Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை.

நான் கூட இணையம் ஊடாக இங்கு ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் பத்திரிகை ஆசிரியர்களின் பெயரையும் விலாசத்தையும் பெற்று அவர்களுக்கு தபால் முலம் ஜேர்மனியில் நடைபெற்ற உரிமைகுரலில் எம் மக்களினால் கொடுக்கப்பட்ட ஜேர்மனிய மொழியில் உள்ள துண்டு பிரசுரங்களையும் பத்திகைகளையும் அனுப்பியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவிச்ச இறால் துடிக்குது என்று எழுதும் நிதர்சனம் .இணையத்தளத்தை நம்பலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், தயா இடைக்காடர் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு. அதிலே அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று, தாயக விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்த ஒருசில வீரர்களை நன்கு அறிவேன், தயா இடைக்காடரையும் நன்கு அறிவேன். அத்தோடு நீர் இருக்குமிடம் எங்கென்று தெரியவில்லை நான் இலண்டனிலே வசிக்கிறேன் அதனால்தான் அப்படி எழுதினேன்.

ஈழவேந்தனுடன் மற்றவர்களை ஒப்பிடமுடியாது. ஒவ்வொருவரும் தமது தாயகப்பற்றை வெளிப்படுத்தும் விதங்கள் வேறுபடும்.

தாயகத்திலே எமது தாயத்திற்காக உண்ணாவிரதம் இருந்தவர்களையும், இங்கிலாந்தில் தமது தாயகங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைகளையும் எண்ணிப்பாருங்கள். இவருடைய இந்தப்போராட்டம் இங்குள்ள ஆங்கில ஊடகங்களில் உட்புகுந்து தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் மட்டும் தலையைக் காட்டுவதால் எதுவித பயனுமில்லை. பயனில்லாத ஒன்றைச் செய்து பலருடைய பழிச்சொல்லுக்கும் ஆளாகக்கூடாது என்கின்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பலருக்கு இருக்கிருக்கின்றது. எம்மக்கள் இவருடைய செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே எடுத்த காரியத்தை திறம்படச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்!

நிச்சயமாக! நீங்கள் அருகில் இருப்பதால் அதிகம் தெரிந்து வைத்திருக்கலாம்! ஆனால் என் கருத்து என்னவென்றால் ஒரு தாயக சார்பு நிலையை எடுக்கின்ற ஒவ்வொருவனையும் ஆதரிக்க வேண்டும்! அது தான் இப்போதுள்ள தாயக விடுதலைக்குத் தேவை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போராட்டம் வெற்றியளிப்பது, நம் கையிலேயே தங்கியுள்ளது. சும்மா சுத்திச் சுத்தி சுப்பற்றை நிற்காமல் அகல உலகில் காலடி எடுத்து வைப்போம். நம் மக்கள் கவனிக்கிறார்கள் என்றால், அந்த மக்களில் ஒருவர் ஏன் இப்படியான போராட்டத்தில் இறங்கக் கூடாது. சும்மா இனியும் அரிதட்டம் வைத்து அரிப்பதை விடுத்து "யார் குத்தியும் அரிசியானால் சரி" என்பதே எமது செயலாக விருப்பாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை .... இது பிரித்தானியாவில் ஒரு தொடக்கமே ... தொடர்வோம்! பிழைகளை சரி செய்வோம்!! எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருவோம்!!!

Link to comment
Share on other sites

தயா அவர்கள் குளித்து தறபோது தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரை அவரது நண்பரகள் சரியாக 9 மணிக்கு கோயிலிற்கு அழைத்து சென்ற ஆலய வளிபாட்டின் பின். சரியாக 11.30 மணிக்கு பாராளுமன்றத்தை சென்றடைவார்.

