Jump to content

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்


Recommended Posts

சீமான் தன்னை அரை மணி நேரம் ஐநா சபையில் பேச விட்டால் தமிழீழம் அடைந்து விடுவேன் என்பது உச்சபட்ச நகைச்சுவை. இதை சிரிக்காமல் அவரால் பேச முடிகிறது. இவரை நம்புவதற்கும் இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது.

அத்துமீறு, அடங்க மறு என்று முழங்கிய சீமானை ஜெயலலிதா ஒரு நடிகையை வைத்து அடக்கிக் காட்டினார். இன்று வரை கூடாங்குளம் பிரச்சனையில் (இதில் ஈழத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்) போராடவோ, தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சனையை தட்டிக் கேட்கவோ அவருக்கு துணிச்சல் வரவில்லை.

ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை விமர்சித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply

இப்ப அந்தப் பகுதியை நியானி வெட்டியாச்சு.. :rolleyes:

மீண்டும் வெட்டா ................................இனி என்ன செய்யலாம் ... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

100 வருடம் கழித்து தமிழ் ஈழம் பிரிப்பத்தாக எழுதுவதை நம்புவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவர்கள் ஐ.நாவில் 1/2 மணித்தியால பேச்சால் தமிழ் ஈழம் பிரிக்க முடியும் என்று பேசுவதை நம்பமாட்டடார்கள் என்று எழுதுவதை நம்புவார்கள் இருக்கிறார்கள் என்று நம்பி எழுதுவது நகைசுவையின் அது உச்சத்தின் உச்சம்.

அரச அடி வருடிகள் என்னை 100 வருடம் கழித்து தமிழ் ஈழம் பிரிக்க வரும் படி அழக்கிறார்கள்.

நான் மகிந்தாவை சட்டத்தின் முன் நிறுத்த உதவ வரத்தயாரா என்றால் பதில் இல்லாமல் ஒழிக்கிறார்கள்.

கேட்கும் கேள்விகளுக்கு மேடையில் நின்று மகிந்தாவை எதிர்த்து பதில் சொல்ல தயாராக இருக்கும் இருக்கும் சந்திரன் போன்ற சீமானை குலைப்பதால் எதிர்க்க சில குப்பை மேட்டு நாய்களை மகிந்த அனுப்பி வைத்திருக்கிறார்.

போருக்கு போன போராளிகளை வஞ்சமாக கொன்றதைவிட, 146,000 அப்பாவி குழந்தை குஞ்சுகள், வயது போனதுகள், வயித்திலை வாயிலை உள்ள தாயாளை கதறக்கதற கொன்ற காதகன் மகிந்தாவை உலகமே காறித்துப்பும் போது ஒருவார்த்தை எதிர்த்து எழுத முடியாமல் தமது சொத்து பத்துக்காக அடிமையாகி போய்விட்ட குருக்கள் மார் சீமானால் 1/2 மணித்தியாலத்தில் வைகுண்டம் போகும் பாதை காட்ட முடியாது என்று நகைப்பது நகைப்பிக்கிடமானது.

அவர்களுக்கு தங்களை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள் என்பதை கூட தெரிந்துகொள்ள கூச்சமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஸ்கொற்லாந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்பு தற்பொழுதுதான், தனிநாடு பற்றிய வாக்கெடுப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

100 ஆண்டுகள் என்று நான் சொன்ன கணக்கை இதை வைத்து ஆராய வேண்டும். எங்களின் விடுதலை வேட்கை பற்றி இன்னும் நாம் நூறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். ஐநாவிலும் பேச வேண்டும்..

இதில் சீமான் அரை மணித்தியாலம் பேசப் போகிறாராம். ஐநா சபையில் தன்னால் வாழ்க்கையில் பேச முடியாது என்று தெரிந்து கொண்டே இப்படி சொல்கிறார்.

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து கொள்ளுங்கள் சபேசன்

ஐ நா தனது கேள்விகளுக்கு பதில் தரமுடியாது என்ற ரீதியில் சொல்லியிருக்கலாம்.

முட்டையில் மயிர் புடுங்க எம்மை விட்டால் உலக சம்பியன்கள் எவருமில்லை......... :(

Link to comment
Share on other sites

ஸ்கொற்லாந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்பு தற்பொழுதுதான், தனிநாடு பற்றிய வாக்கெடுப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

100 ஆண்டுகள் என்று நான் சொன்ன கணக்கை இதை வைத்து ஆராய வேண்டும். எங்களின் விடுதலை வேட்கை பற்றி இன்னும் நாம் நூறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். ஐநாவிலும் பேச வேண்டும்..

இதில் சீமான் அரை மணித்தியாலம் பேசப் போகிறாராம். ஐநா சபையில் தன்னால் வாழ்க்கையில் பேச முடியாது என்று தெரிந்து கொண்டே இப்படி சொல்கிறார்.

