Jump to content

இயேசு அழைக்கிறாரும்,நானும்


Recommended Posts

ரதி, இப்படியான பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளதுதானே. நீங்கள் எப்படியான சபையைக்கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. எனக்குத்தெரிந்தவர்கள் செல்லும் சபையில் நகைககள், ஆடம்பரமாக உடை எல்லாம் அணியலாம். அவர்கள் வாழ்க்கையை விதம்,விதமாக நன்றாய் அனுபவிப்பதாகத்தெரிகின்றதேயொழிய துறவறம் பூண்டுள்ளதாகத்தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான இம்சைகள்,தொல்லைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பலரையும் கடந்து போயிருக்கலாம்.

அண்ணா இறந்த சமயம் பலர்வருவார்கள் கடைக்கு. என்னிடம் தமது போதனைகள் சொல்ல.

கேட்கும் போது மற்றவர்களுடைய மனதை புரியாமல் அப்பவும் வகுப்பெடுக்க தான் நினைப்பார்கள் எல்லாம் இரட்சிப்பார் என்பதுவாய் இருக்கும்,

இப்படி என்னிடமும் பலர்வருவார்கள், இப்படி மதம் மாறியவர்களையும் பலரை பார்த்திருக்கிறேன்.

எப்படி சுகம், எந்த மதம் என்று கேட்டு ஆரம்பிக்கும் உரையாடல் சூ கழட்டி அடிக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட கோவத்தில் முடியும். நான் யார் வந்தாலும் வேலை குறைவா இருந்தால் பொழுது போக கொஞ்ச நேரம் பேசுவேன்.

அவர்களிடம் இருந்து எமது கேள்விக்கு எந்த நேரடிப்பதிலும் கிடையாது .. இருங்கோ என்று பைபிளில் ஏதாவது ஒரு வாக்கியத்தை படிப்பதும்,இதை தான் எமது மதமும் சொல்கிறது என்றால் பதில் இருக்காது நான் வாசிப்பேன் நீ கேட்க வேண்டும் என்பது போல் வந்த வேலையை தொடர்வார்கள்.

mönchengladbach என்ற இடத்தில் இருந்து ஒருவர் வருவார். நான் மேற்சொன்னது போல தான் ஆரம்பிப்பார்.

நானும் இந்து சமயம் தான் என்னுடைய பெயரும் ****** என்று சொல்லுவார்.

நான் கேட்டேன். இந்து சமயத்தில் சொல்லாத எதை பைபிள்,அல்லது குர் ஆன் சொல்லிவிட்டது?

இந்து சமயத்தின் அடிப்படையில் நீங்கள் என்ன விளங்கி கொண்டீர்கள்?

மற்ற மதங்கள் போதிப்பதில் எது இந்து சமயம் போதிக்கவில்லை?

இப்படி பல கேள்விகள்? எதற்கும் பதில் இல்லை, மறுபடி வரும் போது வேறு யாரையும் கூட்டி வருவார்.

யாரும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

நான் முதல் இருந்த வீடு துருக்கிகாரனுடையது, கடைக்கு வரும் போது,தமது மதம் குறித்து பேசும்.

கேட்டு விட்டு சொல்லுவேன். இதை தான் எமது மதமும் சொல்கிறது என்று.

மதம் என்பது அவரவருடைய தெரிவு, அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை ஆனால் தன்னுடைய சமயம்,மதம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக அறியாத ஒருவர் இன்னொரு மதம் திறம், அது அப்படி சொல்கிறது என்று வகுப்பெடுப்பது தான் கோவமூட்டுகிறது.

Link to comment
Share on other sites

ரதி,

உங்கள் பகிர்விற்கு நன்றி. பாதிரி உங்கள் தலையில் கையை வைச்சு பிராhத்திக்கும் போது நீங்கள் முருகா முருகா காப்பாத்து என்று நினைச்ச விடயத்தை நீங்கள் எழுதியிருக்கும் விதம் குழந்தைத் தனத்தோடு வெளிப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது.

மற்றபடி மதம்மாறிற விடயம் தொடர்பில் எனக்குப் பொதுவாகச் சொல்லத்தோன்றுவது என்னவெனில், கடவுள் நம்பிக்கையில் இரண்டுவகை உண்டு. ஒன்று கடவுள் என்ற பாத்திரம் எமக்குப் புறம்பாக எங்கோ இருந்து எல்லாத்தையும் பார்ப்பவர் என்பது. மற்றையது கடவுள் எமக்குள்ளானவர் என்பது.

இதில் கடவுள் வெளியே இருக்கிறார் என்பவர்கள் சார்ந்து மதம் மாற்றம் பற்றிப் பார்த்தால்:

கடவுள் என்பவர் வரைவிலக்ங்களிற்கப்பாற்பட்ட சக்திகளுடன் இருப்பவர் என்ற நம்பிக்கையில் தான் மனிதன் கடவுளை நம்புகிறான். அத்தகைய தடையற்ற பலங்களுடன் ஒரு பாத்திரம் இருக்கவேண்டுமாயின், ஒரே ஒரு கடவுள் தான் இருக்கமுடியும். அல்லாது போயின், பலத்தில் ஒரு கடவுளிற்குச் சமனான அல்லது கூடிய பலத்துடன் பிறிதொரு கடவுள் இருப்பின், அத்தகைய பிறிதொரு கடவுளின் இருப்பு அந்தக் கணத்திலேயே முன்னைய கடவுளை மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரம் ஆக்கி வரைவிலக்கணத்தையே ஆட்டிவிடும். எனவே கடவுள் என்ற பாத்திரம் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும்.. இது ஏறத்தாள எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வடிவில் சொல்லப்படாலும், ஆரும் அதைக் கருத்தில் எடுப்பதாய் இல்லை. மோதகத்தையும் கொழுக்கட்டையினையும் உண்ணும் போது மனிதன் உணரும் வித்தியாசம் என்பது முற்றுமுழுதாய் அவனது கற்பனை சார்ந்தது மட்டுமேயன்றி அவ்வித்தியாசங்கள் மோதகத்திற்கும் கொழுக்கட்டைக்கும் உரியனவல்ல.

