Jump to content

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்


Recommended Posts

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலே சொன்னேன்தானே மலை எனக்கு தேடிய படங்கள் அகப்படவில்லை. தேடும் பொது வந்த படங்களப் போட்டுவிடுகிறேன். நீங்கள் கூறியதுபோல் பெண் அரைக்கும் படம் எகிப்ப்த்தினதாக இருக்கலாம். நான் தேடிய பகுதியில் வந்த சுமேரியப் பெண் அரைப்பது போல் உள்ள படங்கள் யாழில் போட விடுது இல்லை.சில படங்கள் அவர்களே கொப்பி பண்ணத் தடை போட்டுள்ளனர். இது கருங்கல்லால் ஆனதுபோல் இருக்கிறது.சுமேரியர் இதுபோன்ற மாட்டின் உருவத்தை வெள்ளீயம் செப்பு போன்றவற்றால் செய்து வைத்திருக்கின்றனர். படங்கள் தேடுவதிலேயே என் நாட்கள் விரயமாகின்றன. உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தொடருங்கள் அக்கா உங்கள் பணியை .......நேற்று இந்த நாட்டு பத்திரிகையில் இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் நிலத்துக்கடியில் ஒரு இந்து ஆலயத்தை கண்டுபிடித்துள்ளார்கள் என்றும்,அது கி .பி .13 தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டுகளில் இருந்ததாகவும் கூறப்பட்டது ..

உண்மையில் எம் வரலாற்றில் எத்தனையோ,எத்தனையோ ஆழங்கள்,உண்மைகள் உண்டு ..உங்களைப்போன்றவர்களின் பயனுள்ள இந்த திரிகளின் மூலம் நாம் பலவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் ............ஒப்பிட்டுப்பார்க்கக்கூடியதாயும் உள்ளது ...நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூறான் நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்க்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்க்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. ஆனபடியால் மேசொப்போத்தேமியாவிலிருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது.

Link to comment
Share on other sites

மெசு

தேவையேற்படாத நிலையில் சுமேரியர் தவிர்த்த படங்களைப் போடுவது, உங்கள் ஆக்கத்தின் தரத்தைக் குறைக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

யாராவது உறவுகள் படங்கள் இணைப்பதற்கு உதவி செய்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு எழுத நேரம் கிடைக்காததாலேயே பார்ப்பவரைச் உற்ச்சாகப் படுத்தும் என நினைத்துப் படத்தைப் போட்டேன். நீங்கள் சொல்வது சரிதான். இனிமேல் கவனமாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

முதற்சங்கத் தமிழ் தலை சுத்திது சுமே இதுதான் நிகண்டு அல்லது கிரந்தமோ :o ??

அந்த 3000 ஆண்டுகளில் மற்றைய இனங்கள் கடவுளை வழிபடவில்லையா?

இதென்ன கேள்வி ????? நான் அறிஞ்சவரையிலை மனுசனுக்கு பகுத்தறிவு வந்த காலத்தில இருந்து இயற்கையை தெய்வமாய் கும்பிட்டிருக்கிறான் . பேந்து உருவங்களை கும்பிட்டிருக்கிறான் ( மாயன்களும் உள்ளடக்கம் ) . எல்லாஞ்சரி தேற்றத்தை வடிவாய் நிறவ வேணும் . சொதப்பக் கூடது சொல்லிப்போட்டன் :lol: .

Link to comment
Share on other sites

[size=3]

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிர

ுக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே.முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி

மன்னார்குடி ரகு

[/size][size=3]

__._,_.___[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நிரூபா நீங்கள்.

உங்களைப் போல் எத்தனை பேர் இல்லாததை நம்பிக்கொண்டிருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, உங்கள் ஆய்வை, மிகவும் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன்!

'ராமாயணம்' போன்ற இதிகாசங்கள், வாய் வழியாகவும், செவி வழியாகவும் வந்தவை!

இதில் வருகின்ற 'சரஸ்வதி நதி' அல்லது சரயு நதி, ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது எனவும், அது இன்றைய ஆப்கானிஸ்தான் ஊடாக, ஓடியுள்ளது எனவும், விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படங்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் மகாபாரதத்தில் கூறப்படும், காந்தார தேசம், இன்னும் தனது பெயரை இழக்காமல், கண்டகார் என அடையாளம் காணப் பட்டுள்ளது!

