Jump to content

பேய் பிசாசு அனுபவம்..


Recommended Posts

பேய் - பலவீனமானவ​ர்கள் பார்க்கத் தடை

டிஸ்கி: பயந்த மனமுள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டாம். அதன் பின்னர் நான் எதற்கும் பொறுப்பல்ல..

http://youtu.be/VVODoBfSdAQ

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் நகரத்தின், நடுவில், ஒரு பழைய காலத்துக் கட்டிடம்!

அதன் அருகே, தண்டவாளங்கள் பல, ஒன்றுக்கொன்று குறுக்கும் நெடுக்குமாகப் போடப் பட்டிருந்தன!

அங்கு, இரவில் காவல் தொலிழில் ஈடுபடும் மாணவருக்கு, வழமையான சம்பளத்திலும் பார்க்கக் கொஞ்சம் அதிகம்!

இரவு மணி ஒன்று!

திடீரெனப் புறாக்களின் இறக்கைகள் பட படவென அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது!

அந்தக் கட்டிடத்தின், விருந்தினர் தங்கும் அறையில் உள்ள கதிரையில், ஒரு பெண்ணின் உருவம் அமர்ந்திருந்தது!

திடீரென்று அறை முழுவதும், வெளியில் படர்ந்திருந்த, பனிப் புகார், படர்ந்தது போல இருந்தது!

ஒரு விதமான 'குளிர்' அந்த அறை முழுவதையும் ஆட்கொண்டது போல, ஒரு உணர்வு!

ஒரு பத்து நிமிடங்கள் வரை, அந்தப் பெண்ணுருவம், அமர்ந்திருந்ததாக நினைவு!

பின்பு, அதைக் காணவில்லை!

இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு! எப்போதுமே, வெள்ளை நிற உடுப்புத் தான் போட்டிருக்கும், அந்தப் பெண்ணின் முகம், ஒரு நாளும் தெளிவாகத் தெரிந்ததில்லை!

அண்மையில் போய்ப் பார்க்கும் துணிச்சலும் ஒரு நாளும் வந்ததில்லை!

நிச்சயமாக 'உச்சா' போனதாய், நினைவில்லை! :D

Link to comment
Share on other sites

[size=5]அட நம்ம சுண்டலெண்டால் போய் தொட்டுப் பார்த்திருப்பாரே!![/size]

சுண்டல் : டேய் மச்சி அங்கை பாரடா வடிவான பெட்டை ஒருத்தி இருக்கிறாள்

சுபேஸ் : மச்சி அது பெட்டை இல்லை பேயடா

சுண்டல்: போடா பேயா அது பெட்டையடா

சுபேஸ்: நீதாண்டா பேய் போய் அந்தப் பேயைப் பார்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அட நம்ம சுண்டலெண்டால் போய் தொட்டுப் பார்த்திருப்பாரே!![/size]

சுண்டல் : டேய் மச்சி அங்கை பாரடா வடிவான பெட்டை ஒருத்தி இருக்கிறாள்

சுபேஸ் : மச்சி அது பெட்டை இல்லை பேயடா

சுண்டல்: போடா பேயா அது பெட்டையடா

சுபேஸ்: நீதாண்டா பேய் போய் அந்தப் பேயைப் பார்

:lol:

சுண்டல்: மச்சி, பழம் நழுவிப் பாலில விழுதுடா!

சபேஸ்: பழமில்லடா, அது பே.... பேய்டா!

சுண்டல் எஸ்கேப்! :D

Link to comment
Share on other sites

லண்டனில் பேய்களை பலர் பார்த்ததாக எனக்கு கூறினார்கள் ...........இது ஜோக் அல்ல .உண்மை

அண்மையில் இங்கிருந்து லண்டன் சென்ற ஒரு குடும்பம் எனக்கு கூறிய ஓர் உண்மையான திடுக்கிடும் அனுபவத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன் ...முதலில் அவர்களின் அனுமதியை பெற்ற பின் ................அனுமதி கிடைத்தால் இரவு 12 மணிக்கு பதிகிறேன் நன்றி .... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பேய்களை பலர் பார்த்ததாக எனக்கு கூறினார்கள் ...........இது ஜோக் அல்ல .உண்மை

அண்மையில் இங்கிருந்து லண்டன் சென்ற ஒரு குடும்பம் எனக்கு கூறிய ஓர் உண்மையான திடுக்கிடும் அனுபவத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன் ...முதலில் அவர்களின் அனுமதியை பெற்ற பின் ................அனுமதி கிடைத்தால் இரவு 12 மணிக்கு பதிகிறேன் நன்றி .... :)

தமிழ்சூரியன், மேலேயுள்ள கதை, பொய்யென்று நான் சொன்னேனா?