இனி கடவுள் உள்ளிற்குள் இருக்கிறார் என்பவர்கள் சார்ந்து மதமாற்றம் பற்றிப் பேசின்

கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது. ஒரு மனிதனின் பெறுமதிகள் அவனது அனுபவம் மற்றும் அறிவுசார்;ந்து அவனது வாழ்நாள் முழுவதும் மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் கடவுள் விடயத்தில் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இரு கடவுளரை ஆய்வுகூடத்தில் போட்டு அளவீடுகள் செய்து அந்தத் தரவின் அடிப்படையில் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வது என்பது சாத்தியமில்லை. உணர்வால் மனவெளியில் மட்டும் இருக்கின்ற ஒரு விடயத்தை ஒருவன் தேவை என்று உணர்ந்து, அதே நேரம் தனது மனவெளியில் இருக்கின்ற பாத்திரம் வலிமை காணாது எனவே வேறொரு மனவெளிப் பாத்திரத்தைத் தனது மனதுள் நுழைக்கவேண்டும் என்று நினைத்து, அவ்வாறு புதியதை நுழைப்பதற்காக முன்னையதை எறிவோம் என்பது உண்மையில் ஒரு நகைப்பிற்குரிய விடயம். ஏனெனில்:

மனவெளியில் பாத்திரங்களை மாத்துவது என்பது, ஒரு குழந்தை ஒரு imaginary friend உடன் கோபிச்சுக்கொண்டு இன்னுமொரு imaginary friendனை உருவாக்குவதற்கு ஒப்பானது. ஒரு குழந்தை மனநிலையில் இருப்பவரிற்கு மட்டுமே அத்தகை மாற்றம் சாத்தியம். ஆனால் இது ஒரு பரடொக்ஸ். ஏனெனில், குழந்தை மனநிலையில் இருப்பவரின் வாழ்வு இலகுவானது. ஆனால், ஒரு கடவுளால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளை உணர்ந்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னுமொரு புதிய கடவுள் வேண்டும் என்று விரும்பும் ஒருவரே மதம் மாறுகிறார் என்ற நிலையில், மதம் மாறுபவர் நிச்சயம் குழந்தை மனநிலையில் இல்லை. அப்படி இருக்கையில், அவரது மதமாற்றம் என்பது அவரிற்கே அவரது நம்பிக்கை சார்ந்த ஓட்டையினை சதா நினைவு படுத்தும். அதாவது மனவெளிப்பாத்திரம் என்று சொல்லும்போது அதன் அடிப்படை மனம். மனம் என்பது ஒவ்வொருவரிற்கும் பிரத்தியேகமானது. தமது மனத்தை, அதன் பார்வைகளைக் கையாள முடியாத ஒருவர் அந்த அந்த மனத்தில் என்ன விளைந்தாலும் அதை அனுபவிக்க முடியாதவர். இன்னுமொரு வழியில் சொல்லின், பிரச்சினை மனதில் என்ன விளைகிறது என்பதல்ல, விளைவதை அறுவடை செய்வதற்கு அதைக்காணும் பக்குவம் குறித்த நபரிற்கு இல்லாது இருப்பதே.

இந்நிலையில், மனவெளியில் எத்தனை கடவுள் பாத்திரத்தை மாற்றினாலும் நிச்சயம் அந்த மதமாற்றம் அவரின் பிரச்சினைகளைத் தீhக்;கமாட்டாது. காரணம், அடிப்படைப் பிரச்சினை இங்கு மனவெளிப்பாத்திரம் இல்லை, மனம். மதம் மாறிய ஏகப்பட்டவர்கள், சதா சர்வகாலமும் மற்றவர்களிடம் தங்கள் மதம் சார்ந்த கருத்துக்கள் பற்றி அலட்டிக்கொள்ளுவது, அனைவரையும் தம் மதத்திற்கு மாற்றி விட விரும்புவது, தங்கள் கடவுள் மட்டுமே உண்மை என்று திருப்பத்திருப்பக்கூறுவது போன்ற செயற்பாடுகள் எல்லாம் உண்மையில் அவர்களிற்கு அவர்களது நம்பிக்கை மீதிருக்கும் நம்பிக்கையீனங்களின் வெளிப்பாடுகள் தான்.