ரிக் வேதகாலம், இந்தக் காலப் பகுதியுடன் பொருந்துகின்றது!

அத்துடன் கடலின் கீழ் அமைந்துள்ள ஒரு 'பெரிய நிலப்பரப்பு' இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதைப் பலர் உறுதிப் படுதியுள்ளதுடன், படங்களும் எடுக்கப் பட்டுள்ளன.

உங்கள் பார்வைக்காக, அவுஸ்திரலியப் பூர்வீக குடிகள், பற்றிய ஒரு ஆய்வை, இணைக்கின்றேன்!

[size=3]

Indigenous Australians are the original inhabitants of the Australian continent and nearby islands.[citation needed] The Aboriginal Indigenous Australians migrated from Africa around 50,000 years ago.[3] The Torres Strait Islanders are indigenous to the Torres StraitIslands, which are at the northern-most tip of Queensland near Papua New Guinea. The term "Aboriginal" has traditionally been applied to indigenous inhabitants of mainland Australia, Tasmania, and some of the other adjacent islands.[/size][size=3]

The earliest definite human remains found to date are that of Mungo Man, which have been dated at about 40,000 years old, but the time of arrival of the ancestors of Indigenous Australians is a matter of debate among researchers, with estimates dating back as far as 125,000 years ago.[4] There is great diversity among different Indigenous communities and societies in Australia, each with its own unique mixture of cultures, customs and languages. In present day Australia these groups are further divided into local communities.[5][/size]

[size=3]

இதில், அவர்களின், மண்டையோடுகள், ஆகக் குறைந்தது, நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு, முற்பட்டவை எனக் கூறப் படுகின்றது! அவர்கள் குகைகளில் வாழ்ந்ததால், இந்த மண்டையோடுகள், காற்று, நீர் போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப் படாதது, எமது அதிஸ்டம் என்று தான் கூற வேண்டும்! இவர்கள் குகையோவியங்களும், இருபதினாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவை.[/size][size=3]

ஏன் சிந்து வெளியில் இருந்து, நாகரீகம் சுமேரியர்களுக்குச் சென்றிருக்கக் கூடாது, என்று நீங்கள் உறுதியாகக் கூறுகின்றீர்கள்?[/size][size=3]

பெண்மையும், தாய்மையும், உலகில் எல்லா நாகரீகங்களிலும் போற்றப்பட்டுப், பூஜிக்கப் பட்டிருக்கின்றன![/size][size=3]

இலங்கையில், கூறப் படுவது போல, விஜயன் வட இந்தியாவில் இருந்து வரும்வரைக்கும், தென்னினிந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள், இடையில் தொடுபாலம் இருந்தும், இலங்கைக்கு வரவில்லை என்று கூறுவது போல உள்ளது.[/size][size=3]

மேலே நிருபா, கூறிய கருத்துக்கு, நீங்கள் 'பாவம்' பார்ப்பதிலும் பார்க்க, அவரது கருத்தையும் உள் வாங்கிச் செல்வதே, ஆரோக்கியமான ஒரு விவாதத்துக்கு வழி சமைக்கும், என்பது எனது கருத்தாகும்![/size][size=3]

மேலுள்ள இணைப்பு, விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப் பட்டது. அதற்குரிய ஆதாரங்களும், அப்பதிவில் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள கருத்துடன், தொடர்புள்ள 'முன்கோ மனிதன்' பற்றிய இணைப்பு பின் வருமாறு:

Lake Mungo remains

[size=3]

From Wikipedia, the free encyclopedia

(Redirected from Mungo Man)

Mungo_Man.jpg

magnify-clip.pngMungo Man

The Lake Mungo remains are three prominent sets of fossils: Lake Mungo 1 (also called Mungo Lady, LM1, and ANU-618), Lake Mungo 3 (also called Mungo Man, Lake Mungo III, and LM3), and Lake Mungo 2 (LM2). Lake Mungo is in New South Wales,Australia, specifically the World Heritage listed Willandra Lakes Region.[1][2]

LM1 was discovered in 1969 and is one of the world's oldest known cremations.[1][3]LM3, discovered in 1974, was an early human inhabitant of the continent of Australia, who is believed to have lived between 68,000 and 40,000 years ago, during thePleistocene epoch. The remains are the oldest anatomically modern human remains found in Australia to date. His exact age is a matter of ongoing dispute.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] புங்கையூரான் எனது கட்டுரையில் பகுதி நான்கில் சிறு தவறு நேர்ந்துவிட்டது.அதைத் திருத்தியுள்ளேன். நீங்கள் சொல்வதுகூடச் சரியாக இருக்கலாம். நிரூபாவின் கூற்றைத்தான் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதில் வந்த எரிச்சல்தான். மற்றப்படி அவரைப் புண்படுத்தும் நோக்கமல்ல.