இந்தத் திரியில் நான் பதியும் பதிவுகள், உண்மைக் கதைகளே! :o

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன், மேலேயுள்ள கதை, பொய்யென்று நான் சொன்னேனா?

இந்தத் திரியில் நான் பதியும் பதிவுகள், உண்மைக் கதைகளே! :o

இப்பதான் பயமாய் இருக்கு .... :D :D

Link to comment
Share on other sites

கடவுளே சுண்டல நித்தா கொள்ள விடாம பண்ணுறாங்கப்பா.....

சுண்டல் உங்களுக்கு இரவு வேலை என்று தெரியும் .....வேலை முடிந்து வீட்டிற்கு காரில் செல்லும்போது மிக்க கவனம் ராசா...................யாராவது லிப்ட் டு கேட்டாலும்

காரை நிறுத்தக்கூடாது....................சொல்லிட்டன் :D

Link to comment
Share on other sites

இது உண்மையாக நடந்தது .

ஸ்காபோரோவில் புது வீடு கட்டும் நிறுவனம் மண்ணை கிண்டும் போது மனித எலும்புகள்,வேறு சில lஉலோக கழிவுகளும் இருந்தை கண்டுபடித்தது.அந்த திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிற்பாட்டிவிட்டார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல கழிவுகள் காடாக இருந்தஅந்த பிரதேசத்தில் தான் தாட்டார்கள் என்று சொல்லி பின்னர் எல்லாம் சுத்தம் செய்து வீடுகளும் கட்டிவிட்டார்கள் .

போன வருடம் ஜெர்மனில் இருந்து வந்து நின்ற எனது தம்பியின் நண்பரின் மகனோருவர் தம்பியுடன் போய் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வீடு திரும்புகையில் அந்த இடத்தை கார் கடக்க அந்த பெடியன் சொன்னாராம் "மாமா இந்த இடத்தில பேய் (ghost) இருக்குதேன்று".ஒரு வீதமும் கடவுள் ,பேயை நம்பாத எனது தம்பி என்ன சொல்லுகின்றீர் என கேட்க ஏனோ தனக்கு அந்த இடத்தை தாண்ட அந்த உணர்வு வந்ததாக சொன்னாராம் .

தம்பி வீடு வந்து பெடியனின் பெற்றோருக்கு ஜெர்மனிக்கு போனை அடிக்க அவர்கள் ஜெர்மனியிலும் சில வேளைகளில் சுடலைகளை கடக்கும் போது பேய் நிற்பதாக சொல்கின்றதாகவும் தாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார்களாம் .

ஒன்றுமாக விளங்கவில்லை .

Link to comment
Share on other sites

இது உண்மையாக நடந்தது .

ஸ்காபோரோவில் புது வீடு கட்டும் நிறுவனம் மண்ணை கிண்டும் போது மனித எலும்புகள்,வேறு சில lஉலோக கழிவுகளும் இருந்தை கண்டுபடித்தது.அந்த திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிற்பாட்டிவிட்டார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல கழிவுகள் காடாக இருந்தஅந்த பிரதேசத்தில் தான் தாட்டார்கள் என்று சொல்லி பின்னர் எல்லாம் சுத்தம் செய்து வீடுகளும் கட்டிவிட்டார்கள் .

போன வருடம் ஜெர்மனில் இருந்து வந்து நின்ற எனது தம்பியின் நண்பரின் மகனோருவர் தம்பியுடன் போய் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வீடு திரும்புகையில் அந்த இடத்தை கார் கடக்க அந்த பெடியன் சொன்னாராம் "மாமா இந்த இடத்தில பேய் (ghost) இருக்குதேன்று".ஒரு வீதமும் கடவுள் ,பேயை நம்பாத எனது தம்பி என்ன சொல்லுகின்றீர் என கேட்க ஏனோ தனக்கு அந்த இடத்தை தாண்ட அந்த உணர்வு வந்ததாக சொன்னாராம் .

தம்பி வீடு வந்து பெடியனின் பெற்றோருக்கு ஜெர்மனிக்கு போனை அடிக்க அவர்கள் ஜெர்மனியிலும் சில வேளைகளில் சுடலைகளை கடக்கும் போது பேய் நிற்பதாக சொல்கின்றதாகவும் தாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார்களாம் .

