Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

  • Replies 187
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போத்திலைத் தந்து, 'என்யோய் மான்' என்றவுடனேயே விளங்கியிருக்க வேணுமே!

சுத்த 'டியுப் லைட்' போல! :icon_idea:

இது தான், உங்கள் கணவரின், நண்பர் சொன்ன சாமானாக்கும்!

தொடருங்கள், வல்வை!

Link to comment
Share on other sites

அருமை அருமை அருமையான அனுபவங்கள் அழகான பாதங்கள் .............பிரமிக்க வைக்கும் எழுத்து நடை ,,,,,,,,,,,தொடருங்கள் ...அக்கா

Link to comment
Share on other sites

தொடருங்கள் சகாறா அக்கா. ஊர்தியில் இருந்த மற்றவர்களும் கண் சிமிட்டுகிறார்கள். போத்தலைக் கொடுத்த மனிதனும் என்ஜாய் மான் என்கிறார்! அதுக்குள்ளே என்ன தான் இருந்தது?

உங்கள் எழுத்துக்கள் வழமை போலவே சுவாரஸ்யமாக இருக்கிறது.

எனக்கும் கடலில் வரும் அலைகளில் ஒரு விருப்பம். கடலுக்கு கிட்ட வளராத படியால் அதிகம் பரிச்சயம் இல்லை.

கடலும் அலைகளும் ஒரு சுகமான சிநேகிதத்தை தருவதென்பது ஆச்சரியம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]படங்களும் பகிர்வுமாய் ...........அசத்தல் தான் ........[/size]

[size=4].உங்கள் பதிவுகள் எங்களையும் மகிழ வைத்துள்ளது .[/size]

நன்றி நிலாக்கா

சூப்பர் தொடருங்கள் அது சரி அந்த வேர என்ன செய்தநிங்கள்?

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

போத்திலைத் தந்து, 'என்யோய் மான்' என்றவுடனேயே விளங்கியிருக்க வேணுமே!

சுத்த 'டியுப் லைட்' போல! :icon_idea:

இது தான், உங்கள் கணவரின், நண்பர் சொன்ன சாமானாக்கும்!

தொடருங்கள், வல்வை!

நீங்கள் மட்டும் ஒழுங்காக இந்தத் தொடரை படிக்கிறீங்கள் என்று தெரியுது ரோமியோ... டியூப் லைட்டென்றாலும் பரவாயில்லையே.... அது பத்தினா அந்தமாதிரி எரியும். இது சுட்ட பல்ப் எப்படி ரோமியோ பத்தும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை அருமையான அனுபவங்கள் அழகான பாதங்கள் .............பிரமிக்க வைக்கும் எழுத்து நடை ,,,,,,,,,,,தொடருங்கள் ...அக்கா

நன்றி தமிழ் சூரியன்.

உங்களுடைய இக்கருத்தை சுண்டல் பார்க்கவில்லைப்போல் இருக்கிறது. ஏற்கனவே நான் எழுதுவது புரியவில்லை என்று தன்னுடைய தலையில் உள்ள முடியை பிய்த்து அரைவாசி சொட்டை ஆகிவிட்டாராம். உங்கள் கருத்தைப்பார்த்தால் அவருக்குக் கொலைவெறி வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது எதற்கும் அவதானமாக இருங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகாறா அக்கா. ஊர்தியில் இருந்த மற்றவர்களும் கண் சிமிட்டுகிறார்கள். போத்தலைக் கொடுத்த மனிதனும் என்ஜாய் மான் என்கிறார்! அதுக்குள்ளே என்ன தான் இருந்தது?

உங்கள் எழுத்துக்கள் வழமை போலவே சுவாரஸ்யமாக இருக்கிறது.

எனக்கும் கடலில் வரும் அலைகளில் ஒரு விருப்பம். கடலுக்கு கிட்ட வளராத படியால் அதிகம் பரிச்சயம் இல்லை.

