Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......நானும் சற்றும் எதிர்பார்க்காத விசயங்களை எல்லாம் தொடர் தொட்டு செல்கிறது....

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

நீங்கள் கடைசியில் முடித்த விடயம் ஆச்சரியத்தைத் தரவில்லை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்கள் என்றாலே படிப்பதை குறைத்துக் கொண்டு வந்தாயிற்று...உங்கள் தொடருக்குள் என்னை இழுத்தது படங்கள்.பகிர்வுக்கு நன்றிகள் அக்கா..எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்..

கவனத்தில் கொல்கிறேன் :lol: ... கொள்கிறேன் யாயி

இன்று தான் உங்க "த்..த்..தொடர் ரீலை " (இப்ப தானே சுத்தத் தொடங்கியிருக்கின்றீர்கள்) வாசிக்க நேர்ந்தது... இது வரமா? சாபமா? :D

படங்களையும் அதற்கான குறிப்புகளையும் மறவாது போடுங்கள். உங்கள் பயணத்துடன் நாங்களும் ஒட்டவும் உதவும்.

வர வர நீங்களும் (பச்சை மதர்போர்ட்டில் கட்டிய ஈயக்குடுவைகள்போல்) எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு டெக்னிகலா :lol: முன்னேறுறீங்க..

வாழ்த்துக்கள்..

மன்னா,

இது ரீல் தொடர் இல்லை ரியல்தொடர் நீங்கள் சுத்த ஆரம்பித்து நீண்டகாலம் என்பது தெரியும் நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம் ஆதலால் இதனை வாசிப்பது உங்களுக்கு வரமல்ல சாபம் :lol: .... கதையோடு கதையாக நீங்களும் ஆதியும் ஆடவிட்டு அழகு பார்த்த வேர் கட்டி ஆடும் பேழகிகளின் ஆட்டத்தையும் கண்ணுற்றோம் அதுமாத்திரமில்லை அவற்றை உங்கள் இருவருக்காகவும் படம்பிடித்தும் வந்துள்ளேன் தொடரில் அந்தக்கட்டம் வரும்போது அந்த ஆடலை நீங்களும் உங்கள் சகாக்களும் மெய்மறந்து இரசிக்கலாம்.... அநேகமாக அந்தப்பகுதி உங்களுக்கு சாபமாகத் தோன்றாது வரமாக இருக்கும். தொடர்ந்திருங்கள். :icon_mrgreen:

ம்ம்ம்......நானும் சற்றும் எதிர்பார்க்காத விசயங்களை எல்லாம் தொடர் தொட்டு செல்கிறது....

இந்தத் தொடரின் மூலம் உருப்படியாக இருக்கும் ஒருவர் குழப்பமடையப்போகிறார் என்று பட்சி சொல்கிறது உண்மையா யாயி :lol:

நீங்கள் கடைசியில் முடித்த விடயம் ஆச்சரியத்தைத் தரவில்லை.. :D

எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது நம்மட கு.சா அண்ணை, சாத்திரியார் , எல்லாள மகாராசன் மாதிரியான கிளுவை வேலி பாய்ந்த சனம்தான் இப்படி மினக்கெடுத்தி இருக்கும் என்று நினைச்சன் நினைப்புப் பிழைத்து விட்டது இசை :rolleyes: .(உதாரணத்திற்குக் காட்டிய மூவரும் :o என்னை மன்னிப்பார்களாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியர்ஸ் புக்காரா :lol::D

too late dear

next time I'll joining with you naththai :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

too late dear

next time I'll joining with you naththai :lol::icon_mrgreen:

நான் உங்கட எழுத்துக்குச் சொன்னேன். :( நீங்க எப்பவும் அங்கதான் நிக்கிறீங்க :lol::D நிதானத்துக்கு வாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கட எழுத்துக்குச் சொன்னேன். :( நீங்க எப்பவும் அங்கதான் நிக்கிறீங்க :lol::D நிதானத்துக்கு வாங்க

நிதானமாக இருந்தால் இந்தப்பயண அனுபவத்தை எழுதி முடிக்கமுடியாது அண்ணாச்சி :D

Link to comment
Share on other sites

சியர்ஸ் புக்காரா :lol::D

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

ஒன்டத்தானே விழுத்தி இருக்கோம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்!!! உங்களுக்கு விமானம் வெற்றிகரமாக, வானத்தில் பரந்ததுக்கே, சம்பெயின் உடைக்கிறாங்கள்!

