Jump to content

Mouse பாவிக்கும் போது கை யும் தோள்மூட்டும் வலிக்கின்றது. என்ன செய்யலாம்?


Recommended Posts

வேலையிலும், வீட்டிலும் அதிகமாக கணணி பயன்படுத்துவதானால் mouse இனைப் பயன்படுத்துவதும் அதிகம். இப்ப கொஞ்ச நாட்களாக mouse இனைப் பயன்படுத்தும் போது வலது கையில், தோள்மூட்டிலும் முழங்கைக்கும் தோள்மூட்டுக்கு இடைப்பட்ட இடத்திலும் வலி ஏற்படுகின்றது. சில நேரங்களில் வலி பெரியளவில் உணரமுடிகின்றது.

1. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்?

2. இதற்கென்று பிரத்தியேகமாக உடற்பயிற்சி இருக்கா?

பேசாமல் tocu screen இற்கு போவமா என யோசிக்கின்றேன்...

நன்றி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mouse யை பாவிக்காமல் வாயால் உத்தரவிடுவதன் மூலம் கணணியை இயக்க ஒரு வழி கண்டு பிடிக்கலாமே??

அப்புறம் வாய் நொந்தால் என்ன செய்வது என்று கேட்கப்படாது. ஒவ்வொன்றாகத்தான் செயற்படுத்தலாம். :lol:

(நாங்களே நொந்து போய்க்கிடக்கிறம். இதல எங்களிடடையே கேள்வி போடுகிறார் இவர்.???) :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வலது கையை அடிக்கடி பவிப்பதாலும் இது வரலாம் . இடைவெளி விட்டு கண்ணியில் உட்காரவும். [/size][size=1]

[size=4]நல்ல ஒரு secretary வைத்து கொள்ளவும். :D [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிலும், வீட்டிலும் அதிகமாக கணணி பயன்படுத்துவதானால் mouse இனைப் பயன்படுத்துவதும் அதிகம். இப்ப கொஞ்ச நாட்களாக mouse இனைப் பயன்படுத்தும் போது வலது கையில், தோள்மூட்டிலும் முழங்கைக்கும் தோள்மூட்டுக்கு இடைப்பட்ட இடத்திலும் வலி ஏற்படுகின்றது. சில நேரங்களில் வலி பெரியளவில் உணரமுடிகின்றது.

1. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்?

2. இதற்கென்று பிரத்தியேகமாக உடற்பயிற்சி இருக்கா?

பேசாமல் tocu screen இற்கு போவமா என யோசிக்கின்றேன்...

நன்றி......

நிழலி கன காசு கையில புரளுதுபோல ..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வலது கையை அடிக்கடி பவிப்பதாலும் இது வரலாம் . இடைவெளி விட்டு கண்ணியில் உட்காரவும். [/size]

[size=1][size=4]நல்ல ஒரு secretary வைத்து கொள்ளவும். :D [/size][/size]

அக்காவே ஆளை வைச்சுக்க ஜடியா தாறா இது நல்லாருக்கே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிலும், வீட்டிலும் அதிகமாக கணணி பயன்படுத்துவதானால் mouse இனைப் பயன்படுத்துவதும் அதிகம். இப்ப கொஞ்ச நாட்களாக mouse இனைப் பயன்படுத்தும் போது வலது கையில், தோள்மூட்டிலும் முழங்கைக்கும் தோள்மூட்டுக்கு இடைப்பட்ட இடத்திலும் வலி ஏற்படுகின்றது. சில நேரங்களில் வலி பெரியளவில் உணரமுடிகின்றது.

1. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்?

2. இதற்கென்று பிரத்தியேகமாக உடற்பயிற்சி இருக்கா?

பேசாமல் tocu screen இற்கு போவமா என யோசிக்கின்றேன்...

நன்றி......

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைபோல்......நிழலியின் இந்த தலைப்பும் என் பிரச்சனையைப்போல் உள்ளது. வலதுகை எதற்கும் வளம்....பாரம்கூடிய பொருட்கள் தூக்குவதும்.......மெல்லிய வேலைகள் செய்வதற்க்கும் வலதுகையத்தான் முதன்மையாக பாவிக்கின்றேன்.......இரவில் படுக்கச்சென்றதும் இடதுகை முழுவதும் ஒரே வேதனையாக இருக்கும்.சில நேரங்களில் மின்சாரம் பாய்வதுபோல் ஒரு பிரமையிருக்கும்.இதை எழுதும்போது கூட வலக்கையின் விரல்கள் வலிக்கின்றன.

சென்றகிழமை குடும்படாக்டரிடம் காட்டினேன்.தோள்மூட்டு தசைகள் இறுகிவிட்டதாகவும்....அதனை மசாஜ் மூலம் குணப்படுத்தலாம் என கூறினார்.இரு தடவைகள் மசாஜுக்கு போய் வந்துவிட்டேன்.நாளை காலையும் போகவேண்டும்.அவர்களிடம் இதுபற்றி கேட்ட போது அதிக பாரங்கள் அடிக்கடி தூக்கினாலும் வருமாம்.தலையணை சரியில்லாமல் இருந்தாலும் வருமாம்.எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வப்போது நீரில் நீந்துதல் மூலம் அநேக நோய்களை போக்க முடியுமெனவும் கூறினார்.அதை விட இப்படியான unnamed.jpgபையில் மெல்லிய சுடுதண்ணீர் நிரப்பிவிட்டு....இரவில் படுக்கும் போது அதை தோள்மூட்டில் வைத்துக்கொண்டு படுத்தாலும் கொஞ்சம் சுகமாகவும்....தசைகள் இளகவும் சந்தர்ப்பம் உண்டு.