ஒன்றுமாக விளங்கவில்லை .

நன்றி தங்கள் பதிவிற்கு ..............உண்மையில் எனக்கும் பலர் பல அனுபவங்களை கூறினார்கள் .................ஆனால் நான் இன்னும் நேரடியாய் அனுபவப்படவில்லை ............

ஆனால் எதோ ஒன்று இருபது உண்மை என்று என் மனம் சொன்னாலும் ..............தடயங்களுடன் தேடுகிறேன் ..................மேலும் உங்கள் அனுபவங்களை பதியுங்கள்

Link to comment
Share on other sites

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

Link to comment
Share on other sites

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

எனக்கு தேவர்கள் அடிக்கடி தென்படுவதுண்டு. என்ன கணங்கள் என் சாதகத்தில் இருக்குமோ?314.gif.

ஒருவேளை அவற்றைத்தான் ...

பேய்க்கணங்கள்!

அதுவேதான்..

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

சாத்திரத்தை நடைமுறைச் சாத்தியமாக நம்புவதில்லை.

இருந்தாலும் இவன் தேவகணம் என்று முன்னோர்கள் சொன்னதால், நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

ஐ வான்ட் டு சீ மர்லின் மன்றோ, அண்ட் ஆல்சோ வான்ட் டு சீ சில்க் சிமிதா. :D

சும்மா போங்கப்பா குறுக்கால போற நாய் கூடத் தெரியுதில்லை. :lol:

Link to comment
Share on other sites

எனது நண்பி சொல்லுவா தனக்கு இறந்த ஆட்கள் அடிக்கடி கனவில் வருவதாக. அப்படி என்றால் அது என்ன??

Link to comment
Share on other sites

எனது நண்பி சொல்லுவா தனக்கு இறந்த ஆட்கள் அடிக்கடி கனவில் வருவதாக. அப்படி என்றால் அது என்ன??

அவரின் சாதகத்தின் படி நிறைய கடன் வாங்குபவர்(வாங்கியவர்) என்பது கருத்து :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் சாதகத்தின் படி நிறைய கடன் வாங்குபவர்(வாங்கியவர்) என்பது கருத்து :D

மல்லை எனக்கும்தான் கனபேர் கனவில வருகிறார்கள் அத்தனைபேரிடமும் கடன் வாங்கியிருக்கிறேனா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அவரின் சாதகத்தின் படி நிறைய கடன் வாங்குபவர்(வாங்கியவர்) என்பது கருத்து :D

:lol:

மல்லை எனக்கும்தான் கனபேர் கனவில வருகிறார்கள் அத்தனைபேரிடமும் கடன் வாங்கியிருக்கிறேனா? :icon_mrgreen:

:lol:

Link to comment
Share on other sites

மல்லை எனக்கும்தான் கனபேர் கனவில வருகிறார்கள் அத்தனைபேரிடமும் கடன் வாங்கியிருக்கிறேனா? :icon_mrgreen:

நம்பினவனுக்கே நடராசா. நான் என்ன பண்ண?

எதுக்கும் குறிப்பை இன்னொருகால் திருப்பி அனுப்பிவிடுங்கோ. இன்னொருதடவை திருப்பி பார்த்துவிட்டால் போச்சு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விடிய வெள்ளன எழும்பி டியூசனுக்குப் போறதெண்டு சொன்னாந்தானே. அம்மாவும்

படிப்பிக்கப் போறதால நாலு மணிக்கே எழும்ம்பிச் சமைப்பா. எங்கட அம்மம்மாவும் எழும்பி முகம் கழுவித் தேத்தண்ணி குடிச்சுப்போட்டு ஏதாவது செய்துகொண்டிடுப்பா.ஒருநாள் விடிய நாலரைக்கு நானேளும்பி முதல் வேலையா காலைக்கடன் கழிக்க குசினியை கடந்து வெளியில போறான்.அம்மம்மா வீட்டுப் பின்பக்கப் படலையில் இடுப்பில் ஒருகையும் படலையில் ஒரு கையுமாக நிக்கிறா. விடியவெள்ளன உதில ஏன் நிக்கிறியள் எண்டு கேட்டபிறகுதான் அம்மம்மா தன்ர கட்டிலுக்குப் பக்கத்தில இருந்து பாக்கு இடிச்சுக்கொண்டு இருந்த ஞாபகம் வந்தஉடன நிமிர்ந்து பாக்க ஒருத்தரையும் காணேல்ல.விழுந்தடிச்சு ஐயோ எண்டு கத்திக்கொண்டு ஓடிப்போய் அம்மம்மாக்கு முன்னால தான் நிண்டன். நடந்ததைச் சொல்ல அம்மம்மா பட அறைக்க கொண்டுபோய் திருநீறு பூசிப்போட்டுச் சொன்னா நீ தேவ கணம் உனக்கு இப்பிடியானது தெரியும் எண்டு.முந்தி நான் நம்பேல்ல. யாழுக்கு வந்தபிறகு நம்பிறன்.

