Jump to content

ஒடியல் கூழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே தாரணி சொல்லி இருக்கிறா ஒடியல் கூழ் பற்றி. ஒடியல் இருந்தாத்தானே ஓடியல் கூழ் வரும். கூழ் குடிக்கலாம் ஒடியல் குடிக்கேலாது. என்ன தூயா நான் சொல்லுறது சரியா :wink:

நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். ஆனால் என்ன சொன்னீர்கள் என்று புரியவே இல்லையே!! :roll: :roll: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வல்லிபுர கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பனைகளை பார்க்க வேண்டுமே, தலைகள் இல்லாமல்..கோரம்..

வல்லிபுரத்தில் கிளைகள் உள்ள பனைமரம் நிற்கின்றது என்று சொன்னது பிழையாம். அது உண்மையில் பனைமரமே இல்லையாம்!!

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். ஆனால் என்ன சொன்னீர்கள் என்று புரியவே இல்லையே!! :roll: :roll: :wink:

தூயவா ஒடியல் புரியலையா அல்லது ஒடியல் கூழ் புரியலையா :roll:

Link to comment
Share on other sites

வல்லிபுரத்தில் கிளைகள் உள்ள பனைமரம் நிற்கின்றது என்று சொன்னது பிழையாம். அது உண்மையில் பனைமரமே இல்லையாம்!!

ஓஓஓ அப்ப அது என்னவாம் :roll:

அதப் படம் எல்லாம் எடுத்துப் போட்டாங்களே :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:shock: :shock: :shock:

சின்னப்பு என்ன கனடாவில தடை போல யாழ் களத்தில ஒரு பனை பற்றிக் கதைக்கக் கூடாதா.

:shock: :roll: :roll:

எப்படிக் கதைக்கலாம்? கனடாவில் தடை போட்ட பிறகு கனடாச் சனத்துக்கு மட்டும் தடையைப் பற்றிக் கதைக்க துணிவு வந்ததா என்ன? :evil: :evil: :wink:

Link to comment
Share on other sites

ஆக வல்லிபுர கோவில் பனை மர கதை வதந்தியா?

சரி யாராவது ஒடியலை பற்றி சொல்லுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ அப்ப அது என்னவாம் :roll:

அதப் படம் எல்லாம் எடுத்துப் போட்டாங்களே :roll:

அதன் இலையெல்லாம் பார்க்க வித்தியாசாக இருக்குதாம். அதுவும் ஒரு வகை தனி இனத்தைச் சார்ந்தது என்று சொல்கின்றார்கள்!!

Link to comment
Share on other sites

பனைமட்டும் தான் வதந்தியா அல்லது வல்லிபுரக் கோவிலே வதந்தியா அங்க ஏதோ சக்ரம் கடலில வந்ததோ ஏதோ என்று சொன்ன ஞாபகம் :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா ஒடியல் புரியலையா அல்லது ஒடியல் கூழ் புரியலையா :roll:

ஓடியல் கூழ் எல்லாம் புரிஞ்சிருக்கு ஆனா எப்பிடி பனைல இருந்து ஒடியல் வருது எண்துதான் புரியல

ஆமா!! ஒடியல் எப்படி பனையில் இருந்து வருகின்றது? :wink: :P

Link to comment
Share on other sites

ஒடியல் கூழ்

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 1/2 கிலோ

மீன் - 1 கிலோ

நண்டு - 6 துண்டுகள்

இறால் - 1/4 கிலோ

பயிற்றங்காய் - 250 கிராம்

(1 அங்குல நீள துண்டுகள்)

பலாக்கொட்டைகள் - 25

(கோது நீக்கி பாதியாக வெட்டியது)

அரிசி - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 15 அரைத்தது

பழப்புளி - 100கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக

நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் மா, அரைத்து வைத்துள்ள மிளகாய், கரைத்தபுளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

:D :P :P :(

:arrow:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=3345&start=0

:P உண்ட்மையில் ஒடியலும் பதநீரும் :? தெரியாமல் தான் சண்டை நடக்குதா???

செந்திலுக்கு தெரியாமல் இருக்க சாத்தியம்,

பொதுவாக தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு ஒடியல் என்றால் என்ன என்பது தெரிந்திருக்க்வில்லை

நான் கூழ் பற்றி எழுதிய போதும் என்னை வலைப்பதிவில் கேட்டார்கள்

Link to comment
Share on other sites

ஒரு லீட்டரா? என்ன அளந்து வைச்சா குடிப்பீர்கள்?

ஆம் லிட்டர் அளவையில்தான் குடித்தேன். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லடைசல் வாரது என்று அறிவுரை கூறப்பட்டதால் ஒரு வாரமாய் அது தொடர்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனைமட்டும் தான் வதந்தியா அல்லது வல்லிபுரக் கோவிலே வதந்தியா அங்க ஏதோ சக்ரம் கடலில வந்ததோ ஏதோ என்று சொன்ன ஞாபகம் :?

கடவுள் நம்பிக்கையை நிந்திக்க விரும்பவில்லை. பாத்திருக்கின்றீர்களா? அந்தக் கடற்கரையை! ஒரே மணல் வெளி!! கண்ணாடி மாதிரி மண் இருக்கும். அதில் சிலிக்கன் உண்டாமே!!

