Jump to content

"ஒற்றுமை வாரம்", கனடாவில் கடைப்பிடிக்க ஏற்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன.

கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது.

இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது. சிங்கள பேரினவாதிகளையும், இனவெறியாளர்களையும், இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிக்க அனுமதித்துள்ளது.

போரை நோக்கிய சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தடையின் பின்னான காலத்தில் தீவிரப்பட்டுள்ளது.

கனடா தடையின் பின்னான காலத்தில் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள் பெருமளவில் இலங்கைத்தீவில் அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தொடரும் தமிழர் இனப்படுகொலை, புத்தூர் படுகொலை, தற்போது கொழும்பில் நடைபெறும் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவது, கனடிய தமிழ் மக்களுக்கு தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெரிதும் அதிகரித்துள்ளது.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து, கனடிய குடிமக்களான கனடிய தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவர்களிற்கு உரிமை மறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக தமிழர் என்ற சொற்பதத்துடன் வெளியிடப்படும், செய்திகள் தமிழர் குறித்த தப்பபிப்பிராயத்தை ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதால், தொழிலிடங்கள் மற்றும் பயிலிடங்களில் கனடிய தமிழர் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

வழமையான தமிழர் செயற்பாடுகள் மீதும் திடீரென தேவையற்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.

தனிநபர் உரிமைகளை அரசியல் சாசனம் கொண்டே உறுதிசெய்யும் முதல்தர நாடான கனடாவில், இவ்வாறு தவறான முனைப்புக்கள் ஏற்புடையவையல்ல, உடன் தடுக்கப்பட்டாக வேண்டும்.

உண்மை நிலைமைகளை மறைத்து, உலகத்தை பொய்மைக்குள் தள்ள சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

இதன் ஒரு அங்கமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் சமாதான காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த எந்தவொரு கைதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மீதும், உண்மையை வெளியிடுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்கான பாய்ச்சலும், நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், உண்மையின் குரலாக, உரிமையின் குரலாக, சமாதானத்தின் குரலாக, கனடியத் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக சமாதானத்தை வேண்டிய கனடியத் தமிழர் ஒற்றுமை வாரம் அமையும்.

இந்த வாரத்தில் தமிழர் இல்லங்கள், வியாபாரத்தலங்கள், வாகனங்கள் தோறும், கறுப்புக் கொடிகளை பறக்க விடுவது என்றும், தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், சமாதானத்தை வேண்டியும், உரிமைகளின் காப்பை வலியுறுத்தியும், தமிழர் ஒன்றுகூடல்கள் பல நடைபெற உள்ளன.

நன்றி :உலகத்தமிழ் ஊடகம்

http://www.worldtamilpress.com/index.php?o...d=351&Itemid=28

Link to comment
Share on other sites

இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன.

:roll: :roll:

Link to comment
Share on other sites

எல்லாரும் கொண்டாத்திற்கு எல்லே ஆரவாரப்படுகினம், தேசிய தொலைக்காட்சி உட்பட...

அது சரி என்று 2 ஆங்கில மொழியில் சிங்களத் தரப்பு வெளியிடுகிறார்கள். அதில் தமிழரின் விடையங்களையும் உள்ளடக்கி ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறி வருகுது.

எங்கடையள் 25 இக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளை மாத்திரம் அடிச்சுவிடியினம்.

உந்த உலகத்தமிழர் இலச்சினைக்கு என்ன இழவுக்கு ரவைகள் துவக்கும் கத்தியும்? கூடவே மப்பிள் இலையை போட்டு என்ன கனடாவிலை ஆயுதப் போராட்டம் நடத்தப் போறம் எண்டு சொல்லவாறியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கொண்டாத்திற்கு எல்லே ஆரவாரப்படுகினம், தேசிய தொலைக்காட்சி உட்பட...

அது சரி என்று 2 ஆங்கில மொழியில் சிங்களத் தரப்பு வெளியிடுகிறார்கள். அதில் தமிழரின் விடையங்களையும் உள்ளடக்கி ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறி வருகுது.

எங்கடையள் 25 இக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளை மாத்திரம் அடிச்சுவிடியினம்.

உந்த உலகத்தமிழர் இலச்சினைக்கு என்ன இழவுக்கு ரவைகள் துவக்கும் கத்தியும்? கூடவே மப்பிள் இலையை போட்டு என்ன கனடாவிலை ஆயுதப் போராட்டம் நடத்தப் போறம் எண்டு சொல்லவாறியளோ?

இது குறித்து நிதானமாக சட்டவல்லுனர்களோடு ஆராய்வு நடந்து வருகின்றதாம். அடுத்த தசாப்பத்தினுள் தீர்வு கண்டு விடலாம் என்று கருதுகின்றினமாம். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல தண்ணி போட்டுதாம். இப்ப தான் "தம்" பிடிக்க பயிற்சி எடுக்கினமாம்!! :oops: :oops:

Link to comment
Share on other sites

தமிழர் ஒற்றுமை வாரமா? கறுப்புக் கொடியைக் கட்டி யார் பார்க்கப்போகின்றார்கள். ஓன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றுவார்கள் அடுத்த ஒன்றுகூடல் எப்ப என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

புண்ணாக்குத் தின்னிகள்!! ...

இல்லை பேசாதயுங்கோ!!

பன்னாடைகள்!! ....

ஐயோ! வேண்டாம் ஈழ்பதீஸானுக்கே பொறுக்காது!!!

வேண்டாம்! யாம் ஈழ்பதீஸ் உண்டியலுடனேயே நிற்போம்!!!

அப்பாடா! இப்பதான் ஆறுதல்!!! வீணா இன்னுமொன்று வேண்டாம் ...

தூஊஊ....

அரோகரா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.