Jump to content

வருகிறது ஆப்பிள் மினி ஐபேட் .


Recommended Posts

வருகிறது ஆப்பிள் மினி ஐபேட் .

ஆப்பிள் நிறுவனம் அடுத்தகட்ட சந்தை அதிரடிக்குத் தயாராகிவிட்டது.ஆம் இப்போது ஆப்பிள் குறைந்த விலையில் மினி ஐபேட் களமிரக்கத் தயாராகிறது.வரும் 23ஆம் தேதி அழைப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி

உள்ள நிகழ்ச்சியில் இந்த ஐபேட் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

apple-ipad-mini-.jpg

பத்து மில்லியன் மினி ஐபேட்கல் தயாராக இருப்பதாகவும் இதை சந்தைக்கு கொண்டு வந்தால் இதுவும் ஆப்பிள் சாதனங்களின் விற்பனையில் குறிப்பிடதத்தக்க சாதனையை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உருவ அளவில் சிறியதாக இருந்தாலும் இயக்க எளிமை ,பெரிய ஐபேடில் உள்ளது போன்ற அனைத்து ஆப்ஷன்களையும் உள்ளடிக்கியதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Microsoft-Surface-Tablet-display.jpg

வரும் 26 ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ்8 சாஃப்ட்வேர் மற்றும் சர்ஃபேஸ் டேப்லட் ஆகியவற்றை வெளியிடப்போவதாக ஏற்கனேவே அறிவித்துள்ள நிலையில் ஆப்பிள் தனது அடுத்த சாதனத்தை

சிலநாட்கள் முன்கூட்டியே வெளியிடுவது எதற்காக என்பதுதான்

இப்போது எலெக்ட்ரானிக் சந்தையின் ஹாட்டேஸ்ட் டாபிக்.

நீங்கள் சர்ஃபேஸ் டேப்லட் வாங்கபோகிறீர்களா அல்லது மினி ஐபேட் வாங்கப்போகிறீர்களா?

http://www.aanthaireporter.com/?p=12557

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Quote: நீங்கள் சர்ஃபேஸ் டேப்லட் வாங்கபோகிறீர்களா அல்லது மினி ஐபேட் வாங்கப்போகிறீர்களா? "

இரண்டுமில்லை, இருக்கிறதே போதும் இன்னும் 5வருடத்திற்கு

Link to comment
Share on other sites

[size=5]இணையத்தளமொன்று ஐ பேட் மினியின் விலைப் பட்டியலொன்றையும் வெளியிட்டுள்ளது.[/size]

blogprice.jpg

http://www.virakesari.lk/article/technology.php?vid=76

Link to comment
Share on other sites

[size=6]Apple unveils costlier-than-expected iPad Mini[/size]


  • The device has a 7.9-inch screen (measured diagonally), which is smaller than the conventional iPad's 9.7-inch display and bigger than the iPhone's four-inch screen.


  • The Mini is slightly larger than the seven-inch display offered by its main competitors.

  • [size=5]iPad Mini will begin at $329 for the 16 GB Wi-Fi model[/size]

  • [size=5]A fully loaded iPad Mini with cellular service and 64 GB of memory is priced in the U.S. at $659, which puts it in a much higher price range than its immediate rivals.[/size]

  • [size=5]Apple described the device as 23 per cent thinner and 53 per cent lighter than the third-generation iPad, with faster wireless performance and up to 10 hours of battery life.[/size]

http://www.cbc.ca/news/technology/story/2012/10/23/tech-ipad-mini.html

Link to comment
Share on other sites

[size=6]வெளியான ஐபேட் மினி, ஐபேட்4!: நிகழ்வில் அனைவருக்கும் அதிர்ச்சியளித்த அப்பிள்[/size]

[size=4] [/size]

[size=4]தொழில்நுட்ப உலகின் மொத்தக் கவனமும் நேற்று அப்பிளின் பக்கமே திரும்பியிருந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]இதற்கான காரணம் நீண்டகாலமாக அப்பிள் வெளியிடப்போவதாகக் கூறப்பட்டு வந்த ஐ பேட் மினி நேற்று அறிமுகப்படுத்தப்படுமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டமையாகும்.[/size]