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

:D :D :icon_idea::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஸ்கொற்லாந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்பு தற்பொழுதுதான், தனிநாடு பற்றிய வாக்கெடுப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

100 ஆண்டுகள் என்று நான் சொன்ன கணக்கை இதை வைத்து ஆராய வேண்டும். எங்களின் விடுதலை வேட்கை பற்றி இன்னும் நாம் நூறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். ஐநாவிலும் பேச வேண்டும்..

இதில் சீமான் அரை மணித்தியாலம் பேசப் போகிறாராம். ஐநா சபையில் தன்னால் வாழ்க்கையில் பேச முடியாது என்று தெரிந்து கொண்டே இப்படி சொல்கிறார்.

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

இந்த 100 வருட கதையை கூறிய நாட்களில் ஸ்கொட்லாண்ட் தனிநாடு பற்றிய வாக்களிப்பு பற்றிய அறிவித்தலை வெளிவிட்டிருக்கவில்லை. இன்றைய அறிவிப்பை அன்று எதிர்கூறியதாக நடிக்கும் அப்பட்டமன கதைகளை கூறுவோரோரை நம்பலாமா அல்லது சீமானை நம்பலாமா என்பதை யாழை வாசிப்போர் தெரிந்து கொள்ளட்டடும்.

ஸ்கொடலாண்ட் உரிமையை இழந்த விதத்தையும் அவர்களுக்கு இன்று அங்கிருக்கும் பிரச்சனையும் தமிழர் பிரச்சனைகளுடன் ஒப்ப்பிட்டு அதானால் நாம் கட்டாயம் இன்னும் 100 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூற முடியுமா? இல்லை அவர்களுக்கு தனிநாடு தன்னும் அவசியாமா என்பதை முன் வைக்க முடியுமா? தனி நாடு கேட்கும் கூபெக் 1750 களில் பிரிடிஸ்சாரால் கைபற்ற பட்டது. அவர்கள் தனி நாடு காண வேண்டுமா?, காண வேண்டுமாயின் அது எப்போது சாத்தியம் என்ற காலக்கணிப்பை இதே "100 வருடங்கள்" ஆக கணக்கு பார்த்த முறைகளை வைத்து கணக்கு காட்ட முடியுமா?

முடிந்தால் 47ல் பாகிஸ்தானிடம் அடிமையான வங்காளம் 72 ல் சுதந்திரம் அடைந்த பாதையை ஏன் நாம் பின் பற்ற கூடாது என்பதை விளங்க படுத்தவும். இதையும் ஸ்கொட்லாண்டுடனும் ஒப்பிட்டால் இன்னும் நல்லது.

அதன் பின்னர் சீமானல் ஐ.நா வில் ஏன் பேச முடியாது என்று சொல்வதை பற்றி ஆராவோம்.

சீமானின் பேச்சில் நகைப்புக்கு இடமாக இருந்ததாக முன்னர் கூறப்பட்ட விடையம் 1/2 மணித்தியாலப்பேச்சில் தனி நாடு காண முடியாதென்தே. நான் அதை விவாதிப்பம் என்றிருக்க, அதிலிருந்து சறுக்கி இப்போது சீமானுக்கு வாழ்நாளில் அரைமணித்தியாலம் கிடையாது என்ற கருத்தாக மாறியிருக்கிறது.தொன்றன் பின் ஒன்றாக ஏன் சீமானுக்கு அரை மணித்தியாலம் கிடையாது என்பதையும் நாம் கட்டயம் விவாதிக்க வேண்டும்.

தமிழ் அரசுக்கட்சியை ஆரம்பித்த போது பருத்திதுறையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் மேடையில் ஏறியோர் நநாதனின் வேட்டியை உரிந்து கூட்டத்தை முற்றாக்க கலைத்துவிட்டனர். தேர்தலில் கட்சித் தலைவர் SJV படு தோல்வி அடைந்தார்.

விவேகானந்தருக்கு 5 நிமிடம் சிக்காகோவில் பேச கிடைத்ததினால் இன்று அகிலம் எங்கும் ராமகிருஸ்ண சபை, விவேகாந்தா சபை, இந்து இளைஞ்ஞர் மன்றங்கள் திறக்கப்பட வழி வகுத்தது என்பது தெரியுமா?

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

சீமான் தனக்கு 1/2 மணிதியாலம் தரும்படி கேட்கிறார். நீங்களும் அதை செய்ய முடியுமாயின் ஏன் நாம் அதை ஒழித்து வைப்பான். இந்த நேரமே யாரில் ஆரம்பித்து பிரசாரத்தை தொடக்கி வைப்போம். அப்பொதுதான் உங்களால் அது நடக்கத் தக்கதா இல்லையா என்பதை பார்த்துவிடமுடியும்.

