Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

//அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்//

அருமையான சுவாரசியமான பதிவு ..............நன்றிகள் அக்கா

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்.

பொன்னிறத் திரவத்துக்கும் உங்களுக்கும் ஆகாதா அம்மணி :):rolleyes:

Link to comment
Share on other sites

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

எனக்கு மது, வைன் இவைகளைப் பற்றித் தெரியாது. நாம் குடிப்பதில்லை. தமிழ் உங்கள் மனைவி விரும்பாவிட்டால் அப்படியே விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நன்றாகப் போகின்றது, வல்வை!

335929.jpg

இந்தப் படம், நீங்கள் எடுத்ததா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், இது சாதாரணமாக, 'Point & Shoot' முறையில் எடுத்த படம் மாதிரி தெரியவில்லை!

நீங்கள் எடுத்திருந்தால், சகல கலா .............!!!

Link to comment
Share on other sites

எனக்கு மது, வைன் இவைகளைப் பற்றித் தெரியாது. நாம் குடிப்பதில்லை. தமிழ் உங்கள் மனைவி விரும்பாவிட்டால் அப்படியே விடுங்கள்.

நன்றி அலை முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

உங்களுக்கு வீட்டில் இருந்தால் மட்டுந்தானா...!!! :D அலை

Link to comment
Share on other sites

"சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை "

ஒரு வார்த்தை விட்டுப்போய் விட்டதென்று நினைக்கின்றேன்...

40 வயதிற்கு மேற்பட்ட 40 வரையான பயணிகளுடன் 45 நிமிடப் பயணம் :D :D

'அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன்."

அப்போ தூக்கமில்லா ராத்திரி நம்பர் வண் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

இல்லையே மற்றைய நேரத்திலும் வரும். தனிமை, நெருக்கம், சலனமற்ற பொழுதில்..ச்சீ... போங்க அலை வெட்கமாக இருக்கிறது :wub:

வண்ணக் கலலை

சேர்ந்த வானும்,

பௌர்ணமி நிலவும்

மனதை கொள்ளை

அடிக்கிறது...

பிடிச்சிருக்கா உங்களைப்போல ஆட்களை வசைக்கத்தானே அந்தப்படத்தை இணைத்தேன். :rolleyes:

எனக்கு அடிக்கடி யாழுக்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை.

கிட்டடியில் தான் நினைத்தேன் சகாரா அக்காவின் பதிவுகள் ஒன்றையும் கிட்டடியில் காணவில்லையே என்று. இதோ - போட்டுவிட்டீர்கள்.

சரி - சிவாஜி, கே.ஆர். விஜயா ஸ்டைலில் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாட்டுப் பாடுங்கள். :lol:

ஈசு இது சதிதானே இப்படியெல்லாம் வெளிப்படையாக என்னுடைய வயதைச் சொல்லி ரசிகர்களை விரட்டி விட்டீர்களே. நான் கட்டிக்காக்கும் மிகப் பெரிய ரகசியமே இதுதானே.... நீங்கள் இங்கு இப்படி பதிவிட்டிருக்கிறீர்கள் எனக்கு முகநூலில் இந்தப்பாட்டையே அனுப்பிட்டாங்க.... :(

கொஞ்சம் தான் வாசித்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் வாசிப்பேன். :)

நீங்கள் நிலுவையில் நில்லுங்கள் இதற்கு திருட்டிப்பரிகாரம் செய்யத்தேவையில்லை :lol:

//அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்//

அருமையான சுவாரசியமான பதிவு ..............நன்றிகள் அக்கா

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

தமிழ் சூரியன் பல வீடுகளில் ஆண்களுக்கு ஆனந்தம் பெண்களுக்குச் சித்ரவதை. முடிந்தவரைக்கும் மதுவை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து வாசியுங்கள். வாசித்து கெட்டுப்போகாதீர்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னிறத் திரவத்துக்கும் உங்களுக்கும் ஆகாதா அம்மணி :):rolleyes:

பிடிக்காது கறுப்பி ஆனால் சகிக்கப்பழகிவிட்டேன். என்ன யாழில் பம்பலாகக் கதைப்பதற்கு மதுவகைகளைப்பற்றி பேசுவேன்.

தொடர் நன்றாகப் போகின்றது, வல்வை!