என்னுடைய அபிப்பிராயம் என்னவெனில், ஒன்றில் குழந்தையாக இருக்கவேண்டும், இல்லையேல் பிறப்பால் என்ன கடவுள் நம்பிக்கைப் பாரம்பரியத்தில் பிறந்தோமோ அதிலே தொடரவேண்டும். இந்த இரண்டாவது விடயம் கேட்டவுடன் ஒரு கட்டுப்பட்டித்தனமாக ஒலிக்கும், ஆனால் பிரச்சினை என்னவெனில், கடவுள் என்பவர் சர்வவல்லமை பொருந்திய ஒரு பாத்திரமாக இருக்கவேண்டும் என்றால், அந்தப் பாத்திரம் ஒரு மனிதனின் வாழ்வில் எப்போது அறிமுகப்படுகிறது என்ற கேள்வி அணுகப்பட்டே ஆகவேண்டும்? இல்லாதுபோயின், ஒருவன் எங்கே பிறக்கிறான் என்பதைத் தீர்மானிக்க முடியாத கடவுள் அவன் பிறந்தபின் மட்டும் வெட்டிவிழுத்துவாராக்கும் என்றல்லவா சொல்லத்தோன்றும். மேலும் பிறப்பை நிச்சயிக்க முடியாத கடவுள் என்னத்தை நிச்சயிக்கக்கூடியவர் என்ற அட்டவணையினை எங்கு ஒருவர் பெறமுடியும்? இது நம்பிக்கை வழரமுடியாத நம்பிக்கையீனத்திற்கான ஏதநிலை அல்லவா? எனவே கடவுள் என்பவரை நம்பின் நம் பிறப்புத்தொட்டு அவரின் ஆழமை எம்மில் இருப்பதாக நாம் நம்பியே ஆகவேண்டும். அப்படி நம்பின், மதமாற்றம் எவ்வாறு சாத்தியம்? அதாவது என்னைச் சரியான குடும்பத்தில் பிறப்பிக்கவே தெரியாத கடவுளிற்கு வேறென்ன தெரியும் என்று எப்பிடி நான் நம்புவது? மறுபுறமாய்ப் பார்த்தால், கடவுள் தெரிந்து தான் என்னை ஒரு பாரம்பரியத்தில் பிற்பித்தார் என்று நான் ஏற்றுக்கொண்டு அதன் பின்னும் மதம்மாறின், பிறகு எந்த லட்சணத்தில் கடவுளை நம்பவோ உதவிகேட்கவோ முடியும்? நான் தாNனு கடவுளின் முடிவை மாற்றி மதமாறியவன் ஆச்சே?

சுpலர்சொல்வார்கள், கடவுள் தன்ர அருமையினை மனிதன் உணரவேண்டும் என்று பிழையான குடும்பத்தில் முதலில் பிறப்பித்து பிறகு ரட்சிப்பார் என்று. மனிதனே நேரடியா மென்பொருளைச் சரியா டவுன்லோட்பண்ணுற உலகில இந்தக் காரணத்தை எப்பிடிப்பார்த்தாலும் சிரிப்பாய்த்தானே வருகுது.

இப்பிடி இந்த விவாதத்தை விரிச்சுக்கொண்டே போகலாம், ஆனால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதன் சாராம்சம் ஓரளவிற்குச் சொல்லப்பட்டுவிட்டதாய் உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

"கடவுள் தெரிந்து தான் என்னை ஒரு பாரம்பரியத்தில் பிற்பித்தார் என்று நான் ஏற்றுக்கொண்டு அதன் பின்னும் மதம்மாறின், பிறகு எந்த லட்சணத்தில் கடவுளை நம்பவோ உதவிகேட்கவோ முடியும்? நான் தாNனு கடவுளின் முடிவை மாற்றி மதமாறியவன் ஆச்சே?"

இன்னுமொருவன்! இது ஒரு அருமையான வாதம்

அடுத்த முறை அவர்கள் வந்தால் இதைக் கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டேன். இந்து சமயத்தில் சொல்லாத எதை பைபிள்,அல்லது குர் ஆன் சொல்லிவிட்டது?

இந்து சமயத்தின் அடிப்படையில் நீங்கள் என்ன விளங்கி கொண்டீர்கள்?

மற்ற மதங்கள் போதிப்பதில் எது இந்து சமயம் போதிக்கவில்லை?

உண்மைதான்.

வேறு ஒரு இடத்தில் யாரோ எழுதியிருந்தார்கள்

போய்ப்பார்க்கலாமே என.

மிகவும் ஆபத்தான விடயம் இது.

உங்களைச்சுற்றி வலையமைப்பை வரைந்து சூழ்ந்து கொள்வார்கள்.

உங்கள் மனைவி பிள்ளைகள் ஏன் பொருளாதாரம் உழைப்பு பல தனிப்பட்ட ரகசியங்கள் கூட அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள்.

எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர்

மிகவும்தெளிவானவர்.

இப்படித்தான் அவரது சித்தப்பனாரால் கொண்டு போகப்பட்டார்.

அதன் பின் அவரது பெண் பிள்ளை மலம் கழித்து வெளியில் வந்◌ாலும் இன்று வடிவாகப்போச்சுதாம்மா. எல்லாம் கடவுளின் கிருபை என்பாராம். அந்தப்பிள்ளை தொலைபேசியில் எங்களுடன் அழும். அப்பாவைப்பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கு என்று.

அந்தப்பிள்ளை தொலைக்காட்சியில் சிறுவயதில் தனி புரோகிறாமே செய்யும் ஆற்றலுடன் இருந்தவர். வைத்தியத்துறையில் யூனியில் படித்துக்கொண்டிருந்தவர். மெதுவாக தகப்பனால் உள்ளிழுக்கப்பட்டு போன மாதம் அந்தபபெண்ணுக்கு திருமணம் நடந்தது. (21 வயது.)

எனக்கு அழைப்பு வந்தது நான் போகவில்லை. போக மனம் வரவில்லை. காரணம்

மாப்பிள்ளை பெண்ணைவிட 12 வயது அதிகமானவர். அத்துடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அந்தப்பிள்ளை சொல்லுதாம். நான் கடவுளை நேரில் கண்டேன். இதுவும் கடவுள் தந்தது தான் என்று.

Link to comment
Share on other sites

உங்கள் முறைப்பாடுகள் எல்லாம் சரி, இதன் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வுதான் எவை?

வாழ்க்கையில் மோசமான பிரச்சனைகளில் உழன்று, துன்பங்கள் தாங்கமுடியாமலே பலரும் ஒரு நம்பிக்கைக்கீற்றுடன் இவ்வாறு சபைகளினுள் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள்.

