Jump to content

ஒரு மணம் பலமனம்


Recommended Posts

அச்சச்சோ சாத்திரி......ஹீரோ நிலமை இப்பிடி ஆச்சே.இருந்தாலும் ரொம்ப சுயநலம்தான்.அவா இல்லையென்டவுடனே இவாக்கு றோஸாம் சுடிதாராம்.

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

முதலில இருந்து இப்பதான் படிகிறன் இன்னும் கடைசிப்பக்கத்துக்கு வரேல்லை.... நல்லாப்போகுது கதை....!

சோசமா முடிச்சு போடாதேங்கோ சாத்திரியார் உங்களை கெஞ்சிக்கேக்கிறன்..!

Link to comment
Share on other sites

சுதனுக்கு கெட்ட காலம் போல.. நல்லாய் தான் அலைக்கழிக்கின்றது. சனியனுக்கு விரதம் இருக்கச்சொல்லுங்கோ :lol: ..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கின்றேன்.

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும் சனியனுக்கா விரதம் பிடிக்கச் சொல்லுறீங்கள். :)

சனியன் என்று சொல்லாகூடாது கொனரபல் சனிஸ்வரபகவான் என்று மரியாதையாக சொல்லவும் :D:lol:

Link to comment
Share on other sites

கல்யாணப்பரிசாக தாலியா? ஆகா :P :P :P

எப்ப தாத்தா இறுதி பாகம் வரும்? வாசிக்க ஆவலுடன் இருக்கிறன் :P

Link to comment
Share on other sites

வெளியே வந்ததும் சுராயாவும் லோறோனும் வந்து என்னை கட்டி தழுவி தங்கள் வணக்கங்களை தெரிவித்து விட்டு சுராயா என்னை ப்பார்த்த எப்படி பயணம் நன்றாக அமைந்ததா? சரி எனக்கு ஏதோ நிறைய அதிர்ச்சிகள் கொண்டு வருவதாக சொன்னாயெ எங்கே ஒவ்வொன்றாக தா பாரக்கலாம் என்றால் அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு அதிர்ச்சியை பார்த்து அதில் நான் அதிர்ச்சியடைந்துபோய் இருப்பதை எப்படி அவளிற்கு சொல்ல முடியும் எனவே நான் ஓ.. அதுவா அது சும்மாதான் சொன்னன்

எனக்கு பயண களைப்பு அதைவிட தலைவலியாகவும் இருக்கிறது என்னை வீட்டில் விட்டு விடுங்கள் பின்னர் ஆறுதலாக எல்லவற்றையும் பேசலாம் என்று கூற சுராயாவும் ஓ அப்படியா சரி ஆனால் நான் உனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி சொல்ல போகிறேன் இதோ இந்த திருவாளர் லோறொன் இப்போ எனது காதலர் எப்படி என்று யோசிக்கின்றாயா?? லோறோன் முன்னரே தனது காதலை என்னிடம் வெளிப்படுத்தியிருந்தான் ஆனால் நான் தான் உன்னை மனதில் நினைத்து கொண்டு திரிந்த படியால் முன்னர் அவனது காதலை நிராகரித்து விட்டேன்.

நீதான் எனது காதலை ஏற்காத திருமணம் செய்ய போகிறென் என்று ஒடிவிட்டாய் அதில் மனமுடைந்து போய் சரியாக வேலையும் செய்ய முடியாமல் தவித்த காலங்களில் லோறோன் தான் என்னுடைய துன்பங்களில் பங்கு கொண்டு எனக்கு அறுதலாகவும் இருந்தவன் . யோசித்து பார்த்தேன் நீதான் எனக்கு இல்லையென்றாகி விட்ட பின்னர் எதற்காக இன்னமும் கவலைபட்டுகொண்டிருக்க வேண்டும் என நினைத்து என்னை விரும்பும் லொறெனிற்கு நான் சம்மதம் தெரிவித்த விட்டேன் .

இப்போ இருவரும் ஒன்றாக தங்குவதற்கு வீடு தேடி கொண்டிருக்கிறோம் என சொல்லியபடி லோறொனை பார்த்து கண்ணடித்து விட்டு என்னை பார்த்தாள். இருவரிற்கும் மீண்டும் எனது கைகளை குலுக்கி வாழ்த்துகள் எனகூறிவிட்டு வண்டியில் ஏறி புறப்பட தயாரானோம் . வண்டியில் ஏறியதும் சுராயா கேட்டாள் எனக்கு என்னபரிசு ஏதோவாங்கியதாக தொலை பேசியில் சொன்னாயே என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்றவும்.

