Jump to content

" ஈழ மரத்தடித் தேனீ "


Recommended Posts

[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size]

[size=5]swarm2.jpg[/size]

வாடி விழுந்த பூவுக்குள்

சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது!

தேடி வைத்த தேன்கூடு

ஏதுமன்றி தனிமையில் காய்கிறது!

செத்து விழுந்த சருகுகளுக்குள்

சில காலூன்றி எழும்பி விழுகிறது!

பறக்க முனைந்து பாதி சிறகுகளை

வலிய விரித்து தவழ்கிறது!

பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும்

அழையா விருந்து நடக்கிறது!

ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்…

சிறுகச் சிறுக வருடங்களாய்

சேர்த்து வளர்த்த தேன்வதை…

ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு…

யாருடைய அகங்காரத்தால்

வதைபட்டு அழிந்ததுவோ…?

நன்றி : கவிதையின் கவிதைகள்

Link to comment
Share on other sites

இன்று கவிதையிடமிருந்து வித்தியாசமான கவிதை எமக்கு!

ஆம்........ உண்மை தான் அலைமகள் . காலம்தான் கவிதையின் மனதிற்கு மருந்து . வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்…

சிறுகச் சிறுக வருடங்களாய்

சேர்த்து வளர்த்த தேன்வதை…

ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு…

யாருடைய அகங்காரத்தால்

வதைபட்டு அழிந்ததுவோ…?

யாருடைய அகங்காரத்தால்

வதைபட்டு அழிந்ததுவோ…? புரியவில்லை.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்க முனைந்து பாதி சிறகுகளை

வலிய விரித்து தவழ்கிறது!

பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும்

அழையா விருந்து நடக்கிறது!

பல்லிகளும், ஓணான்களும் தான் இப்போது இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன!

அவற்றின், மனச்சாட்சிகள் செத்துப் போய், நீண்ட நாட்களாகி விட்டன!

அந்த மனச்சாட்சிகள், ஒரு நாள், துயிலெழும்பும் போது,

தங்களாலேயே தாங்கள், அசிங்கப் படுத்தப் பட்டுப் போனதை உணர்வார்கள்!

நன்றிகள், கோமகன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக உள்ளது [/size]

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்.. நன்றாக உள்ளது..

Link to comment
Share on other sites

ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்…

சிறுகச் சிறுக வருடங்களாய்

சேர்த்து வளர்த்த தேன்வதை…

ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு…

யாருடைய அகங்காரத்தால்

வதைபட்டு அழிந்ததுவோ…?

யாருடைய அகங்காரத்தால்

வதைபட்டு அழிந்ததுவோ…? புரியவில்லை.

வாழ்த்துக்கள்.

சொன்னால் நான் துரோகியாகிவிடுவேன் செண்பகன் . வருகைக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

பல்லிகளும், ஓணான்களும் தான் இப்போது இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன!

அவற்றின், மனச்சாட்சிகள் செத்துப் போய், நீண்ட நாட்களாகி விட்டன!

அந்த மனச்சாட்சிகள், ஒரு நாள், துயிலெழும்பும் போது,

தங்களாலேயே தாங்கள், அசிங்கப் படுத்தப் பட்டுப் போனதை உணர்வார்கள்!

நன்றிகள், கோமகன்!!!

எனக்கு அவற்றின் மனச்சாட்சிகள் துயிலெழும்பும் என்ற நம்பிக்கை இல்லை . துயிலெழுந்திருந்தால் ??????????? வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் புங்கையூரான் .

Link to comment
Share on other sites

புகைப்படம் கவிதையை படிக்க தூண்டுகின்றன...! என்றாலும் தேனீக்களின் வாழ்வும் சாவும் ஒரு சோகத்தை நம்முள் சலனத்தை ஏற்படுத்துகின்றன...துயரமானது தான்..!

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் கோமகன்.. நன்றாக உள்ளது..

நீங்கள் நல்லதெண்டு சொன்னால் அது நல்லாத்தான் இருக்கும் :D . வருகைக்கு நன்றிகள் இசைக்கலைஞன் .

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி.

நன்றி நுணா வருகைக்கும் கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

புகைப்படம் கவிதையை படிக்க தூண்டுகின்றன...! என்றாலும் தேனீக்களின் வாழ்வும் சாவும் ஒரு சோகத்தை நம்முள் சலனத்தை ஏற்படுத்துகின்றன...துயரமானது தான்..!

தேனீக்களின் வாழ்வும் சாவும் சலனத்தை ஏற்படுத்தினாலே இந்தக்கவிதை எல்லோர் மனதிலும் சென்றடைந்திருக்கின்றது என்பது அர்த்தமாகும் . மிக்க நன்றிகள் மீள்சிறகு உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கவிதை அருமையாக உள்ளது [/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கவிதை அருமையாக உள்ளது

மிக்க நன்றி பகீ வருகைக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.