சிறி லங்கன், விமானம், மலேசியாவில் இருந்த வானத்தில் எழும்பியது தான், நினைவில் தேவையில்லாமல் வந்து போகின்றது!

ஒரு 'பிளேன் டீ' கூடத் தரவில்லை! படுவாக்கள்!

பி.கு: நான் சிறி லங்கன் விமானத்தில் பறப்பதில்லை!

மலேசியன் எயர் லைன்ஸ், தங்கள் பெயரில், இந்த விமானச் சீட்டை வித்துத் தலையைச் சுற்றி விட்டார்கள்!

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

நீங்கள் தொடருங்கள், வல்வை!!!

Link to comment
Share on other sites

கதை ,கவிதை ,இப்போ கட்டுரை என்ற மூன்றாம் உலகம் .

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

Link to comment
Share on other sites

மிகவும் சுவாரஸ்யமாய் போகிறது ...........இப்போதான் கொஞ்ச்சம் நேரம் கிடைத்து வாசித்தேன் .............நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் பிரமை .............தொடருங்கள் அக்கா ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

ஒன்டத்தானே விழுத்தி இருக்கோம் :)

சத்தியமா இவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை யாராவது மொழிபெயர்ப்பு செய்யுங்கப்பா :lol: :lol:

ம்ம்!!! உங்களுக்கு விமானம் வெற்றிகரமாக, வானத்தில் பரந்ததுக்கே, சம்பெயின் உடைக்கிறாங்கள்!

சிறி லங்கன், விமானம், மலேசியாவில் இருந்த வானத்தில் எழும்பியது தான், நினைவில் தேவையில்லாமல் வந்து போகின்றது!

ஒரு 'பிளேன் டீ' கூடத் தரவில்லை! படுவாக்கள்!

பி.கு: நான் சிறி லங்கன் விமானத்தில் பறப்பதில்லை!

மலேசியன் எயர் லைன்ஸ், தங்கள் பெயரில், இந்த விமானச் சீட்டை வித்துத் தலையைச் சுற்றி விட்டார்கள்!

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

நீங்கள் தொடருங்கள், வல்வை!!!

ஒன்று மட்டும் விளங்குது... நீங்கள் விக்கிரமாதித்தனாய் வேதாளத்தைத் தேடித்திரிகிறீர்கள் என்று :lol: முருங்கை மரம் ஏறுவதே வாழ்க்கையாகப் போகிறது...இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது என்று எண்ணியபடி இருக்கும் வாழ்க்கையை வேதாளத்தைத் தேடித் தொலைக்காமல் வாழ்ந்து பாருங்கள் ரோமியோ..

ஆமா யார் ரோமியோ அந்த சமூகப் பெரியவாள்? உடனடியாக முகவரியை உங்களிடம் கேட்டு வாங்கித்தரும்படி வாசக வட்டங்கள் தனிமடல்கள் போட்டிருக்கிறார்கள் ரோமியோ,

அந்தப் பெரிய சமூகசேவகர்களை கொஞ்சமாவது அறிமுகப்படுத்தக்கூடாதா?

கதை ,கவிதை ,இப்போ கட்டுரை என்ற மூன்றாம் உலகம் .

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

அர்யூன் நீங்கள் மூன்றாம் உலகம் என்று எழுதியவுடன் ஏதோ வேதாள உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா என்று பயந்து போனேன். :icon_mrgreen:

நல்லாயிருக்கு தொடருங்கள்

நன்றி உடையார்

மிகவும் சுவாரஸ்யமாய் போகிறது ...........இப்போதான் கொஞ்ச்சம் நேரம் கிடைத்து வாசித்தேன் .............நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் பிரமை .............தொடருங்கள் அக்கா ........

ஆகா நல்ல வேளை இனிமேல் கொஞ்சம் கவனமாக எழுதவேண்டும் :D:icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

Link to comment
Share on other sites

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

வல்வை இப்போ தான் பேன் எடுத்து... சா பென் எடுத்து சாணை தீட்டி காகிதத்தில் கிழி கிழி யெனக் கிழிக்க சா ..எழுத ஆயத்தமாகின்றார்.

இருந்தாலும் ..இவ்வளவிற்கு நீட்டி முழக்க கூடாது ... சோம்பேறியாய் இருந்து...பொறுமை ...றான் அவுட் ஆகிட்டுது... :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

இங்கு அறிந்து என்ன பயன் அடையப் போறீங்களோ?!!!