மனித இனம் தோன்றி கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. முதல் பனிக்காலம் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்ததாகக் கூறுகின்றனர். கடைசிப் பனிக்காலம் கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரத்தில் முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட காலம் மாந்த இனம் முற்றாக அழிந்துவிடவில்லை. நாடோடிகளாக அலைந்தே திரிந்திருக்கிறது. அவர்கள் குகைகளில் வாழ்ந்திருக்கல்லாம். ஆனால் அவர்கள் ஒரு ஐம்பது அல்லது நூறுபேர் அல்லது அதிலும் குறைந்த மனிதக் குழுக்களாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவர் போன்று கடல் உணவையோ அன்றி வேட்டையில் அகப்படும் விலங்குகளையோ உண்டு அவர்கள் வாழ்ந்திருக்கலாம். முதலில் இடம்பெயர்ந்த அவுஸ்றேலியாவில் வாழும் அபோரோஜிநீஸ் ஐம்பதாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் நாகரிகமடையவில்லை. அதுபோலத்தான் முங்கோ மனிதனில் ஆண்டு சரியாக இருக்கலாம்.

வேத காலம் கிறித்துவுக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் தான் எனக் கொண்டால் உங்கள் கணக்குப் பிளைக்கிறதே. கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளின் முன் இலங்கைத்தீவு இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கிறது. ஒருநாள் வந்த நில நடுக்கத்திலோ அல்லது கடற்க் கோளிலோ அது நடக்கவில்லை.பல கடற்க்கோள்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகவே பிரிந்ததென ஆய்வுகள் கூறுகின்றன. கடைசி ஐம்பதாயிரம் வருடங்களில் எந்த ஒரு கண்டமோ பெரிய நிலப்பரப்போ கடலுள் போனதாக சான்றுகள் இல்லை. அதன்பின் வந்த கடல்க்கோள்களில் மிகச் சிறிய தீவுகளோ அல்லது நிலப்பரப்புகளோ தான் கடலுள் போயுள்ளது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேத காலம் கிறித்துவுக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் தான் எனக் கொண்டால் உங்கள் கணக்குப் பிளைக்கிறதே. கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளின் முன் இலங்கைத்தீவு இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கிறது. ஒருநாள் வந்த நில நடுக்கத்திலோ அல்லது கடற்க் கோளிலோ அது நடக்கவில்லை.பல கடற்க்கோள்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகவே பிரிந்ததென ஆய்வுகள் கூறுகின்றன. கடைசி ஐம்பதாயிரம் வருடங்களில் எந்த ஒரு கண்டமோ பெரிய நிலப்பரப்போ கடலுள் போனதாக சான்றுகள் இல்லை. அதன்பின் வந்த கடல்க்கோள்களில் மிகச் சிறிய தீவுகளோ அல்லது நிலப்பரப்புகளோ தான் கடலுள் போயுள்ளது.

நன்றிகள், மொசோ!

தொடர்ந்து எழுதுங்கள்! நீங்கள் மேலதிக தகவல்களை இணைக்கும் போது, எமக்கு இடையேயுள்ள இடைவெளிகள், குறைந்து போகும் என நம்புகின்றேன்!

வேதகாலம், உண்மையில் கிறிஸ்துவுக்கு முன்பு, ஆயிரம் வருடங்கள் என்பது ஒரு அனுமானம் மட்டுமே!

பின்வருவதையும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்!

Vedic Timeline – Older Than We Thought

http://www.omved.com/vedicpedia/vedic-timeline-%E2%80%93-older-than-we-thought

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தரைப்பகுதி, ஏழாயிரம் ஆண்டுக்கு முன்பு மறைந்து போனது, என்று எடுத்துக் கொண்டாலும், விஜயனின் படகு, வட இந்தியாவில் இருந்து வரும் வரைக்கும், தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்கள், படகு பற்றிய அறிவு இல்லாமல் இருந்திருப்பார்கள் என்பதை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள், ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஆபிரிக்காவில் இருந்து, அவுஸ்திரேலியா வரை போயிருக்க முடியுமெனில், இடையில் உள்ள இலங்கையையும், இந்தியாவையும் கட்டாயம் கடந்து போயிருக்கத் தானே வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இருங்கள் புங்கையூரான். கட்டுரை முடிந்ததும் பகுதி பகுதியாக அலசலாம் நன்றி.

