Jump to content

ஒரு மணம் பலமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருக்கு. ஆனால் தொடரை கொஞ்சம் விரைவாக தந்தால் எங்கள் ஆவல் தொடராதல்லவா.

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

ஆஹா ... கதை அருமை....ம்ம் அடுத்த பாகத்தையும் சீக்கிரம் எழுதிப் போடுங்க... வாசிக்க ஆவலாக இருக்கு.... :lol:

Link to comment
Share on other sites

ஆகா நான் இப்பத்தானே பாக்கிறேன் இதெல்லாம் நடக்குதா நடக்கட்டும் ?

உங்களுக்கு வாழ்க்கையில் நடக்கிற கதைகளை எல்லாம் எழுத்தி;ல் வீசிகின்றீர்கள் மனதில் இருக்கும் பாரங்களை எல்லாம் நீங்கிடும் என நினைக்கிறேன் ம் நன்றகத்தான் இருக்கு

என் கதைகள்மாதிரி இருக்கு வாழ்த்தக்கள் சாத்திரி :lol:

Link to comment
Share on other sites

என் கதைகள்மாதிரி இருக்கு வாழ்த்தக்கள் சாத்திரி

என்ன உங்க கதை மாதிரி இருக்கா................ :shock: புறாக்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா... :roll:

Link to comment
Share on other sites

என்ன உங்க கதை மாதிரி இருக்கா................ :shock: புறாக்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா... :roll:

பின்ன மனிசர்களுக்கு மட்டுமா நடக்கும்

புறாவுக்கு நடக்காதா ஆ எனக்கு 5 அறிவுதான் ஆனால் மனிதர் மாதிரி அறிவு :roll: :evil:

Link to comment
Share on other sites

பின்ன மனிசர்களுக்கு மட்டுமா நடக்கும்

புறாவுக்கு நடக்காதா ஆ எனக்கு 5 அறிவுதான் ஆனால் மனிதர் மாதிரி அறிவு :roll: :evil:

புறா இப்ப மீனாகிட்டுதோ? :roll:

Link to comment
Share on other sites

ஏன் அந்த மீனை பிடித்து சமைக்க போறிங்களா வெண்ணிலா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு சாத்திரி தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

ஏன் அந்த மீனை பிடித்து சமைக்க போறிங்களா வெண்ணிலா :lol:

சமைக்கலாம் தான். ஆனால் மீன் துடிச்சிட்டே இருக்குதல்லவா? :cry: :cry:

Link to comment
Share on other sites

அட நீங்க வேற போங்க வெண்ணிலா?

எல்லாரும் அதிகமாக துடிக்கின்ற மீனை தானே பிரும்பி வேண்டிவினம் ?அதான் கறிக்கு மிகவும் ருசியை கொடுக்கும்

அது க்கு ஏன் அழுகிறிங்கள் சா துடிக்கின்ற மீனை நானே கொண்டுட்டு தாறேன் சமையுங்கள் :P :oops:

Link to comment
Share on other sites

தொடர் 3

சில நாட்களின் பின்னர் நான் வழமை போல எனது வெலைக்குத் திரும்பிவிட்டேன் அனால் முன்பு போல சுராயாவிடம் அவ்வளவாக நெருக்கம் காட்டுவதையோ பேசுவதையோ தவிர்த்தேன் காரணம் வெறுப்பால் அல்ல அவள் என்னை பார்த்து காதலிக்கிறேன் என்று சொன்னதன் பின்னர் எனது மனப்பூனை மதிலில் ஏறி அமர்ந்து விட்டது அது எங்கே அவளின் பக்கம் பாய்ந்து விடுமோ?? என்கிற பயத்தில்தான் அவளிடம் தனிமையான நெருக்கமான் சந்தர்ப்பங்களைத் தவிர்த்தேன் என்பதுதான் உண்மை.

என்ன விரும்பினால் விருப்பம் எண்டு சொல்லறது தானே அதை விட்டிட்டு ஏன் இப்பிடி ஒழிக்கிறாய் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்குது அதைத்தான் அவளும் என்னிடம் கேட்டாள். ஆனால் எனக்கோ எனக்கு மனைவியாய் வரப் போகிறவள் இப்படித்தான் இருக்க வெண்டும் எனது குடும்பம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று சில கனவுகள் கற்பனைகள் இருக்கு.

