Jump to content

ஈழநாதன் அகாலமரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுத

எப்படி ஆறுதல் சொல்ல

ஏன் எம்மை நேசிப்போர்

எமக்காக வாழுவோர் மட்டும்

இவ்வளவு அவசரமாகப்போகிறார்கள்

யாருக்கு ஆறுதல் சொல்ல

அந்த பச்சைக்குழந்தைக்கா

இல்லை பரிதவிக்கும் அபலைக்கா

அல்லது துடித்து நிற்கும் பெற்றோருக்கா

இல்லை பிள்ளையை பறி கொடுத்து தவிக்கும் தமிழுக்கா..........

சாந்திக்காக வேண்டுகின்றேன்.

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Link to comment
Share on other sites

[size=4]ஈழவனிற்கு அஞ்சலிகளும் , [/size][size=4]இவரின் இழப்பால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

Link to comment
Share on other sites

ஈழவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ் களத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வசம்புவின் மரணமும் இதே மாதத்திலேயே வந்தது. யாழ் களத்தில் பலராலும் அறியப்பட்ட வசம்புவின் மரணத்தின் பின் மீண்டும் சரியாக இரண்டு வருட இடைவேளைகளின் பின்னர் இன்னோர் யாழ் உறவின் இழப்பு.

நான் இவருடன் கருத்தாடல் செய்யவில்லை. இதனால் எனக்கு இவரை பரீட்சயம் இல்லை. கடைசியாக 2006ம் ஆண்டு கருத்துக்களத்தில் எழுதியுள்ளார். வேறு பெயர்களில் பின்னர் வந்தாரோ தெரியாது. நூலகம் இணையம் பற்றிய விபரங்கள் கருத்துக்களத்தில் 2006 ஆண்டின் பின்னரும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்துள்ளன.

பழைய களத்தில் தேடல் செய்தபோது ஈழவனின் விபரங்கள் கிடைத்தன:

ஈழவனின் சுய விபர கோவை: http://www.yarl.com/forum/index.php?showuser=278

ஈழவனின் தலைப்புக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=8c30e491a50f8b81c301fdabacf0e83a&search_in=topics&result_type=topics

ஈழவனின் கருத்துக்கள்: http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=4d31063c515610c15b450f71b8d0273a&search_in=posts&result_type=posts

மேலே கவிஞர் கேட்டதுபோல் இவருடன் கருத்தாடல் செய்த எவராவது யாழில் ஈழவனுடனான தமது நினைவு பகிர்வுகளை எழுதி போடுங்கள்.

(தூயவன், இப்படியான விபரங்களை எதிர்காலத்தில் அறிவிக்கும் போது சற்று விரிவாக எழுதினால் நல்லது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவாக எழுதும் மனநிலையில் நான் அப்போது இருக்கவில்லை... தவிர என்னை விட நிறைய யாழ் நண்பர்களோடு அவர் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்தார். நான் யாழ்களம் சார்ந்த தொடர்புகளைத் தான் பேணிக் கொண்டிருந்தேன்...

கனா பிரபா அண்ணா, அவர் சந்திப்புப் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கின்றார்...

http://kanapraba.blogspot.com.au/2012/10/blog-post.html

Link to comment
Share on other sites

[size=4]ஆழ்ந்த அஞ்சலிகள்![/size]

[size=4]அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள். [/size]

Link to comment
Share on other sites

ஈழவனிற்கு அஞ்சலிகளும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

Link to comment
Share on other sites

இனிய தம்பி ஈழநாதனின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது....

இனியவனே

உன் அன்பு நெருடலில்

சிங்கப்பூர் நண்பர்களோடு சந்தித்த கணங்களை நினைக்கிறேன்.....

வரவேற்க மட்டுமல்ல

வழியனுப்பிவிட்டு எழுதிய உன் எழுத்துகள்

என் இதயத்தை வருடுகின்றன......

நீ மிக மிக வித்தியாசமான அன்பன்.

அதை உன்னோடு வாழ்ந்தோர் மறுக்கார்?