ஏதேனும் பயன் உண்டென்றால் நாங்கள் எழுதுகிறமாதிரி நீங்களும் எழுதவேணும் சரியோ. :lol:

வல்வை இப்போ தான் பேன் எடுத்து... சா பென் எடுத்து சாணை தீட்டி காகிதத்தில் கிழி கிழி யெனக் கிழிக்க சா ..எழுத ஆயத்தமாகின்றார்.

இருந்தாலும் ..இவ்வளவிற்கு நீட்டி முழக்க கூடாது ... சோம்பேறியாய் இருந்து...பொறுமை ...றான் அவுட் ஆகிட்டுது... :icon_mrgreen: :icon_mrgreen:

எல்லாளரே, நீங்கள் சரியான அவசரக்காரன்போல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பயணங்கள் முடிவதில்லை - 4[/size]

GRAND-PARADISE-BAVARO_Primary_wide.jpg

வெளியே அந்தி சாய்ந்து அரையிருட்டில் வெம்மை சுமந்த காற்று உடலில் வியர்வையை துளிர்க்க வைத்துக் கொண்டிருந்த பொழுதில். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்திற்குள் குளிர் மிதமாக தவழ்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிகுதியான வரண்டபகுதியை முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தால் உயர்ந்தெழுந்த புழுதி கூறிற்று. அதிக மின்விளக்குகள் இல்லாத ஒடுங்கிய பாதையினூடாக பயணித்துக் கொண்டிருந்தோம். அகன்ற ஒழுங்கமைக்கப்பட்ட நேர்த்தியான பாதையில் நீண்டகாலமாக பயணித்துக் கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு அந்தப் பாதை மிகக்குறுகியதாக இருப்பதில் வியப்பில்லை, இருந்தாலும் என் எண்ணச்சிறகுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நினைவு வலயங்களுக்குள் பறக்கத் தொடங்கின. எத்தனை குறுக்கலான பாதைகளிலும் எங்கள் பயணிப்புகள் எவ்வித அச்சமுமின்றி சாதுரியமாக மேற்கொள்ளப்பட்ட தருணங்கள் எல்லாம் கண்முன்னே வந்து நின்றன. அகதி வாழ்வின் ஓட்டத்தில் எரிபொருள் வாகனங்கள் உதவாத நேரத்தில் எத்தனை மைல்களை ஈருருளி மூலம் எவ்வளவு சுமைகளுடன் சீரற்றபாதையில் பயணித்திருக்கிறோம். அந்த இருட்டும் காற்றின் வெம்மையும் புழுதிபடர்வும் என்னை மீளமுடியாத கடந்த காலங்களுக்குள் வைத்து கும்மியடித்தன. சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அண்மித்தோம். எங்களுடன் வந்தவர்கள் சிலர் வெவ்வேறு விடுதிகளைத் தெரிவு செய்து முற்பதிவு இட்டிருந்தபடியால் அவர்களை முதலில் அவர்களுடைய விடுதியில் இறக்கிவிட்டுவிட்டு இறுதியாக எம்மை நாம் செல்ல இருந்த Grand Paradice விடுதியில் விடுவதாக வாகன ஓட்டுனரின் உதவியாளர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கூறினார். முக்கியமாக ஒவ்வொரு பயணிகளிடமும் அடுத்தநாட்காலை விடுதியின் அலுவலகப்பகுதியில் வந்து கூடுமாறும் அங்கு புன்ரக்கானாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேக இடங்கள் பற்றியும் அவற்றிற்கு எவ்வாறு பதிவு செய்து செல்வது பற்றியும் விபரங்கள் தரப்படும் ஆதலால் தவறாது அதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்..

எமது தரிப்பிடம் வந்தது எல்லோரும் ஆவலுடன் இறங்கி தமது உடமைகளை எடுத்துக் கொண்டார்கள். இறங்கிய இடத்தைப்பார்த்ததும் மனம் கொஞ்சம் அதிருப்தி கொண்டது. club-lobby-area.jpg

