Jump to content

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...!

------------------------------------

தமிழரின் உடல்கள் அடுக்கப்பட்டன

நிலத்தின் இருப்பைத் தக்க வைக்க

ஒற்றுமை மணி சிதறியதால்

ஒற்றர்களாகப் பலர் நுளைந்தார்

சத்தியம் காப்பதே உறுதியென

சளைக்காது உடல்களால் எல்லையிட்டார்

சத்தியம் வெல்வது உறுதியெனச்

சண்டாளர் கணித்தார் கவனமுடன்

பட்டினியாலும் மடியவில்லை

பரிசுகளாலும் வீழவில்லை

உறவாடி வீழ்த்துதல் நல்லதென

உலகெங்குமிருந்து உள்நுளைந்தே

அரசொன்றை வீழ்திய மகிழ்வினிலே

நரந்தின்னும் நாடுகளானதன்றோ

நாடுகள் வாழ நாம் சாகும்

சூனியமான சூழலன்றோ

சூனியமான சூழலை நாம்

எம் சாதுரியத்தால் மாற்றிடவே

மதமென்று நின்றால் தோல்விகளே

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே

உலகெங்கள் உரிமைக்கு வழிவிடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...!

------------------------------------

மதமென்று நின்றால் தோல்விகளே

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே

உலகெங்கள் உரிமைக்கு வழிவிடுமே!

கிழக்கு மாகாணத்தேர்தல் வெளி வந்துள்ள நிலையில்

தேவையான கவிதை

நன்றிகள்.

Link to comment
Share on other sites

சூனியமான சூழலை நாம்

எம் சாதுரியத்தால் மாற்றிடவே

மதமென்று நின்றால் தோல்விகளே

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே

உலகெங்கள் உரிமைக்கு வழிவிடுமே!

பறக்கிறது வெக்கை

உங்கள் கவி வடிவில் .

கண்ணாம் மூஞ்சி காட்டாது

வருவீர் பதிவீர் !!!!

சுவைக்க நாங்கள்...............

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தேர்தல் வெளி வந்துள்ள நிலையில்

தேவையான கவிதை

நன்றிகள்.

விசுகு அவர்களுக்கு நன்றிகள்.

சூனியமான சூழலை நாம்

எம் சாதுரியத்தால் மாற்றிடவே

மதமென்று நின்றால் தோல்விகளே

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே

உலகெங்கள் உரிமைக்கு வழிவிடுமே!

பறக்கிறது வெக்கை

உங்கள் கவி வடிவில் .

கண்ணாம் மூஞ்சி காட்டாது

வருவீர் பதிவீர் !!!!

சுவைக்க நாங்கள்...............

கோமகன் அவர்களின் அன்புரிமைக் கட்டளைக்கும் படைப்பாக்க ஊக்குவிப்புக்கு நன்றிகள். இணைவோம்!

Link to comment
Share on other sites

மொழியென்று ஒன்றாய் திரண்டாலே...!

------------------------------------

பரிசுகளாலும் வீழவில்லை

[size=4]இது நீடிக்கவேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நல்லதொரு கவிதை [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இது நீடிக்கவேண்டும்.[/size]

[size=4]நல்லதொரு கவிதை [/size]

அகூதா மற்றும் பகீ தங்கள் இருவரது கருத்துகளுக்கும் நன்றிகள். நீடிக்க வேண்டுமென்பதே வேணவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியென்று திரள்வோம்!

உலகெங்கும் விரிவோம்!

புனிதர்களாக வேண்டாம்!

வெறும் மனிதர்களாகவேனும், வாழ்வோம்!

நன்றிகள், நொச்சி!

ஏன் தான் அடிக்கடி மறைந்து போகின்றீர்களோ?

இடைக்கிடை, ஒருக்கா முகத்தைக் காட்டிப் போட்டாவது, போங்கோவன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழியென்று திரள்வோம்!

உலகெங்கும் விரிவோம்!

புனிதர்களாக வேண்டாம்!

வெறும் மனிதர்களாகவேனும், வாழ்வோம்!

நன்றிகள், நொச்சி!

ஏன் தான் அடிக்கடி மறைந்து போகின்றீர்களோ?

இடைக்கிடை, ஒருக்கா முகத்தைக் காட்டிப் போட்டாவது, போங்கோவன்! :D

யாழில் பாசக்குரல்களில் ஒரு குரலாய் உரிமையோடு அழைக்கும் புங்கையூரானுக்கு என் நன்றிகள். உங்கள் கருத்துக்கும் நன்றிகள்! வருவேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.