335929.jpg

இந்தப் படம், நீங்கள் எடுத்ததா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், இது சாதாரணமாக, 'Point & Shoot' முறையில் எடுத்த படம் மாதிரி தெரியவில்லை!

நீங்கள் எடுத்திருந்தால், சகல கலா .............!!!

நாமா அட போங்க ரோமியோ அந்த இடத்தில் நான் அனுபவித்த அந்தக்காட்சியை வாசிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வருவதற்காக தேடலில் ஈடுபட்டபோது மாட்டியது. பிடிச்சிருந்தது அப்படியே இங்கே இணைத்துவிட்டேன். ரோமியோ நான் சகல கலா வல்லிதான் என்ன எல்லாம் தெரியும் ஆனா தெரியாது :lol:

"சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை "

ஒரு வார்த்தை விட்டுப்போய் விட்டதென்று நினைக்கின்றேன்...

40 வயதிற்கு மேற்பட்ட 40 வரையான பயணிகளுடன் 45 நிமிடப் பயணம் :D :D

'அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன்."

அப்போ தூக்கமில்லா ராத்திரி நம்பர் வண் :lol:

எல்லாளன் நான் நினைக்கிறேன் நீங்கள் சென்ற சுற்றுலாவில் இந்த வயதிற்கு மேற்பட்ட சனந்தான் வந்திருகுப்போல

நன்றாகத் தூங்கிய இரவு நம்பர் 1 ஏனென்றால் நான் நின்ற இடத்திலிருந்து யாழைப்பார்த்து பிரசர் கூடேல்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 5[/size]

அடுத்த நாட்காலை விரைவாகவே புலர்ந்தது. இதமான மென்குளிர், கதகதப்பான அணைப்பு சாளரத்திற்கு வெளியே பறவைகளின் ஒலி, எங்கேயோ தூரத்தில் அலையின் இரைச்சல் மனித இரைச்சலற்ற அந்த அதிகாலையில் ரசித்தபடி கண்களை மூடி அனுபவிப்பதில் இருக்கும் திருப்தி.

ரசித்துக் கொண்டு கண்மூடி சாய்ந்திருந்த என்னை துணைவர் உலுப்பி எழுப்பினார் நேரமாகிவிட்டது விடுதியின் முன் முகப்பில் பயணிகளுக்கான தகவல் பொதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று துரிதப்படுத்தினார். நான் சோம்பல் முறித்து எழுமுன் பிள்ளைகள் எழுந்து முகங்கழுவ முற்பட்டு நான் முதல், நீ முதல் என்று பிரச்சனைப்பட ஆரம்பித்துவிட்டனர். ஆகா வீட்டில் பாடசாலைக்கு அனுப்ப நான் எத்தனைதரம் இவர்களைக் கூவி அழைப்பேன் அருகில் சென்று தலையை வருடி எழுப்புவேன் அவர்களும் என்னுடைய தடவலுக்காகச் சுருண்டு சுருண்டு படுப்பார்கள் இங்கு எல்லாம் எதிராக நடக்கிறதே என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இருவரின் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன். உற்சாகமும் குதூகலமும் அவர்களை ஆட்கொண்டிருந்தன. சாதாரண நாட்களில் அதிகாலையில் நான் எழுந்து அவர்களுக்கு உணவு தயாரித்து விட்டு அவர்களை நித்திரையால் எழுப்பி பாடசாலைக்குத் தயார்படுத்தி காலை உணவை அவர்கள் கைகளில் திணித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவேன். எனது அருகாமை குறைந்த நாட்களில் அவர்களின் காலை உணவு நான் மாலையில் வேலையால் வரும்போது உணவுமேசையில் அப்படியே தேடுவாரற்றுக்கிடக்கும். அப்பா நான் வேலைக்குப்போன பிற்பாடு கவனித்து பாடசாலை பேரூந்தில் ஏற்றிவிட்டு தானும் வேலைக்குச் சென்று விடுவார். இதுதான் எங்களின் நாளாந்த வாழ்வு. இந்த வாழ்விலிருந்து இந்தப்பயணநாட்கள் வேறுபட்டிருந்தன. அதுவே பிள்ளைகளுக்கான பெரும் உற்சாகத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.

