Jump to content

ஒரு மணம் பலமனம்


Recommended Posts

அச்சச்சோ சாத்திரி......ஹீரோ நிலமை இப்பிடி ஆச்சே.இருந்தாலும் ரொம்ப சுயநலம்தான்.அவா இல்லையென்டவுடனே இவாக்கு றோஸாம் சுடிதாராம்.

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

முதலில இருந்து இப்பதான் படிகிறன் இன்னும் கடைசிப்பக்கத்துக்கு வரேல்லை.... நல்லாப்போகுது கதை....!

சோசமா முடிச்சு போடாதேங்கோ சாத்திரியார் உங்களை கெஞ்சிக்கேக்கிறன்..!

Link to comment
Share on other sites

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :)

சனியன் என்று சொல்லாகூடாது கொனரபல் சனிஸ்வரபகவான் என்று மரியாதையாக சொல்லவும் :D:lol:

Link to comment
Share on other sites

கல்யாணப்பரிசாக தாலியா? ஆகா :P :P :P

எப்ப தாத்தா இறுதி பாகம் வரும்? வாசிக்க ஆவலுடன் இருக்கிறன் :P

Link to comment
Share on other sites

வெளியே வந்ததும் சுராயாவும் லோறோனும் வந்து என்னை கட்டி தழுவி தங்கள் வணக்கங்களை தெரிவித்து விட்டு சுராயா என்னை ப்பார்த்த எப்படி பயணம் நன்றாக அமைந்ததா? சரி எனக்கு ஏதோ நிறைய அதிர்ச்சிகள் கொண்டு வருவதாக சொன்னாயெ எங்கே ஒவ்வொன்றாக தா பாரக்கலாம் என்றால் அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு அதிர்ச்சியை பார்த்து அதில் நான் அதிர்ச்சியடைந்துபோய் இருப்பதை எப்படி அவளிற்கு சொல்ல முடியும் எனவே நான் ஓ.. அதுவா அது சும்மாதான் சொன்னன்

எனக்கு பயண களைப்பு அதைவிட தலைவலியாகவும் இருக்கிறது என்னை வீட்டில் விட்டு விடுங்கள் பின்னர் ஆறுதலாக எல்லவற்றையும் பேசலாம் என்று கூற சுராயாவும் ஓ அப்படியா சரி ஆனால் நான் உனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்ல போகிறேன் இதோ இந்த திருவாளர் லோறொன் இப்போ எனது காதலர் எப்படி என்று யோசிக்கின்றாயா?? லோறோன் முன்னரே தனது காதலை என்னிடம் வெளிப்படுத்தியிருந்தான் ஆனால் நான் தான் உன்னை மனதில் நினைத்து கொண்டு திரிந்த படியால் முன்னர் அவனது காதலை நிராகரித்து விட்டேன்.

நீதான் எனது காதலை ஏற்காத திருமணம் செய்ய போகிறென் என்று ஒடிவிட்டாய் அதில் மனமுடைந்து போய் சரியாக வேலையும் செய்ய முடியாமல் தவித்த காலங்களில் லோறோன் தான் என்னுடைய துன்பங்களில் பங்கு கொண்டு எனக்கு அறுதலாகவும் இருந்தவன் . யோசித்து பார்த்தேன் நீதான் எனக்கு இல்லையென்றாகி விட்ட பின்னர் எதற்காக இன்னமும் கவலைபட்டுகொண்டிருக்க வேண்டும் என நினைத்து என்னை விரும்பும் லொறெனிற்கு நான் சம்மதம் தெரிவித்த விட்டேன் .

இப்போ இருவரும் ஒன்றாக தங்குவதற்கு வீடு தேடி கொண்டிருக்கிறோம் என சொல்லியபடி லோறொனை பார்த்து கண்ணடித்து விட்டு என்னை பார்த்தாள். இருவரிற்கும் மீண்டும் எனது கைகளை குலுக்கி வாழ்த்துகள் எனகூறிவிட்டு வண்டியில் ஏறி புறப்பட தயாரானோம் . வண்டியில் ஏறியதும் சுராயா கேட்டாள் எனக்கு என்னபரிசு ஏதோவாங்கியதாக தொலை பேசியில் சொன்னாயே என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்றவும்.

