாளர், நீங்கள்!

ஒளிவு, மறைவில்லாத பதிவுகள்! அது எனக்குப் பிடித்தது!

ஆனால், இரண்டு கவலைகள் எனக்கு உண்டு!

முதலாவதாகத், துளசியின் வரிசையில் நாலாவதாகப் போய் விட்டீர்களே என்று!

இரண்டாவது, இந்த நாலுக்குள்ளும், சுண்டலைக் காணவில்லையே என்று! :icon_idea:

வாழ்த்துக்கள், விசுகர்!!!

நன்றி

தங்கள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

ஏதோ நம்மால் முடிந்தது.

நமது வரலாற்றை

அதில் நாம் கண்டவற்றை

அனுபவித்தவற்றை

நாம் கடந்து வந்தவைகளை

பதியணும் என்பதே எனது விருப்பும் தேவையும் கூட.

அந்தவகையில் தங்கள் வாழ்த்தின் ஊடாக அதை ஓரளவு நெருங்கியுள்ளேன் என்ற பெருமை கிடைக்கிறது.

எனது ஊரவன் என்ற இன்னுமொரு கூடுதல் பாசம் எனக்கு.

பெயரிலேயே ஊரைக்காவும் அந்த நெஞ்சழுத்தம் எமது இனத்துக்கு வேண்டும்.

பல வகை திறமையுள்ளவர் தாங்கள். இன்னும் கொஞ்சம் நேரமொதுக்கினால் யாழ் மிளிரும்.

காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு சுயதொழில் செய்துகொண்டே [/size]

[size=4]ஒரு பாசமிகு [/size]குடும்ப தலைவனாக இருந்தும்

நேரத்தை ஒதுக்கி

[size=4]யாழிலும் பலருக்கும் அறிவுரை கூறும் ஆசானாக [/size]

[size=4]குறைகளை சுட்டிக்காடும் நண்பனாக [/size]

[size=4]தாயக மக்களுக்கு ஒளிவிளக்காக வலம் வரும் [/size]

[size=4]விசுகண்ணாவின் பத்தாயிரம் கருத்துக்களுக்கு [/size]

[size=4]மனமார்ந்த நன்றிகள் !!![/size]

நன்றி

கருத்துக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

நீங்கள் மேலே எழுதியுள்ளவை உண்மைதான்.

நான் அப்படித்தான் இருக்கின்றேன். இருக்கவே ஆசைப்படுகின்றேன்.

எனது அடுத்த சந்ததியும் அதைத்தான் தொடர்ந்து செய்யணும் என்று எதிர்பார்க்கும் நாம் அதற்கு முன் உதாரணமாக இருக்கவேண்டாமா? என்னைப்பார்த்துத்தானே என்னுடன் இருப்பவர்கள் பாதையை தொடரமுடியும்?

முள்ளி வாய்க்காலில் எல்லாமே முடிந்து விட்டது என்று எவர் சொன்னாலும்

அதுவே எனக்குத்தெரிந்தாலும் எனது பாதையில் எந்தவித மாற்றமும் இல்லை. இலட்சியம் நோக்கியே பயணம். அதில் அவரவர் கடமையை அவரவர் செய்யணும். தொடரணும். பாதையைப்போட்டவர் வழி காட்டியவருக்காக ஒரு நிமிடம் தலை சாய்த்து அடுத்த கணம் நிமிர்ந்து செல்வதே இன்றைய தேவை. அதுவே தமிழனுக்கு ஒரு ஒளி தரும்.

நீங்கள் தாயகத்தின் யாழின் சொத்து

தொடரட்டும் தங்கள் பணி

ஒரு நாள் அந்த முற்றத்தில் குதூகலிக்கலாம் ஒன்றாய்.

மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத நல்வாழ்த்துக்கள், விசுகு அண்ணா.

நன்றி தங்கள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

திறமையான எல்லா பகுதி திறனுமுள்ள ஒரு எழுத்தாளர் தாங்கள்.

தாயகம் பற்றி தெளிவு என்னைக்கவர்ந்தது.

எந்த நிலையிலும் அதை எவருக்காகவும் விட்டுக்கொடுக்காத தங்கள் உணர்வுபூர்வமான எழுத்துக்கள் என்னை பெருமிதம் கொள்ள வைப்பதுண்டு.

