Jump to content

ஈழநாதன் அகாலமரணம்!


Recommended Posts

<p>இன்னுமே என்னலால நம்ப முடியல அண்ணா நீங்கள் இறந்துவிட்டிங்கள் என்றதை. கண்ணீர் அஞ்சலிகள் அண்ணா.

எனக்கு யாழில் இவர் தான் ஈழவன் என்ற பெயரில் வாரது தெரியாது. தனிப்பட்ட முறையில் நல்ல நண்பன், இவரது மனைவியின் நெருங்கிய நண்பி.

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஈழவன் என்னும்... பெயரில் எழுதிய ஈழநாதன், இளவயதில்... அகால மரணமடைந்த செய்தி கேட்டு... அதிர்ச்சி அடைந்தேன்.

அவரின் பிரிவால்... துயருறும், குடும்பத்தவர்களுக்கும்.... நண்பர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகளும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கும் அதே நேரம் நாமும் அவர்களுடன் இணைந்து ஈழவனின் இழப்பின் துயரைப்பகிர்ந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

10வருடங்கள் முன் செய்தி கொண்டு வந்தாய் பல்கலைக்கழகமாணவனாய் பயத்தோடு நீ தந்த யாழ் நிலவரங்கள் அத்தோடு நிற்காமல் அவலங்கள் நிறைந்த தமிழரின் வாழ்வையும் எனது பேனாவால் செதுக்கி உலகத் தமிழருக்காய் தந்தாய்....

கால நீட்சி...., அவ்வப்போதான சுக விசாரிப்புகளோடு மறக்காத உறவாய் நிறைந்தவன் நீ.

உதவியென்று கேட்ட போதெல்லாம் இல்லையென்று சொல்லாமல் ஏற்றுச் செய்த பிள்ளையை ஏனோ விசம் கொன்று வாழும் வயதில் பாடையேற்றியதோ ?

ஈழநாதன், உனக்கெங்கள் இதய அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஈழநாதன் நம்மிடையே இல்லை அதற்கு இரங்கல் தெரிவிப்பதோடு அவர் மரணம் குறித்த தவறான தகவல்களை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்ணீர் அஞ்சலிகளும், ஆழ்ந்த அனுதாபங்களும்!!![/size]

Link to comment
Share on other sites

ஈழவனுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர். உம்மை இழந்தது துரதிஷ்டமானது. உமது பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தினர்களுடன் என் கவலையை பகிர்ந்து கொள்கிறேன். கரும்பு இணைத்த கருத்தாடல்கள் பழைய நினைவுகளை மீட்டிச் செல்கிறது. உண்மையில் ஒரு தரமான கருத்தாளனை இழந்துவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5] ஆழ்ந்த இரங்கல்கள்[/size]

Link to comment
Share on other sites

ஈழநாதன் நம்மிடையே இல்லை அதற்கு இரங்கல் தெரிவிப்பதோடு அவர் மரணம் குறித்த தவறான தகவல்களை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

[size=4]ஹாய் மதன் ...உங்கள் இந்த கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளேன்.

அஞ்சலி செலுத்தும் பதிவில் தேவையில்லாத வாத பிரதிவாதங்கள் தேவையில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும்

அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை அளிப்பது தவிர்ப்பது பற்றி கூறீனீர்கள்.ஒருவர் மரணம் எதனால் நடைபெற்றது ஏங்குவது மனித இயற்கை .விசம் வைத்து தொழில் போட்டியில் கொல்லப்பட்டார் என்ற தகவலை பலரும் என்ன நடந்தது என்று பதை பதைக்க அவரது மைத்துனர் தான் அறிவித்திருந்தார் . அவரது மனைவியின் தமையனார் தான் ஈழவன். அவரின் பெயரை இதில் சொல்வதில் தவிர்த்திருக்கிறேன். (விரும்பு பட்சத்தில் தனிமடலில் தொடர் கொள்ளவும் சொல்லுகிறேன்)

இந்த தகவலை யாழ் இணையத்தில் இணைத்திருந்தும் பின் எடிட் செய்ய யோசித்து இருந்தேன் .எனது தகவலை மேற் கோள் காட்டி சிலர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் .அதனால் அந்த செய்தியை அளிக்க விரும்பவில்லை. தவறான தகவலை அளிப்பதாக உங்களை ப்போலவே கறுப்பி என்று நன்கு அறியப்பட்டவர் முக நூலில் கூறி இருந்தார் ....அதை நான் குறிப்பிடும் மைத்தனர் எனது தகவலை மீண்டும் உறுதி படுதித்தனார். இன்று வரை அந்த செய்தியை யாரும் நிராகரிக்கவில்லை .ஒருவரின் மரணம் எதனால் நடைபெற்றது என்று சொல்லாமால் மறைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை மீண்டும் சொல்லுகிறேன்..இந்த பதிலை அளிக்காமால் அந்த தகவலை நீக்கி இருப்பேன் இப்படி ஒரு சர்ச்சைக்கு இந்த நேரத்தில் இடமளிக்காமால் அழித்திருப்பேன் .பலர் அந்த தகவலை மேற்கோள் காட்டி எழுதிஇருப்பதால் அதை அழித்து யாழ் கள விதியை மீற விரும்பவில்லை . :( :([/size]

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சின்னக்குட்டி. நான் உங்களை குறிப்பிடவில்லை. ஆனால் நான் எழுதிய கருத்து உங்களை குறிப்பிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதற்கு வருந்துகின்றேன்.

இது தவிர வேறு எதையும் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.