சபைகள் வேண்டாம், கூடாது என்றால்.. இதற்கு ஈடிணையாக உங்களிடம் எவ்வாறான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு தற்போது உள்ளது? நாம் வாழ்கின்ற சமூகம் மற்றவர்களின் துன்பங்கள் பற்றி ஏதாவது அதிகம் அலட்டிக்கொள்கின்றதா? சபை ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர்கள் தமது சமயத்தை வளர்க்கவேண்டும் என்கின்ற ரீதியில் செயற்பட்டால்கூட அவர்கள் செய்கின்ற உதவிகளை, கொடுக்கின்ற தென்பை, மனத்தைரியத்தை துவேசிக்கலாமா?

நாளை நீங்கள் புற்றுநோயினால் மடியப்போகின்றீர்கள் என்றாலும்.. வீட்டிலே வைத்தியர்களினால் கைவிடப்பட்டநிலையில் உங்கள் இறுதி நேரத்திற்காக காத்துள்ளீர்கள் என்றாலும்.. இவ்வாறான சபையில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் உங்கள் வீடுதேடிவந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றாறார்கள். நம்பிக்கைதரும்வகையில் உரையாடுகின்றார்கள். உங்களுக்கு ஒருபிடியும் இல்லை, நம்பிக்கைதரும் வகையில் ஒன்றும் இல்லை, ஆனாலும் இவர்கள் அந்த இறுதிநேரத்திலும் ஏதோ நம்பிக்கையுடன் குழுவாகவோ, தனிநபராகவோ சேர்ந்து உங்களுக்காக மன்றாடுகின்றார்கள். விஞ்ஞானரீதியாக இதற்கெல்லாம் பலன் உண்டா இல்லையா என்பதற்கு அப்பால், ஒரு மனிதனாக எத்தனைபேர் கொடியதுன்பம் வரும்போது உங்கள் அருகில் இருக்கவிரும்புவார்கள்?

சபைகளைக்குறைகூறாது பல்வேறு வகைகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆதரவுகொடுத்து அவர்களை அரவணைப்பீர்களாயின் அடிப்படைப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சரியான பாதையாக அது அமையும்.

எனக்கு ஓர் பிரச்சனை, துன்பம் ஏற்படுமானால் எனது முதலாவது தேடல், ஆரம்பப்படி அந்தப்பிரச்சனையை தீர்ப்பது, அந்தத்துன்பத்திலிருந்து விடுபடுவதாக அமையுமேயொழிய கடவுளினைக்கண்டுபிடிப்பதற்கான தேடலாக அது அமையாது. இங்கு கடவுள், மதம் என்பதல்லாமல் சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளும், துன்பங்களுமே இங்கு கருப்பொருளாக பார்க்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

ஒரு சமையம் எனக்கு அவை பைபிள் தர நான் அவைக்கு திருநீறு கொடுத்து அணுப்பி விட்டேன்......

என்னைக்கேட்ட நான் சொல்லுவான் என்குள் தாய் மொழி எப்பிடி முக்கியமோ.... தாய் நாடு எப்பிடி முக்கியமோ....அப்பிடித்தான் தாய் மதமும்....... That's all

Link to comment
Share on other sites

என்னிடம் நேரடியாக பேச்சு வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் என் மாமா கூடும்பத்தில் பாரிய சூராவளியை கொண்டு வந்து விட்டார்கள் சுவிஸில்.

9 வருடத்துக்கு முன் தான் மாமா தனது பொண்டாட்டி பிள்ளைகளை சுவிஸுக்குஎ டுத்தவர் அதில ஒரு பெண்பிள்ளை அல்லூயா பெடியனை விரும்பி வீட்டவிட்டு ஓடி திருமணம் செய்து விட்டாள். மகளை 4 வருசமாக சேர்க்கவும் இல்லை பேசுவதுமில்லை சரி பேரன் பிறந்த சந்தோசத்தில் மாமியை மட்டும் பாக்க அனுப்பினால் இப்ப மாமி மதம் மாறி இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டார்கள்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நேரடியாக பேச்சு வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் என் மாமா கூடும்பத்தில் பாரிய சூராவளியை கொண்டு வந்து விட்டார்கள் சுவிஸில்.

9 வருடத்துக்கு முன் தான் மாமா தனது பொண்டாட்டி பிள்ளைகளை சுவிஸுக்குஎ டுத்தவர் அதில ஒரு பெண்பிள்ளை அல்லூயா பெடியனை விரும்பி வீட்டவிட்டு ஓடி திருமணம் செய்து விட்டாள். மகளை 4 வருசமாக சேர்க்கவும் இல்லை பேசுவதுமில்லை சரி பேரன் பிறந்த சந்தோசத்தில் மாமியை மட்டும் பாக்க அனுப்பினால் இப்ப மாமி மதம் மாறி இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டார்கள்,.

அல்லல் ஓயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு வந்து இறங்கிய ஒரு,இரு வாரங்களுக்குள் மொன்றியலுக்கு ஒரு சேர்ச்சுக்கு எனது சகோதரன் கூட்டிப் போனார் அங்கே நடந்த ஒரு நிகழ்வு மற்றவர்களைச் சந்தோசப்படுத்தியது என்னை சங்கடப்படுத்தியது....காரணம் நான் வந்த புதிது...எல்லாரும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் போது எனக்கு கிட்டவாக ஒரு வெள்ளை இனத்து மதகுருவானவர் ஒரு சின்ன சொருபத்தைக் கொண்டு வந்து கையில் தந்துட்டு ஏதோ சொன்னார் எனக்கு ஒன்றும் புரிய இல்லை..அண்ணா சொன்னார் உம்மை அதை தொட்டுக் கொண்டு வேண்டிதல் செய்யட்டுமாம் என்றார்..அதே நேரம் அந்த வெள்ளை இன மதகுருவின் கையை என் தலை உச்சிக்கு மேல் வைச்சுக் கொண்டு ஏதோ வாய்க்குள் முணு,முணுத்தார்..அந்த தருணத்தில் எனக்கு வாயில் வந்தது அய்யோ பிள்ளையாரப்பா என்னை இந்த இடத்தில் இருந்து காப்பாத்து என்பது தான்...இலகுவில் இப்படி யாருக்கும் நடப்பதில்லை நீர் அதிர்ஸ்ட்டக்காறி என்று கூட வந்த உறவுகள் பேசிக் கொண்டார்கள்..அந்த சம்பவத்தின் பின் இன்றுவரைக்கும் வெளியில் போகும் போது ஒரு,இரு இடங்களைத் தவிர வீபூதி பூசிக் கொண்டு தான் போறனான்...சரி அதை விடுவம்.