தொடரட்டும் தங்கள் பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை

கவிதை கட்டுரை என வளர்ந்த தாங்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் யாதோ???

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

என் உடன்பிறவா அண்ணன் நீங்கள். எல்லாவற்றையும் பகிரும் உறவுகளில் ஒருவர்.

யாழிற்கு வந்த பின் என் இன்பம்,துன்பம் எல்லாவற்றிலும் முதலாவதாய் பங்கு கொள்ளும்,பகிரும் உறவு நீங்கள் அதனால் தான் அதிகம் பேசுவதில்லை. பொதுவாகவே என்னுடைய வட்டத்தை குறுக்கி பலநாளாச்சு தங்களையும் , கோமகன் அண்ணாவையும் விட்டால் அதிகம் யாழில் பேசுவது,பகிர்வது இல்லை.

அந்தவகையில் கவிதை அண்ணா,சுபேஸ்,பையனும் உண்டு.

எழுதாதற்கு எந்த காரணமும் இல்லை

அவலத்துக்கும்,உசுப்பேத்தலுக்கும் நடுவே மௌனம் தான் சிறப்பென தோன்றுது.

கற்பனைகளைத்தான் இனி எழுதவேண்டும் போல..

உங்களது என் மீதான அன்புக்கு நன்றியண்ணா. எழுத முயற்சிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

நன்றி ரதி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

யாழில் ஒரு வித்தியாசமான கருத்தாளர் என்ற பெயர் தங்களுக்குண்டு. காரணம் ஒருவர் எழுத நினைத்தும் அவர் பின் வாங்கிய விடயத்தை நீங்கள் சாதாரணமாக குறிப்பிட்டு எழுதுவீர்கள்.

அந்தவகையில் நீங்கள் இங்கு பிரபலம்.

உங்களுடைய நாட்குறிப்புக்கு பெரும் நேரமொதுக்கி ஒவ்வொரு நாளும் பதிவதை பாராட்டாமல் இருக்கமுடியாது. தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் விசுகு.

நன்றி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

உங்களது பல கருத்துக்களில் ஒரு ஆற்றாமை தெரிவதைஅவதானித்துள்ளேன். அதற்கு சிலரின் நடத்தைகள் காரணம் என்பதை அறிவேன். எமக்கும் அந்த நோவு இருக்கிறது.

ஆனாலும் பின் தள்ளப்பட்டதையும் துரோகங்களையும் சுயநலவாதிகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. நாம் எமது தாயக மக்களை நெருங்கணும். அதற்காக உழைக்கணும். அதற்கு தேவையானவற்றிற்காக முன் வந்தோர் ஒன்று கூடி உழைக்கணும். அதைத்தவிர தமிழருக்கு வேறு வழியில்லை . இல்லையென்றால் இன்னும் சில வருடங்களில் எமது தாயகம் முழுமையாக களவாடப்பட்டு போய்விடும். போய் வந்தோர் சொல்லும் செய்தி இதுதான்.

நல்ல நகைச்சுவை பிரிமுள்ள பல்முக எழுத்தாளர் தாங்கள். ஏனோ அடக்கி வாசிக்ன்றீர்கள். கொஞ்சம் எமக்காக..............?

மேலும் பல கருத்துக்கள் எழுத வாழ்த்துக்கள்.

நன்றி

தங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

ஒரு விடயம் கேட்டிருந்தீர்கள்

அது பற்றி விசாரித்து வைத்திருந்தேன்.

மீண்டும் தற்பொழுது தான் காண்கின்றேன்.

நல்லதொரு நகைச்சுவை எழுத்தாளர்.

அதற்காக காத்திருக்கின்றோம்.

நேரம் கிடைக்கும்போது யாழிலும் நாலு வரி போடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட விசுகு அண்ணாவும் 10 ஆயிரம் தாண்டியாச்சா!!!!!

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா தொடந்து லட்சம் தாண்ட வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

லட்சம் என்பது பேராசை.

முடிந்தளவு தாயக புலத்து நடமுறைகளை எழுதத்தொடங்கினேன்.

இன்றைய தேவையாக அவற்றையே உணர்கின்றேன். விதைக்கின்றேன்.

அத்துடன் இவ்வளவு எழுதுகின்றேன் என்றால் தங்களைப்போன்றோர் எழுதாமல் ஒதுங்கியிருப்பதும் ஒரு காரணம்.