[size=4] [/size]

[size=4]அப்பிள் மினி! அப்பிள் மினி! என எங்கு பார்த்தாலும் அப்பிளின் சிறிய அளவிலான டெப்லட் பற்றியே பேச்சாக இருந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]ஆனால் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் வகையில் ஐபேட் மினிக்குமேலதிகமாக ஐ பேட் 4 வினையும் அப்பிள் நேற்று அறிமுகப்படுத்தியது.[/size]

[size=4] [/size]

[size=4]மேலும் புதிய மெக்புக், மெக் மினி, மெல்லிய ஐமெக் கணனி ஆகியவற்றையும் அப்பிள் குறித்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.[/size]

[size=4] [/size]

[size=4]எனினும் ஐபேட் மினி மற்றும் ஐபேட் 4 ஆகியன மட்டுமே அனைவரையும் தம்பக்கம் ஈர்த்தவை .[/size]

[size=4]பல எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.[/size]

[size=4]அப்பிளின் ஐபேட் டெப்லட் கணனிகளை விடத் தோற்றத்தில் சற்று சிறியது.[/size]

[size=4]ஐபேட் மினியானது 7.9 அங்குல திரையைக் கொண்டுள்ளது. அத்துடன் 7.2 மில்லி மீற்றர் தடிப்பமானது.[/size]

[size=4]இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது[/size]

[size=4]திரை : LED-backlit IPS LCD capacitive touchscreen, 16M colors 768 x 1024 pixels படவணு அடர்த்தி 162 ppi ஆகும்.[/size]

[size=4]நினைவகம் : 16/32/64 GB அளவுகளில் கிடைக்கின்றது மற்றும் 512 MB RAM, [/size]

[size=4]தரவு வேகம்: DC-HSDPA, 42 Mbps; HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 100 Mbps; Rev. A, up to 3.1 Mbps[/size]

[size=4]கெமரா: 5 மெகா பிக்ஸல் (2592x1944 pixels)[/size]

[size=4]இயங்குதளம்: அப்பிளின் iOS 6[/size]

[size=4]சி.பி.யூ.: Dual-core 1 GHz Cortex-A9 ( Apple A5 Chipset) [/size]

[size=4]ஜி.பி.யூ.: PowerVR SGX543MP2[/size]

[size=4]இதனை நீங்கள் ஏன் வாங்கலாம்?[/size]

[size=4]1. ஐ பேட்டினை விட அளவில் சிறியது.[/size]

[size=4]2. அப்பிளை விரும்புபவர்கள் அதேவேளை ஐபேட் விலை சற்று அதிகம் என நினைப்பவர்கள் இதன் விலை ஒப்பீட்டளவில் குறைவானதென்பதால் ( ஆரம்ப விலை $329) இதனைக் கொள்வனவு செய்யலாம்.[/size]

[size=4]3. வேகமான செயற்பாட்டுக்குகந்தது. (Dual-core 1 GHz Cortex-A9 , Apple A5 Chipset) [/size]

[size=4]4. சந்தையில் உள்ள சிறிய டெப்லட்களை விட சற்றுப் பெரிய திரை.[/size]

[size=4]இதனை வாங்குவதை ஏன் தவிர்க்கலாம்?[/size]

[size=4]1. ஐ பேட்டினை விட அளவு சிறிது என்றபோதிலும் , மின்னஞ்சல்களை டைப் செய்யவோ, மற்றைய செயற்பாடுகளுக்கோ இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டும். சிறியதென்ற போதிலும் பெரிய அளவில் மாற்றமில்லை.[/size]

[size=4]எனவே பாவனையாளர்கள் ஐபேட் 2, ஐபேட் 3 அல்லது நேற்று வெளியிடப்பட்ட ஐபேட் 4 வையே கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டலாம்.[/size]