காலை உணவை அருந்திவிட்டு முகப்பு விடுதிக்குச் செல்லலாம் என்ற முடிவுடன் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம். அங்கு பாண், முட்டை,வேக்கொன், சீரியல், பழங்கள், கேக் வகை என்று பல்வேறு உணவுகள் இருந்தன. பிடித்தமான உணவாக உண்டுவிட்டு, விடுதியின் முகப்புக்கு விரைந்தோம். நாங்கள் இருந்த இடத்திற்கும் முகப்புக்குமான தூரத்தைக்கடக்க எங்களுக்கு ஒரு சிறிய தொடர் இருக்கைகளைக் கொண்ட ஊர்தி உதவியது.

137645.jpg?lang=fr

எங்களுக்கு முன்பாகவே வேறு பலரும் அங்கு வந்து காத்திருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் வெவ்வேறு விமான சேவைகளின் மூலம் வந்திருந்த பலர் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர். இன்னொரு பக்கத்தால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு விமானசேவைக்கும் ஒவ்வொரு நபர் விமானத்தின் பெயர் பதிந்த அட்டையுடன் வந்து அந்தந்த விமானத்தில் வந்தவர்களை தம்முடன் வரும்படி அழைத்தார்கள். நாங்கள் பயணித்த சன்விங் விமானத்தின் பெயருடனும் ஒருவர் வந்து அழைத்தார். நாங்கள் எல்லோரும் அவர்பின்னே சென்றோம்.

Facebook_Avatar2_reasonably_small.jpg

ஒரு மண்டபத்தில் எங்களுக்கு இருக்கைகள் தரப்பட்டு புன்ரக்கானாவில் நாம் தரித்து நிற்கும் இடத்திலிருந்து சென்று பார்க்க்க்கூடிய தளங்களையும், கிடைத்தற்கரிய அனுபவங்களையும் பெறக்கூடிய நிகழ்வுகளையும் எது எது எங்கிருக்கிறது என்று விளங்கப்படுத்தினார். ஒரு வர்ணக்கையேட்டில் அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தன. அத்தோடு சலுகைச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன. அநேகமாக பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சலுகைச் சீட்டுக்களை வழங்கிப் பெரியவர்களுக்கு செலவு வைக்கும் வியாபாரம் கச்சிதமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. கையேட்டில் உள்ளவற்றைப்பார்க்கும்போது விழிகள் வியப்பில் ஆழ்ந்தன. இனி இந்தக்கையேட்டில் உள்ள இடங்களுக்குச் செல்லவேண்டுமாயின் சன்விங் என்று குறிப்பிட்ட ஒரு மேசைக்கு சென்று பதியச் சொல்லிவிட்டு எங்களுக்குத் தகவல் தந்தவர் விடைபெற்றுக் கொண்டார். இனி எங்கள் முறை நாம் எங்கு எங்கு செல்வதென்று பதிவு செய்யவேண்டும் பதிவு செய்தால்’ மாத்திரமே அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும். இப்படி ஒவ்வொரு விமான சேவையும் த்த்தமக்கென்று ஒரு பதிவிடத்தை அந்த மண்டபத்தில் உருவாக்கி இருந்தனர். துணைவருக்குத் திண்டாட்டம் எங்களுக்கோ கொண்டாட்டம். ஏனென்றால் சாகசப்பயணங்கள் விளையாட்டுக்கள் என்றால் அவருக்கு பயமோ பயம் எனக்கோ அப்படியான விடயங்கள் என்றால் ஆவலோ ஆவல். இந்தவிடயத்தில் எனக்கும் துணைவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற தேர்வுகள். தொடர்ந்து உங்கள் பார்வைக்காக அந்தக்கையேட்டில் உள்ளவற்றை இங்கு இணைக்கின்றேன் முடிந்தால் நான் எவற்றை தெரிவு செய்திருப்பேன் எனது துணைவர் எவற்றை தெரிவு செய்திருப்பார்? பிள்ளைகள் எவற்றை என்று உங்கள் அனுமானத்தை தாருங்கள். முக்கிய குறிப்பு இந்தப்பயணம் எனது குடும்பப் பயணமாக இருந்தாலும் இந்த இடத்திற்கு எதிர்காலத்தில் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்.