பலமுறை உங்களைக்கேட்டு விட்டேன். எழுதுங்கள். எழுதுங்கள். படையுங்கள்.

நீங்கள் ஒதுங்கியிருக்கும் நிமிடங்கள்.............???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம்? நூறு நூறு?? ஆயிரம் பத்து??? பத்தாயிரம் பத்துக்களையும் எழுத வாழ்த்துக்கள்!

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

ம்ம்ம்

பார்க்கலாம்

நினைத்தால் ஒரே நாளில் பல ஆயிரங்களை எழுதமுடியும். ஆனால் எனது நோக்கம் சம்பந்தமான திரிகளிலும் நகைச்சுவைகளிலுமே நான் நின்று விடுவேன்.

உங்கள் எழுத்து ஒரு தேர் சில்லுக்கு தடை போடுவது போல் பல முறை உணர்ந்துள்ளேன். மிகவும் லாவகரமாக எவரது மனதையும் புண்படுத்தாமல் ஆனால் பட்டென்று சொல்பவர் தாங்கள். யாழின் இன்னொரு சொத்து தாங்கள். தாயகம் சார்ந்து சோர்ந்து போகாதீர்கள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

உங்களையும் தற்போது காணமுடிவதில்லை

நேரம் கிடைக்கும்போது ஒரு வார்த்தை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்குத்தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும்... :lol:

பொதுவாக எனது எழுத்துக்கள் வெட்டு வாங்குவதில்லை. ஒருத்தரைக்காயப்படுத்தக்கூடாது. அவரின் மனம் புண்படக்கூடாது என்பதிலும் நிர்வாகத்தினருக்கு வேலை வைக்கக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பேன். இருந்தாலும் மறு கருத்தாளரின் வார்த்தை யாலங்கள் என்னையும் இக்கட்டுக்குள் தள்ளிவிடுவதுண்டு. இது பற்றி நானும் யோசித்ததுண்டு. அதில் வந்த பதில் நான் எல்லா திரிக்கும் எல்லா களகருத்தாளருக்கும் பதில் எழுதுவதால் தான் என்பது தெரிந்தது. அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்ப நிறுத்திக்கொண்டேன்.

தற்பொழுது தங்களையும் யாழில் காணமுடியவில்லை. ஏன்?

அத்துடன் நீங்கள்அதிகம் யாழில் பந்தி பந்தியாக எழுதும்போது ஒரு அண்ணனாக கோபம் வரும். படிப்பதை விட்டுவிட்டு இங்கு மினக்கெடுகிறரா என்று.

வயதும் பக்குவமும் வந்திருந்தாலும் அண்ணனாக அந்த கவனிப்பு என்றுமே உண்டு.

தாயகத்தின் சொத்து தாங்கள்.

உண்மையைச் சொல்லுங்கோ அண்ணா அவர் பந்தி,பந்தியாய் எழுதினால் வாசிக்க விசராய் இருக்குது என்று சொன்னீர்களா அல்லது உண்மையிலேயே அவரின்ட படிப்பு குழம்பிடும் என்ட ஆதங்கத்தில் சொன்னீர்களா :unsure:

Link to comment
Share on other sites

பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதாதற்கு எந்த காரணமும் இல்லை

அவலத்துக்கும்,உசுப்பேத்தலுக்கும் நடுவே மௌனம் தான் சிறப்பென தோன்றுது.

கற்பனைகளைத்தான் இனி எழுதவேண்டும் போல..

உங்களது என் மீதான அன்புக்கு நன்றியண்ணா. எழுத முயற்சிக்கிறேன். :)

நன்றி தம்பி

பாசத்துக்கும் நேரத்திற்கும் கருத்துக்கும்

வாழ்த்துகள் விசுகு ,

தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

நன்றி

தங்கள் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

நீங்களும் கனக்க எழுதவேண்டும்

தங்கள் அனுபவங்கள்

கண்டவை

அனுபவித்தவை

நாம் இல்லாத காலங்களில் எமது ஆதாரங்கள் இவை தானே.