கடலும் அலைகளும் ஒரு சுகமான சிநேகிதத்தை தருவதென்பது ஆச்சரியம் தான்.

நன்றி Eas

அலை ஒவ்வொருமுறையும் பொங்கிக் கிளம்பி தரையில் மோதி மீண்டும் கடலுக்குள் புகுந்து அடுத்த சில வினாடிகளில் மீள உருவம் பெற்று வருவது பூகோள ரீதியல் 23அரைப் பாகை சாய்ந்த நிலையில் நிகழும் பூமியின் சுழற்சியால் என்பதைக்காட்டிலும் மீள மீள எழுவதும் விழுவதுமாக அதனைப்பார்க்கும்போது போராட்டமே வாழ்க்கை என்ற தத்துவம் கண்முன்னால் நிற்கிறது. வாழ்க்கையில் போராட்டமே இல்லாத மனிதர்கள் உண்டா?

அத்தோடு நான் சிறு வயதிலிருந்தே கடல்பார்த்தே வளர்ந்திருக்கிறேன். எங்கள் வீட்டு கூரையின்மேல் ஏறியிருந்து கடலை மணிக்கணக்காக பார்த்து ரசித்த அனுபவங்கள் சிறுவயதில் அதிகம். நிலம், நீர், காற்று நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கும் நம்மை வாழவைக்கும் சிருட்டிப்புக்கள். அவற்றை எல்லோருமே நேசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்... ஆனால் நேசிக்கும் அனைவரும் அதனை வெளிக்காண்பிப்பது இல்லை. அவ்வளவுதான்.. இதில் ஆச்சரியப்படும் நீங்களே இவற்றுடனான உங்கள் வாழ்வின் பிணைப்பை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் நீங்களே வியப்படைவீர்கள். :)

Link to comment
Share on other sites

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

M

அது இனிமே உங்களுக்கு தேவைப்படா அதனால எனக்கு அனுப்புங்க......:D

Link to comment
Share on other sites

சகாரா சுண்டுவிடம் கொடுங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M

அது இனிமே உங்களுக்கு தேவைப்படா அதனால எனக்கு அனுப்புங்க...... :D

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குத் தேவைப்படாதுதான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சகாரா சுண்டுவிடம் கொடுங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

சுண்டுவிடம் கொடுத்து ?..உங்களுக்குப் பிரயோசனப்படாது அலை :D

என்னிடம் கொடுக்க சிபாரிசு செய்யுங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாக்கா

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

நீங்கள் மட்டும் ஒழுங்காக இந்தத் தொடரை படிக்கிறீங்கள் என்று தெரியுது ரோமியோ... டியூப் லைட்டென்றாலும் பரவாயில்லையே.... அது பத்தினா அந்தமாதிரி எரியும். இது சுட்ட பல்ப் எப்படி ரோமியோ பத்தும்?

சிகரெட் & மது அதிகம் பாவித்தால் இதுதான் நடக்கும்,,

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 7[/size]

நீண்ட இடைவெளியை விட்டுத் தொடர்களை எழுதும்போது அது வாசிப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்கும். அதனைத் தவிர்க்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. முன்பைப்போல எழுத்துக்கள் வசப்பட மறுக்கின்றன. பயணங்கள் முடிவதில்லையை எதிர்பார்க்கும் நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் காலமும் கடமைகளும் அலைக்கழிக்கின்றன. ஒரே மூச்சில் எழுதிவிட்டு அமர முடியவில்லை. பயணக்குறிப்பைத் தொலைத்த ஒரு பேனாவிற்கு மீண்டும் மீண்டும் அத்தருணங்களை நினைவு கூறுதல் கொஞ்சம் கடினமாகவே உள்ளது.