39.jpg

swim-with-nurse-sharks.jpg

79742.jpg

1306912829.jpg

BUGGY%20LAND%203.jpg

62076698.jpg

இன்னும் வளரும். :rolleyes:

Link to comment
Share on other sites

[size=6]பயணங்கள் முடிவதில்லை - 4[/size]

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

[size=5]வளரும்[/size] :D

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 5[/size]

அடுத்த நாட்காலை விரைவாகவே புலர்ந்தது.

இன்னும் வளரும். :rolleyes:

நடுவிலை தணிக்கை பண்ணிட்டீங்கள் போலை.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் தேடல் புல்லரிக்கவைக்கிறது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் நன்றாக இருக்கிறது, வல்வை!

இந்தப் படத்தில் இவர்கள், என்ன செய்கிறார்கள்?

தியானம்???

62076698.jpg

Link to comment
Share on other sites

நீங்கள் நிலுவையில் நில்லுங்கள் இதற்கு திருட்டிப்பரிகாரம் செய்யத்தேவையில்லை :lol:

இன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டு தான் படுக்கிற என்று முடிவெடுத்திருக்கிறன். :D:icon_idea:

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் நன்றாக செல்கிறது. தொடருங்கள். :) நாமும் உங்களுடன் சேர்ந்து (கொஞ்சம் தள்ளி :icon_mrgreen:) பயணிக்கவிருக்கிறோம்.

அக்காவும் அடிக்கடி போதையில் மிதக்கிறா.... :icon_mrgreen: சா.... வைன் குடிக்கிறா என்று சொன்னான்... :icon_idea:

Link to comment
Share on other sites

62076698.jpg

எனக்கு இந்த கடைசி படம் தான் பிடிச்சிருக்கு... உங்கள் கணவரின் முதல் சாய்ஸ்ஸும் இது தானே :D :D

பயணத்தொடர் பேமஸ் மணியன் ரேஞ்சுக்கு எகிறுறீங்க.. உங்களுக்கு பிறைட் பியூச்சர் இருக்கிறதா "பட்சி' சொல்லுரான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படம்,நான்காம் படத்தில் இருக்கிறதில நீங்கள் ஏறீனீங்களே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்லாருக்கு :lol:

நன்றி

நன்றாக இருக்கிறது.. :)

நன்றி யாயி

பயணம் நன்றாக இருக்கிறது, வல்வை!

இந்தப் படத்தில் இவர்கள், என்ன செய்கிறார்கள்?

தியானம்???

62076698.jpg

தியானமாகவா உங்களுக்குத் தெரிகிறது ரோமியோ :lol:

உங்கள் பயணம் நன்றாக செல்கிறது. தொடருங்கள். :) நாமும் உங்களுடன் சேர்ந்து (கொஞ்சம் தள்ளி :icon_mrgreen:) பயணிக்கவிருக்கிறோம்.

அக்காவும் அடிக்கடி போதையில் மிதக்கிறா.... :icon_mrgreen: சா.... வைன் குடிக்கிறா என்று சொன்னான்... :icon_idea:

நன்றி துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படம்,நான்காம் படத்தில் இருக்கிறதில நீங்கள் ஏறீனீங்களே :lol:

ரதி உங்கள் கணிப்பு சரியானது தொடரும் பதிவில் விடயங்களைப் பகிர்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக செல்கிறது. தொடருங்கள்

நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 6[/size]

எங்களுடைய ஆவல் எல்லை கடந்து பிள்ளைகளும் நானும் போட்டி போட்டுதெரிவு செய்தோம். அப்பா ஒன்றை மட்டுமே இப்போதைக்கு தெரிவு செய்யுங்கள் மற்றவற்றை பின்னர் பதியலாம் என்றார்.