சிறீயின் படங்களும் கதையும் அருமை. ஒண்டு விளங்கேல்ல கலியாணம் கட்டினபிறகு பேயை நப்பின் எண்டு நிழலி எழுதியிருக்கிறார் பேயள் பேயளைப் பாத்துப் பயப்பிடுமே. சுண்டல் கவனம் மோகினிப்பேய் முதல் உங்களைத்தான் பிடிக்கும். :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்காபிரிக்க நாடொன்றில், ஒரு குக்கிராமம்,

பிரதான நகரத்தில், இருந்து ஒதுக்குப் புறமாக இருந்தது,

அங்கு ஒரு பெரிய முதலாளியின், விருந்தினர்கள் தங்கும், வெளி வீடொன்றில், வாடகைக்கு வசித்துக் கொண்டிருந்த காலம்,

முதலாளி, வருடத்தில் நத்தார் காலத்தில் மட்டும் குடும்பத்துடன் வந்து தங்குவதுண்டு.

அந்த வீட்டின் பக்கத்தில், நீள் சதுர வடிவில், ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதன் வெளிக்கட்டில் இருந்து தான், வார விடுமுறை நாட்களில், நானும் நண்பர்களும் இருந்து கதைப்பது, சாப்பிடுவது எல்லாமே!

ஒரு நாள், இரவு நாய்கள் கடுமையாகக் குரைத்தன! யாரோ நடந்து திரியும் சத்தமும் கேட்டது!

அடிக்கடி மின்சாரமும் போய் விடுவதால், இறுக்கி மூடிக் கொண்டு, படுத்து விடுவேன்!

ஒரு முறை, விடுமுறையில், முதலாளி, வந்த போது, இது பற்றிக் குறிப்பிட்டேன்!

அவர் சிரித்து விட்டுக் கூறினார்!

அது எனது அம்மா தான்! நீ வீணாகக் கவலைப் பட்டுக் கொள்ளாதே! அவ உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவா!

அப்படியா, உங்கள் அம்மாவை, நான் ஒருநாளும் கனடதில்லை. எனக்கு, ஒரு முறை, அறிமுகப் படுத்தி விடுங்கள் என்று கேட்டேன்!

அவர், சிரித்து விட்டு ஒரு இடத்தைக் காட்டினார்!

அவர் சுட்டுவிரல், காட்டிய இடம், அந்த நீள் சதுரப் பூந்தோட்டம்!

(இந்தச் சம்பவம் கற்பனையல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் படமும் சகாரா அக்காவின் படமும் இன்று காலைவரை வேறு படங்கள் இருந்த மாதிரி நினைவாய் இருக்குது. இப்ப பாத்தால் வேற படங்கள் தெரியுது. இவை முகப்புப் படங்களை மாற்றி விட்டார்களா அல்லது எனக்குத்தான் அப்பிடித் தெரியுதோ விளங்கேல்லை.

Link to comment
Share on other sites

பனங்காயின் படமும் சகாரா அக்காவின் படமும் இன்று காலைவரை வேறு படங்கள் இருந்த மாதிரி நினைவாய் இருக்குது. இப்ப பாத்தால் வேற படங்கள் தெரியுது. இவை முகப்புப் படங்களை மாற்றி விட்டார்களா அல்லது எனக்குத்தான் அப்பிடித் தெரியுதோ விளங்கேல்லை.

ஒரு செட் பாக்கிடிக்கிற அம்மம்மா. மற்றய செட் படலையடியில் நிற்கிற அம்மம்மா. :D

வீபூதி அருகில் இருக்கா? :lol:

Link to comment
Share on other sites

ஒரு செட் பாக்கிடிக்கிற அம்மம்மா. மற்றய செட் படலையடியில் நிற்கிற அம்மம்மா. :D

வீபூதி அருகில் இருக்கா? :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.