Jump to content

இந்த நொடியில் என் மனதில் (06 /10 /12 ) மனோ அண்ணையின் முகப்புப் புத்தகப்பகிர்வு


Recommended Posts

யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார்.

இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட்டது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். இப்போதும் தினந்தோறும் வெளியேறி கொண்டிருகின்றார்கள். இதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று பேரினவாதம் முழு இலங்கையையும் சிங்கள பெளத்த மயமாக்கும் திட்டத்தை வெகு வேகமாக செய்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணம் பறி போய் விட்டது. திருகோணமலையும்., அம்பாறையும் இன்று தமிழரது மாவட்டங்கள் இல்லை. கிழக்கில் தமிழர் கணிசமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களினால் சுற்றிவளைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்துக்கு உள்ளேயும், புதிய வலயங்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன.

இப்போது வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு சிங்கள மாவட்ட அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல தமிழ் பகுதிகள் திருகோணமலையின் சிங்கள பகுதிகளுடன் சேர்க்கப்படுகின்றன. திருகோணமலையின் சிங்கள பகுதிகள், முல்லைதீவுடன் சேர்க்கப்படுகின்றன. திருமுருகண்டி, கோப்பேபிலவு பகுதிகளில் மிகப்பெரும் இராணுவ குடும்ப குடியிருப்புகள் சீன உதவியுடன் கட்டப்படுகின்றன. மன்னாரிலும் அப்படியே. வன்னி பெருநிலத்தில் சிங்கள இராணுவ குடும்பங்களை குடியேற்றி இன குடி பரம்பல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது அரசின் திட்டம். கிழக்கை போன்று முல்லை, வவுனியா, மன்னார் உள்ளடங்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தையும் சிங்களமயமாக்குவது அவர்களது இலக்கு. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இவை நடந்து முடிந்துவிடும்.

அதுவரை, இலங்கை அரசும், இந்தியாவும், அமெரிக்காவும் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும்.

தமிழ் தலைமைகளிடம் இதற்கு எதிராக காத்திரமான வேலைத்திட்டம் எதுவும் இருக்கின்றதா என எனக்கு தெரியவில்லை. சர்வதேசம், சர்வதேசம் என்ற மந்திர உச்சாடனம் மட்டும் கேட்கின்றது. ஆனால், இந்த மந்திரம் மட்டும் தீர்வுகளை கொண்டு வந்து விட போவதில்லை என்பது எனக்கு தெரியும்.

வரலாற்று பெருமைகளையும், அன்று ஒருநாள் இருந்ததாக சொல்லும் உரிமைகளையும் பற்றி இப்போது வெளிநாடுகளில் இருந்து பேசிகொண்டிருப்பதில் எந்த பலனும் கிடையாது. இந்த பேச்சுகளை பேரினவாத ஆக்கிரமிப்பாளர்கள் எந்த விதத்திலும் கணக்கில் எடுப்பது இல்லை.

இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நான் பயன்படுத்த முன்னின்று செயல்படுகிறேன். சரத் பொன்சேகா என்பவரும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம்தான்.

அவரும் ஒரு கொலைக்காரர், போர் குற்றவாளி என்று சிலர் எனக்கு இப்போது அறிவுரை கூறுகிறார்கள். எனக்கு என்ன, இது எதுவும் தெரியாதா? இவர் மட்டும் அல்ல, எனக்கு இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களை பற்றியும் நன்கு தெரியும்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், வேறு எந்த தமிழ் அரசியல் தலைவர்களை விட எனக்குதான் இவர்களை நன்கு தெரியும். ஏனெனில் நான்தான் இவர்கள் எல்லோரிடமும் பழகி அவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறேன். எனவே, சரத் பொன்சேகா உட்பட, சிங்கள அரசியல் தலைவர்கள் பற்றி எனக்கு இந்த அறிவுரைகளை கூறி நேரத்தை வீணடிக்காதீர்கள். அவை எனக்கு தேவையில்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

இலங்கையை ஆண்ட அனைத்து அரசாங்கங்களும் பேரினவாத கொள்கைகளைத்தான் பின்பற்றின. இது அடிப்படை உண்மை எனக்கு பால பாடம். ஆனால், இந்த மகிந்த அரசைபோல் எந்த ஒரு அரசாங்கமும், இந்த அளவுக்கு அப்பட்டமான, இனக்கொலை அரசாங்கமாக இருக்கவில்லை. இந்த அரசைப்போல் தமிழனின் இருப்பை எவரும் அழிக்கவில்லை. தமிழர் வாழ்வின் எல்லாவித அம்சங்களையும் தேடி, தேடி தாக்கி அழிக்கவில்லை.

எனவே இந்த அரசாங்கத்தை எனத் ஒரு பிசாசுடன் சேர்ந்தாவது அகற்ற வேண்டுமென நான் விரும்புகிறேன்.

எனவேதான்,

(01 ) முதலில் நாட்டைவிட்டு வரையறை இல்லாமல் தமிழர் வெளியேற கூடாது என சொல்லுகிறேன். அதன் அர்த்தம் இங்கு உள்நாட்டில் நிலைமை சீராகிவிட்டது என்பது அல்ல. ஆனால், நாம் நாட்டில் இருந்து போராடவேண்டும். வேறு வழியில்லை. எங்களுடன் இணையுங்கள்.

(02 ) அதேபோல், ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டவர்கள், தமிழ் மாகாணங்களில் இந்த அரசுக்கு எதிராகவும், நாடுமுழுக்க இந்த அரசை அகற்றவும், இங்கே நாம் நடத்த விளையும் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க எமக்கு காத்திரமான முறையில் உதவ வேண்டும்.

இவை நடைபெறாவிட்டால், இங்கு தமிழர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான். இதுதான் இங்கு இன்று நிலவும், (ground situation) யதார்த்தம்.

Mano Ganesan

13 hours ago ·

Link to comment
Share on other sites

[size=4]யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார்.
[/size]

[size=4]புலிகளும் இல்லை யுத்தமும் இல்லை. ஆனால் எமது மக்கள் வெளியேற விரும்புகிறார்கள் என்றால் அடிப்படையில் அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதே உண்மை. மேலாக பொருளாதார சுமை.

அத்துடன் சிங்கள முஸ்லீம் மக்கள் தொகையிலும் கூட கணிசமான மக்கள் வெளியேறுவர், காரணம் பொருளாதாரம். [/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.