our-room-on-the-ground.jpg

மதிய உணவை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருக்கும் அறையை மாற்ற மீண்டும் நாங்கள் நேற்றிரவு சாவிகளைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்கு சென்று ஒருவழியாக அறையை மாற்றிக் கொண்டோம். எமக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறையும் கடற்கரைக்கு அண்மையாக இல்லாமல் அமைந்திருந்தது. அதில் துணைவருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் போய் அலுவலகத்தில் பேசியபோது கடற்கரைக்கு அண்மையாக அறைவேண்டுமென்றால் சிறிது பணம் அதிகம் கட்டவேண்டும் என்று கூறினார்கள் சரி எதற்கும் பணம் கட்டுவதற்கு முன்பு அறைகளை பார்வையிட்டுவிட்டு அதனை மேற்கொள்ளலாம் என்று அறைகளைக்காட்டும்படி கேட்டோம். அறைகளைக் காட்டினார்கள் எனக்கு பிடிக்கவில்லை.. வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டேன். நாம் தற்போது இருக்கும் அறையின் வசதியளவுக்கு அந்த கடற்கரையை அண்மித்த அறை இருக்கவில்லை. இது தொடர்பில் நம்ம மச்சிக்கு பெரிய ஏமாற்றம் நிலைகொண்டது. கடலலையின் ஓசையும் ஏகாந்த இரவும் அவர் ஆசைப்படும் விடயங்களில் எப்போதும் முன் நிற்கும். திருப்தியின்றி ஏற்றுக் கொண்டார். நாளை எங்களுடைய boogie ride முடித்து வந்து அங்குள்ள வேறு விடுதிக்கு மாறுவது பற்றிக் கதைக்கவேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டார். இப்போது நாங்கள் இருக்கும் அறையின் பால்கனி வழியாக வெளியே நீச்சல் தடாகத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. பொதுவாக அங்குள்ள எல்லா நீச்சல் தடாகத்துடனும் Barகளும் ஒட்டியே இருந்தன. ஆனால் எங்களுக்கு அண்மையில் உள்ள தடாகம் நாலரை அடி ஆழத்துடன் பிரத்தியேகமாக அமைந்திருந்தது. இதற்குள் பார் இல்லை பிள்ளைகளின் ஆர்வம் நீச்சல்தடாகத்தை நோக்கியிருந்தது உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களுடன் ஒவ்வொரு மணித்துளிகளும் கடந்தன. நீந்தவேண்டும் புறப்பட்டாயிற்று. நாம் தங்கியிருந்த கட்டடத்தை விட்டு கீழே இறங்கி நீச்சல்தடாகத்தை நோக்கி நடக்கும்போது மேலே இரண்டாவது மாடி பல்கனியில் இருந்து ஏகமாக தூசனைச் சொல்லாடல்கள் தமிழில் கேட்டன. சிறிது நடந்திருப்போம் ஒரு குரல் “ அண்ணே நீங்கள் தமிழோ” என்று மேலேயிருந்து ஒலித்தது. நிமிர்ந்து பார்த்து “ஓம் தம்பி” என்று இவரும் கதைக்க மெல்ல மெல்லமாக நான்கு இளைஞர்கள் அந்தப்பல்கனியில் இருந்து எட்டிப்பார்த்து மேலும் கதைக்க ஆரம்பித்தார்கள். சரியாப் போச்சு…… என்னுடைய வீட்டுக்காரனுக்கு கதை கண்ட இடம் கைலாசம்… இனி என்ன இவரைப்பார்த்துக் கொண்டிருந்தால் அப்படியே ஆவென்று கொண்டுதான் நிற்கவேண்டும்… முடிவெடுத்துக் கொண்டு நாங்கள் நீச்சல்குளத்திற்கு சென்று விட்டோம். எங்களைக் காணுமுன் சத்தமாகக் கேட்ட தூசனைகள் பின்னர் ஒலிக்கவில்லை. அந்த இடத்தில் நாம் இருக்கும் வரை அந்த நான்கு தமிழ் இளைஞர்களைத் தவிர வேறு தமிழர்களைச் சந்திக்கவில்லை.