நான் அவசரபடாதே தருகிறேன் என கூறி விட்டு அவர்கள் பார்க்காத சமயம் அவளிற்காய் வாங்கிய சுடிதார் பையினுள் நான் எழுதி வைத்திருந்த அந்த காதல் மடலை மெதுவாய் எடுத்து எனது சட்டை பையினுள் வைத்து விட்டு இந்தா இதுதான் உனக்கு வாங்கிய பரிசு என்று கொடுக்கவும் வாங்கி பார்த்தவள் வாவ்........என்று மகிழ்ச்சியில் எனக்கு நன்றிகள் கூற லோரொன் என்னை பார்த்து அப்ப எனக்கு எதுவுமே இல்லையா என்றான்??? எல்லோரிற்கும் இருக்கு அவை பெரிய பொதியில் இருக்கிறது பின்னர் தருகிறென் என்றவும்

. ஓ அப்ப சுராயாவின் பரிசை விசேடமாக கைகளிலேயெ கொண்டு வந்தாயா??என்று கேட்டு சிரிக்க சுராயாவும் சிரித்தாள் எனக்கு சிரிப்பு வரவில்லை ஆனாலும் சிரிப்பதைபோல நடித்தேன் . வீடு வந்து சேர்ந்தாகி விட்டது இறங்கி கொண்ட நான் எனது பொதியை வீட்டிற்குள் கொண்டு வந்து தரவா??என லோறொன் கேட்டான் வேண்டாம் நானெ எடுத்து கொள்கிறேன் எனகூறி இருவரிற்கும் நன்றி கூறி விடை பெற்றுகொண்டு பொதியை தூக்கினேன் பொதியின் பாரம் எனது மனதின் பாரம் இரண்டும் சேர்ந்து என்னை சற்று தள்ளாட வைத்தது வீட்டினுள் புகுந்துகொண்டநான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு கட்டிலில் சில நிமிடங்கள் வீழ்துகிடந்த எனக்கு மெதுவாய் எழுந்து சாப்பாட்டு மேசையை பார்த்தேன்.

அன்று நான் வருவது தெரிந்து எனது நண்பன் சமைத்து வைத்துவிட்டு ஒரு போத்தல் விஸ்கியும் வாங்கி வைத்து விட்டு வேலைக்கு போயிருந்தான். ஒரு கிளாசை எடுத்து அதில் சில ஜஸ்கட்டிகளை போட்டு விஸ்கியை அதில் ஊற்றிவிட்டு உங்களிற்கு சொல்கிறேன் நான் கவலைக்காக குடிக்கவில்லை ஏதோ குடிக்கவேண்டும் போல் இருக்கிறது அதனால் குடிக்கிறேன்............................................

முடிந்தது)

இந்த கதையில் கதையின் நாயகன் மற்றும் நாயகி சுராயா போன்றோர் எடுத்து முடிவுகள் பற்றி உங்கள் கருத்துகளையும் வையுங்கள்.

மேலதிகமாக சில தகவல்கள் இந்த கதையின் நாயகி நிதர்சினி தனது காதலன் குமாரை திருமணம் செய்து பிள்ளைகளுடன் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள். சுராயாவும் லோறோனும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்து இருவரிற்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால் இருவரும் பின்னர் பிரிந்து விட்டார்கள்.கதையின் நாயகன் சுதனும் திருமணமாகி மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். அப்பாடா ஒரு மாதிரி கதையை முடிச்சாச்சு நிம்மதி உறவுகளே மீண்டும் அடுத்த ஒரு தொடருடன் எண்டு சொல்லதான் ஆசை சே..... இப்போதைக்கு இந்த கோடை முடியும் வரை எனக்கு நேரம் கிடைக்காது எனவே மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் சாட்றீ

Link to comment
Share on other sites

கதை நல்லா இருக்கு. முடிவு எப்படியிருக்கப்போகுதோ :?

