Jump to content

அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு


Recommended Posts

3d%20text%20logo.gif

அமெரிக்கா மற்றும் கனடாவில்

அஜீவனுடன் ஒரு சந்திப்பு

தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம்.

வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைபெறவுள்ள குறும்பட பயிற்சிப் பட்டறையை அஜீவன் நெறிப்படுத்த உள்ளார். அதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystor...198&format=html என்ற முகவரியில் காணலாம். பயிற்சிப் பட்டறைக்கு மிகக் குறைந்த அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மே 27, 2006 (சனி) பிற்பகல், கனெக்டிகட் மாநிலம் மில்போர்ட் நகரில், திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. கனெக்டிகட், மசாசூசெட்ஸ் மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் அப்பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், தங்களையும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதுகுறித்த மேலதிக விவரங்களை, http://www.thinnai.com/?module=displaystor...199&format=html என்ற முகவரியில் காணலாம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.

மே 28, 2006 (ஞாயிறு) பிற்பகல் நியூ ஜெர்ஸியில் என்னுடைய இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. நியூ ஜெர்ஸி மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறீர்கள் என்றால் இச்சந்திப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystor...910&format=html என்ற முகவரியில் காணலாம். நியூ ஜெர்ஸி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் முன்கூட்டியே pksivakumar [at] yahoo [dot] com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தெரிவித்தால், நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்தின் முகவரி, வருகிற வழிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம்.

வட அமெரிக்க வாழ் தமிழன்பர்கள் தங்கள் ஊருக்கு அருகில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் ஆதரவு தருமாறூம் அன்புடன் வேண்டுகிறோம்.

பின்குறிப்பு: ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். இணைய நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பெப் சுந்தர் ஆகியொர் கனெக்டிட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வாக்களித்துள்ளனர். நியூ ஜெர்ஸி நிகழ்ச்சியில் வழக்கம்போல இணைய நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: http://pksivakumar.blogspot.com/2006/05/blog-post.html

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா உங்கள் முயற்சி இனிதே அமையட்டும்.

Link to comment
Share on other sites

நன்றிகள்

ஹரி - புத்தன் - ரசிகை மற்றும் சிநேகிதிக்கு............

யாழ்கள நண்பர்கள் பலரை சந்திப்பேன் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்துக்கள் அஜீவன் அண்ணா சுவிசில எப்ப பயிச்சிப்பட்டறை வைக்கப்போறியள் நானும் ஒரு கமறா வத்துள்ளேன் பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும்.

Link to comment
Share on other sites

வாழ்துக்கள் அஜீவன் அண்ணா சுவிசில எப்ப பயிச்சிப்பட்டறை வைக்கப்போறியள் நானும் ஒரு கமறா வத்துள்ளேன் பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும்.

பாலுமகேந்ரா மாதிரி படம்மெடுக்கோணும். :lol:

முதலில் நன்றி விது.

உங்களைப் போல ஆர்வமுள்ளவர்கள்

ஒழுங்கு செய்தால்

அதைச் செய்யலாம்.

தவறாக எடுக்க வேண்டாம்!

பலரால் பேச முடிகிறது.

ஆனால் முழுமையாக செயல்பட முடியவில்லை.

நம்மவர்களில் பலர் ஆர்வக் கோளாறு உள்ளவர்கள்.

ஆனால் அடிப்படையையாவது கற்று ஏதாவது செய்ய எண்ணாதவர்கள்.

ஒரு வீடியோ கமரா இருந்து விட்டால்

இப்போ எல்லாம்

ஒரு படத்தை எடுத்து விடலாம்.

அது

நாம் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது

நமது சமூகத்தை தாண்டியும் பேசப்பட வேண்டும்.

அதுபோலவே குறும்பட போட்டிகளை நடத்துவதும்

பெரிய விடயமல்ல.

சினிமா பார்ப்போரும் - மேடைப் பேச்சாளர்களும் இருந்தாலே

யாரையும் பேய்க் காட்டலாம்.

பரிசும் கொடுக்கலாம்...........

ஆனால்

அந்தப் படைப்புகள்

அது நமது சமூகத்தை தாண்டிச் செல்ல வேண்டும் :?:

அதுதான் குறிக்கோளாக வேண்டும்.