நாளையும் போய்வந்தபின் முடிந்தால் எழுதுகின்றேன். :)

Spoiler

டாக்குத்தர்மார் சுவிம்பூலிலைதான் நீந்தச்சொன்னவங்கள்....தப்பாய் விளங்கி.....சிவாஸ்,கட்டில் எண்டு நீந்துறேல்லை....பிறகு ஒண்டு கிடக்க இன்னொண்டாகிடும் :(

தம்பி நிழலிக்கு மட்டும்.upp1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான அலுவலகங்களில் வெறும் தட்டையான mouse pad தான் வைத்திருப்பார்கள்..ஒருக்கா உங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி கை வைக்க கூடிய மாதிரி mouse pad வாங்கி மாத்திப் பாவிச்சு பாருங்கோண்ணா..கையை ஒரே இடத்தில் வைச்சுக் கொண்டு mouse பாவியுங்க.அந்த மேசையின் அரைப்பகுதிக்கு mouse சை

நகர்த்தி செல்லாமல் இருந்தால் ஓரளவுக்கு நோவுகள் வருவது சற்று குறைவாக இருக்கும்..ரச் ஸ்கிறீன் இதை வெண்டது..உங்களுக்கு எப்படியிருக்கோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இப்படியான mouse pad தான்.ஆரம்பத்தில் கொஞ்சம் இடைஞ்சலாக இருப்பது போல் இருக்கும் பழகி விட்டால் சரியாகிடும்.இதை விட சிறியதாகவும் இருக்கிறது.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் pose சரியில்லை என்று நினைக்கிறேன். கணணி பாவித்து அதிக நேரம் வேலை செய்யும்போது முழங்கைகள் 90 பாகையில் இல்லாவிட்டால் இப்படியான பிரச்சினைகள் வரும். எல்லாம் நரம்புகளின் தொல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொல்லலாம். ஆனால் அதை நீக்கிற இடத்தில சொல்லி என்ன பயன். நேர விரயம் மட்டுமே. அதனால் இதற்கான கருத்தை எமது வலைப்பூவில் பதியிறம் வந்து படித்து பயன்பெறுங்கள். விருப்பம் என்றால்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

மவுஸ் பாவிக்கும் கையின் அடிப்பகுதி மேசை விளிம்பில் தாங்கப்படுகிறது. இது கையின் நரம்பை அழுத்தும். இந்த நரம்பில் ஏற்படும் நோ கையில் பல இடங்களில் காட்டும்.

மேசையின் உயரத்தைப் பதிக்கவும். அல்லது கதிரையின் உயரத்தைக் கூட்டவும்.

இப்படிச் செய்யும் போது மேசை விளிம்பில் கையின் அடிப்பகுதி செலுத்தும் அழுத்தம் குறையும்.

கு.சா வின் படத்தில் உள்ள மவுஸ் பாட் உம் வேலை செய்யும். கையின் அடிப்பகுதி இந்தப் பஞ்சணைமேல் இருக்கும்படி மவுஸை அசைக்கலாம். இப்படிச் செய்யும் போதும் கை நரம்பில் செலுத்தப்படும் அழுத்தம் குறையும்.

மற்றபடி ஈழப்பிரியன் சொன்னது போல் கைகளில் ஏற்படும் விறைப்பு இருதய நோயின் அறிகுறியாகவும் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

பதில்களுக்கு நன்றி

குசா அண்ணை, எனக்கு எந்த நேரமும் நோ இருப்பதில்லை. எப்ப மெளசை பிடிக்கின்றனோ, அப்ப தொடங்கும். மற்ற நேரங்களிலெல்லாம் நல்ல பிள்ளையாகத்தான் இருக்கும். பாரங்கள் தூக்கும் போதும் பிரச்சனை இல்லை.

கிருபன் சொல்லியிருப்பது போல, நான் கைகளை மெளஸ் மீது வைத்திருக்கும் விதம்தான் பிழை என நினைக்கின்றன். யாயினி சொன்ன மாதிரி முழு மேசையிலும் கைவைத்து அதன் மூலை வரைக்கும் கொண்டு சென்று அழுத்துவேன். இதுதான் சரி என இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டு இருந்தேன். இந்தப் பதிவு இட்ட பின் இன்று கூகுள் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்ட போது, நான் வைத்திருக்கும் விதம் படு பிழை என்று படம் போட்டுக் காட்டியது. இனி இருக்கைகளில் இருக்கும் Arm rest இல் வைத்து முயன்று பார்க்க போகின்றேன் .

ஈசன் சொன்ன விளக்கம் வலிக்கான காரணத்தை விளக்குகின்றது. ஈழப்பிரியன் அண்ணா, உங்கள் ஆலோசனைக்கு ஏற்ப ஒருக்கா உடம்பை முழுப்பரிசோதனை செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

நான் முன்னர் வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ஒரு வரைதல் நிபுணர் இருந்தார். அவரது கையை இறிக்க ஒரு பட்டியால் கட்டியிருக்கும். மவுஸ் அதிகமாக, வில்லங்கமான முறையில் பாவித்ததனால் நடுவிரலும்மு மேலாக உள்ள ஒரு நரம்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இது மீளமுடியாத பாதிப்பாகும்.

அதன்பிறகு அவர் இத்தனை கிளிக்குகளுக்கு ஒரு முறை என்று ஓய்வு எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தவர். ஆனால் ஏற்பட்ட பதிப்பு பாதிப்புதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.