நான் மற்றவர்களின் மதத்தைக் குறை சொல்ல இல்லை..எனக்கு அந்த வேலை தேவையும் இல்லை...அவர்,அவருக்கு அவர்கள் வணங்கும் தெய்வங்கள் தான் பெரிது..ஆனால் இன்னுமொரு மதத்தில் இருப்பவரை தங்கள் மதத்தைப் பற்றி வகுப்பு எடுத்து இழுக்க கூடாது..ஒரு மதத்தை விட்டு இன்னுமொரு மதத்தில் போய் என்ன செய்கிறீர்கள் அதைப் பற்றி முன்பு இருந்து வந்த இடத்திற்கு தானே போதனை செய்கிறீர்கள்.சுனாமி எத்தனை ஆயிரம் மக்களை அள்ளிக் கொண்டு போனது இந்த கடவுள்கள் என்ன செய்துட்டு இருந்தவர்கள்...இல்லை ஒரு புற்றுநோயால் பாதிக்கபட்ட ஒரு நோயாளியை சுகமாக்கி தேக ஆரோக்கியத்தோடு வாழ வைக்க முடிந்ததா....கடவுளுக்கு அடுத்ததாக நம்பபடுவர்கள் மருத்துவர்கள்..அந்த மருத்;துவத்தாலயே கை விடபட்ட பின்னார் தான் உங்கள் கவனம் பாதிக்கப்பட்டவர்களை நோக்கியதாக இருக்கிறது...வாழ்வில் இறுதிக் கட்டத்தில் உயிரோடு போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் தேவார,திருவாசக,வேத பாராயணங்களை பாடி இறுதிப்பயணம் அனுப்பி வைக்கும் பணியில் இருப்பவர்களும் ஊதியத்தோடு தான் செய்கிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முறைப்பாடுகள் எல்லாம் சரி, இதன் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வுதான் எவை?

வாழ்க்கையில் மோசமான பிரச்சனைகளில் உழன்று, துன்பங்கள் தாங்கமுடியாமலே பலரும் ஒரு நம்பிக்கைக்கீற்றுடன் இவ்வாறு சபைகளினுள் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள்.

சபைகள் வேண்டாம், கூடாது என்றால்.. இதற்கு ஈடிணையாக உங்களிடம் எவ்வாறான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு தற்போது உள்ளது? நாம் வாழ்கின்ற சமூகம் மற்றவர்களின் துன்பங்கள் பற்றி ஏதாவது அதிகம் அலட்டிக்கொள்கின்றதா? சபை ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர்கள் தமது சமயத்தை வளர்க்கவேண்டும் என்கின்ற ரீதியில் செயற்பட்டால்கூட அவர்கள் செய்கின்ற உதவிகளை, கொடுக்கின்ற தென்பை, மனத்தைரியத்தை துவேசிக்கலாமா?

நாளை நீங்கள் புற்றுநோயினால் மடியப்போகின்றீர்கள் என்றாலும்.. வீட்டிலே வைத்தியர்களினால் கைவிடப்பட்டநிலையில் உங்கள் இறுதி நேரத்திற்காக காத்துள்ளீர்கள் என்றாலும்.. இவ்வாறான சபையில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் உங்கள் வீடுதேடிவந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றாறார்கள். நம்பிக்கைதரும்வகையில் உரையாடுகின்றார்கள். உங்களுக்கு ஒருபிடியும் இல்லை, நம்பிக்கைதரும் வகையில் ஒன்றும் இல்லை, ஆனாலும் இவர்கள் அந்த இறுதிநேரத்திலும் ஏதோ நம்பிக்கையுடன் குழுவாகவோ, தனிநபராகவோ சேர்ந்து உங்களுக்காக மன்றாடுகின்றார்கள். விஞ்ஞானரீதியாக இதற்கெல்லாம் பலன் உண்டா இல்லையா என்பதற்கு அப்பால், ஒரு மனிதனாக எத்தனைபேர் கொடியதுன்பம் வரும்போது உங்கள் அருகில் இருக்கவிரும்புவார்கள்?

சபைகளைக்குறைகூறாது பல்வேறு வகைகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆதரவுகொடுத்து அவர்களை அரவணைப்பீர்களாயின் அடிப்படைப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சரியான பாதையாக அது அமையும்.

எனக்கு ஓர் பிரச்சனை, துன்பம் ஏற்படுமானால் எனது முதலாவது தேடல், ஆரம்பப்படி அந்தப்பிரச்சனையை தீர்ப்பது, அந்தத்துன்பத்திலிருந்து விடுபடுவதாக அமையுமேயொழிய கடவுளினைக்கண்டுபிடிப்பதற்கான தேடலாக அது அமையாது. இங்கு கடவுள், மதம் என்பதல்லாமல் சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளும், துன்பங்களுமே இங்கு கருப்பொருளாக பார்க்கப்படவேண்டும்.