நான் ஆதரவு த்ருகிறேன். ஐ.நாவில் பேச அரைமணித்தியால நேரத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் நூறு வருடம் தொடந்து தனி நாடு பற்றி கதைக வேண்டும். உடனே தனி நாடுபற்றிய பேச்சுகளை யாழில் எழுத தொடங்குங்கள்.

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் பல ஆண்டுகள் போர் புரிந்து, பின்பு மேலும் பல ஆண்டுகள் அரசியல்ரீதியான வழிகளில் போராடி, நிறைய சமரசங்கள் செய்து, இணைந்து வாழ்ந்து, ராஜதந்திர வழிகளைக் கையாண்டு, தம்மை ஆள்பவர்களுடன் தனிநாடு வாக்கெடுப்புக்கான ஒப்பந்தத்தை போடுகின்ற தேசிய இனங்கள் பற்றித்தான் நாம் இனிப் பாhக்க வேண்டும். எமக்கும் இதைத் தவிர வேறு வழி இருக்கப் போவது இல்லை.

இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் 100 ஆண்டுகள் என்று சொன்னேன். ஸ்கொற்லாந்து பற்றிய எதிர்வு கூறல் அல்ல அது. ஆயினும் இன்றைக்கு அது ஒரு சிறந்த உதாரணம்.

போரின் மூலம் அதாவது பலத்தின் மூலம் பெறுவது என்றால் எம்மால் இன்னும் குறுகிய காலத்தில் பெற முடியும். வங்காள மக்கள் போரை நடத்திக் கொண்டு இந்தியாவின் நேரடியான படை பலத்தையும் பெற்றதால் விடுதலை பெற்றார்கள். எமக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை.

இது இருக்க, சீமானால் ஐநாவில் பேசவும் முடியாது. பேசினால் தமிழீழம் கிடைக்கவும் மாட்டாது. ஆதரவு தருவது பற்றி சிந்திக்கின்ற நாடுகளும் சீமானின் பேச்சைக் கேட்டு அதில் இருந்து பின்வாங்குகின்ற வாய்ப்புக்களே அதிகம். ஆகவே என்னுடைய வேண்டுகோள் வாய்ப்புக் கிடைத்தாலும் சீமான் தயவு செய்து ஐநாவில் பேச வேண்டாம் என்பதே.

சீமான் தமிழில் உள்ள சில புலவர் கதைகளை படித்திருக்கலாம். அதிலே சில கேள்விகள் மூலம் அரசர்களை திருத்திய கதைகள் நிறைய உண்டு. ஐநா சபையும் அப்படியான ஒன்று என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் பல ஆண்டுகள் போர் புரிந்து, பின்பு மேலும் பல ஆண்டுகள் அரசியல்ரீதியான வழிகளில் போராடி, நிறைய சமரசங்கள் செய்து, இணைந்து வாழ்ந்து, ராஜதந்திர வழிகளைக் கையாண்டு, தம்மை ஆள்பவர்களுடன் தனிநாடு வாக்கெடுப்புக்கான ஒப்பந்தத்தை போடுகின்ற தேசிய இனங்கள் பற்றித்தான் நாம் இனிப் பாhக்க வேண்டும். எமக்கும் இதைத் தவிர வேறு வழி இருக்கப் போவது இல்லை.

இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் 100 ஆண்டுகள் என்று சொன்னேன். ஸ்கொற்லாந்து பற்றிய எதிர்வு கூறல் அல்ல அது. ஆயினும் இன்றைக்கு அது ஒரு சிறந்த உதாரணம்.

சுயமாக ஒரு வழியை கண்டு பிடிக்க முடியாமல் பிழையான கல்லெறிதல்களில் மட்டும் நேரத்தை கடத்துவோர், தாம் சொல்லவருவதை நாம் இது வரையில் செய்து பார்க்க வில்லையா எனபதை எடுத்து ஆராயத்தாரில்லை. ஆனால் தமது ஆலோசனை நாடகங்கள் வங்குறோத்து அடைவதால், ஒரு நாட்டை எடுத்து நமது பிரச்சனையுடன் ஒப்பிடமுடியாமல், பொதுவில் நாடுகளை பற்றி கதைக்க வேண்டிய படிகளுக்கு இறங்கி விட்டார்கள்.

ஸ்கொடலாண்டை பற்றி தெரியாதோர் அதை உதாரணம் எடுத்து நடிக்க முயல்வது நகைப்பிற்கிடம். இரத்தம் சிந்தாமல் ஜனநாயகம் அடைந்த நாடு, ஜநாயகத்தின் தந்தை நாடு, பிருத்தானியா. அதனிடம் இருந்து ஸ்கொடலான்ட் தனி நாடு கேட்கிறது. மேலும் அங்கே சுய நிர்ணயம் இருக்கிறது.

