Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!


Recommended Posts

இந்த நொடியில், என் மனதில் (04 /10 /12 ) >>>>>

சகோதர தமிழ் தேசிய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவன் என்ற முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு உடன் முடிவு கட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க ஜனநாயக தமிழ் தேசிய அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும்.

அசாத்திய பொறுமையுடனும், ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு நிகழ்வுகளையும், செய்திகளையும் நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் இனம், குறிப்பாக புதிய தமிழ் இளைய தலைமுறை அவதானித்துக்கொண்டு இருக்கின்றது என்பதை கூட்டமைப்பு அரசியல் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

உள்முரண்பாடுகள் பகிரங்கமாகும்போது முதற்பலி (first Causality) மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். சொல்லொணா அகோர நினைவுகளையும், அவல நிஜங்களையும் சுமந்து வாழும் நமது தமிழ் மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த நம்பிக்கையும் கனவாகுமானால், அது துர்பாக்கியமாகும். அது கோர வன்னி யுத்தம் தந்த வலிக்கு சமாந்திரமானதாகும்.

ஒரு அங்குலமும் இறங்கி வர தயார் இல்லை என்று இனவாத அரசு எக்காளமிடுகிறது. இது கண்முன்னே தெளிவாக தெரியும் இன்றைய நிஜம்.

நமது மக்களை கொத்து, கொத்தாக சாகவிட்டு அதற்கு துணை போன சர்வதேசமும், இப்போதுதான் தாமதமாக விழித்து எழுந்து எம்மை சமாதானபடுத்தி கொண்டிருக்கின்றது.

உலக வல்லரசுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முதல் வரிசையில் இருந்தால், தலைமைகள் செயற்படாவிட்டாலும்கூட, தனது தேவைக்காகவே உலகம் எம்மை தள்ளி அழைத்து சென்று தீர்வுக்கு வழி காட்டிவிடும்.

ஆனாலும், உலக வரைப்படத்தில் நமது விவகாரம் முதலிடத்தில் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதுபற்றி தமிழ் மக்களுக்கு பொய்யான நம்பிக்கைகளை தர முடியாது.

இந்த காரணம் ஒன்றே, தமிழர்களின் அரசியல் தலைமைகள், உலகின் ஏனைய ஒடுக்கப்படும் இன விடுதலை இயக்க தலைமைகளை விட, அதிகமாக, காத்திரமாக, முழுநேரமாக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

காத்திரமான முழு நேர உழைப்புக்கும், ஆளுமைக்கும் எம்மிடம் பஞ்சமில்லை என நான் நம்புகிறேன். எமக்கு தேவையானது எமது உழைப்பையும், ஆளுமையையும் முன்னெடுக்கும் புதிய எழுச்சியுடன்கூடிய ஜனநாயக கட்டமைப்பைகொண்ட இயந்திரம்தான். அதுதான் காலத்தின் தேவை. அதுதான் கட்டமைப்புடன்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

ஆனால், இன்று வானத்தில் பறக்கும் பறவையை பிடிப்பது என்பது விடுத்து, கையில் இருக்கும் பறவையும் நம் கையில் இருந்து பறந்துவிடுமோ என்ற பயம் வந்து விட்டது. புதிய எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற இலக்கை நோக்கி நகர்வது என்பதை விடுத்து, இப்போது கையில் இருக்கும் கட்டமைப்பும் சிதையுமானால், வரலாறு எம்மை மன்னிக்காது.

நாளைய வரலாறு எழுதப்படுவதற்கு முன்னர் இன்றைய நிகழ்காலமே நம்மை கூண்டில் நிறுத்திவிடும். ஏனெனில் காலம் புதிய நவீன தளத்தில் வேகமாக நகர்கிறது. இது நமக்கு புரியாவில்லை என்பதற்காக காலம் நமக்காக காத்திருக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஆளுமையும், அர்ப்பணிப்பும், நேர்மையும், தூரப்பார்வையும், துணிச்சலும் கொண்ட கொண்ட தமிழ் தேசிய இயக்கமாக புத்தெழுச்சி பெற வேண்டும் என்பதுவே, சகோதர தமிழ் தேசிய கட்சியான எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

கூட்டமைப்பு தொடர்பான இந்த முரண்பாட்டு செய்திகள் பல வருட காலமாக நீடித்து, இன்று பகிரங்கமாகியுள்ளன. சகோதர கட்சிகளுக்குள் எழுகின்ற உள்முரண்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதை நிச்சயமாக நானறிவேன்.

ஆனால், இன்றைய முரண்பாட்டு செய்திகள், கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று சொல்லொணா துன்பங்களை இதயம் முழுக்க சுமந்து நிற்கும் தமிழர்களின் தேசிய இருப்பு தொடர்பான விடயமாக மாறி வருகின்றன என்பதை கவலையுடனாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகிறேன். இந்த காரணத்தாலேயே, நான் எனது இந்த நல்லெண்ண கருத்துகளை தெரிவித்துள்ளேன் என்பதை கூட்டமைப்பின் சகோதர தலைவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

கூட்டமைப்பில் இடம்பெறும் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எமது கருத்துகள் அமையவில்லை என்பதை, மக்களை சார்ந்தே நமது கருத்துகள் அமைகின்றன என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன். முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தி கூட்டமைப்பை வலுப்படுத்துங்கள்! இது நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. இந்த மக்கள் குரலையே நான் இங்கு எதிரோலிக்கின்றேன்.

மனோ கணேசன்

தலைவர்

ஜனநாயக மக்கள் முன்னணி

leader@dpflanka.org

from FB

Link to comment
Share on other sites

தமிழரிடமிருக்கும் பிளவுகள் எதைக் கொண்டும் அடைக்க முடியாதது. ஒற்றுமைப்படுத்துவதற்கு எவன் முயன்றாலும் ஒற்றுமையாய் நின்று அவனை எதிர்த்து தாமும் அழிவார்கள். நானும் தமிழந்தான்.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் பிரிவினை எதிரிகளுக்கே சாதகமானது. இதை உணர்ந்து நடக்கவேண்டியது தமிழரசுக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது. கட்சி நலனா அல்லது தமிழ் மக்கள் நலனா என்பதை முடிவு செய்வது சம்பந்தன் கையில்தான் உள்ளது

Link to comment
Share on other sites

இரண்டாயிரம், மூவாயிரம் சிறு சிறு இணையங்கள் கூட்டமைபை உடைத்து அதில் தாம் வளர முயற்சிக்கின்றன. சம்பந்தர் மாநகர சபை தேர்தலின் பின் இரண்டு கட்சிகளை சேர்த்தார். இப்போது தலைமை போட்டி தாண்டவமாடுகிறது. கூட்டணி கூட்டமைப்புக்குள் வந்ததால் ஆனந்த சங்கரி விட்டு கொடுத்திருக்க வேண்டி எதையும் இன்னமும் விட்டுகொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.