அங்கு ஒவ்வொரு நாளும் இரவு 9 மணியிலிருந்து 11 மணிவரை அரங்க நிகழ்வுகள் நடைபெறும். சிறுபிள்ளைகளுக்கான வேடிக்கைப்போட்டிகளில் ஆரம்பித்து சல்சா நடனங்கள் மியூசிக்கல் நாடகங்கள் என பல்வகையான நிகழ்வுகள் நாளாந்தம் வெவ்வேறாக நடைபெறும்.

PuntaCanadec2008+116.jpg?lang=en

இன்று இந்த நிகழ்வுகளைச் சென்று பார்ப்பது என்று பகலில் போட்டிருந்த திட்டத்தை நீண்ட நேர நீச்சல் மூழ்கடித்துவிட்டது. நாளாந்தம் நீச்சலை அரை மணிநேரம் செய்தால் அது உடற்பயிற்சி அதையே திடீரென்று ஒரு நாளில் 4 மணிநேரம் அடித்தால் எப்படி இருக்கும்?. இதை வாசிக்கும்போது சரியான எருமைகள் என்று நீங்கள் நினைப்பது விளங்குகிறது. :) நீண்டநேர நீர் விளையாட்டு உடலுக்கு அசதியைக் கொடுக்க ஏற்பட்ட அகோரபசிக்கு உணவுச்சாலையில் அகப்பட்டதை உண்டுவிட்டு சென்று உறங்கியவர்கள்தான் அடுத்த நாட்காலையில்தான் கண் விழித்தோம். அட இன்று boogie ride இற்குப் போகவேண்டுமே எழுந்து அரக்கப்பறக்க காலைக்கடன்களை முடித்துவிட்டு உணவருந்திக் கொண்டோம். நாம் buggie ride இற்கு பதிவுசெய்யும்போது அவர்கள் எம்மை 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கும்படி கூறி தாம் அவ்விடத்தில் எம்மைப் பிக்கப் பண்ணுவதாகவும் எம்மை அழைத்துச் செல்பவர்கள் கூறியிருந்தார்கள். அதன்படி நாம் அவ்விடத்தில் 10 மணிக்கு தயாராக நின்றோம் ஒன்றரை மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் எம்மை ஏற்றிச் செல்ல ஒரு வாகனம் வந்து நின்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அசப்பில் நம்மூர் தட்டிவான்தான். என்ன கொஞ்சம் பெரிதாகவும் நல்ல வர்ணம் பூசப்பட்டும் இருந்த்து. மர இருக்கைகளில் அமர்ந்து மேடுபள்ளமுள்ள ரோட்டில் பயணிப்பது என்னுடைய பிள்ளைகளுக்குப் புதிய அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு நகைச்சுவை மிகுந்த சுவார்சியமான பொழுதாகவும் அமைந்தது. முக்கால் மணிநேரத்திற்கு அதிகமாகப் பயணித்து- buggie தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம் எங்களுக்கு முன்னராகவே பல வெளிநாட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். எல்லோரும் கெல்மெட் சகிதம் கறுப்புக்கண்ணாடி அணிந்து மூக்கு வாய் ஆகியவற்றை கைக்குட்டையால் மூடிக்கட்டி முகமூடிக்கும்பல்போல் காட்சி அளித்தார்கள்.

203FR.jpg

அந்தத் தரிப்பிடத்தில் இருந்த கடைக்காரன் எங்களிடம் கறுப்புக் கண்ணாடி, கைக்குட்டையை வாங்கும்படி கூறினான். விலையோ எங்களை விலைபேசிவிடும்போன்று இருந்தது. அத்தோடு ஏற்கனவே எம்மிடம் அவை இருந்தன… என்ன காலையில் வெளிக்கிடும் அவசரத்தில் தொப்பிகளைத் தவிர மற்றவற்றை எடுக்கவில்லை. பக்கத்தில் நின்ற துணைவர் கண்ணாடியையும் கைக்குட்டையையும் வாங்க எத்தனித்தபோது நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் அடுத்து வந்த 15 நிமிடத்திலேயே அது எவ்வளவு தவறு என்பதைப்புரிந்து கொண்டேன். நானும் மகளும் ஒரு ரைட்டிலும் அப்பாவும் மகனும் இன்னொன்றிலும் ஏறிக் கொண்டோம். நூற்றுக்கணக்கான boogie வாகனங்கள் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து ஓடி கடற்கரையை அடைந்தன இங்கே அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்கடற்கரையின் அழகை இரசிக்க ஆரம்பித்தார்கள்.