நான் அவசரபடாதே தருகிறேன் என கூறி விட்டு அவர்கள் பார்க்காத சமயம் அவளிற்காய் வாங்கிய சுடிதார் பையினுள் நான் எழுதி வைத்திருந்த அந்த காதல் மடலை மெதுவாய் எடுத்து எனது சட்டை பையினுள் வைத்து விட்டு இந்தா இதுதான் உனக்கு வாங்கிய பரிசு என்று கொடுக்கவும் வாங்கி பார்த்தவள் வாவ்........என்று மகிழ்ச்சியில் எனக்கு நன்றிகள் கூற லோரொன் என்னை பார்த்து அப்ப எனக்கு எதுவுமே இல்லையா என்றான்??? எல்லோரிற்கும் இருக்கு அவை பெரிய பொதியில் இருக்கிறது பின்னர் தருகிறென் என்றவும்

. ஓ அப்ப சுராயாவின் பரிசை விசேடமாக கைகளிலேயெ கொண்டு வந்தாயா??என்று கேட்டு சிரிக்க சுராயாவும் சிரித்தாள் எனக்கு சிரிப்பு வரவில்லை ஆனாலும் சிரிப்பதைபோல நடித்தேன் . வீடு வந்து சேர்ந்தாகி விட்டது இறங்கி கொண்ட நான் எனது பொதியை வீட்டிற்குள் கொண்டு வந்து தரவா??என லோறொன் கேட்டான் வேண்டாம் நானெ எடுத்து கொள்கிறேன் எனகூறி இருவரிற்கும் நன்றி கூறி விடை பெற்றுகொண்டு பொதியை தூக்கினேன் பொதியின் பாரம் எனது மனதின் பாரம் இரண்டும் சேர்ந்து என்னை சற்று தள்ளாட வைத்தது வீட்டினுள் புகுந்துகொண்டநான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு கட்டிலில் சில நிமிடங்கள் வீழ்துகிடந்த எனக்கு மெதுவாய் எழுந்து சாப்பாட்டு மேசையை பார்த்தேன்.

அன்று நான் வருவது தெரிந்து எனது நண்பன் சமைத்து வைத்துவிட்டு ஒரு போத்தல் விஸ்கியும் வாங்கி வைத்து விட்டு வேலைக்கு போயிருந்தான். ஒரு கிளாசை எடுத்து அதில் சில ஜஸ்கட்டிகளை போட்டு விஸ்கியை அதில் ஊற்றிவிட்டு உங்களிற்கு சொல்கிறேன் நான் கவலைக்காக குடிக்கவில்லை ஏதோ குடிக்கவேண்டும் போல் இருக்கிறது அதனால் குடிக்கிறேன்............................................

முடிந்தது)

இந்த கதையில் கதையின் நாயகன் மற்றும் நாயகி சுராயா போன்றோர் எடுத்து முடிவுகள் பற்றி உங்கள் கருத்துகளையும் வையுங்கள்.

மேலதிகமாக சில தகவல்கள் இந்த கதையின் நாயகி நிதர்சினி தனது காதலன் குமாரை திருமணம் செய்து பிள்ளைகளுடன் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்கள். சுராயாவும் லோறோனும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்து இருவரிற்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால் இருவரும் பின்னர் பிரிந்து விட்டார்கள்.கதையின் நாயகன் சுதனும் திருமணமாகி மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். அப்பாடா ஒரு மாதிரி கதையை முடிச்சாச்சு நிம்மதி உறவுகளே மீண்டும் அடுத்த ஒரு தொடருடன் எண்டு சொல்லதான் ஆசை சே..... இப்போதைக்கு இந்த கோடை முடியும் வரை எனக்கு நேரம் கிடைக்காது எனவே மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் சாட்றீ

Link to comment
Share on other sites

கதை நல்லா இருக்கு. முடிவு எப்படியிருக்கப்போகுதோ :?

என்ன அங்கிள் அதுதான் கதை முடிஞ்சிதே அப்புறம் என்ன கதை எப்படி இருக்க போகுதோ?? :? :? :?

Link to comment
Share on other sites

ம் ஒரு மாதிரி அவசரப்பட்டுக் கதையை முடிச்சிட்டீங்கள்.நாயகன் நாயகி எடுத்த முடிவுகள் சரிதான். அம்மா அப்பாக்காக திருமணம் செய்திட்டு தத்தளிக்கிறதை விட நாயகன் எடுத்த முடிவு நல்லதுதான் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அம்சமான முடிவு......