Link to comment
Share on other sites

சுமே இந்த ஆய்வு இப்படிச் சொல்கிறது . சிலவேளைகளில் உங்கள் தேடலுக்கு அனுசரணையாக இருக்கலாம் என நினைக்கின்றேன் .

[size=5]ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம் [/size]

சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்" என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?

நிச்சயமாக, 16 ம் நூற்றாண்டில், காலனிய கால வரலாற்றுடன் தான் ஆரம்பமாகியது. அதற்கு முன்னர், எந்தவொரு இனத்தையும் வெள்ளை என்றோ அல்லது கருப்பு என்றோ பார்க்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று கருதுவதும் தவறானது. வெள்ளையின மேலாதிக்க கொள்கைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அது போன்ற கருத்தியல்கள் பரப்பப் படுகின்றன. தமிழகத் திராவிட இயக்கத்தினரும், தமிழ் தேசியவாதிகளும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளமை ஆச்சரியத்திற்குரியது. மானிடவியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வெள்ளையின அறிஞர்களாலேயே தொகுக்கப் பட்டு வந்தன. ஒரு வெள்ளையன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று, நாங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம்.

இந்திய உப கண்டத்திற்கு மட்டுமே சிறப்பம்சமான சாதியமைப்பு, இந்து மதம் போன்றன, வெள்ளையினத்தவர் வாழும் பிற நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால், வர்ணாச்சிரம சாதியமைப்பும், இந்து மதமும் வெள்ளையின ஆரியர்களினால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று வாதிடுவது தவறானது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள், தாம் தங்கி வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சமுதாய அமைப்பை கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான தெய்வங்களை வழிபட்டனர். இதற்கு முந்திய அத்தியாயங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட தமிழரின் (திராவிடரின்) கலாச்சார விழுமியங்களை பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில், ஆப்பிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதி மீது கவனத்தை செலுத்துவோம்.

ஆபிரிக்க கண்டத்திற்கும், இந்திய உப கண்டத்திற்கும் நடுவில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? அரேபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் உங்கள் மனக்கண்ணில் தோன்றும். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது உண்மையானால், மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் சில கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அது குறித்து ஆராய்வதே, இனி இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருக்கும். அரேபியருக்கும், தமிழருக்கும் இன அடிப்படையில் ஒற்றுமைகள் உள்ளன. அரேபிய தீபகற்பத்தின் நாகரீகம் காலத்தால் பிந்தியது என்பதால், அதற்கு முந்திய மத்திய கிழக்கு நாகரீகத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரீகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்த சுமேரிய சாம்ராஜ்யம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அனேகமாக, காலத்தால் பிந்திய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில், கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதே நேரம், காலத்தால் முந்திய சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் (ஆப்பிரிக்க-திராவிடர்கள்) பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றது. இதற்கு ஆதாரமாக, அந்த மக்கள் பேசும் ஒரே மாதிரியான மொழிகளைக் குறிப்பிடலாம். ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். அதே மாதிரி, சோமாலி, அம்ஹாரி, திக்ரிஞா (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளும் செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். (Semitic Languages, http://en.wikipedia.org/wiki/Semitic_languages)