இது எதிர்வு கூறல் இல்லையாயின் எப்படி வங்காளம் கவனத்திலிருந்து தப்பியது. அதை ஒப்பிட்டு, முரண்படுத்தி எதையும் எழுத முயலாதது ஏன்? இதுவரையில் நாம் ஏன் 300 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்தவில்லை. அப்போது எதற்கு ஸ்கொட்லண்ட். ஊண்மையில் நடந்தது, எதோ பஞ்சதந்திர கதை சொல்வது போல் எங்குமே பொருந்தாத 100 வருட கதையை கொண்டு வந்து, பின்னர் அதிலிருந்து விடுவிக்க நேற்று பத்திரிகைகளில் வெளிவந்த பொருத்தமில்லாத ஸ்கொட்லாண்ட் கதையை கொண்டு வந்தமைதான். இதைதான் சொல்வது ஒரு பொய்யை நிரூபிக்க நூறு பொய் சொல்வதென்பது, அது எதிர்வு கூறல் இல்லையாயின் இதுதான் மிக்கப்பொருத்தமான விளக்கம்.

போர்குற்றம் ஐ.நா வால் சாட்டப்பட்ட நாடு இலங்கை. இந்த கேவலக்கெட்ட நாடு தான் போராடமல் இருக்க, பிருத்தானிய மனித முறைகளை மதித்து தனக்கு சுதந்திரம் தந்தது என்பதை மறந்துவிட்டது. சுதந்திரம் கேட்டவர்களை அடியோடு நசுக்கி, அதன் பின்னரும் சுதந்திர குரல் பல ஆண்டுகள் எழாமல் பார்த்துக்கொள்ள இராணுவதை தமிழ் இடங்களில் பலப்படுத்தி புலனாய்வாளர்களையும் தமிழருக்குள் செலுத்தியிருக்கிறது இலங்கை. விபரங்கள் தெரியாதோரை சுதந்திர உணர்வை அடக்கவும் எழுத வைத்திருக்கிறது.

போரின் மூலம் அதாவது பலத்தின் மூலம் பெறுவது என்றால் எம்மால் இன்னும் குறுகிய காலத்தில் பெற முடியும். வங்காள மக்கள் போரை நடத்திக் கொண்டு இந்தியாவின் நேரடியான படை பலத்தையும் பெற்றதால் விடுதலை பெற்றார்கள். எமக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை.

நிச்சயமாக வங்காள வாய்ப்பும் நமக்கும் இருந்தது. இந்திராகாந்தியை சுட்டவர்கள். சீக்குகள். நமக்கு புதிய வாய்புகள் பல தோன்றி இருக்கின்றன. அதை மட்டம் தட்டி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை அரசுக்கு அதிக அளவில் இருப்பதை யாழில் வரும் எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன.

இது இருக்க, சீமானால் ஐநாவில் பேசவும் முடியாது. பேசினால் தமிழீழம் கிடைக்கவும் மாட்டாது. ஆதரவு தருவது பற்றி சிந்திக்கின்ற நாடுகளும் சீமானின் பேச்சைக் கேட்டு அதில் இருந்து பின்வாங்குகின்ற வாய்ப்புக்களே அதிகம். ஆகவே என்னுடைய வேண்டுகோள் வாய்ப்புக் கிடைத்தாலும் சீமான் தயவு செய்து ஐநாவில் பேச வேண்டாம் என்பதே.

சீமான் நிச்சயமாக ஐ.நா போக முயற்சிகள் செய்கிறார். அங்கே போய் பேசியே தீருவார். இதெல்லாம் 100 வருடத்தில் தன்னும் தமிழீம் கிடைக்க வழி வகுக்க போகிற்தென்ற பீதி எழுத்தில் காணப்படுகி்து. இதனால் இப்போது சீமான் சந்தர்ப்பம் கிடைத்தாலும் பேசக்கூடாது என்ற மூன்றாம் நிலைக்கு சறுக்கி வந்து விட்டார்கள். நாம் சீமான் பற்றிய முதல் இரு நிலைகளை தன்னும் விவாதிக்க ஆரம்பம் எடுக்க மறுக்கிறார்கள். இருந்தாலும் நாம் அதைதான் ஏன் அவர் பேசகூடாது என்பதையும் விவாதிக்க வேண்டிய தலைப்புகளில் சேர்க்காது தவறவிட முடியாது. இதே மாற்றுக்கருத்து கூட்டம், வெளிநாடுகள், கூட்டமைப்பை புலிகளாக கருத்துவதால், கூட்டமைப்பு அமெரிக்காவின் ஜெனீவா பிரேரணக்கு அங்கு சென்றால் நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று வாதிட்டவர்கள்.

அதே தொனி, அதே குரல் அதே சொல், அதே வஞ்சக நெஞ்சம். இன்று சீமான் ஐநாவில் விவாதிக்க கூடாது என்கிறார்கள்.