[size=4]2. இதன் ஆரம்ப விலை $329, இது வை-பை மூலமே இயங்கும் 16 ஜிபி மொடலின் விலையாகும் ஆனால் 32 ஜி.பி. மாதிரியின் விலை 429 அமெரிக்க டொலர் என்பதுடன் 32 ஜி.பி. இன் விலை $529 ஆகும்.[/size]

[size=4]gsmarena_012.jpg[/size]

[size=4]வை-பை மற்றும் புரோட்பேன் வசதியைக் கொண்ட ஐபேட் மினியொன்றின் ஆரம்ப விலை 459$ ஆகும். வை-பை மற்றும் புரோட்பேன் 64 ஜிபி வேர்சனின் விலை 659 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [/size]

[size=4]இது சந்தையில் போட்டியாளர்களின் டெப்லட்களை விட மிக அதிகமாகும். [/size]

[size=4]3. ஐபேட் டெப்லட்கள் அதி துல்லியமான ரெட்டினா திரையைக் கொண்டுள்ள போதிலும் மினியானது அத்திரையைக் கொண்டதல்ல.[/size]

Link to comment
Share on other sites

[size=5]ஐபேட் மினி மற்றும் சந்தையிலுள்ள மற்றைய டெப்லட்களுடன் சிறிய ஒப்பீடு[/size]

[size=4]applerfcs.JPG[/size]

[size=4]ஐபேட் மினி அதாவது ஐபேட்டின் சிறியது என இதனைக் கூறலாம். சிறிய அளவிலான டெப்லட்டினை வெளியிடுவதனை அப்பிளின் மறைந்த ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் கடுமையாக எதிர்த்தார். [/size]

[size=4]ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் அப்பிள் இதனை வெளியிட்டுள்ளது. இதே நிகழ்விலேயே ஐ பேட் 4 வையும் அப்பிள் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]அப்பிள் இதுவரை மொத்தம் 100 மில்லியன் ஐபேட்களை விற்பனை செய்துள்ளதாக நேற்று அறிவித்தது. ஐபேட்டுக்கு [/size]

[size=4]ஏற்கனவே நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இதனையும் ஏன் வெளியிட்டது எனப் பார்க்கும் போது பல காரணங்கள் வெளிப்படுகின்றன.[/size]

[size=4]குறிப்பாக தற்போது சந்தையில் குறைந்த விலையில் விற்பனையாகும் கூகுள் நெக்ஸஸ், அமேசன் கைண்டல் பயர் ஆகியன அப்பிளுக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளன.[/size]

[size=4]இவை வேகமாக விற்பனையாகி வருகின்றமையானது தனது ஐபேட்டின் சந்தையை வெகுவாகப் பாதிக்குமென அப்பிள் கருதுகின்றது.[/size]

[size=4]அதனால் இவற்றை எவ்வாறாவது கட்டுப்படுத்த அப்பிளுக்கு ஓர் உற்பத்தி தேவையாக இருந்தது.[/size]

[size=4]மேலும் கூகுள் நெக்ஸஸ், அமேசன் கைண்டல் பயர் ஆகியன ஐபேட்டினை விடத் தோற்றத்தில் சிறியன. எனவே பாவனையாளர்கள் பாவிப்பதற்கு இலகுவான டெப்லட்டின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளமையும் அப்பிளுக்கு சிக்கலாக மாறியது.[/size]

[size=4]இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டே அப்பிள் ஐபேட் மினியை வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]டெப்லட் சந்தையில் தனது ஆதிக்கத்தினை அதிகரித்து ஏகபோக உரிமையாளராகத் தன்னை மாற்றிக்கொள்ளும் பொருட்டே அப்பிள் ஐ பேட் மினியை வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. [/size]

[size=4]எனினும் அப்பிள் போட்ட கணக்கு சரியானதா? ஏனெனில் ஐபேட் மினியின் விலையை நாம் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. போட்டியாளர்களின் உற்பத்திகள் இதைவிட விலை குறைவாக உள்ளன.[/size]

[size=4]தோற்றமும் போட்டியாளர்களை விடப் பெரியதாகவே உள்ளது. எனவே ஐபேட் மினி சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.[/size]

[size=5] ஐபேட் 4 ( ipad 4)[/size]