என்னுடைய தெரிவு நீண்ட கயிற்றில் கிளிப் பண்ணி அந்தரத்தில் சறுக்குவது.. பிள்ளைகளின் தெரிவு டொல்பின் மீன்களுடன் நீச்சல் அடிப்பது. துணைவரின் தெரிவு காடுகள், கற்கள், மணல்வெளிகள், சேற்று மடைகள் போன்ற இடங்களில் இலாகவகமாச் செலுத்தக்கூடிய இருவர் அமரும் வாகனப்பயணம். அதில் ஒருவர் ஓட்டுனராகவும் மற்றவர் சகபயணியாகவும் செல்லக்கூடிய ஒரு சாகசம் நிறைந்த வாகன ஓட்டம். முக்கோணமாய் தெரிவுகள் விட்டுக் கொடுப்பது யார்? இந்த புழுதி குடிக்கும் பயணத்தில் மகனுக்கும் அப்பாவோடு பயணிக்கும் ஆவல். என்னுடைய தெரிவுக்கு மகள் தலையசைத்தாள் இருந்தாலும் டொல்பின் நீச்சலில் அவளுக்கு அதிக ஆவல்.. “அப்பா நீங்கள் இந்த கிளிப் கோல்டர் சலஞ்சுக்கு வரமாட்டீங்களா” என்று கேட்க “அடீ அதில தொங்கினால் எனக்கு மூச்சு நின்றிடும் பரவாயில்லையா?” என்று சறுக்கிக் கொண்டார். ஒரு வழியாக பிள்ளைகளின் தெரிவும் அப்பாவின் தெரிவும் பதிவு செய்யப்பட்டன. சரி அவர்கள் வழியில் போவோம் என்று நானும் சம்மதித்தேன்.

இன்னும் பரசூட் பறப்பும், பெரிய சுறாக்கள் , திருக்கைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுடன் கடல்தளத்தில் சேர்ந்து நீச்சலடிப்பது போன்ற த்ரிலிங்கான அனுபவங்கள் கிடப்பில் போடப்பட்டன. அடுத்தடுத்த நாட்களும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று பதிவு செய்பவர்கள் தெரிவித்தனர். சரி அடுத்த கட்டம் என்ன? கடல் எங்கே இருக்கிறது என்பதை அறியவேண்டும். முகப்புக்கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளங்களை தாண்டிப்போக விளையாட்டுத்திடலும், அனைத்துவகை குளிர்பானங்களும் மதுவகைகளும் நிறைந்த கொட்டகையும எதிரே விரிந்த கடலும் தெரிந்தது. விளையாட்டுத்திடலில் ஆண்கள் பெண்களென கலந்த வகையில் குழுமங்கட்டி கவர்ச்சியும் கலகலப்பானதுமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

medium_Barcelo_Dominican_Beach_8697a3ddb555c1a0fafd41b3f213241e.jpg

நான் அவற்றை வேடிக்கை பார்க்க பிள்ளைகளுக்கு கோக் வாங்கித் தருவதாக கொட்டகைக்குப் போன மச்சான் இரண்டு மெழுகு கப்களில் கோக்கை நிறைத்து வந்து பிள்ளைகளின் கைகளில் தந்து விட்டு எனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு இப்போது தாகமாக இல்லை வேண்டாம் கடற்கரைப்பக்கமாக செல்கிறேன் அங்கு வாருங்கள் என்று நடக்க முற்பட்டேன். நில் நானும் வாறேன் என்று அவசரமாக கொட்டகை நோக்கிச் சென்றவர் இரு கைகளிலும் பியரை ஏந்தி வந்து ஒன்றை என்னிடம் தந்தார். எனக்கு வந்த கோபத்தில் அசையாமல் அவ்விடத்திலேயே நின்று பியரை விறைத்துப்பார்த்தேன்… நிலமை விளங்கியவர் அது உனக்கு இல்லை அப்படியே கொண்டு வா கடற்கரையில் நடந்துகொண்டே குடிக்க, இதில நடக்கும்போதே ஒன்று முடிந்துவிடும் மறுபடியும் இங்கு வந்து மற்றது எடுக்காமல் தொடரலாம் அது வரைக்கும் நீ உன்னுடையது போன்று கொண்டுவா என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் பிள்ளைகளுடன் கடற்கரையை நோக்கி நடக்க வெளிக்கிட்டார். கையில் மதுவுடன் கடற்கரையை நோக்கி நடந்த எனக்கு என்னவோபோல் இருந்தது. இயல்பாக மற்றவர்கள் என்னைப்பார்த்துப் புன்னகைப்பதுகூட ஏதோ நக்கலாகவும் மற்றவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதாகவும் மனதில் பிரமை ஆட்டிப்படைத்தது. பலருக்கு மத்தியில் கையில் மதுவுடன் நடப்பது மனதைப் பலவீனமாக்க கையிலுள்ள பியர் மணலில் சிந்தியது. சில அடிகள் முன்னே சென்றவர் ஏதோ மன உந்துதால் என்னைத் திரும்பிப் பார்த்தார். புரிந்திருப்பார் போலும் கண்களால் கெஞ்சினார்.