சுராயா அழகான அன்பானவள் தான் ஆனாலும் நாளை குடும்பம் என்று வருகிற போது என்னுடைய அந்தக் கற்பனை மனைவியாக இருக்கமாட்டாள் என்பது நிச்சயம். காரணம் அவளது பழக்கவழக்கம் கலாச்சாரம் என்பது என்னுடைய பழக்க வழக்கங்களுடன் ஒத்து போகாது.அப்ப பிடிக்காட்டில் நேரடியா பிடிக்கேல்லையெண்டு சொல்லுறதுதானே எண்டுறீங்கள். அதைத் தான் இப்ப சொல்லப் போறன் ஆனாலும் அதை உடன எனக்கு ஏனோ சொல்ல முடியலை. ஒருவிதமான தடுமாற்றத்தில் இருந்தேன். அவளது மனதை உடைக்க விரும்பவில்லை எனது மறுப்பைச் சொல்ல ஒரு காரணத்தை எதிர் பார்த்திருந்தேன். அதே நேரம் எனக்கு திருமணப்பேச்சும் நடந்து கொண்டிருந்ததால் அது நிச்சமானதும் சொல்லாமென்று சில நாட்கள் காத்திருந்தேன். இன்று சொல்லி விடலாம்.

சுராயா எனக்குப் பக்கத்தில் வந்து அமர நானே பேச்சைத் தொடங்கினேன். சுராயா நான் சொல்வதைக் கவனமாகக் கேள் சொல்ல கஷ்டமாத் தான் இருக்கு ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். நான் நாளை இந்தியா போகிறேன். அங்கு எனக்குத் திருமணம் நிச்சமாகி இருக்கிறது. எனவே உனது காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை. ஆனால் அதுக்கு இது மட்டும் தான் காரணம் அல்ல பல காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒரு காரணம் எனவே என்னில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடு. நீ உனது காதலை எனக்குத் தெரியப் படுத்தின உடனேயே எனது மறுப்பைச் சொல்லியிருக்க வேண்டும் சொல்லாதது எனது தவறு தான் நானும் யோசிக்க வேண்டியிருந்தது. எனவே அதற்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன் என்றதும். சூரிய காந்திப்பூவாய் இருந்த அவளது முகம் திடீரென சுருங்கிக் காய்ந்து சருகானதை கவனித்தேன்.

நீ எனது காதலை ஏற்று எனக்கு அதை சொல்லதான் அழைத்தாய் என்று ஆசையாய் அருகில் வந்தேன் அனால் நீ இப்பிடி சொல்லிட்டியே. எப்பிடி பழகிப் பார்க்காத புரிந்து கொள்ளாத தெரியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்த போறாய் என்று வழமையான ஒரு மேலைத்தேய பெண்களின் கேள்வியை அவளும் கேட்டாள். திருமணத்தின் பின்னர் புரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தேன் இப்படியே அவளின் கேள்விகளும் எனது பதிலும் வாதம் பிரதி வாதம் என்று சுமார் ஒரு மணி நெரத்திற்கும் மேலாக எங்கள் வாதம் தொடர இடையில் தனக்கு இன்று வேலை செய்யும் மன நிலை இல்லை எனவே லீவு வேண்டும் என்று கேட்டவள். எனக்கு குடிக்க வேண்டும் போல் உள்ளது உனக்கு ஏதாவது வேண்டுமா என்றாள்.

நானோ வேண்டாம் எனக்குப் பயண வேலைகள் உள்ளது எனவே ஒரு பியர் மட்டும் கொண்டுவா என்று சொல்லி விட்டு உரையாடலை தொடர்ந்தோம். இடையிடையே எழுந்து போய் வொட்கா வில்(ஒருவகை மது பானம்)ஒறேன்ஞ் யூசை கலந்து கொண்டு வந்து குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவள் நேரம் செல்லச் செல்ல விடுதிக்குள் ஆட்களும் வரத் தொடங்கி விட்டனர்.

அவளிற்கு போதையேறி வார்த்தைகள் தளம்பித் தடுமாறி அழத் தொடங்கி விடவே நான் அத்துடன் கதையை நிறுத்தி விட்டு. சரி சுராயா நான் போக வேண்டும் எனவே வா உன்னை உனது வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன் என்றவும் அவளோ வேண்டாம் நான் வீட்டிற்கு போகவில்லை எங்காவது ஒரு தனிமை எனக்குத் தேவைப் படுகிறது நான் அருகிலுள்ள பூங்காவிற்கு போகிறேன். நீ போய் வா நல் வாழ்த்துக்கள் என்றபடி எழுந்து சற்று தள்ளாடிய நடையுடன் போய்க் கொண்டிருந்தவளை அழைத்தேன்.