Link to comment
Share on other sites

ஆக வல்லிபுர கோவில் பனை மர கதை வதந்தியா?

சரி யாராவது ஒடியலை பற்றி சொல்லுங்க

:? :roll:

ஒடியல் என்றால் பனங்கிழங்கை இரண்டாக கிழித்து உலர வைத்து எடுப்பது

புழுக்கொடியல் என்றால் பனங்கிழங்கை அவித்து , குந்து நீக்கி உலரவைத்து எடுப்பது

புழுக்குதல்=அவித்தல்

Link to comment
Share on other sites

இப்போது ஓடியல் என்றால் என்னவென்று சொல்லவில்லையென்றால் நான் அழுதுடுவேனாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் என்றால் பனங்கிழங்கை இரண்டாக கிழித்து உலர வைத்து எடுப்பது

புழுக்கொடியல் என்றால் பனங்கிழங்கை அவித்து , குந்து நீக்கி உலரவைத்து எடுப்பது

புழுக்குதல்=அவித்தல்

பனங்கிழங்கை எப்படி செய்வது என்று செந்திலுக்குச் சொல்லவில்லையா? அதைப் பற்றியும் கேட்டு அடம் பிடிக்கப் போகின்றார்! :wink: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஓடியல் என்றால் என்னவென்று சொல்லவில்லையென்றால் நான் அழுதுடுவேனாக்கும்

என்னும் 5 பக்கத்திற்கு இதை வைச்சு விளக்கம் சொல்ல நினைத்தோம். குளக்ஸ் முந்தி விட்டதால் தப்பித்து விட்டீர்கள்!! :wink: :P

Link to comment
Share on other sites

பனங்கிழங்கா ! அடச்சே இதுக்க மூனு பக்கம் வரைக்கும் இழுத்திட்டிங்கள்.....

பனங்கிழங்கை நெருப்பில் சுட்டுத்தின்பது எனக்கு பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கா ! அடச்சே இதுக்க மூனு பக்கம் வரைக்கும் இழுத்திட்டிங்கள்.....

பனங்கிழங்கை நெருப்பில் சுட்டுத்தின்பது எனக்கு பிடிக்கும்

நெருப்பில் சுட்டும் தின்பார்களா? பொதுவாக அவிய வைத்து தானே உண்பது வழக்கம்!!

Link to comment
Share on other sites

ஓடியல் கூழ் எல்லாம் புரிஞ்சிருக்கு ஆனா எப்பிடி பனைல இருந்து ஒடியல் வருது எண்துதான் புரியல

ஆமா!! ஒடியல் எப்படி பனையில் இருந்து வருகின்றது? :wink: :P

அட இதுதெரியாதா

ஏதோ எனக்கு தெரிஞ்சதச் சொல்லுறன்

அட சுற்றுலாவில பாத்தது தான்பா

பனைமரம் தெரிதுதானே,

அதுக்குப் பிறகு பனம் பழம் தெரியுமா? அந்தப் பனம் பழத்தில இருந்து பனங்கொட்டைய எடுத்து மண்ணுக்க புதைச்சு முளைக்க வைப்பார்கள். அப்புறம் அது முளைச்சு கிழங்குவரும். அந்தக் கிழங்கத்தான் நாம் பனங்கிளங்கு எண்டு சொல்கிறோம். அத அவிச்சும் சாப்பிடுவார்கள். அந்தக் கிழங்க இரண்டா பிளந்து வெயில்ல காய வைப்பார்கள் அதைத்தான் ஒடியல் என்பார்கள். பனங்கிழங்கை பச்சையாய் காயவைத்தால் அது ஒடியல். அதையே அவித்து பிளந்து பாயவைத்தால் அது புழுக்கொடியல்.

கனடிய தமிழ்க் கடைகளில் Boiled Odiyal என்று லேபிள் போட்டு விற்பனையில் உள்ளது.

Link to comment
Share on other sites

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

இல்லைப்பா!! சுட்டுத் தின்றால் திருட்டுப்பட்டம் கட்டி விடுவார்களே! அதைப் பற்றிக் கவலை இல்லையா என்று கேட்டேன்! :wink: :P :D

Link to comment
Share on other sites

சுட்டு சாப்பிடுவதை விட ஏதும் மகிழ்வான அனுபவம் இருக்கிறதா :D

பனங்கிழங்கை சுட்டிட்டு ஓடிப்போய் அதை நெருப்பில சுட்டுச் சாப்பிட்டா சுவை இன்னும் அதிகமா இருக்கும் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:twisted: :evil: :twisted:

குளக்ஸ் முறைக்கின்ற விதத்தைப் பார்க்க சரியில்லையே!! யாராவது ஒன்று, இரண்டு சொன்னீர்கள் என்றால் ஓடிவிடலாம்.... :oops: :oops:

Link to comment
Share on other sites

குளக்ஸ் முறைக்கின்ற விதத்தைப் பார்க்க சரியில்லையே!! யாராவது ஒன்று, இரண்டு சொன்னீர்கள் என்றால் ஓடிவிடலாம்.... :oops: :oops:

மூன்று சொன்னால் தான் ஓடுவன் :evil:

ஆனா எனக்கு மூன்று தெரியாது :wink: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.