கருணாநிதியின் புது அரசியால் தமிழருக்கு விடிவு வரப் போகுதென்றவர்கள், ஈழதேசம் கருணாநிதியை தாக்காவிட்டால் ஒரு நாள் ஊடகசேவை நடத்த முடியாதென்றவர்கள், சீமானை தாக்காமல் இன்று அரசிடமிருந்து ஒரு ஆதாயமும் பெறமுடியாத நிலையில் தவிக்கிறார்கள். இதில் நகைப்பின் உச்சகட்டம், சீமானால் விழுதப்பட்ட கருணாநிதி தான் எழும்புவதற்காக தமிழ் ஈழ பிரேரணையை டெசொவில் கொண்டு வந்து நிறைவேற்றி அதையும் ஐ.நா விக்குகுத்தான் அனுப்பிவைத்திருப்பதை எதிர்க்க மறந்துவிட்டார்கள் என்பதாகும். எதிர்க்க மறந்தது மட்டுமல்ல கருணாநிதி, தமிழ் ஈழம் வேண்டும் என்று ஐ.நாவுக்கு பிரதிநிதியை அனுப்புவதை தாம் வெளிப்படையாக ஆதரிப்பதில் இருந்தும் நழுவிட்டார்கள்.

சீமான் தமிழில் உள்ள சில புலவர் கதைகளை படித்திருக்கலாம். அதிலே சில கேள்விகள் மூலம் அரசர்களை திருத்திய கதைகள் நிறைய உண்டு. ஐநா சபையும் அப்படியான ஒன்று என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது.

ரணில் மகிந்தாவுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைக்க முயன்றார். அதற்கு மகிந்தாவின் கருணையை பெற ஐ.நா சென்று இலங்கை மீதான நிபுணர் அறிக்கை கைவிடபடவேணும் என்று கேட்டார். "பான்-கி-மூன் சொன்னபதில், "ஐ.நா.நிபுணர் அறிக்கை ஐ.நாவில் எங்கும் காற்றில் மறையத்தக்கதென்று நினைக்காதீர்கள்" என்பதாகும். நாம் அல்ல ஐ.நாவில் பாட்டி வடை சுட்ட கதை மட்டும்தான் எழுதி படிக்கிறார்கள் என்று தப்பு கணக்கு போடுவது. உண்மையில் அந்த தப்பு கணக்கு இன்னமும் போட்டுகொண்டிருப்பது அதை சொல்லி ஏமாற்றலாம் என்று நினைத்து வெறும் வாய் சப்பிக் கொண்டிருப்பவர்களே தாம். இவரகள்தாம் தாங்கள யார் என்று உணராமல் போதிக்கிறார்கள்.

டெசொ தீர்மானத்தை ஐ.நாவுக்கு கருணாநிதி அனுப்பி வைப்பதில் என்ன நினக்கிறரோ அதையேதான் சீமானும் நினைப்பார் என்பதில் ஐயமில்லை. சீமான் தான் அரை மணித்தியாலமாவது பேசினால்த்தான் தனி தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நினைக்கிரார். கருணாநிதி அதுவும் தேவை இல்லை என்று நினைத்து டெசொ தீர்மானதை அங்கு அனுப்பி வைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்..

இலங்கையில் முஸ்லீம்கள் பலமாக இருப்பதை கண்டு கள்ள மனத்துடன் முஸ்லீம்களுக்காக வாதாடுவோர், அதே கள்ள மனத்துடன் சீமானுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் அந்த விழுக்காட்டை வைத்து கள்ள கணக்கு பார்த்துவிட்டு சீமான் மேலே வரமுடியாது என்று திரும்ப திரும்ப எழுதுவது இலங்கையில் பழகிய கடைகெட்ட இ்னத்துவேசம். ஆனால் சீமான் சாதி மத பேதமின்றி ஈழத்தமிழரிகளிடம் அல்ல தமிழ் நாட்டு தமிழர்களிடமும் மிக பெரிய ஆதரவு பெறுவார். இதையேதான் பெரியார், அண்ணா தமிழ் நாட்டில் படிப்பித்தார்கள். இலங்கையின் வழியில் இனங்களை பிரித்து அதை வைத்து துரோக அரசியல் செய்வோரின் முக மூடிகள் கனநாட்கள் நிலைக்கப் போவதில்லை. இவர்கள் சீமானால் மேலே வரமுடியாது என்று தப்பு கணக்கு போடும் திசை, அரசியலில் பலகாலம் நிலைக்காத திசை

Link to comment
Share on other sites

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை.

அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு மக்களை ஏதாவது ஒன்றை புறக்கணிக்கும்படி புலிகள் கேட்டது இல்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் ஈழ மக்களை அப்படி கேட்பதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

எமக்கு ஆதரவுதான் தேவை. வழிகாட்டிகளை நாம் தமிழ்நாட்டில் தேடவில்லை. அவர்கள் எங்கள் மக்களுக்குள் இருந்து வருவார்கள்.