சுராயா....மன்னித்துக் கொள் என்னில் கோபம் இல்லையே என்றேன். திரும்பி வந்தவள் என்னைக் கட்டியணைத்து எனது கன்னத்தில் ஒரு முத்தமிட்டு இல்லை கோபம் இல்லை உனது பயணம் நல்லபடி அமையட்டும் என்றாள். சரி சுராயா நன்றி இன்றிலிருந்து நான் திரும்ப வரும்வரை லோறொன்தான்(என்னுடன் வேலை செய்யும் பிரெஞ்சுக் கார நண்பன்) எனது இடத்தில் பொறுப்பாக இருப்பான் உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவனிடம் கதைத்துக் கொள் பத்திரமாக போ விரைவில் சந்திப்போம் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து எனது மீதிப் பயண அலுவல்களைத் தொடர்ந்தாலும் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு குடிபுகுந்து விட்டிருந்தது.

சுராயா விடயத்தில் நான் செய்தது சரியா? தவறா? என்று என்னால் சரியான முடிவெடுக்க முடியவில்லை. எனது நண்பன் ஆனந்தனோ நான் எடுத்தது சரியான முடிவுதான் என்று என்னை ஆறுதல்ப் படுத்தினான். காலை வேளைக்கு எழும்ப வேண்டும் எல்லாவற்றையும் ஒழுங்கு படத்திவிட்டு அலாரத்தையும் வைத்து விட்டு படுக்கையில் விழுந்தேன். நித்திரை வரவில்லை கண்ணை மூடினால் சுராயாவின் அந்த விசும்பலே சுத்திச் சுத்தி வந்தது. புரண்டு புரண்டு படுத்த நான் எத்னை மணிக்கு நித்திரையானேன் என்று தெரியாது ஆனால் ஏதோ படுத்ததும் அலாரம் அலறியது போல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை நிறுத்தி விட்டுப் பறப்பட தயாரானேன்.....

Link to comment
Share on other sites

கதை மிகவும் நன்றாகப்போகின்றது...

மேலத்தேயப் பெண் வாழ்க்கைக்கு ஒத்து வராது என்றும் சமுதாயத்திற்குப் பயந்தும் நமது நாட்டுப் பெண்ணை மணம் முடிக்கப் போகின்றீர்கள்.(தங்கள் விருப்பங்களை மறைத்து விட்டு) ..ம்...மணம் முடித்து வந்ததும் மணப்பெண் மேலத்தேயப் பெண்ணாக மாறாமல் இருந்தால் சரி. சுரயாவுக்கு அனுதாபங்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

சரியான முடிவு தான் எடுத்திருக்கிறியள் சாத்ரி தாத்தா. ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரித் தாத்தா இன்றுதான் பாகம் 3 வரை வாசித்து முடித்தேன் நன்றாக இருகிறது மேலும் படிக்க ஆவலாக காத்திருக்கின்றேன் தொடருங்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சாத்திரியரே நன்றாக எழுதிறிங்கள் மனதில் இருக்கிறது எல்லாமே யாழிஇறக்கி வையுங்கள் நாங்கள் அதை பாத்து ரசிக்கின்றோம் தொடருங்கள் சோகமான கட்டம்என்றால் அழுவும் இருக்கின்றோம் நகச்சுவையாக இருந்தால் வயிறு குளுங்க சிரிப்போம்

Link to comment
Share on other sites

சாத்திரி பாகம் - 3 நன்றாக இருக்கின்றது. தொடருங்கள். மற்ற பாகத்தையும் எதிர்பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

திங்கள் கிழமையாச்சு எங்க பாகம் 4?

இன்னும் திங்கட்கிழமை முடியல்லை சினேகிதி :P

Link to comment
Share on other sites

தொடர் 4

விமானநிலையம் வரை எனது நண்பன்: வந்து வழியனுப்பி வைத்தான் விமானம் கிழம்பிய சில நிமிடத்தில் எனது கைப் பையை திறந்து நான் விமானத்தில் படிப்பதற்கு தயாராய் வைத்திருந்த ஒரு புத்தகத்தை பிரித்தேன் . காரணம் அதற்குள் நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருந்தது அதனை எடுத்து மீண்டும் ஒரு முறை பார்த்து எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். இவ்வளவு நேரமும் நான் திருமணம் செய்ய போகின்ற பெண்ணின் பெயரை கூட சொல்லாமல் உங்களிற்கு கதை சொல்லுறன் நான்.