நாங்கள் இப்பொழுது, உலகில் நாகரிக சமூகங்கள் தோன்றிய காலகட்டம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டம், மூவாயிரம் அல்லது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தியது. (விவிலிய நூல் அதனை மனித இனம் தோன்றிய காலகட்டம் என்று கூறுகின்றது.) குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, மனித இனம், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது. மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். அந்த பரிணாம மாற்றம் நடைபெற்ற காலப்பகுதியில், மிருகங்களைப் போன்று வேட்டையாடியும், கனிகளைப் பறித்துண்டும் வாழ்ந்த மனித இனம், பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னரே நாகரிக சமுதாயங்களை உருவாக்கி இருப்பார்கள். ஆகவே, பிற்காலத்தில் "நாகரீகமடைந்த சமுதாயங்கள்" பெரும் படை திரட்டிப் போரிட்டு, ஒன்றை மற்றது அழித்த காலத்தில் மனித நேயம் காணாமல் போய் விட்டது. அதற்கு முன்னர், "காட்டுமிராண்டிகளாக" வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடிக் கொன்றார்கள். கறுப்பினத்தவராயினும், வெள்ளயினத்தவராயினும் ஒருவரை மற்றவர் அழிக்கும் யுத்தங்கள், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. "இனப்பற்று, இன ஒற்றுமை, இன ஐக்கியம்..." இன்னோரன்ன வார்த்தைகள், உலகில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கும் அது போன்ற கருத்தியல்கள் ஆக்கிரமிப்புப் போர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப் படுகின்றன.

சுமேரியர் நாகரீகம் பற்றிய தகவல்களும், சுமேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தே கிடைக்கின்றன. அதாவது, சுமேரியர் போன்ற இன மக்கள் இன்றைய ஈராக்கில் மட்டுமல்லாது, வட ஆப்பிரிக்கா, அரேபியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக, அரேபிய தீபகற்பம் "மூதாதையரின் பூமி" என்பதான தகவல்கள், சுமேரியரின் புராணக் கதைகளிலேயே எழுதப் பட்டுள்ளன. அதற்குமப்பால், இன்றைய சோமாலியாவின் வட முனைப் பகுதியிலும் சுமேரியரின் மூதாதையர் வாழ்ந்திருக்கலாம். சுமேரியரின் நாகரீகம் தோன்றிய எரிடு நகர மக்கள், வேறொரு நாட்டில் இருந்து கப்பலில் வந்ததாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று நிலவியது. எரிடு என்றால் கடற்கரை என்று அர்த்தம். அனேகமாக, அங்கிருந்து சோமாலியா வரை கப்பற் போக்குவரத்து இடம்பெற்றிருக்கலாம். சுமேரிய கோயில்களில், தெய்வச் சிலைகளுக்கு சாம்பிராணி புகை காட்டி வழிபடப் பட்டது. இந்த சாம்பிராணி மரம், வட சோமாலியா, யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. (உலகில் வேறெங்கும் சாம்பிராணி மரம் முளைப்பதில்லை.)இன்றைக்கும் இந்திய உபகண்டத்தை சேர்ந்த இந்துக்கள், சாம்பிராணி தூபம் காட்டி வழிபடுவது வழக்கம். ஆகவே, இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சோமாலியா, யேமனில் விளைந்த சாம்பிராணி இந்தியா வரை ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தது. பிற்காலத்தில் தோன்றிய யூத மதம், சாம்பிராணி காட்டி வழிபடுவதை தடை செய்தது.

ஏன் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்? என்று பிற மதத்தினர் நையாண்டி செய்யும் பொழுது, இந்து மத நம்பிக்கையாளர்கள் பதில் கூறத் தெரியாமல் முழிப்பார்கள். "இவை ஒரே கடவுளின் அவதாரங்கள்" என்று,ஆன்மீக பண்டிதர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத உண்மை, இந்த தெய்வங்கள் முன்பு வெவ்வேறு இனக்குழுக்களால் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடப் பட்டு வந்தன. நகர்மயமாகிய சிறு தேசங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனியான தெய்வங்களை கொண்டிருந்தன. சுமேரியாவிலும் முன்பு அப்படித் தான் இருந்துள்ளது. எரிடு, ஊர், உருக், நிப்பூர், லகாஷ், கிஷ் போன்ற பல சிறிய தேசங்களை, பிற்காலத்தில் தோன்றிய சுமேரிய சாம்ராஜ்யம் ஒன்று சேர்த்து, ஒரே நாடாக்கியது. அதனால், அந்தந்த பிராந்திய தெய்வங்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். இவை எல்லாம், ஒரே கடவுளின் பல பெயர்கள் என்று கூறப்பட்டன. சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான ஆக்கிரமிப்புப் போர்கள், தெய்வங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கின. பிற்காலத்தில் பலம் பொருந்திய வல்லரசுகாக தோன்றிய, அக்காடிய (வட ஈராக்),பாபிலோனிய (தென் ஈராக்), அசிரிய (இன்றைய சிரியா) சாம்ராஜ்யங்கள், சுமேரியரின் தெய்வங்களை உள்வாங்கிக் கொண்டன. அவற்றிற்கு தமது மொழியில் வேறு பெயர்களை சூட்டின.