கரும்பு, ஒரு அருமையான விடயத்தைத் தொட்டிருக்கின்றீர்கள்.

இந்து மதம், தனது பரிணாமத்தில் எதையும் இழந்து விடவில்லை!

முல்லைக் கொடிக்குத், தேரைத் தானமாக அழித்தான், பாரி!

திருநாவுக்கரசர் காலத்திலும், ஊரெங்கும் தர்மசாலைகள் நிறைந்திருந்தன!

கர்ணன் என்ற பாத்திரம், தர்மத்துக்காவே உருவாக்கப் பட்டது!

இன்றும் திருப்பதியில், பணத்தை எண்ணுவதில்லை! நிறுக்கிறார்கள்!

இதே கதை தான், நல்லூர்க் கந்தசாமி கோவிலிலும், சிதம்பரத்திலும், சிட்னி முருகன் ஆலயத்திலும்!

ஆனால், அந்தத் தருமப் பணங்களின், நிர்வாகம், தவறானவர்கள், கைகளுக்குப் போய் விட்டது என்பது தான் 'யதார்த்தம்'

இந்திய அரசும், தமிழக, கேரளா அரசுகளும், கோவில் உண்டியல்களுக்குள் கையை விடுகின்றன!

[size=3]

"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்[/size][size=3]

குறியெதிர்ப்பை நீரது உடைத்து"[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.

பூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் ? அனுப்பிவிட்டு விட்டாள்.

21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..

டிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம் :D

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மகாராஜா...அவர்களது மதத்தின் முக்கிய கோட்பாடுகளில் முக்கியமானவை உருவ வழிபாடு இல்லை,ஆடம்பரம் கூடாது,நகைகள் அணியக் கூடாது,பொழுது போக்கு,சினிமா ஒன்றும் பார்க்க கூடாது என்பது போன்ற பல இருக்குது...ஒருத்தரும் அதைக் கடைப் பிடிக்காத போது உங்கள் மச்சாள்அதைக் கடைப் பிடிப்பது ஆச்சரியமாய் உள்ளது...இந்தியாவில் உள்ள பாமர மக்கள் வைத்தியத்தை நம்பாது சாமியாரை நம்புவது போல் இவர்களிலும் உள்ளார்கள் என பல கதைகள் நான் கேள்விப் பட்டு உள்ளேன்.

பகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்

பலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு

வாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...

அப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி

தமிழ்சூரியன் நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

திரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

இந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,

மிக்க நன்றி நிழலி

எனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி. :blink:

:( :( :(

இது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.

81 அல்லது 82 இருக்கும்.

எனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.

வெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.

இப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.

அதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :lol::D :D

நீங்கள் பயங்கர‌ ஆள் தான் விசுகண்ணா :lol: ...நன்றி உங்கள் கருத்திற்கு

இந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.

நன்றி சிற்பி உங்கள் கருத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்த நிலாமதி அக்கா,றமணன்,சுமேரியர்,சபேசன்,கு.சா அண்ணா,அர்ஜீன் அண்ணா,நிழலி,கிருபன்,சாஸ்திரி ஆகியோருக்கு எனது நன்றிகள்.

இந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்

சபேசன் கு.சா அண்ணா சொன்ன மாதிரி எழுதுங்கோ எல்லோரும்,எல்லாத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் தானே

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

கரும்பு உங்கள் வருகைக்கு எனது நன்றி...நாங்கள் எப்படி மற்றவனை அந்த சபைக்குப் போகாதே,இந்த சபைக்குப் போகாதே என சொல்ல முடியாதோ அதே மாதிரி அவர்களும் தங்கட சபைக்கு வரச் சொல்லி கட்டாயப் படுத்தி மதம் மாற்ற முடியாது.

பிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.

எல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.

நான் எழுத வந்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் நன்றி

எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்குள் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்திட்டனோ...உங்கள் அனுபவப் பதிர்வை எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

எல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.

ஓ உங்கட‌ அண்ணாவும் மதம் மாறிட்டாரே :unsure:

மற்றவர்களை மதிக்காத தீவீர மதவாதிகளுடன் தொடர்பு வைப்பதில்லை.

பொதுவாக மதங்கள் நல்லவற்ரைத்தான் சொல்ல வருகின்றன. இடையில் இருப்பவர்கள் விளையாடி விடுகிறார்கள். இப்படியானவர்களை நிறையச் சந்தித்திருக்கிறேன். கடவுளில் நம்பிக்கையுண்டு. நல்ல மதக் கோட்பாடுகளை கைப்பிடிக்க கூடிய குணநலம் இல்லையென்பதால் ஒதுங்கி இருக்கிறேன். இருந்து போட்டு மெதடிஸ்த சேர்ச்சுக்குப் போவேன். அங்கு சொல்லும் உபதேசங்கள் மனத்தைக் குத்துவதால், அங்கு செல்வதைத் தவிர்த்து வருகிறேன். நானும் கிறிஸ்தவன் எண்டு போட்டு இந்தத் திரிக்கு பதில் சொல்ல முடியாது.

பொதுவில், பகிரங்கமாக இயங்கும் எந்த அமைப்பின் தவறுகளும் பகிரங்கமாக விமர்சிக்கப்பட வேண்டும். தொடருங்கள்.

எந்த மதமாக இருந்தாலும் மற்ற மதங்களையும் சமமாக நினைக்க வேண்டும்...ஏதோ தங்கட‌ மதம் மட்டும் தான் பெரிசு,மற்றவன் மதம் எல்லாம் சிறிது என எண்ணக் கூடாது...நன்றி தப்பிலி உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கில்ல, வீணா அடிபடிறதை, விட்டிப்போட்டு, இந்த ஏசுநாதரும், கிருஷ்ணரும் பிறந்த கதையளை, ஒருக்காத் திருப்பிப் படிச்சுப் பாருங்கோவன்! கன, ஒற்றுமைகள் இருக்கு!