இரவு நடைபெற்ற சந்திப்பில் மருத்துவர்கள் தமது ஆலோசனைகளை அவருக்கு கூறியதுடன். தொடர்ச்சியாக அவரை கண்காணிக்கவும் இணங்கியுள்ளனர். தயா அவர்கள் உண்ணாவிரதத்தை உலகளாவிய மக்கள் பாரப்பதற்கும் நிதர்சனம் இணையத்தளம் ஒரு இணைப்பை கொடுத்துள்ளது.

http://www.nitharsanam.com/?art=17826

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனிதனின் போராட்டத்தை மதிப்பதாக இருந்தால், அவிச்ச இறால் துடிக்கிற கதைகளை விடுத்து ஆக்கபுூர்வமான கருத்துக்களை மட்டும் எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

Link to comment
Share on other sites

நிதர்சனம் நடத்துபவர்களை பிடிக்க வில்லை என்பதற்காக நிதர்சனம் தரும் நிதர்சனமான உண்மைகளை கூட உள்வாங்கிக் கொள்ள முடியாதது கவலைக்குறியதே

அண்மையில் ஒரு இலங்கை ஆங்கில இணையத்தில் நிதர்சனத்தை புலிகளின் புலநாய்வுப்பிரிவின் இணையம் என வர்ணித்திருந்தார்கள்.... (இணைப்பு இப்போ கிடைக்கவில்லை) அவ்வளவு வெறுப்பை இனவாதிகளுக்கு அந்த இணையம் கொடுத்திருப்பது நிதர்சனத்தின் வெற்றி என்பதை சிலரால்த்தான் மறுக்க முடியும்... அவர்களை இனங்காணுங்கள்...

மற்றய இணையங்களில் இருந்து தீவிரமான போக்கை நிதர்சனம் கடைப்பிடிப்பதற்காக அவர்களை விமர்சிக்கமுடியாது.... தீவிர சிங்கள் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை எந்த சிங்களவனும் வெறுக்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை... நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நிதர்சனத்தின் பணியும் தொடரட்டும் வாழ்த்துக்கள்..... ! :lol::lol::lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

போராட்டத்தை நிச்சயம் மதிப்பவன் ஆனால் நிதர்சனம் போன்ற பொய்யான தகவல்களை சொல்லும் இணையத்தளததில் இடைக்காடர் இணைந்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குடையது இவ்பொய்யான நாகாPகமற்றமுறையில் ஆபாசமாக எழுதும் இணையத்தளத்தைப்பற்றி விடுதலைப்புலிகளிற்கும் தகவல் பொடுத்திருந்தேன்

எல்லா விரலும் ஒரேமாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது, நீர் ஏன் பன்னாடை போல நல்லவற்றை விட்டுவிட்டு கஞ்சல்களை மட்டும் பிடித்து வைத்திருக்கிறீர், அன்னப்பறவை போல் நீரைவிட்டு விட்டு பாலை மட்டும் பருகப்பாரும். 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தின் நேர்முகவர்னனையை ...

http://www.ibctamil.co.uk/ இல் கேட்கலாம்.

Link to comment
Share on other sites

இங்கு கருத்து கூறிய நண்பர்கள் அனைவர்கும் என் நன்றிகள். என் கடைமைகள் முடிந்ததும் உங்களுடன் மீண்டும்கலந்து கொள்கிறேன்

நன்றி

சென்றுவருக வீரரே

Link to comment
Share on other sites

இப்போராட்டத்தின் மூலம் எம்மக்களின் அவலங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் "ஊடகக் குழுவின்" செயற்பாட்டிலேயேதான், இப்போராட்டத்தின் வெற்றி/தோல்வி தங்கியுள்ளது. எங்கே, எப்படி, எவ்வாறு மேற்கத்தேய ஊடகவியலாளர்களை அணுக வேண்டுமென்பதை வேண்டுமென்பதை இவர்கள் தீர்மாணிக்க வேண்டும். அதை உடன் செயற்படுத்த வேண்டும். அவர்கள் அதனை திறம்பட செய்வார்கள் என் நாம் நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் முடிந்துவிட்டதா?

ஏனப்பு உமக்கு இப்ப என்ன பிரச்சினை? ஐ.பி.சி யில் செய்திகளை கேட்கேல்லையோ?

தேவனிட்டை எவ்வளவு வாங்கிறீர்கள் இப்பிடி இங்க வந்து உங்களின்றை கருத்துக்களை எழுதுறதுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் உந்த ஈ.என்.டி.எல்.எப் "கணேசு" கனக்க கஸ்டப்படுகுது! விடுங்கோ!! போறவரை போகட்டும்!!! எங்கடை எல்லாம் முடியட்டும் பின்பு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya1.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.