Punta-Cana-Beach-02.jpg

greenhat.jpg?w=584

பச்சைத் தென்னை ஓலையில் பின்னப்பட்ட தொப்பிகள், சீத்தைத்துணியில் வரையப்பட்ட வர்ண ஓவியங்கள், மரங்களை மணிகளாக அரவி எடுத்து கோர்க்கப்பட்ட மாலைகள் என கைப்பணிப் பொருட்களை அக்கடற்கரையை அண்டிவாழும் மக்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர்களையும் அணுகி விற்பனை செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவ்விடத்தில் நின்றுவிட்டு மறுபடியும் இந்த வாகனஅணி புறப்பட்ட்து. இப்போது முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.

Dune_Buggy3.jpg?1308854294

மேடு பள்ளங்கள்,பாறைகள், மணற்காடுகள், புழுதிநிலங்கள், சேற்றுமடைகள் எனச் சமாந்தரம் அற்ற வெளிகளில் த்ரிலிங்கான ரைவிங் செய்துகொண்டு சுற்றிவரும்போது ஓரிடத்தில் கொக்கோ, கோப்பி, மாமக்குவா போன்றவற்றைப்பரப்பி ஒரு கொட்டகைக்குள் கொக்கோ,கோப்பி போன்றவை பெறப்படும் விதங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். அந்த இடத்தில்தான் இந்த மூலிகை வேர்களின் உபயோகத்தையும் கூறினார்கள். சோடி சோடியாக வந்தவர்கள் மூலிகை வேர்களை ஊறவைத்த ‘ரம்” ஐ ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்க அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.

different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். அவருக்கு என்வீட்டில் இருக்கும் மாமரங்களில்தான் சிறுவயதில் மட்டுமல்ல பதின்ம வயதுகளிலும் என் பொழுதுகள் கழிந்தனவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதித்த திமிரில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திய அவரிடம் மாமரக்கிளைகளில் அசையாமல் இருந்து அணில்களை இரசித்த கதைகளைச் சொல்லி அவரின் நிமிர்வை அடக்க விரும்பாமல் இரசித்துக் கொண்டிருக்கும்போது……. அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

வளரும். :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

நமப் பார்வதி, பதயே!!!

அரகர மகாதேவா! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமப் பார்வதி, பதயே!!!

அரகர மகாதேவா! :D

:blink::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:blink::o

நான் நினைச்சன் வல்வை, அது ஒரு LOVE NOTE ஆக்கும் எண்டு!

அது தான் கடவுளைத் துணைக்குக் கூப்பிட்டனான்! வேற ஒண்டுமில்லை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:blink::o

இந்த ஸ்மைலி யிலையே தெரியுது.. மேட்டர் கொஞ்சம் மார்க்கமானது தான் என்று.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

'அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……'

ஆண்களை இப்படி விழுந்தடித்துக் கவனிப்பதன் தார்ப்பரியம் என்ன? :D அவர்கள் அசடுகள் என்பதாலா? :D அல்லது இழிச்ச வாயர்கள் என்பதாலா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஸ்மைலி யிலையே தெரியுது.. மேட்டர் கொஞ்சம் மார்க்கமானது தான் என்று.. :unsure::rolleyes:

ஏற்கனவே சிமைலி தனியாகப் போடுவதை அனுமதிக்கலாமா என்று வாக்கெடுப்பு நடக்கிறது. :unsure:

