Jump to content

அனார் கவிதைகள்


Recommended Posts

அனார் கவிதைகள்

1 கருமை

முற்று முழுதாய் இருட்டி

கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில்

உன் உயரங்களுக்கு

ஏறிவருகின்றன என் கால்கள்

இருட்டிய மழைக் காற்று

தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும்

ஆகாயத்தை நிரப்புகிறது

கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ்

காகங்கள் மாத்திரமே பறவைகள்

வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள்

ஒரு ஜன்னல் என

என் கண்கள் திறந்துகிடக்கின்றன

முதலும் முடிவுமற்ற

உன் உச்சரிப்புகள்

இடத்தைப் பாழ்படியவைத்து

வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன

என் உதடுகளை

விரல்களைச்

சுழலும் காற்றில் உதிர்த்துவிடுகிறேன்

காரிருளில் பாய்ந்தோடும்

கறுப்புக் குதிரையின் கண்களில்

இறுகி மின்னுகிறது

என்னுடைய கண்ணீர்

கறுப்புமொழியின் கரைகளிலே

எங்கோ ஒதுங்கிக்கிடக்கும்

இரு கூவல் சங்குகள்

என்னுடைய காதுகள்

2 போகும் ரயில்

நிலைகொள்ளாது ஆடும்

பொன் மிளிர்வுத் தூவல்களில்

ரயில் பட்டுப்புழுவைப் போல் நீளுகிறது

வெள்ளைப் பேய்களும். . . கரும் பூதங்களும். . . உலவும்

ஆகாயம். . . பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்

காலங்களின் வெளியே

பயணித்துக்கொண்டிருந்தேன்

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்

பருவங்களின் பன்மைகளாய். . .

பல்வேறு உருவங்கள் கொண்ட

நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து

மறைந்த சூரியன்

பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்

நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்

தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக்கோடுகளில்

பழுப்புநிறத்தில்

பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்

ரயில் போகும் தடக். . . தடக். . . ஓசை

குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு. . .

ரயிலின் நினைவைத் தழுவுகின்றன

அந்த ராட்சதப்பூரான்

வெறும் பெட்டிகளையா?

நிரப்பிவிடப்பட்டவற்றையா இழுத்துச் செல்கிறது?

3 படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்

கோடை அந்தி நிழல் சாயும்

சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே

சூரியனையும்

படிக்கட்டுகளின் கீழே

செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு

வந்ததும்

‘கொலை முயற்சி நடந்துகொண்டிருக்கையில்

எதையும் ரசிக்கமுடியாதென’

அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு

தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையிலும்

சேர்ந்து குளிக்கையிலும்

‘சடுதியாக வெடித்து

வித்துகளை உதிர்க்கின்ற பருத்திகள்’ என

உலைந்து

நிலைகுலையுமொரு துயரப்பாடலையே

விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு

கடைசியாகப் பார்த்தபொழுது

மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி

பாழடைந்த பேய் வீட்டின்

உடைந்த குட்டிச் சுவரருகே

காளான்களும். . . புற்களும் மண்டிய. . .

எட்டாவது படிக்கட்டில்

அவன் அமர்ந்திருந்தான். =

http://www.kalachuvadu.com/issue-153/page40.asp

Link to comment
Share on other sites

தொலைவுப் பாலத்தின் மேலே

சூரியனையும்

படிக்கட்டுகளின் கீழே

செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

மனதை தொட்ட வரிகள் . கவிதை இணைப்புக்கு நன்றிகள் நிழல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]எனக்குள் கேட்கின்ற ரயிலில்

காலங்களின் வெளியே

பயணித்துக்கொண்டிருந்தேன்

கவிதை அருமை நண்பா [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.