சீமான்! உங்கள் எல்லையோடு நின்று கொள்ளுங்கள். எங்களை விமர்சிப்பதையும், இவர்கள் குண்டுவீச்சில் சாக வேண்டும் என்று சபிப்பதையும், அதைப் புறக்கணி இதைப் புறக்கணி என்று ஆலோசனைகள் தருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இது எல்லோருக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

சொல்பவர் சொன்னால் கேட்பவருக்கு மதியென்ன? யாருக்கு யார் சொல்வதுதென்பதில் ஒரு விவஸ்தை இல்லையா? ஏற்கனவே, கடந்த காலத்தில், யாழில் பிழையான எதிர்வு கூறல்களை எழுதியதாகத்தான் உறவுகள் குறிப்பிடுகிறார்கள். நாம் எமது அனுபவத்தில் இருந்து படித்திருக்க கூடாதா?

கருணாநிதியின் டெசோ பிரேரணை ஐ.நா போவதை நாமல்ல ஆதரிக்காமல் நழுவி ஓடியது.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சீமான் குழப்பிகள் மேலே போகவிடாமல் உடைத்துகொண்டிருக்கிரார். முதல் தர குழப்பி கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை. அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

இது தமீழீழ அரசியல் அல்ல. போராட்டம்.அவரை தமீழபோராட்டதில் பங்க்கு பற்ற வேண்டாம் என்று சொல்ல தமிழரால் தெரியப்பட்ட பிரதி நிதிகளுக்கும் அந்த உரிமை இல்லை.

சிங்கள அரசு விரும்புவதை மட்டும் செய்ய சீமான் யாரும் சிங்கள அரசு வாங்கி வைத்திருக்கும் அடிமை பொருள் அல்ல.

அவருக்கு தமிழ் நாடு அரசியல் மீது

1. பொதுவில் தமிழர் மீது அக்கறை கொண்டிருந்ததால், தமிழ்நாடு மிக பெரிய தமிழர் வாழும் நாடு என்பதாலும்

2. போரில் தமிழ் நாடு பலவகைகளில் சம்பந்த பட்டிருந்ததாலும்

தலைவருக்கு தமிழ் நாட்டு அரசியலில் தேவை இருந்தது.

ஆனால் மிகுதியை இந்த நேரம் நான் விவாதிக்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

நானும் விவாதிக்க விரும்பவில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும். ஆகக் குறைந்தது தமிழ்நாட்டில் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து உலகின் கவனத்தை திருப்பும் வேலைக்காவது பயன்படுவார். ஆகவே நானும் அமைதியாகின்றேன்.

Link to comment
Share on other sites

புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை. அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

இது தமீழீழ அரசியல் அல்ல. போராட்டம்.அவரை தமீழபோராட்டதில் பங்க்கு பற்ற வேண்டாம் என்று சொல்ல தமிழரால் தெரியப்பட்ட பிரதி நிதிகளுக்கும் அந்த உரிமை இல்லை.

சிங்கள அரசு விரும்புவதை மட்டும் செய்ய சீமான் யாரும் சிங்கள அரசு வாங்கி வைத்திருக்கும் அடிமை பொருள் அல்ல.

அவருக்கு தமிழ் நாடு அரசியல் மீது

1. பொதுவில் தமிழர் மீது அக்கறை கொண்டிருந்ததால், தமிழ்நாடு மிக பெரிய தமிழர் வாழும் நாடு என்பதாலும்

2. போரில் தமிழ் நாடு பலவகைகளில் சம்பந்த பட்டிருந்ததாலும்

தலைவருக்கு தமிழ் நாட்டு அரசியலில் தேவை இருந்தது.

ஆனால் மிகுதியை இந்த நேரம் நான் விவாதிக்க விரும்பவில்லை.

நான் மிகுதியை விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லி இருப்பது தலைவரை பற்றியது. பதில் சொல்ல இருக்காத ஒருவரிடம் கேள்வி கேட்பது போன்ற ஒரு செயல், ஒருவர் தனது தனிப்பட்ட அபிப்பிராயதை வைத்து தலைவர் தமிழ்நாட்டு அரசியலில் அக்கறை காட்டமலிருந்தார் என்பது. ஆகையால் நான் அதை தொடர்ந்து விவாதிக்க வில்லை என்று எழுதியிருந்தேன்.

தமிழ்நாட்டு மக்களை ஏதாவது ஒன்றை புறக்கணிக்கும்படி புலிகள் கேட்டது இல்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் ஈழ மக்களை அப்படி கேட்பதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

எமக்கு ஆதரவுதான் தேவை. வழிகாட்டிகளை நாம் தமிழ்நாட்டில் தேடவில்லை. அவர்கள் எங்கள் மக்களுக்குள் இருந்து வருவார்கள்

இலங்கை சிங்களவருடன் ஒட்டவேண்டும் என்று கூறும் இந்த பிரிவினை வாதிகளுக்கு இது கருணாநிதி வேண்டுமென்றே டெசொவைகூட்டும் போது நினவுக்கு வரவில்லை. இப்போது இந்த அளவுக்கு பிரித்து பார்த்துக்கதைக்க முடிகிறது.