வசுதேவர்- ஜோசெப்

தேவகி- மேரி

கம்சன்- ஏரோது மன்னன்

பிருந்தாவன்- பெத்தலேகம்

நட்சத்திரங்கள் வழி காட்டுதல் - நட்சத்திரங்கள் வழி காட்டுதல்

குழந்தைகளை மறைத்தல் -குழந்தைகளை மறைத்தல்

மூன்று முனிவர்கள்- மூன்று தேவதூதர்கள்

ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு-ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு

ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்-ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்

அற்புதங்கள் - அற்புதங்கள்

மீண்டும் வருவேன்- மீண்டும் வருவேன்

ஒரே நாடகம் தான்! நடிகர்களும், மேடையும் தான் வித்தியாசம்.

எல்லாமே, ஒரே உண்மையைத்தான் பேசுகின்றன! ஆனால், அதைச் சொல்லும் விதங்கள், மாறுபடுகின்றன!

இந்த உண்மையைப் புரிந்தவனுக்கு, மதம் தேவையில்லை!

புங்கை உண்மையில் நீங்கள் ஒரு மேதை தான் :)

[size=4]நான் எல்லோருடனும் உரையாடுவேன்.........[/size]

[size=1][size=4]எனக்கு தேவையான கருத்துக்களை அவர்கள் சொன்னால் அதை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?[/size][/size]

[size=1][size=4]நாட்டில் இருந்த நாள் முதலாய் (ஜெகோவாவின்) விழித்தெழு புத்தகம் வாசித்து வருகிறேன்.[/size][/size]

[size=1][size=4]ஒரு ஐரோப்பா நாட்டில் வாழ்ந்த காலத்தில் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற முடிந்தது ...[/size][/size]

[size=1][size=4]ஆங்கிலத்தில் இருப்பத்தை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.[/size][/size]

[size=1][size=4]அப்படி ஒரு மொழிபெயர்ப்பை வேறு எங்கும் பார்க்கவில்லை.... தமிழ்நெட் இணையத்தளம் கிட்டத்தட்ட அப்படி இருந்திருக்கும் என சொல்லலாம்.[/size][/size]

[size=1][size=4]நான் ஆங்கிலம் பயில மிகவும் அது உதவியாக இருந்தது.[/size][/size]

[size=1][size=4]அவர்கள் காவற்கோபுரம் என்றும் ஒரு புத்தகம் தருவார்கள் அது முழுதாய் அவர்களுடைய மதம் பற்றி இருக்கும் அந்தவயதில் எமக்கு எதுவும் விளங்காது. ( கழுத்துக்குள் நோ என்றால் வயிரவருக்கு வடை மாலை இரண்டாம் நாள் எல்லாம் சுகம் அதற்குள் எமது உலகம் இருந்தது) அதனால் அதை அப்போதிருந்தே வாசிப்பதில்லை இப்போதும் அதே தாக்கமோ என்னமோ அதை வாசிப்பதில்லை.[/size][/size]

[size=1][size=4]எனக்கு தெரிந்த உறவினர்கள் சிலரும் மேலே இருக்கும் சில கருத்துக்களைபோல்தான் அவர்களை திட்டுவார்கள். உங்களுடைய மதத்தில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால்? [/size][/size]

[size=1][size=4]எப்படி அவர்களால் உங்களை மதம் மாற்ற முடியும்?[/size][/size]

[size=1][size=4]ஏன் அவர்களுடைய மதம் என்ன சொல்கிறது என்பதை கேட்க அஞ்சுகிறீர்கள்?[/size][/size]

[size=1][size=4]உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? என்று அவர்களை பார்த்து கேட்க தோன்றும் உறவினர்களை காண்பதே அரிது அதற்குள் ஏன் முன்றாம் தர பிரச்சனை என்று விட்டு எதுவும் பேசுவதில்லை.[/size][/size]

எனக்கு என்ட மதத்தில் நம்பிக்கை இருக்கிறது...அவர்களுடைய மதம் என்னத்தை வித்தியாசமாக சொல்லப் போகிறது? எல்லா மதமும் அன்பைத் தானே போதிக்கிறது...கிறிஸ்தவர்களுடைய வேத நூல் பைபிள் தானே அந்த பைபிள் சொல்வதைத் தானே அனைத்து கிறிஸ்தவர்களும் கடைப் பிடிக்க வேண்டும் பிறகு எதற்கு அதில் பல சபைகள்?...அதை விட‌ எல்லாளன் சொன்ன மாதிரி நேர‌மும் வேஸ்ட்

................................................................................................................................

நன்றி தமிழ்சிறி,ஈசன்,சகாறா அக்கா,குட்டி உங்கள் வருகைக்கும்,அனுபவப் பதிர்வுக்கும்...எனக்கு என்னவோ ஆட்கள் குறைவாக இருக்கும் நேரம் அல்லது ஆட்கள் இல்லாத நேரம் கோயிலுக்குப் போய் இருந்தால் மனம் ஏதோ அமைதியடைந்தால் போல் இருக்கிறது.

.........................................................................................................................................................

[size=5]கடவுளை தேடி செல்லவேண்டிய அளவிற்கு மனவருத்தம் இருந்தும்.....[/size]

[size=5]உரிய நேரத்தில் ஒரு ஆறுதல் வார்த்தையை கூட கூறாமல் விட்டு விட்டோமே [/size]

[size=5]என்ற குற்ற உணர்வுடன்......[/size]

[size=5]............................................................... மருதங்கேணி [/size]

குற்ற உணர்வு எதுவும் தேவையில்லை ...மிக்க நன்றி மருதங்கேணி

பணக்கார இயக்கம்.

ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை வாடி இருக்குமாம் கொக்கு என்பது போல் இருந்து

யார்யாருக்கு எங்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்பதை துல்லியமாக தெரிந்து அடிப்பார்கள்.

இதென்டால் மிகப் பெரிய உண்மை...நன்றி உங்கள் கருத்திற்கு ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மிகவும் ஆழமான பார்வை முக்கியமானதும் கூட...........[/size]

[size=1][size=5]இவர்கள் மிகவும் கொளுத்த பண காரர்கள். இவர்களுக்கு இவளவு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தேடி சென்றால். சில நாடுகளின் உளவு நிறுவனங்களின் தலைமையகங்களில் போய் நிற்பீர்கள்.[/size][/size]

[size=1][size=5]பாரிய அளவில் காசை கொட்டி இதை இயக்குகிறார்கள். காரணம் எந்த சந்தேகமும் இன்றி இலகுவாக மற்றைய நாடுகளுக்குள் ஊடுருவ சிறந்த வழி இதை விட வேறொன்றும் இருக்க முடியாது. [/size][/size][size=1][size=5]தொண்டு நிறுவனங்கள் கூட இதற்கு இரண்டாம் நிலைதான்.[/size][/size]

[size=1][size=5]புலிகளை பற்றிய உண்மை நிலவரங்கள் தகவல்கள் தமிழருடைய உண்மை தகமை என்பதையெல்லாம். அமெரிக்க சி ஐ ஏ இந்த வழியாகவே பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. [/size][/size]

[size=1][size=5]இதில் எந்த பொய்யுமுமில்லை காரணம் கதைகளை சொல்லுபவர் ஜேசுவை நாளையோ மறுநாளோ காண ஏங்கி கொண்டிருக்கும் இதயம். கேட்பவர் பாஸ்டர் அவர்மேல் சந்தேகம் கொள்ள எந்த தடயமும் இல்லை. தேவையான தகவலை திரட்டிக்கொண்டு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு பாஸ்டர் போய்விடுவார். அவளவு பெரிய பாஸ்டரை நேரில் பார்த்த பூரிப்பில் இவர்கள் ஜேசுவுக்கு ஆனந்த பூசை செய்துவிட்டு படுத்திடுவார்கள்.[/size][/size]

[size=1][size=5]ஜேசு தான் வாழவே வழியில்லாமல் காட்டி கொடுப்பில் மாட்டுபட்டு உயிர் துறந்தார். உயிர் துறக்கும் வரை கொண்ட கொள்கையில் சிறிது தளர்ச்சியும் இன்றி நின்றார். சிலுவையை சுமந்து தனது கொள்ளகைக்காகவே உயிர் துறந்தார். அவர் இறுதிவரை அடுத்தவர்களுக்கு சொன்னது அனைவர் இடத்திலும் அன்பாய் இருங்கள் என்பது. நேற்று ஜேசுவையையும் பைபிளையும் கண்டதுகளுக்கு ஜேசு என்ன சொன்னார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களை சாத்தான் என்கிறார்கள். [/size][/size]

[size=1][size=5]சாத்தானே செய்ய தயங்கும் மக்கள் கொலைகளுக்கு மறைமுகமாக சாத்தானின் பிள்ளைகளாக இருப்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ .................. கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்.[/size][/size]

போர் நடைபெற்றபோது 300 தொண்டு அமைப்பு உளவாளிகள் தகவல் சேகரித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

இங்கு ஆஸ்திரேலியாவில்  உள்ளவர்கள்  வற்புறுத்துவது இல்லை. ஒருதடவை  மூன்று பேர்  வந்தார்கள். மனைவி அவர்கள் வருவதைக் கண்டு ஓடி ஒழித்துக்  கொண்டாள் . நான்  தான்  மாட்டிக்கொண்டேன் . கடவுள் நம்பிக்கை இருகிறதா என்றார்கள் ? இல்லை என்றேன். ஏன்  என்றார்கள்? குழந்தைகள் பெண்கள் அப்பாவிகள் கொல்லபடுகிறார்கள் எனது நாட்டில் என்று   அவர்களை மெதுவாக எனது பக்கத்துக்கு இழுத்து வந்து ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தேன். தானாகவே விடைபெற்று சென்றுவிட்டார்கள். மறைந்தி ருந்து கேட்டுகொண்டிருந்தமனைவி  என்னை பாராட்ட தவறவில்லை.

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் தமிழர் ஒருவர் காதல் திருமணத்தினால் மதம் மாறினார். அவர் மாறிய மதத்தில் தலையிடி , காய்சல் வந்தால் மருந்துகள் எடுப்பதில்லை. அந்த மதத்தின்கடவுளைத்தான் கும்பிடுவார்கள்.   சில வருடங்களுக்கு முன்பு  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலி தாங்கமுடியாமல் வைத்தியரைப் பார்க்க மருத்துவநிலையத்துக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவருடைய துணைவியும், துணைவியின் குடும்பத்தாரும் ஆண்டவரைக்கும்பிடுங்கள்.  மருத்துவநிலையத்துக்கு செல்ல வேண்டாம் என்றார்கள்.  அவர்கள் இவரை மருத்துவநிலையத்துக்கு செல்வதினைத் தடுத்தார்கள்.  இவர் வலி தாங்காமல் காவல்நிலையத்துக்கு  தொலைபேசியில் முறைப்பாடு செய்தார்.  காவல்துறையின் உதவியுடன் மருத்துவநிலையத்துக்கு சென்று , இப்பொழுது சுகவாழ்வு வாழ்கிறார். தற்பொழுது விவாகரத்தும் செய்து , முன்பு இருந்த மதத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.