அழகான கடற்கரைப்பிரதேசம். அலைகள் எழுவதும் ஓய்வதுமாக மனதிற்குள் பதின்மச்சிறுமி உயிர்த்துக் கொண்டாள். பிறகென்ன அலைகளுடன் விளையாட்டு…. காலடியில் மண்ணை கரைத்து அலை என்னைச் சாய்க்க முயல்வதும், மறுபடியும் மறுபடியும் நான் நிலை எடுப்பதுமாக எனக்கு சின்ன வயதிலிருந்தே பரிச்சயமான தோழியுடன் குதூகலித்து கும்மாளமிட்டேன்.

punta-cana-ocean-john-rizzuto.jpg

நேரம் போனது தெரியவில்லை. அலையோடு விளையாடியதில் பிள்ளைகளும் நானும் தெப்பமாக நனைவதும் பின்னர் வெயிலின் வெம்மையில் காய்வதுமாக நேரம் நண்பகலைத் தாண்டிக் கொண்டது. பிள்ளைகள் பசிக்கிறது என்றபோதுதான் நேரம் ஞாபகத்திற்கு வர அடடா அறையை மாற்ற 3 மணிக்கு நிற்கவேண்டுமே… உடலில் ஒட்டிய கடலின் உப்பு நீரும் கடற்கரை மணலும் பிசுபிசுவென்று இருந்தாலும் மகிழ்ச்சி பிசுபிசுப்பில்லாமல் மிளிர்ந்து கொண்டிருக்க அவசர அவசரமாக விடுதியில் முகப்பு வாசலூடாக எங்கள் இருப்பிடத்திற்குச் செல்வதற்கான சிறு ஊர்தி நோக்கி வரும்போது சன்விங் உதவியாளர் எம்மை அழைத்துக் கொண்டு பின்னால் ஓடிவருவது தெரிந்தது. இவர் எதற்காக எம்மை அழைக்கிறார் என்று யோசித்துக் கொண்டு நிற்பதற்கிடையில் நாம் செல்லவேண்டிய ஊர்தியும் எம்மைப்போல் அடுத்தடுத்த விடுதிகளுக்குச் செல்லக் காத்திருந்தவர்களை ஏற்றிக் கொண்டு செல்ல ஆயத்தமானது. அவசரமாக ஓடி வந்த பயண உதவுனர் துணைவரின் கைகளில் ஒரு சீவப்பட்ட சின்னத்தடிகள் அடங்கிய போத்தலைத் திணித்துவிட்டு இது எங்கள் சேவையில் பயணத்தை மேற்கொண்ட உங்களுக்கான டொமினிக்கன் ரிப்பப்ளிக்கின் அதி விசேடமான சின்னப்பரிசு என்று கூறி என்யாய் மான் எனச்சிரித்துக் கொண்டே கையசைக்க எங்களுடைய ஊர்தி புறப்பட்டது. சின்னச்சின்னத் தடிகளை காயவைத்து அந்தப் போத்தலினுள் புகுத்தி அடைத்து வைத்திருந்தார்கள். கையில் பியருடன் இருந்த துணைவர் அதை என்னிடம் வைத்திருக்கும்படி தந்தார். எங்களோடு பயணித்தவர்கள் குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தார்கள். நானும் காய்ந்த மரமஞ்சள் போன்ற தடிகள் கொண்ட கிட்டத்தட்ட குடிநீர் அவித்துக் குடிக்கும் பக்கற்றுகளில் வருவதுபோன்று அந்தப் போத்தலுக்குள் இருந்த ஏதோ ஒரு மரத்தின் வேர்களை வேடிக்கை பார்த்துக் கொணடிருந்தேன். இதை என்ன செய்வது அவித்துக் குடிப்பதா? இந்த சீவப்பட்ட வேர்கள் ஒரு கிப்ட்டா? இலங்கைக்குப் போனா கறுவாப்பட்டையையும் தேயிலையையும் சாம்பிளுக்குக் கொடுப்பார்களே அதுபோல இதுவும் ஒன்றா?

mamajuna750.gif

வளரும்..... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] படங்களும் பகிர்வுமாய் ...........அசத்தல் தான் ........[/size]

[size=4].உங்கள் பதிவுகள் எங்களையும் மகிழ வைத்துள்ளது .[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.