உன் ஆத்மா சாந்தியடையவும்

உன் இழப்பில் துயருறும்

உன் உற்றார் - உறவினர் - நண்பர்களுடன்

என் துயரை பகிர்ந்து ஆறுதலடைய முயல்கிறேன்...

அவை முடியுமோ????

Link to comment
Share on other sites

காலம் எப்போதும் எங்களுக்கு அகாலமாகவே போய் விடுகின்றது. நல்ல விடயங்களில் முனைப்புக் கொண்டவர்களை மட்டும் இடையில் முறித்துக் கொண்டு சென்று விடுகின்றது காலம்.

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா,மற்றும் தூயவன் அண்ணா இணைத்த இணைப்புகளில் ஈழநாதனின் கருத்துக்களை,பதிவுகளை இவ்வளவு நேரமும் இருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..படிக்க படிக்க அவரைப் பற்றிய பிம்பம் என்னுள் விரிந்து எண்ணங்களால் ஒன்றான ஒருவரை இவ்வளவு நாளும் அறியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தவைக்கிறது..மிக நல்ல கருத்தாளன் சிந்தனையாளனாக அவர் அந்தக்காலங்களில் இருந்திருக்கிறார்..எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் எனது கோட்டில் பயணித்த ஒருவர்..அவர் இன்னும் பலகாலம் எங்களுடன் இருந்து தன் எண்ண்ங்களை பகிர்ந்திருக்கலாம்...காலம் அந்த சந்தர்ப்பத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது...மிக இளவயதுகளிலேயே இப்படியான உயர்வான சிந்தனைகளால் தன்னை உருவாக்கிகொண்ட ஒரு நல்ல அண்ணணை இழந்துவிட்டோம்...கண்ணீர் அஞ்சலிகள் ஈழவன் அண்ணாக்கு...

Link to comment
Share on other sites

ஈழவன் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அறியாத உறவென்றாலும் யாழை வளர்த்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]நம்பவே முடியவில்லை![/size]

[size=1]

கண்ணீர் அஞ்சலிகள்![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .

..ஊர் உளவாரம் என்ற வலை பதிவு வைத்திருந்த பொழுது ..அநேகமான பதிவுகளினூடு என்னோடு இணைந்திருக்கிறார்..தமிழ் வலைபதிவுகள் ஆரம்பித்த கால கட்டத்தில் விரல் விட்டு எண்ண கூடியவர்களே இருந்தார்கள் .அப்பொழுதும் அவரும் முக்கிய பதிவராக இருந்தார்.

அவரின் மைத்துனரின் முகநூல் தகவலின் படி தொழில் போட்டி காரணமாக உணவில் விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறாராம் ...அதிர்ச்சியான தகவல் ....

ஆண்டவனே உடம்பெல்லாம்

நடுங்குது...இந்த உலகில் இப்படி பட்ட மனிதரா...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு

ஈழவனிற்கு அஞ்சலிகள்

அவரின் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

"ஆழ்ந்த அனுதாபங்கள்" என்ற வார்த்தை இலகுவில் கூறலாம், இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரையில் யாருக்கு கூறுவது? இரண்டுமாதக் குழந்தையுடன் தனிமையாக்கப்பட்ட மனைவியிற்கு கூறுவதா அல்லது பெற்றதாய் தகப்பனுக்கு கூறுவதா, இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது இருப்பினும் இந்த வயதிலா?

நான் கிட்டத்தட்ட 5வருடங்களாக யாழ் கருத்துக்கள உறுப்பினராக இருக்கின்றேன், "எனது ஊர் இலக்கணாவத்தை" என்ற தலைப்பில் நான் பிறந்த ஊரான "இலக்கணாவத்தை" பற்றி நீண்ட ஒரு "பதிவு" படங்களுடன் இணைத்திருந்தேன் அந்தவேளை கூட இவரும் எனது ஊரைச்சேர்ந்தவர் அல்லது எனது குடும்ப உறவு என்றோ நான் அறிந்திருக்கவில்லை.

தற்சமயம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அன்னாரது பூதவுடல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுவோமாக...

ஓம்சாந்தி!

https://www.facebook.com/groups/mainthan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அன்னாரின் குடும்பத்திற்கு எனது அஞ்ச‌லிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.