Jump to content

ஒரு மணம் பலமனம்


Recommended Posts

அச்சச்சோ சாத்திரி......ஹீரோ நிலமை இப்பிடி ஆச்சே.இருந்தாலும் ரொம்ப சுயநலம்தான்.அவா இல்லையென்டவுடனே இவாக்கு றோஸாம் சுடிதாராம்.

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

முதலில இருந்து இப்பதான் படிகிறன் இன்னும் கடைசிப்பக்கத்துக்கு வரேல்லை.... நல்லாப்போகுது கதை....!

சோசமா முடிச்சு போடாதேங்கோ சாத்திரியார் உங்களை கெஞ்சிக்கேக்கிறன்..!

Link to comment
Share on other sites

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :)

சனியன் என்று சொல்லாகூடாது கொனரபல் சனிஸ்வரபகவான் என்று மரியாதையாக சொல்லவும் :D:lol:

Link to comment
Share on other sites

கல்யாணப்பரிசாக தாலியா? ஆகா :P :P :P

எப்ப தாத்தா இறுதி பாகம் வரும்? வாசிக்க ஆவலுடன் இருக்கிறன் :P

Link to comment
Share on other sites

வெளியே வந்ததும் சுராயாவும் லோறோனும் வந்து என்னை கட்டி தழுவி தங்கள் வணக்கங்களை தெரிவித்து விட்டு சுராயா என்னை ப்பார்த்த எப்படி பயணம் நன்றாக அமைந்ததா? சரி எனக்கு ஏதோ நிறைய அதிர்ச்சிகள் கொண்டு வருவதாக சொன்னாயெ எங்கே ஒவ்வொன்றாக தா பாரக்கலாம் என்றால் அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு அதிர்ச்சியை பார்த்து அதில் நான் அதிர்ச்சியடைந்துபோய் இருப்பதை எப்படி அவளிற்கு சொல்ல முடியும் எனவே நான் ஓ.. அதுவா அது சும்மாதான் சொன்னன்

எனக்கு பயண களைப்பு அதைவிட தலைவலியாகவும் இருக்கிறது என்னை வீட்டில் விட்டு விடுங்கள் பின்னர் ஆறுதலாக எல்லவற்றையும் பேசலாம் என்று கூற சுராயாவும் ஓ அப்படியா சரி ஆனால் நான் உனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்ல போகிறேன் இதோ இந்த திருவாளர் லோறொன் இப்போ எனது காதலர் எப்படி என்று யோசிக்கின்றாயா?? லோறோன் முன்னரே தனது காதலை என்னிடம் வெளிப்படுத்தியிருந்தான் ஆனால் நான் தான் உன்னை மனதில் நினைத்து கொண்டு திரிந்த படியால் முன்னர் அவனது காதலை நிராகரித்து விட்டேன்.

நீதான் எனது காதலை ஏற்காத திருமணம் செய்ய போகிறென் என்று ஒடிவிட்டாய் அதில் மனமுடைந்து போய் சரியாக வேலையும் செய்ய முடியாமல் தவித்த காலங்களில் லோறோன் தான் என்னுடைய துன்பங்களில் பங்கு கொண்டு எனக்கு அறுதலாகவும் இருந்தவன் . யோசித்து பார்த்தேன் நீதான் எனக்கு இல்லையென்றாகி விட்ட பின்னர் எதற்காக இன்னமும் கவலைபட்டுகொண்டிருக்க வேண்டும் என நினைத்து என்னை விரும்பும் லொறெனிற்கு நான் சம்மதம் தெரிவித்த விட்டேன் .

இப்போ இருவரும் ஒன்றாக தங்குவதற்கு வீடு தேடி கொண்டிருக்கிறோம் என சொல்லியபடி லோறொனை பார்த்து கண்ணடித்து விட்டு என்னை பார்த்தாள். இருவரிற்கும் மீண்டும் எனது கைகளை குலுக்கி வாழ்த்துகள் எனகூறிவிட்டு வண்டியில் ஏறி புறப்பட தயாரானோம் . வண்டியில் ஏறியதும் சுராயா கேட்டாள் எனக்கு என்னபரிசு ஏதோவாங்கியதாக தொலை பேசியில் சொன்னாயே என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்றவும்.