சினிமா கலை என்பது நாடகமில்லை.

அது நகரும் படங்கள் வழி பேசும் ஒரு அரிய கலை.

படமாக இருந்தாலும்

குறும்படமாக இருந்தாலும்

சினிமா மொழி தெரியாதவனது படைப்புகள்

தொடர்ந்து பயணிக்காது.

அது ஒரு எல்லையோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி.

சினிமா கலை தெரியாதவர்களுடன் சேர்ந்து

சினிமா தெரிந்த ஒருவனால் கூட

தனி மனிதராய் பணியாற்றி நிச்சயம் ஜெயிக்க முடியாது.

அப்படி ஒரு வெற்றி கிடைக்குமானால்

அது ஒரு விபத்தாய் ஏற்படும் வெற்றியாகலாம்.

அவை தொடர் வெற்றிகளாய் மாற வேண்டும்!

அதுவே நம்மவர் மத்தியில் தொடர வேண்டும்...............

ஒரு நிகழ்வு :

நான் வாழும் நாட்டுக்கு பக்கத்து நாட்டில்

ஒரு குறும்படம் எடுக்க ஆவலாக இருந்தார்கள்.

ஆரம்பத்திலியே அவர்களுக்கு சொன்னேன்.

அதில் பங்கு கொள்பவர்களுக்கு அடிப்படை தெரிய

ஒரு குறும்பட பயிற்சிப்பட்டறை செய்வோம்.

பின்னர் குறும்படத்தை எடுக்கலாம் என்று..............

உண்மை பேசினால் நம்மில் பலருக்கு பிடிக்காது. :?: :lol:

அதற்கான காரணம்

நம்மிடம் சினிமா தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லை.

பணியாற்றுவோர்தான் உதவ வேண்டும்.

அவர்களுக்கு ஓரளவாவது விடயம் தெரிந்தால்தான்

அவர்களாலும் உதவவோ

அல்லது நாம் என்ன வேண்டுகிறோம் என்பதை

புரிந்து கொள்ளவோ முடியும்.

ஸ்டார்ட் கட் சொல்ல................. :P

வசனங்களை நாடகங்கள் போல பேச வைக்க................

:P 100 கசெட்டில் ஒளிப்பதிவு செய்ய.............. :P

இப்படி

யாரால்தான் முடியாது.

இது போன்ற படைப்பாளிகளால்

சிறந்த தொழில் நுட்பவியலாளர்களை சேர்த்துக் கொண்டு கூட

வெற்றி பெற முடியாது.

அதுவே நம்மவர் எடுக்கும் பெரிய சினிமாக்களின் தோல்விக்கு

அடிப்படைக் காரணம்.

இவர் சொல்வது அவர்களுக்கு புரியாது.

அவர்கள் சொன்னால் ஈகோ காரணமாக இவர்களாலும் ஏற்க முடியாது.

இதுவே பலரில் நான் கண்ட சறுக்கல்களாக இருக்கிறது.

கதைக்கு வருவோமே????????? :roll:

இறுதியில் பயிற்சிப்பட்டறை சாத்தியமில்லை என்றார்கள்.

நீங்கள் வந்து உதவி செய்யுங்கள் குறும்படத்தை எடுப்போம் என்றார்கள்.

பரவாயில்லை என்று எனது பணத்திலேயே சென்று உதவினேன்.

ஒளிப்பதிவு முதற்கொண்டு செய்து கொடுத்தேன்.

ஆனால்

அதை எடிட் பண்ணவோ

அல்லது அவர்களாக எடிட் பண்ணியதை பார்க்கவோ

அவற்றை எனக்கு காட்டவேயில்லை.

அதன் பின் அதை சில இடங்களில் திரையிட்டும்

இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

ஒரு மெயில் கூட...............ஊகும்...............

இதுதான் பலரது நிலை.