இப்பிடி எதையாவது எழுதி கவனிக்காமல் இருக்கும் மட்டுக்களையும் கூப்பிட்டு இவா தனியா சிமைலி போட்டிருக்கா :icon_mrgreen: என்று காட்டுவது நல்லா இல்லை சொல்லிட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……'

ஆண்களை இப்படி விழுந்தடித்துக் கவனிப்பதன் தார்ப்பரியம் என்ன? :D அவர்கள் அசடுகள் என்பதாலா? :D அல்லது இழிச்ச வாயர்கள் என்பதாலா? :lol:

என்னை வம்பில் மாட்டி விடுவதற்குத்தான் உங்களுக்கு எவ்வளவு ஆசை!!! :icon_mrgreen:

ஆமா உங்கள் வீட்டில் கவனிப்பு ரொம்ப அதிகம்போல... உங்கள் ராணி உங்களை அசடு என்கிறாரா? இழிச்ச வாயர் என்கிறாரா? :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை - 7

நூற்றுக்கணக்கான boogie வாகனங்கள் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து ஓடி கடற்கரையை அடைந்தன இங்கே அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்கடற்கரையின் அழகை இரசிக்க ஆரம்பித்தார்கள்.

Punta-Cana-Beach-02.jpg

greenhat.jpg?w=584

பச்சைத் தென்னை ஓலையில் பின்னப்பட்ட தொப்பிகள், சீத்தைத்துணியில் வரையப்பட்ட வர்ண ஓவியங்கள், மரங்களை மணிகளாக அரவி எடுத்து கோர்க்கப்பட்ட மாலைகள் என கைப்பணிப் பொருட்களை அக்கடற்கரையை அண்டிவாழும் மக்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர்களையும் அணுகி விற்பனை செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவ்விடத்தில் நின்றுவிட்டு மறுபடியும் இந்த வாகனஅணி புறப்பட்ட்து. இப்போது முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.

Dune_Buggy3.jpg?1308854294

மேடு பள்ளங்கள்,பாறைகள், மணற்காடுகள், புழுதிநிலங்கள், சேற்றுமடைகள் எனச் சமாந்தரம் அற்ற வெளிகளில் த்ரிலிங்கான ரைவிங் செய்துகொண்டு சுற்றிவரும்போது ஓரிடத்தில் கொக்கோ, கோப்பி, மாமக்குவா போன்றவற்றைப்பரப்பி ஒரு கொட்டகைக்குள் கொக்கோ,கோப்பி போன்றவை பெறப்படும் விதங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். அந்த இடத்தில்தான் இந்த மூலிகை வேர்களின் உபயோகத்தையும் கூறினார்கள். சோடி சோடியாக வந்தவர்கள் மூலிகை வேர்களை ஊறவைத்த ‘ரம்” ஐ ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்க அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.

different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். அவருக்கு என்வீட்டில் இருக்கும் மாமரங்களில்தான் சிறுவயதில் மட்டுமல்ல பதின்ம வயதுகளிலும் என் பொழுதுகள் கழிந்தனவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதித்த திமிரில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திய அவரிடம் மாமரக்கிளைகளில் அசையாமல் இருந்து அணில்களை இரசித்த கதைகளைச் சொல்லி அவரின் நிமிர்வை அடக்க விரும்பாமல் இரசித்துக் கொண்டிருக்கும்போது……. அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

வளரும். :rolleyes:

 

தூசு தட்டி மீள்கிறது பயணங்கள் முடிவதில்லை. :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

தொடரட்டும் பயணங்கள் ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote "வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்." :lol:

 

தொடருங்கள் ...

 

 

Link to comment
Share on other sites

Quote: "அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.
different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்"

 

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், இது உங்களால் வெளியில் சொல்லக்கூடிய விடயாமா? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே ஊக்குவிக்கின்ற மாதிரியான செயல் மாதிரி தெரியவில்லையா? 

 

 

நல்ல தொடர் தொடருங்கள், இந்த இடத்திற்க்கு போக ஆசையை தூண்டுகின்றூர்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.