எனக்கு மட்டுமல்ல அனைவருக்குந்தான். எனது துணைவர் நீண்ட நேரமாக புகைக்காமல் இருந்ததால் அவசரமாக எல்லோருக்கும் முன்பாக இறங்கி என்னுடைய வெள்ளைச்சகலியை தன்னுடைய உதட்டோடு ஒட்டிக்கொண்டார். சகலி தந்த உற்சாகத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளரை அணுகி எங்களை இறக்கிவிட்ட தரிப்பிடத்தைப்பற்றி தகவல் அறிய முற்பட்டார். நாங்கள் நிற்கும் இடம் Grand Paradiceன் வரவேற்புப் பகுதியைக் கொண்ட முன்பக்கப்பகுதி அல்ல என்றும் இது பின்வழி என்றும் தகவல் கிடைத்தது. மேற்கொண்டு எங்கள் முற்பதிவுகளை உறுதி செய்து கொண்டு எமக்கான அறைகளின் சாவியைப் பெற்றுக் கொண்டோம். கிட்டத்தட்ட பதினைந்திற்கு மேற்பட்ட உயரம் குறைவான தொடர் கட்டிடங்களைக் கொண்ட ஒரு சுற்றுலாத்தளமாகும். ஒவ்வொரு கட்ட்டத் தொகுதியும் அண்ணளவாக 100 முதல்150 வரையான அறைகளைக் கொண்டிருந்தன. எமக்குத் தரப்பட்ட அறை நாம் நின்றிருந்த இடத்திற்கு அண்மையாகவே இருந்ததால் அங்கு நின்ற உதவியாளர்களைத் தவிர்த்து நாமே எமது உடமைகளுடன் அவ்விடத்தை அடைந்தோம். எமக்கான அறை விசாலமாக இருந்தது. ஆனால் நீண்ட நாட்களாக பாவனையில் இல்லாமல் ஈரப்பதனுடன் காற்றின் சுத்திகரிப்பு இல்லாமல் பூட்டிவைக்கப்பட்ட அறையாக இருந்த்து. பூஞ்சனமணம் நாசிக்குள் புகுந்து கொள்ள எனது முகம் சுழித்துக் கொண்டது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டிவேறு கறள் கட்டியிருந்தது. அதனைக் கண்ணுற்றதும் உடனடியாக அவ்விடத்தை மாற்றவேண்டும் என்று கூறி நாங்கள் சாவியைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு எமக்கு முன்பாகவே மூன்று குடும்பங்கள் அதிருப்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். உடனடியாக அறைகளை மாற்ற முடியாது நாளை மாலை 3 மணிக்குத்தான் அவற்றை மாற்றலாம் என்று வந்த பயணிகளிடம் அங்கு வேலைக்கு அமர்ந்திருந்த உதவியாளர்கள் கூறி எங்களையும் மீண்டும் பழைய அறைக்கே அனுப்பி வைத்தார்கள். சே….. ஒரு நாள் பாழாய் போய்விட்டதே என்று அலுத்தபடி வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டோம். பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்லும்போதுதான் அட அங்கு வபே 10 மணியுடன் மூடிவிடுவார்களே… முதலில் போய் ஏதாவது ஆகாரம் உண்போம் என்று இரண்டு கட்டிடத் தொகுதிக்கு அப்பால் உள்ள உணவுச்சாலைக்குச் சென்றோம் அங்கு உணவுகள் தீர்ந்தும் இருக்க்க்கூடிய உணவுகள் எமக்குப் பிடிக்காதவையாகவும் இருந்தன. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த உதவியாளர் ஒருவர் Grand Paradice ன் முதன்மை தளத்திற்கு அருகாமையில் 24 மணிநேரச் சேவையுடன் உணவு விடுதி இருக்கிறது அங்கு செல்லுங்கள் என்றார். சொல்ல மறந்துவிட்டேன் அங்கு உணவுக்கு நாம் பிரத்தியேகமாக பணம் செலவிடத்தேவையில்லை. எல்லாமே எமது விமானப்பதிவினுள் அடக்கம்.

சரி அங்கு போவதற்கு முன்பு கடற்கரை எங்கிருக்கிறது என்று பார்ப்போம் என்று எமக்கு தரப்பட்ட கட்டிடத்திற்கு சுற்று முற்றும் தேடிப் பார்த்தோம் ஊகூம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எந்தப்பக்கம் கடல் இருக்கிறது என்று யாரைப் போய் கேட்பது? பிள்ளைகளுடன் ஒரு கொட்டிலில் உட்கார்ந்து கொண்டோம். அப்போது அங்கு வந்தது சின்ன தொடர்வண்டி.