இப்படியான போக்குகள் மாறாத வரை

..................................... :P

:?: :P யோசித்து முடிவெடுத்து சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

அஜிவன் உங்கள் பயணம் நன்றாக அமையவும் உங்கள முயற்சிகள் மெலும் எமது இனத்திற்கு பெயரையும் புகழையும் பெற்று தர வாழ்த்துகள் கூறி கனடா அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்களையும் முடிந்தால் சந்தித்து உங்கள் அனுபவங்களையும் எங்களுடன் பகிருங்கள் ;

:P :P

அதொடை நானும் ஒரு கமறா ஒண்டு வாங்கி படமெடுத்து பாத்தன் ஒரு படமும் சரி வரேல்லை இப்ப ஒரு பாம்பு வழக்கிறன் அதாவது படம் எடக்கிதா எண்டு பாபப்பம் :lol::lol::(

Link to comment
Share on other sites

அஜிவன் அண்ணா உங்கள் ஆதங்கம் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது இன்நிலைமை எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும் என்றாலும் சிலர் செயல்வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி சிலரை ஒன்று சேர்த்து உங்களை சந்திக்க விரும்புகிறேன் உங்கள் வசதிக்கேற்ப அதையெருவிடுமுறை நாளில் போர்ண் மாநிலத்தில் ஒழுங்கு செய்வேம்.

Link to comment
Share on other sites

நன்றி சாத்திரி மற்றும் சந்தியாவுக்கு............

வந்த பின் பேசுவோம் விது........

Link to comment
Share on other sites

வணக்கம் அஐிவன் அண்ணா.

உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஜீவன், சுகமாய்ப் போயிட்டு வாருங்கள். எப்பொழுது அவுஸ்திரேலியாப்பக்கம் வருவீர்கள்?

Link to comment
Share on other sites

வணக்கம் அஜீவன், சுகமாய்ப் போயிட்டு வாருங்கள். எப்பொழுது அவுஸ்திரேலியாப்பக்கம் வருவீர்கள்?

Thanks

See You soon Kanthappu :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் அஜீவன்

தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

வணக்கம் அஐிவன் அண்ணா.

உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

Thanks.........

Yarl Iniya Nanbarkalukku

greetings.........

from

Washington DC

ajeevan

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் உங்கள் பணியில் சிறப்புறவும் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா வாழ்த்துக்கள்( நான் மோகன் விலாசம்)பாரிஸ்

Link to comment
Share on other sites

உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் உங்கள் பணியில் சிறப்புறவும் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...! :lol:

அஜீவன் அண்ணா வாழ்த்துக்கள்( நான் மோகன் விலாசம்)பாரிஸ்

Nandri Anitha & Mohan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்குப் போனபின்பு தமிழினை மறந்துவிட்டீர்களா அஜீவன். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே.

Link to comment
Share on other sites

அமெரிக்காவுக்குப் போனபின்பு தமிழினை மறந்துவிட்டீர்களா அஜீவன். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே.

ஐயோ இலலை.

இஙக தமிழில எழுத கணணி கிடைககவிலல.

இதுவே பெரிய விடயம

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவின் பயணம் - இனிதே தொடர வாழ்த்துக்கள்-!

திறமையுள்ளவர்களின் - பயணம் எல்லையற்றது-

அதற்கு - நீங்கள் - உதாரணம்! 8)

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவின் பயணம் - இனிதே தொடர வாழ்த்துக்கள்-!

திறமையுள்ளவர்களின் - பயணம் எல்லையற்றது-

அதற்கு - நீங்கள் - உதாரணம்! 8)

நன்றி வர்ணன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அஜீவன் அண்ணா நிறைய மன்னிக்கணும்

நான் மொன்றியல் ல இருக்கன் - நிறைய தூரம் -

அத்துடன் - உரிமைகுரல் நிகழ்வுக்காக்க லீவு எடுத்திருந்தன் -

அதால - மிக குறுகிய இடைவெளில உங்க சந்திப்பு பத்தி -அறிந்தததால - கலந்து கொள்ள முடியவில்லை -

திரும்ப லீவு தரமாட்டாங்கள்!

நான் உங்கள் சந்திப்பை வேண்டுமென்றே தவிர்த்ததாய் எண்ணிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புறேன்!

மத்தும்படி - நாகரிகமான - இயல்பு உள்ள உங்களோட சேர்ந்துதான் -என் கருத்தும் இருக்கும் எப்போதும் யாழ் களத்தில!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.