நான் அவசரபடாதே தருகிறேன் என கூறி விட்டு அவர்கள் பார்க்காத சமயம் அவளிற்காய் வாங்கிய சுடிதார் பையினுள் நான் எழுதி வைத்திருந்த அந்த காதல் மடலை மெதுவாய் எடுத்து எனது சட்டை பையினுள் வைத்து விட்டு இந்தா இதுதான் உனக்கு வாங்கிய பரிசு என்று கொடுக்கவும் வாங்கி பார்த்தவள் வாவ்........என்று மகிழ்ச்சியில் எனக்கு நன்றிகள் கூற லோரொன் என்னை பார்த்து அப்ப எனக்கு எதுவுமே இல்லையா என்றான்??? எல்லோரிற்கும் இருக்கு அவை பெரிய பொதியில் இருக்கிறது பின்னர் தருகிறென் என்றவும்

. ஓ அப்ப சுராயாவின் பரிசை விசேடமாக கைகளிலேயெ கொண்டு வந்தாயா??என்று கேட்டு சிரிக்க சுராயாவும் சிரித்தாள் எனக்கு சிரிப்பு வரவில்லை ஆனாலும் சிரிப்பதைபோல நடித்தேன் . வீடு வந்து சேர்ந்தாகி விட்டது இறங்கி கொண்ட நான் எனது பொதியை வீட்டிற்குள் கொண்டு வந்து தரவா??என லோறொன் கேட்டான் வேண்டாம் நானெ எடுத்து கொள்கிறேன் எனகூறி இருவரிற்கும் நன்றி கூறி விடை பெற்றுகொண்டு பொதியை தூக்கினேன் பொதியின் பாரம் எனது மனதின் பாரம் இரண்டும் சேர்ந்து என்னை சற்று தள்ளாட வைத்தது வீட்டினுள் புகுந்துகொண்டநான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு கட்டிலில் சில நிமிடங்கள் வீழ்துகிடந்த எனக்கு மெதுவாய் எழுந்து சாப்பாட்டு மேசையை பார்த்தேன்.

அன்று நான் வருவது தெரிந்து எனது நண்பன் சமைத்து வைத்துவிட்டு ஒரு போத்தல் விஸ்கியும் வாங்கி வைத்து விட்டு வேலைக்கு போயிருந்தான். ஒரு கிளாசை எடுத்து அதில் சில ஜஸ்கட்டிகளை போட்டு விஸ்கியை அதில் ஊற்றிவிட்டு உங்களிற்கு சொல்கிறேன் நான் கவலைக்காக குடிக்கவில்லை ஏதோ குடிக்கவேண்டும் போல் இருக்கிறது அதனால் குடிக்கிறேன்............................................

முடிந்தது)

இந்த கதையில் கதையின் நாயகன் மற்றும் நாயகி சுராயா போன்றோர் எடுத்து முடிவுகள் பற்றி உங்கள் கருத்துகளையும் வையுங்கள்.

மேலதிகமாக சில தகவல்கள் இந்த கதையின் நாயகி நிதர்சினி தனது காதலன் குமாரை திருமணம் செய்து பிள்ளைகளுடன் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள். சுராயாவும் லோறோனும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்து இருவரிற்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால் இருவரும் பின்னர் பிரிந்து விட்டார்கள்.கதையின் நாயகன் சுதனும் திருமணமாகி மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். அப்பாடா ஒரு மாதிரி கதையை முடிச்சாச்சு நிம்மதி உறவுகளே மீண்டும் அடுத்த ஒரு தொடருடன் எண்டு சொல்லதான் ஆசை சே..... இப்போதைக்கு இந்த கோடை முடியும் வரை எனக்கு நேரம் கிடைக்காது எனவே மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் சாட்றீ

Link to comment
Share on other sites

கதை நல்லா இருக்கு. முடிவு எப்படியிருக்கப்போகுதோ :?