[size=4]ipad4thgen.jpg[/size]

[size=4]யாரும் எதிர்பார்க்காத, எந்த ஊடகமும் எதிர்வுகூறாத அப்பிள் சாதனமொன்று அண்மையில் வெளியாகியது என்றால் அது இதுதான். ஏனெனில் ஐபேட் மினிக்கான நிகழ்வில் ஐபேட் 4 வும் அறிமுகப்படுத்தப்பட்டது.[/size]

[size=4]அப்பிளின் நிகழ்வுக்குச் சென்றிருந்த எந்தவொரு ஊடகமும் இவ் ஆனந்த அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. எந்தவொரு ஊடகமும் இது தொடர்பில் எதிர்வுகூறவும் இல்லை. [/size]

[size=4]அப்பிள் தயாரிப்புகள் வெளியாகும் முன்னரே எவ்வாறாவது அது தொடர்பில் பொதுவாக ஊடகங்களே செய்திகள், புகைப்படங்களை வெளியிட்டு அப்பிளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.[/size]

[size=4]ஆனால் இம்முறை மாறாக எதிர்பார்க்காத ஒன்றை வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்து விட்டது.[/size]

[size=4]அதுதான் அப்பிள் ஸ்டைல் என அனைவரையும் புருவத்தினை உயர்த்த வைத்து விட்டது.[/size]

[size=4] ஐபேட் 4 ஆனது 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. மேலும் ஐபேட் 3 இனை விட இருமடங்கு வேகமான செயற்பாட்டினை வழங்கும் A6X சிப்பினை கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.[/size]

[size=4]இதன் தொழில்நுட்ப அம்சங்கள் [/size]

[size=4]Dual-core 1 GHz Cortex-A9 CPU[/size]

[size=4]A6X processor - doubles the performance and graphics[/size]

[size=4]Next generation ISP (image stabilization processor)[/size]

[size=4]10hour battery life[/size]

[size=4]FaceTime HD camera - 720p[/size]

[size=4]LTE expanded coverage[/size]

[size=4]WiFi 802.11n - 2x faster[/size]

[size=4]5 MP, 2592 x 1944 pixels, autofocus கெமரா ஆகியனவற்றையும் கொண்டுள்ளது.[/size]

[size=4]அப்பிள் விசிறிகளுக்கு ஐபேட் 4 வெளியிடப்பட்டமையானது மகிழ்ச்சிகரமானதென்ற போதிலும் இதனால் கவலையடைந்த ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர்.[/size]

[size=4]அவர்கள் வேறு யாரும் அல்லர். ஐபேட் 3 பாவனையாளர்களே .காரணம் ஐபேட் 3 ஆனது இவ்வருட ஆரம்பத்திலேயே வெளியிடப்பட்டது.[/size]

[size=4]இந்நிலையில் குறுகிய காலப்பகுதிக்குள் புதிய மாதிரியொன்று வெளியிடப்பட்டுள்ளமையானது ஐபேட் 3 யினைப் பழைய மொடலாக மாற்றியுள்ளது.[/size]

[size=4] iPad-3-vs-newsipad-4.jpg[/size]

[size=4]மேலும் ஐபேட் 4 இன் விலையும் ஐபேட் 3 இன் விலைக்கு ஒத்ததாகவே உள்ளது. ஆனாலும் இருமடங்கு வேகமான செயற்பாட்டை அளிக்கவல்லது என அப்பிள் தெரிவிக்கின்றது. [/size]

[size=4]ஐபேட் 4 வின் வருகையுடன் சந்தையில் நுகர்வோருக்கான தெரிவு அதிகமாகியுள்ளது. இதனுடன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டி அதிகமாகியுள்ளது.[/size]

[size=4]இதனால் டெப்லட்களின் விலை குறைவதுடன் தரமும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. இதனால் நன்மை அடையப் போவது நுகர்வோரே.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=85

Link to comment
Share on other sites

அதுசரி உங்கள் அனுபவத்தில் புதிதாக வாங்க விரும்புவோர்க்கு உங்கள் சிபாரிசு என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.