(இந்தப்பத்தாயிரத்தில் எவ்வளவு உங்களுக்கு எழுதியிருப்பேன்????? :lol::D :D )

உண்மையைச் சொல்லுங்கோ அண்ணா அவர் பந்தி,பந்தியாய் எழுதினால் வாசிக்க விசராய் இருக்குது என்று சொன்னீர்களா அல்லது உண்மையிலேயே அவரின்ட படிப்பு குழம்பிடும் என்ட ஆதங்கத்தில் சொன்னீர்களா :unsure:

அண்ணனாகவும் தாயக நோக்கிலும் அவரது படிப்புத்தான் முக்கியம் எனக்கு.

அதுவே முதலிடத்தில் இருக்கும்.

பந்தி பந்தியாக எழுதினாலும் சுயநலம் சார்ந்ததாக அல்லாது பொது நலம் சார்ந்ததாக இருக்கும் போது அது என்னைப்பாதிப்பதில்லை. நெடுக்கின் தாயக பார்வை இந்த வயதில் பெருமைப்படவேண்டியது.

வாழ்த்ததுக்கள் விசுகு, தொடருங்கள்.

நன்றி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

புதிதாக வந்தாலும் அதிகம் எழுதுவதைக்காணவில்லை.

பதிவுகளிலும் கருத்துக்களத்திலும் எழுதலாமே.

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு விசுகு...

நன்றி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

படிப்பில்தான் சாதிச்சாச்சே

யாழிலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே...........?

உங்களைப்போன்றோர் ஒதுங்கியிருத்தல் பெரும் பின்னடைவு எமக்கு.

பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள் ..

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நேரத்திற்கும்

உங்களது அவதார் படம் தான் எனக்கு உங்களை ஞாபகப்படுத்தும்.

ஆனாலும் அதிகம் காண்பதில்லை இங்கு தற்போது.

நீங்கள் வந்து போகின்றீர்கள் என்பது மட்டுமே தெரிகிறது.

யாழுக்காக ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை ஒதுக்கலாமே.........?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்பு அண்ணன் விசுகுக்கு எனது வாழ்த்துக்கள்...

யாழிழ் இனைந்த காலம் தொட்டு நான் விசுகு அண்ணாவோடை ஒரு நாள் பார்த்து முரன் பட்டது இல்லை..அவரின் ஒற்றுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்...பிரான்ஸ் வந்தா கண்டிப்பாய் உங்களை சந்திப்பேன் அண்ணா...

இன்னும் பல கருத்துக்கள் எழுத வாழத்துகிறேன்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துகள் விசுகு,

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் பதிவிட தொடருங்கள் யாழ் பயணத்தை...!!!

Link to comment
Share on other sites

நான் வாழ்த்த விரும்பவில்லை

விசுகு தான் தரித்து இருக்கும் சில உடைகளை உரிந்து விட்டு உள் மனதில் படுவதை நேரிடையாக எழுதும் வரைக்கும் வாழ்த்தப் போவதில்லை. பத்தாயிரம் பதில்களில் முக்கால்வாசிக்கும் மேலாக எழுதியவை "மற்றவர் முன் தன்னை எப்படி Project பண்ண முயலலாம்" எனும் விதத்தில் தான் எழுதப்பட்டவை. தமிழ் தேசியப் போராட்டத்தில் புலம் பெயர் தேசமொன்றில் நேர்மையுடன் பங்களித்த ஒருவர் நேர்மையாக எழுதுவதில்லை என்ற பெருங்குறை எனக்குண்டு. விலாங்கு மீனாக தான் தெரிகின்றார் எனக்கு அவர்.

இது ஒரு மட்டுவாகவோ அல்லது யாழின் பொறுப்பாளராகவோ திமிர் கொண்டு எழுதவில்லை நான். விசுகுவிடம் நிறைய எதிர்பார்த்து எதுவும் கிடைக்காத சக கள உறவாக வெறுப்பில் எழுதுகின்றேன்... அவரின் அனுபவங்களை நேர்மையாக எழுதும் வரைக்கும் என்னால் இப்படித் தான் அவர் பற்றி எழுத முடியும். மன்னிக்கவும்

பி.கு:

இவற்றுக்கும் மேலாக என்னை எக்கணமும் வாழ்த்தும் அண்ணன் அவர். அவரின் ஆசிகள் என் வாழ்க்கையை பலப்படுத்தும் என்று நம்புகின்றேன். எனக்கு ஒரு அண்ணா இல்லை. ஒரு சக மனிதராக எனக்கு அவர் என்றென்றும் ஒரு அண்ணா தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.