என்ன அங்கிள் அதுதான் கதை முடிஞ்சிதே அப்புறம் என்ன கதை எப்படி இருக்க போகுதோ?? :? :? :?

Link to comment
Share on other sites

ம் ஒரு மாதிரி அவசரப்பட்டுக் கதையை முடிச்சிட்டீங்கள்.நாயகன் நாயகி எடுத்த முடிவுகள் சரிதான். அம்மா அப்பாக்காக திருமணம் செய்திட்டு தத்தளிக்கிறதை விட நாயகன் எடுத்த முடிவு நல்லதுதான் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அம்சமான முடிவு......

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

Link to comment
Share on other sites

சாத்திரமும் சம்பிரதாயமும் எங்களுக்காக நாங்களே உருவாக்கினது தானே சாத்திரி அங்கிள்.....

Link to comment
Share on other sites

நல்லா முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் எல்லா தம்பதிகளூக்கும். :P :P :P சுதனும் சந்தோசமாக வாழ்த்து மழலை செல்வமும் கிடைக்க :P வாழ்த்துறேன் :P :P

Link to comment
Share on other sites

எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

தேவையான நேரத்தில கிடைக்கேல்ல எண்டு யாரு சொன்னது? :roll: அதென்ன எல்லாச் சூழ் நிலையிலும்? :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

சாத்திரிக்குப் பயமாக இருக்கிறது போல் உள்ளது. கவலைப்படாதீர்கள், உங்கள் தொழிலிற்கு மோசம் வராது. ஏனெனில் பெரியோர்கள் இருக்கிறார்கள். :wink: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையினை வாசித்த திருப்தி. அடுத்த கதையினை ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்

Link to comment
Share on other sites

விருவிருப்பாக சிறுகதை எழுதுவதில் சாத்திரிக்கு நிகர் யாழில் ஒரு வரும் இல்லை. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருந்தது

ஆனால் ஆரம்பத்தில் சுதன் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் முடிவில இல்லை

மனைவியை விரும்பியவனுடன் சேர்த்து வைக்கும் கணவனாக ஓகே ஆனால் அதுக்கு பிறகு அவர் சுரயாவை தேர்ந்து எடுக்கும் முடிவு சரியில்லை

கதையும் அதை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருந்தது பாராட்டுகள்

:P

Link to comment
Share on other sites

  • 5 years later...

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் மதியமே திண்ணையில் பார்த்து முழுக்க வாசித்துவிட்டேன் லாலிப் பப் கருத்துகளை தவிர அதை படிக்கவேயில்லை,

வாசிக்கும் போதே இது பாக்கியராஜின் படம் மாதிரி தாலியை கலடிற சீன் வரும் ஆனா கலட்ட வைப்பிங்கள் என்றே எதிர்பாத்தேன், நன்றி நல்ல உயிர் ஓட்டமா எழுதியிருக்கிறீர்கள், யாரவது சுட்டு படமெடுக்க போறார்கள்

Link to comment
Share on other sites

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

ஆ...ஆ...ஆச்சும். 5 வருசத்திற்கு பிறகு தப்பிலி தூசு தட்டியதில் வந்த தும்மல் அது. தற்சமயம் சுதனைப்பற்றி மட்டுமே தெரியும். 3 பிள்ளைகள் சந்தேசமாக இருக்கிறான். மற்றையவர்கள் பற்றி எதுவும் தெரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை சம்பவங்கள் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்.சிலது மட்டுமே நினைவில் நிற்கின்றது. அடுத்ததாய் இன்று திரும்ப இந்தபக்கத்தை ஒரு நோட்டம் விட்டேன். அடடா சாத்திரிக்கு அந்த நேரம் எவ்வளவு இரசிகைகள் இருந்திருக்கினம். யாழ் களத்திலை அந்த நேரம் ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. இப்ப என்னடாவெண்டால் நாலு கிழவியளோடை மாரடிக்கவேண்டிக் கிடக்கு.சே......வாழ்க்கை வெறுத்திட்டுது. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.