ஒரே கடவுளை வேறு பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு, சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள் மட்டும் காரணமல்ல. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வேறொரு இடத்தில் சென்று குடியேறினால், அங்கே புதிய மொழிகள் உருவாகின்றன. தாயகத்துடனான தொடர்பு அறுதல், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களினால், மனிதர்களின் மொழி, பண்பாடு என்பன மாறுபடலாம். ஆனால், அவர்களின் மத நம்பிக்கைகள் பெருமளவு மாறுபடுவதில்லை. காலனிய காலத்தில், தென்னாபிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் கூலிகளாக சென்ற இந்தியர்களை அதற்கு உதாரணமாக காட்டலாம்.

பாபிலோனியர்கள் இஷ்தார் என்று அழைத்த பெண் தெய்வத்தின் சுமேரியப் பெயர் "இனானா". (http://en.wikipedia.org/wiki/Inanna)சுமேரியரின் பல பெண் தெய்வங்கள், இனானாவின் அவதாராமாக கருதப்பட்டன. அதாவது, இந்து மதத்தில் ஆதிபராசக்தி போன்று, ஒரு தாய் தெய்வம். அதன் பூர்வீகப் பெயர் "நின் அனா", அதன் அர்த்தம் தமிழில் "அகிலாண்டேஸ்வரி!" நம்மூர் பராசக்தி போன்று, உயிர்களின் பிறப்புக்கும், பயிர்களின் செழிப்புக்கும், இல்லறத்திற்கும் நன்மை வேண்டி வழிபடப் பட வேண்டிய தெய்வம் இனானா. சுமேரியர்கள் அந்த தெய்வத்தை, "அம்மா இனானா" என்று அழைத்தார்கள். சுமேரிய மொழியில் அம்மா என்றாலும், தமிழ் மொழியில் அம்மா தான்! ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், இனானா என்ற பூமி மாதாவை, "மரியாள்" என்று பெயர் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் தாயாக்கி வழிபட வைத்தது.

அது மட்டுமல்ல, "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்ற பிரபலமான கிறிஸ்தவ மும்மூர்த்திகளின் தத்துவமும் சுமேரியர்களிடம் இருந்து கடன்வாங்கியது தான். பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமானது. இந்து மத தத்துவத்தில் கூறப்படுவதைப் போல, இந்த மூன்று கடவுளரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றனர். மீண்டும் இன்னொரு தமிழ்ச் சொல், சுமேரியாவில் முக்கிய இடம் பிடித்திருந்தது. "அணுவில் இருந்து அனைத்தும் தோன்றியது" அந்த அணு யார்? சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அணு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள். அதாவது, இந்து மதத்தில் பிரம்மாவின் தொழிலைச் செய்பவர். அடுத்ததாக, எயா அல்லது என்கி என்ற காக்கும் கடவுள். இந்து மதத்தில் விஷ்ணு போன்றவர். விஷ்ணுவின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. அதே போன்று, எயா ஆதி காலத்தில் கடலில் மீனாக அவதரித்ததாக சுமேரியரின் புராணக் கதை ஒன்றுண்டு. மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில். இவர் சிவனோடு, அல்லது உருத்திரனோடு ஒப்பிடத் தக்கவர்.

இந்து மதத்தில், பிற ஆண் தெய்வங்கள் எல்லாம், ஒன்றில் விஷ்ணுவின், அல்லது சிவனின் அவதாரங்களாக கருதப்படுகின்றன. சுமேரிய மதத்திலும், எயா, என்லில் ஆகிய கடவுளரின் மனித வடிவிலான அவதாரங்கள் பற்றிய பல்வேறு கதைகள் உலாவின. தமூஸ் என்ற தெய்வத்தின் கதை, சுமேரியர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. வேறெந்த தெய்வத்திற்கும் அந்தளவு மகிமை கிட்டவில்லை. சுமேரிய மொழியில் தமுசி, பாபிலோனிய மொழியில் தமுஸ், கிரேக்க மொழியில் அடோனிஸ். தமிழ் மொழியில் சிவன்? எந்த நாட்டில் எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும், அந்தப் புராணக் கதை மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் ஈரான் வரையில் வாழ்ந்த மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வத்தின் கதை, அத்தனை இலகுவாக மறக்கப் பட்டிருக்காது. அது இன்றைக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் நிலைத்து நிற்கலாம். அதிசயப் படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதைக்கும், தமுஸ் தெய்வத்தின் புராணக் கதைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இயேசு பிறந்த பாலஸ்தீனம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. பாபிலோனியாவில் நடந்ததை எல்லாம் விவிலிய நூலில் விலாவாரியாக எழுதத் தெரிந்த ஆண்டவருக்கு, மிகவும் பிரபலமான தமுஸ் தெய்வத்தின் கதை தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