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

Link to comment
Share on other sites

சாத்திரமும் சம்பிரதாயமும் எங்களுக்காக நாங்களே உருவாக்கினது தானே சாத்திரி அங்கிள்.....

Link to comment
Share on other sites

நல்லா முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் எல்லா தம்பதிகளூக்கும். :P :P :P சுதனும் சந்தோசமாக வாழ்த்து மழலை செல்வமும் கிடைக்க :P வாழ்த்துறேன் :P :P

Link to comment
Share on other sites

எல்லா சூழ்நிலையிலயும் இந்த முடிவு எடுக்க ஏலாது.

சுரயா செய்தது சரிதான்.தாகத்துக்கு கிடைக்காத தண்ணீரும் தேவையான நேரத்தில கிடைக்காத அன்பும் பயனற்றதாம்...

தேவையான நேரத்தில கிடைக்கேல்ல எண்டு யாரு சொன்னது? :roll: அதென்ன எல்லாச் சூழ் நிலையிலும்? :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் எல்லாரும் கதாநாயகனும் நாயகி எடுத்த முடிவு சரி என்கிறீர்கள் அப்படியானால் அவர்கள் சாத்திர சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்ததை தவறுஇல்லை என்கிறீர்காளா??

சாத்திரிக்குப் பயமாக இருக்கிறது போல் உள்ளது. கவலைப்படாதீர்கள், உங்கள் தொழிலிற்கு மோசம் வராது. ஏனெனில் பெரியோர்கள் இருக்கிறார்கள். :wink: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையினை வாசித்த திருப்தி. அடுத்த கதையினை ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்

Link to comment
Share on other sites

விருவிருப்பாக சிறுகதை எழுதுவதில் சாத்திரிக்கு நிகர் யாழில் ஒரு வரும் இல்லை. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருந்தது

ஆனால் ஆரம்பத்தில் சுதன் மீது இருந்த நல்ல அபிப்பிராயம் முடிவில இல்லை

மனைவியை விரும்பியவனுடன் சேர்த்து வைக்கும் கணவனாக ஓகே ஆனால் அதுக்கு பிறகு அவர் சுரயாவை தேர்ந்து எடுக்கும் முடிவு சரியில்லை

கதையும் அதை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருந்தது பாராட்டுகள்

:P

Link to comment
Share on other sites

  • 5 years later...

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் மதியமே திண்ணையில் பார்த்து முழுக்க வாசித்துவிட்டேன் லாலிப் பப் கருத்துகளை தவிர அதை படிக்கவேயில்லை,

வாசிக்கும் போதே இது பாக்கியராஜின் படம் மாதிரி தாலியை கலடிற சீன் வரும் ஆனா கலட்ட வைப்பிங்கள் என்றே எதிர்பாத்தேன், நன்றி நல்ல உயிர் ஓட்டமா எழுதியிருக்கிறீர்கள், யாரவது சுட்டு படமெடுக்க போறார்கள்

Link to comment
Share on other sites

கதை நன்றாயுள்ளது.

மதுபான விடுதி, ஜல்சா டான்ஸ் என்று அய்ட்டங்கள் இருப்பதால் கதை ஒரே அஜால் குஜாலாயிருக்கும் என்று ஆவலுடன் வாசித்தேன். ஆனால் கதை வேறு வழியில் பயணித்து நெஞ்சை தொட்டு விட்டது.

சுதனும் நிதர்ஷினியும் எடுத்த முடிவு சரியானது. இவர்களின் வாழ்வின் தற்போதைய 'அப்டேட்' என்ன?

ஆ...ஆ...ஆச்சும். 5 வருசத்திற்கு பிறகு தப்பிலி தூசு தட்டியதில் வந்த தும்மல் அது. தற்சமயம் சுதனைப்பற்றி மட்டுமே தெரியும். 3 பிள்ளைகள் சந்தேசமாக இருக்கிறான். மற்றையவர்கள் பற்றி எதுவும் தெரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை சம்பவங்கள் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்.சிலது மட்டுமே நினைவில் நிற்கின்றது. அடுத்ததாய் இன்று திரும்ப இந்தபக்கத்தை ஒரு நோட்டம் விட்டேன். அடடா சாத்திரிக்கு அந்த நேரம் எவ்வளவு இரசிகைகள் இருந்திருக்கினம். யாழ் களத்திலை அந்த நேரம் ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. இப்ப என்னடாவெண்டால் நாலு கிழவியளோடை மாரடிக்கவேண்டிக் கிடக்கு.சே......வாழ்க்கை வெறுத்திட்டுது. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.