சரி அதில் ஏறி Grand Paradiceன் முகப்புக்குச் செல்வோம் என்று ஏறிக் கொண்டோம் கட்டிடங்கள் கடந்து சின்ன கானகம் போன்ற இருண்ட பாதையினூடாக சுமார் 5 நிமிட ஓட்டத்தின் பின் விடுதியின் முகப்பிற்கு வந்து சேர்நதோம்

.4280335-Grand_Paradise_Bavaro_Punta_Cana.jpg

முகப்பு பிரமாண்டமாகவும், கேளிக்கைக்கூடமாகவும் இருந்தது. நாங்கள் வந்த நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. கேளிக்கைக் கூடத்தில் துள்ளிசையும், மதுரசமும் போட்டிபோட்டு அங்கிருந்தவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.. நம்முடைய வயிற்றையோ பசி வதஞ்செய்துகொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கேளிக்கைக்கூடத்தைத் தாண்டி வெளியே வந்தோம் நீண்ட நீச்சல் தடாகம் மௌனமாய் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்த அழகைப்பருகியபடி உணவுச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். கம்பேக்கர், ப்ரைட் சிக்கன், சலாட் போன்ற உணவுகளும் மென்பானங்களும் இருந்தன. கம்பேக்கரையும் சிக்கனையும் பிள்ளைகள் எடுத்துக் கொண்டார்கள். துணைவர் தனக்கு பசியில்லை நீங்கள் சாப்பிடுங்கள் என்று விட்டார். நான் இரண்டு பாண் துண்டுகளை எடுத்து பட்டரைப் பூசி படாதபாடுபடுத்தும் பசிக்கு தண்டனை கொடுத்தேன்.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் விடுதியின் முகப்பு வழிக்கு வரும்போது கசினோ கண்ணில் பட்டது. அப்படியே பக்கத்தில் வந்தவரை அந்தப்பக்கமாக கால்கள் சாய்த்துச் சென்றன. ஒரு நிமிடம் நில் உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்த்து வருகிறேன் என்றவரை அடுத்த கணம் காணவில்லை. எதிரே தண்ணீர் தளதளக்க நீச்சல் தடாகம் அதற்குள் விண் தெரிந்தது முகில் அலைந்தது, மதி சிரித்தது. சத்தியமா நான் மெய் மறந்து போனேன்

.335929.jpg

பிள்ளைகள் வந்த முதல்நாள் குதூகலத்தில் நாலாபக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அட இப்படியான ஒரு பொழுதை இரசித்துக் கொண்டிருந்தால் கற்பனைகள் கரை புரண்டு எல்லை கடக்கும். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

[size=5]வளரும்[/size] :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளரட்டும்..என் கண்களிலும் ஆவல்ரசம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

முடியலை... :rolleyes::lol:

[size=3](கடுப்பேத்துறதுக்குனே கொஞ்சபேர் கிளம்பிடாங்கப்பா.. :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3])[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளரட்டும்..என் கண்களிலும் ஆவல்ரசம்... :)

மேற்கொண்டு டெமோ எல்லாம் வராது சுப்பு உங்கள் ஆவல்ரசம் அவல்ரசமானால் நான் பொறுப்பல்ல :lol::D

முடியலை... :rolleyes::lol:

[size=3](கடுப்பேத்துறதுக்குனே கொஞ்சபேர் கிளம்பிடாங்கப்பா.. :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3])[/size]

இதற்குப் பதில் எழுதி பிரியாவிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள நான் தயாரில்லை. :D

Link to comment
Share on other sites

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணக் கலலை

சேர்ந்த வானும்,

பௌர்ணமி நிலவும்

மனதை கொள்ளை

அடிக்கிறது...

Link to comment
Share on other sites

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

எனக்கு அடிக்கடி யாழுக்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை.

கிட்டடியில் தான் நினைத்தேன் சகாரா அக்காவின் பதிவுகள் ஒன்றையும் கிட்ட்டடியில் காணவில்லையே என்று. இதோ - போட்டுவிட்டீர்கள்.

சரி - சிவாஜி, கே.ஆர். விஜயா ஸ்டைலில் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாட்டுப் பாடுங்கள். :lol:

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

sangria என்னும் ஸ்பானிஷ் குடிபானம், வைன், மற்றும் பழரசங்கள், ஐஸ்கட்டி எல்லாம் சேர்த்து, நன்றாக இருக்கும். இந்த கோடைகாலத்தில் ஒருவிதமாக முயற்சி பண்ணிப்பாருங்கள். :lol:

Link to comment
Share on other sites

கொஞ்சம் தான் வாசித்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் வாசிப்பேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.