அவரின் பெயர் நிதர்சினி இரண்டு அண்ணன்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவர் ஒரேயொரு தங்கை அவரை போலவே பெயரும் அழகாக தான் இருக்கிறது என்று நினைத்தவாறு புத்தகத்தை சிறிது படித்த நான் முதல்நாள் இரவு சரியாக நித்திரை கொள்ளாததால்: அப்படியே தூங்கி பொனேன்.

ஒரு மாதிரி தமிழ்நாடு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தாகி விட்டது எனது வழைமையான் சோதனைகளை முடித்து கொண்டு வெளியேறிய பொது வெளியில் எனக்காக அம்மா தம்பி தங்கை மற்றும் பெண்ணின் தந்தை என்று ஒரு கூட்டமே காத்திருந்தது. அவர்கள் வந்திருந்:த வானில் ஏறி மாறி மாறி பலரின் கேள்விகளிற்கும் பதிலளித்தபடி அவர்கள் தங்கியிருக்கும் அண்ணா நகர் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்:தது.

பெண்வீட்டார் அண்ணா நகரில் ஒரு வசதியான் குடியிருப்பு பகுதியில் மூன்று அடுக்குகள் கொண்ட வசதியான ஒரு மாடி வீட்டில் குடியிருந்தனர் . எங்கள் வீட்டு காரருக்கும் அருகிலயே ஒரு வீடு வாடைகைக்கு பிடித்து குடுத்திருந்தனர். இன்னும் இரண்டு நாளில் திருமணம். எனக்கு எந்த வேலையும் இருக்கவில்லை போனதிலிருந்து தம்பி தங்கைகளுடன் சாமான் வாங்குவது படம் பார்க்க போவது என்று இரண்டு நாளும் போய் விட்டது.திருமணம் பேசி சரிவந்த நாளிலை இருந்து இன்னும் ஒரு வசனம் கூட நான் நிதர்சினியொடை கதைக்கேல்லைஅதற்கிடையில் நான் ஆசையாய் நிதர்சினிக்கு வாங்கிய பொருட்களை கொடுத்து அதே சாட்டிலை கொஞ்சம் கதைப்பம் எண்டு பலமுறை முயற்சித்தம் சரி வரேல்லை

இரண்டு தடைவை அவர்கள் வீட்டிற்கு போயிருந்தும் அவரது வீட்டு காரர்களே என்னுடன் கதைத்தனர் நிதர்சினி மாடியிலிருந்து இறங்கி வரவே இல்லை சரி வெட்கமாய் இருக்கும் என்ற நினைத்தபடி நான் வாங்கிய பொருட்களை நிதர்சினியிடம் கொடுக்கம்படி எனது தங்கையிடமே கொடுத்தனுப்பி விட்டேன்.

திருமண நாளும் வந்தது காலை நாள் பாத்த நட்சத்திரம் பார்த்து ஒரு பிரபலமான சிவன் கொயிலில் தாலி கட்டு. சொந்தம் பந்தம் நண்பர் என்று நிறைய சனம் வந்திருந்தனர் பெண்ணின் சதோரர் உட்பட பலர் வெளி நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர்.நாலு புரோகிதர் மந்திரம் ஓத மேளம் கொட்ட சென்னை வெய்யில் வெக்கை காணாது என்று அய்யர் வேறு ஓமம் வளர்த்த வெக்கையில் வியர்வையில் குளித்தபடி ஒரு மாதிரி தாலி கட்டி முடிந்தது .

அன்று மாலை வடபழனியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதியொன்றில் வரவேற்பு நடந்தது.காலை வேட்டி சேலையில் வந்து பய பக்தியாய் கோயிலில் விபூதி குறியுடன் மரக்கறி சோறு சாப்பிட்டவர்கள் எல்லாரும் மாலை நட்சத்திர விடுதியில் கோட் சூட் குட்டை பாவாடையுடன் வந்து மதுவும் மாடு ஆடு என்று போட்டு தாக்கி கொண்டிருந்தனர். பெண் வீட்டாரும் ஏன் எனது பக்கமும் தான் பணத்தை இறைத்து தங்கள் கெளரவத்தை நிலை நாட்டி அதனை வீடியொ பதிவாக்கிகொள்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.வரவேற்பு முடிந்து இரவு எல்லோரிடமும் விடைபெற நள்ளிரவாகி விட்டது .