http://kalaiy.blogspot.nl/2012/10/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் இது ஏற்க்கனவே சாத்திரி அனுப்பிய ஒரு தளத்தில் இருந்தது. நானும் வாசித்தேன். இதை எழுதியவர் என்னிலும் விட சுமேரியர் பற்றிய அதிக அறிவுடன் இருக்கிறார். ஆனால் பல குழப்பமும் சில விடயங்களில் தெளிவின்மையும் அவருக்கு இருக்கின்றன. மிக விரைவில் கட்டுரையை முடித்துவிடுவேன்.அதன் பின் விரிவாகக் கலந்துரையாடல் செய்வோம். இப்ப என்றால் எனக்கே குழம்பிவிடும்.வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

இன்னும் இல்லையா? :D

Link to comment
Share on other sites

ஏங்க சுமேரியர் அக்கா ஒரு பதிவு ஒன்னு பாத்தேங்க . அதை ஜாயின் பண்றேங்க . இது உங்க ஆய்வுக்கு ஹெல்ப் பண்ணுமா அக்கா :) :) ??

[size=5]ஓமனில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழ் வணிகனின் பெயர் பொறித்த பானை ஓடு[/size]

nakkeeran.jpg

அரபு நாடான ஓமனில் நக்கீரன் என்ற பெருவணிகனின் பெயர் பொறிக்கப் பட்ட முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பானை ஓடொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஓமனிலுள்ள Khor Rori எனும் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பண்டைய பானை ஓட்டில் தான் இந்த வணிகனின் பெயர் பதியப்பட்டுள்ளது.

பண்டைய தமிழான பிராஹ்மி மற்றும் தமிழ் வரி வடிவத்தில் 'ண-ந்-தை கீ-ர-ன்' என இவ் வணிகனின் பெயர் பதியப் பட்டுள்ளது. சுமார் 1900 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பானை ஓடு பண்டைய வர்த்தக நகரமான 'சும்ஹுரம்' இல் கண்டுபிடிக்கப் பட்டதாக் கூறப்படுகின்றது. இப் பானை ஓட்டின் மூலம் புராதன இந்திய நகரங்களுக்கான கடல் வழி வணிகம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து முக்கியமான விவரங்கள் தெரிய வரலாம் என்பதால் இது மிக முக்கியமான தொல் பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.

இந்தப் பானை ஓடு செப்டம்பரில் 'அலெக்ஸியா பவன்' எனப்படும் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்பொருளியலாளரால் இந்தியாவின் 'கோச்சி' நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு பட்டறையில் (workshop) காட்சிப் படுத்தப்பட்டது. இப்பட்டறையில் தலைப்பு 'கேரளாவின் பட்டனத்தை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் கடல் வர்த்தகம் தொல்பொருளியல் மற்றும் தொழிநுட்பம்' என்பதாகும்.

இந்தப் பட்டறையில் தொல்பொருளியலாளர்கள் உட்பட இந்தியாவின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பற்றினர்.

http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/9348-2012-10-29-20-43-26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு சேர்ந்து மற்றவர்களும் ஆராய்கிறீர்கள் என எண்ணும்போது மகிழ்வாக இருக்கிறது சொப்னா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி எழுத்துக்கள் பற்றிய தொடர்பைத் தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

தற்போது ஒரு ஆங்கில நிகழ்ச்சியில்பார்த்தேன் . தென்னமெரிக்காவில் Puma Punku எனும் இடத்தில் பழைய அதி தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளன. அங்கே சுமேரியாவில் காணப்பட்ட எழுத்துருக்களை கண்டெடுத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ப்ளூ bird நன்றி உங்கள் ஆர்வத்துக்கு. எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இதற்கும் பிறகு வருவேன் பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.