என்ன அங்கிள் அதுதான் கதை முடிஞ்சிதே அப்புறம் என்ன கதை எப்படி இருக்க போகுதோ?? :? :? :?

Link to comment
Share on other sites

ம் ஒரு மாதிரி அவசரப்பட்டுக் கதையை முடிச்சிட்டீங்கள்.நாயகன் நாயகி எடுத்த முடிவுகள் சரிதான். அம்மா அப்பாக்காக திருமணம் செய்திட்டு தத்தளிக்கிறதை விட நாயகன் எடுத்த முடிவு நல்லதுதான் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அம்சமான முடிவு......

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

Link to comment
Share on other sites

சாத்திரமும் சம்பிரதாயமும் எங்களுக்காக நாங்களே உருவாக்கினது தானே சாத்திரி அங்கிள்.....

Link to comment
Share on other sites

நல்லா முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் எல்லா தம்பதிகளூக்கும். :P :P :P சுதனும் சந்தோசமாக வாழ்த்து மழலை செல்வமும் கிடைக்க :P வாழ்த்துறேன் :P :P

Link to comment
Share on other sites

எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

தேவையான நேரத்தில கிடைக்கேல்ல எண்டு யாரு சொன்னது? :roll: அதென்ன எல்லாச் சூழ் நிலையிலும்? :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

சாத்திரிக்குப் பயமாக இருக்கிறது போல் உள்ளது. கவலைப்படாதீர்கள், உங்கள் தொழிலிற்கு மோசம் வராது. ஏனெனில் பெரியோர்கள் இருக்கிறார்கள். :wink: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையினை வாசித்த திருப்தி. அடுத்த கதையினை ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்

Link to comment
Share on other sites

விருவிருப்பாக சிறுகதை எழுதுவதில் சாத்திரிக்கு நிகர் யாழில் ஒரு வரும் இல்லை. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருந்தது

ஆனால் ஆரம்பத்தில் சுதன் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் முடிவில இல்லை

மனைவியை விரும்பியவனுடன் சேர்த்து வைக்கும் கணவனாக ஓகே ஆனால் அதுக்கு பிறகு அவர் சுரயாவை தேர்ந்து எடுக்கும் முடிவு சரியில்லை

கதையும் அதை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருந்தது பாராட்டுகள்

:P

Link to comment
Share on other sites

  • 5 years later...

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் மதியமே திண்ணையில் பார்த்து முழுக்க வாசித்துவிட்டேன் லாலிப் பப் கருத்துகளை தவிர அதை படிக்கவேயில்லை,

வாசிக்கும் போதே இது பாக்கியராஜின் படம் மாதிரி தாலியை கலடிற சீன் வரும் ஆனா கலட்ட வைப்பிங்கள் என்றே எதிர்பாத்தேன், நன்றி நல்ல உயிர் ஓட்டமா எழுதியிருக்கிறீர்கள், யாரவது சுட்டு படமெடுக்க போறார்கள்

Link to comment
Share on other sites

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

ஆ...ஆ...ஆச்சும். 5 வருசத்திற்கு பிறகு தப்பிலி தூசு தட்டியதில் வந்த தும்மல் அது. தற்சமயம் சுதனைப்பற்றி மட்டுமே தெரியும். 3 பிள்ளைகள் சந்தேசமாக இருக்கிறான். மற்றையவர்கள் பற்றி எதுவும் தெரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை சம்பவங்கள் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்.சிலது மட்டுமே நினைவில் நிற்கின்றது. அடுத்ததாய் இன்று திரும்ப இந்தபக்கத்தை ஒரு நோட்டம் விட்டேன். அடடா சாத்திரிக்கு அந்த நேரம் எவ்வளவு இரசிகைகள் இருந்திருக்கினம். யாழ் களத்திலை அந்த நேரம் ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. இப்ப என்னடாவெண்டால் நாலு கிழவியளோடை மாரடிக்கவேண்டிக் கிடக்கு.சே......வாழ்க்கை வெறுத்திட்டுது. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.