அன்று முழுவதும் கூட ஒரு வசனம் நிதர்சினியிடம் பேச கிடைக்கவில்லை வந்தவர்களை பார்த்து சிரிப்பதும் அவர்களுடன் கதைக்கவுமே நேரம் போய் விட்டது ஆனாலும் இடைக்கிடை எனது புது மனைவியை நான் பார்த்தாலும் அவள் காலையில் குனிய போட்ட தலைதான் இடையிடை நிமிர்ந்து சிலரிடம் கதைத்தாலு்ம். என்பக்கம் திரும்பவே இல்லை என்ன இருந்தாலும் இவ்வளவு வெக்கம் கூடாது என்று நினைத்த நான் சரி போக போக சரி பண்ணுவம் என்று நினைத்த கொண்டேன்.

புது தம்பதியினரான எங்களிற்கு அன்று அந்த விடுதியிலேயெ தங்க அறையும் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது. எங்கள் மற்றும் பெண் வீட்டு காரரும் மற்றவர்கள் கொண்டுவந்து இறைத்த விட்டு பொன பரிசு பொருட்களையெல்லாம் வானில் எற்றி விட்டு கேலியும் கிண்டலுமாய் விடை பெற்று கொள்ள தங்கை வந்து உங்களுக்கு தேவையான உடுப்பெல்லாம் அறையிலை வைச்சிருக்கு என்று செல்லி ஒரு சிரிப்புடன் விடை பெற்றாள். நாங்கள் எங்களது அறைக்குள் போனதும் நிதர்சினியடம் எனக்கு சரியான வியர்வையா இருக்கு குளிக்க வேணும் நீர் குளிக்கிறதெண்டா குளிச்சிட்டு வாரும் என்றவும் .

ம்.....என்றவள் தனது உடுப்பகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுளைந்தாள். அப்பாடா இப்பவாவது ம்...எண்டொரு வசனம் பேசினாளெ என்று எனக்குள் சந்தோசம் கரை புரண்டு ஓடியது.அடுத்ததாய் நானும் போய் குளித்து விட்டு தலையை துடைத்த படி வெளியெ வர நிதர்சினியொ காலில் இருந்து தலை வரை போர்த்தபடி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் . வந்து பார்த்த எனக்கு சிரிப்புதான் வந்தது சரி பாவம் காலை வேளைக்கு எழும்பினது அதொடை கன நேரம் நிண்டது எண்டு அலுப்பாய் இருக்கும் எனக்கும் சரியான களைப்பாக தான் இருந்தது உச்சதில் இயங்கி கொண்டிருந்த ஏ.சி யை கொஞ்சம் குறைத்து விட்டு அருகில் மெதுவாய் படுத்து நானும் உறங்கி போனேன் :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி கதை நன்றாக இருக்கு தொடருங்கள் :P :P :P :P

Link to comment
Share on other sites

ஆகா ஆகா தொடர் 4 நன்றாகப் போகின்றது தொடருங்கள் தாத்தா வெகு விரைவில் அடுத்த பாகத்தை படிக்க எதிர் பார்த்த படியே :P :P :P

Link to comment
Share on other sites

சீ அவ்வளவுதானா? என்னாப்பா மெகா சீரியலில வாற சஸ்பென்ஸ் மாதிரிக்கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே.. சீரியல் மாதிரிப்போகுது.. விடிய எழும்ப ஏதாவது பாம் வைச்சிருக்கப்போறாவோ என்னவோ..?? என்ன தான் இருந்தாலும் இவ்வளவு வெட்கம் ஆகாது.. பாவம் சாத்திரி எவ்வளவு தூரம் பிரயாணம் செய்து போயிருக்கிறார்.. ம் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.. :wink: :P

Link to comment
Share on other sites

:lol::lol::lol: நிதர்சினி ம் என்று சொன்னதுக்கு சாத்ரி தாத்தா சந்தோசப்பட்டாராம். அட இனி என்ன நடக்கும்? வாசிக்க ஆவலோடு இருக்கிறன். :P :P :P இந்தளவு நேரமும் கதைக்காமல் இருந்தவா இனித்தான் தன் வாய்வீரத்தை காட்டப்போறாவோ? :?: :arrow:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.