தமிழ் நாட்டு மக்களிடம் தலைவர் பல உதவிகள் கேட்டிருந்தார். அவை பல கடிதங்கள் மூலமும் நடை பெற்றிருக்கிறது. பலர் வன்னிக்கு வந்த போதும் நடை பெற்றிருக்கிறது. MGR, வை.கோ, நெடுமாறன், சீமான்... போன்றவர்களில் தலைவர் நிச்சயமாக உதவிகளுக்கு தங்கியிருந்தார். தமிழ் நாட்டில் புறக்கணி இயக்கங்கள் போகும் போது அதை வரவேற்று தமிழ் பத்திரிகைகை எழுதுவது அதை கேட்பதற்கு சரி. கருணாநிதிகாலத்தில் கறுணாநிதி தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு காட்டும் ஆதரவுகளை அடக்கிய போது புலம் பெயர் நாடுகளிலிலும் ஈழத்திலிருந்து எதிர்ப்புக் குரகள் தமிழ் நாடு போய் சேர்ந்ததால் தான் கருணாநிதி வீட்டுக்கு அனுப்பட்டார்.

இதை விட சில விசித்திரமான வகையில் கூட தமிழ் நாட்டார் உதவி வருகிறார்கள். உ+ம் மருத்துவர் ராமதாசுக்கு கிடைத்த ஐ.நா. பிரேரணைக்கு கிடத்த அனுமதியை ஈழத்தமிழருக்கு கொடுத்ததால் அவர்கள் ஐ.நா பிரேரணையில் தமக்கு விரும்பிய அறிஞ்ஞர்களை அனுப்பினார்கள்.

சீமான்! உங்கள் எல்லையோடு நின்று கொள்ளுங்கள். எங்களை விமர்சிப்பதையும், இவர்கள் குண்டுவீச்சில் சாக வேண்டும் என்று சபிப்பதையும், அதைப் புறக்கணி இதைப் புறக்கணி என்று ஆலோசனைகள் தருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

மேலே உள்ளது மாதிரி குடம் குடம் சத்தி எடுத்த வாயால் எப்படி அதே நேரம் கீழே உள்ளது மாதிரி வயிறு முட்ட சாப்பிட முடிகிறது? இதுவெல்லாம்தான் இவர்கள் எழுதும் அரசியலோ?

ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அறிந்தோ அறியாமலோ இந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.

வைகோ, கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களுடன் போட்டி அரசியல் செய்கிறார். தமிழ் தேசியத்தில் நம்பிக்கை மிக்க பழ.நெடுமாறனும், திராவிடக் கொள்கையில் நம்பிக்கை மிக்க வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களும், பொதுவுடமை பேசக் கூடிய பல தோழர்களும் ஒன்றாய் இணைந்து ஈழத் தமிழர்களுக்காய் போராடுகின்ற போது, இவர் தனிப் பாதை அமைக்கிறார். பிரிவினைகளை வளர்க்கிறார்.

இன்றைக்கு இளையராஜா நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாமல் நடைமுறையில் இல்லாத மாவீரர் மாதம் போன்ற பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பிரிவினைகளை செய்கிறார்.

இவருடைய அமைப்புக்குள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் கடுமையாக இருப்பதாக நான் திடமாக நம்புகிறேன். குறுகிய காலத்தில் நிறைய தடுமாற்றங்களை நான் இவரிடம் பார்க்கிறறேன்.

எப்படி சீமானையும் உள்ள விட்டு தேள்வடிவில் தாக்க போறாங்களோ? :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எப்படி சீமானையும் உள்ள விட்டு தேள்வடிவில் தாக்க போறாங்களோ? :lol: :lol: :lol:

உந்த கட்டுரை வாசித்து கனவு கண்ட ஆக்களில் நீங்களும் ஒராளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தன்னை அரை மணி நேரம் ஐநா சபையில் பேச விட்டால் தமிழீழம் அடைந்து விடுவேன் என்பது உச்சபட்ச நகைச்சுவை. இதை சிரிக்காமல் அவரால் பேச முடிகிறது. இவரை நம்புவதற்கும் இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது.

அத்துமீறு, அடங்க மறு என்று முழங்கிய சீமானை ஜெயலலிதா ஒரு நடிகையை வைத்து அடக்கிக் காட்டினார். இன்று வரை கூடாங்குளம் பிரச்சனையில் (இதில் ஈழத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்) போராடவோ, தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சனையை தட்டிக் கேட்கவோ அவருக்கு துணிச்சல் வரவில்லை.

ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை விமர்சித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

கருணாநிதி இவ்வளவு செய்ய பின்னரும், கருணாநிதியும் அவர் ஆதரவாளர்களால் தான் தமிழீழம் பெற்றுத் தர முடியும் என வெட்கமே இல்லாமல் எழுதின உங்களுக்கு சீமானைப் பற்றிக் கதைக்கத் தகுதியில்லை. சீமான் குறித்து இந்த விடயத்தில் கதைப்பது வேறு. ஆனால் அவரினை மனசில் வஞ்சம் வைத்து எழுதுவது வேறு... என்றைக்கு பெரியார் என்ற நச்சினைக் கைவிடுகின்றேன் என்று சொன்ன பிற்பாடு உங்களுக்குச் சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தெரியாத விடயமல்ல.

Link to comment
Share on other sites

தூயவன்,

கருணாநிதியால் தமிழீழம் பெற்றுத்தர முடியும் என்று நான் எப்பொழுதும் சொன்னது இல்லை. தமிழீழம் ஒரு நீண்ட போராட்டம். ஒவ்வொரு நேரத்திலும் எமக்கு ஒவ்வொருவர் தேவைப்படுவார்கள்.தமிழ்நாட்டின் ஆட்சியல் இருப்பவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் அதிகமாக எமக்கு தேவைப்படுவார்கள். ஆகவே அவர்களுடன் உறவுகளை நாம் துண்டிக்க முடியாது என்பதையே என்றைக்கும் வலியுறுத்தி வருகிறேன்

வினித்,

தேள்வடிவத் தாக்குதல் பற்றிய கட்டுரையை நான் எழுதியிருக்கவில்லை. என்னுடனான விவாதங்களில் அதை ஏன் சிலர் சித்தம் மறந்த நிலையில் பயன்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை.

Link to comment
Share on other sites

வணக்கம்

சீமான் புரியாத புதிர் புரிந்தவர்களுக்கு எல்லாம் வெளிச்சம்.

காலம் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

நானும் விவாதிக்க விரும்பவில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும். ஆகக் குறைந்தது தமிழ்நாட்டில் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து உலகின் கவனத்தை திருப்பும் வேலைக்காவது பயன்படுவார். ஆகவே நானும் அமைதியாகின்றேன்.

நாங்கள் வலுவிழந்து நிற்கும் போதினில், எமக்கு சிறு துரும்பும் அவசியம். அவ்வகையில் சீமான், எமக்கு உதவ வருகையில் தேவையில்லாமல் அவரை சீண்டுவது நாகரிகமல்ல.

அவர் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் நிகழ்ச்சியைப் பற்றி சொன்னால் ( ஏன், எதற்கு சொல்கிறார் என்று தேவையில்லை) கேட்பதும் கேளாததும் புலம் பெயர் தமிழர்களின் விருப்பம். அவர் எமக்கு தலைவரல்ல. ஆதரவாளர். அதை விடுத்து, அவரை விமர்சிப்பது வேண்டாத வேலை எனபது என் கருத்து.

Link to comment
Share on other sites

என்றைக்கு பெரியார் என்ற நச்சினைக் கைவிடுகின்றேன் என்று சொன்ன பிற்பாடு உங்களுக்குச் சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தெரியாத விடயமல்ல.

ஓ.. இப்ப விளங்குது..! :D

Link to comment
Share on other sites

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை.

அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

எங்கோ ஒரு திரியில் கருணாநிதியை பற்றி குறைவாய் எழுதியதற்கு .........சிங்கம்போல் உறுமி உறுமி அவருக்கு ஆதரவாய் எழுதினீர்கள்

அந்த திரியை தேடிப்பார்த்தேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் ..................இப்போ என்னவென்றால் கருணாநிதியை நம்பவேண்டாம் என்று எமக்கு நீங்கள்

கூறியதை எழுதுகிறீர்கள்////////////// உண்மையில் நீங்கள் யார் ,என்ன நோக்கத்திற்காய் இப்படி மாறி மாறி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை ...

எழுத விரும்பினால் பேனையும்,கொப்பியும் எடுத்து ஆசை தீரும்வரை எழுதுங்கள் ................அல்லது ஒரே கொள்கையுடன் ,ஒரே கருத்துடன் எழுத முற்படுங்கள்

...........................இப்படி பிரட்டி எழுதுவது ஆரோக்கியமானதல்ல ............நன்றி

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்,

நான் கலைஞரை நம்ப வேண்டாம் என்று சொன்னது2009இற்கு முன்பு. அவருடைய உண்மையான முகம் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். கலைஞர் என்றைக்குமே விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களின் தலைமையில் அமையக்கூடிய தமிழீழத்தையோ உளமார ஆதரிக்க மாட்டார் என்பதை பலமுறை கூறியிருக்கிறோம்.

அன்றைக்கு அவரை பலர் நம்பிய பொழுது எச்சரிக்க வேண்டிய கடமை எமக்கு இருந்தது.

ஆனால் 2009 இன் பின்பு கலைஞர் போன்றவர்களையும் எமக்கு சாதகமான முறையில் நாம் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். இதற்கு அர்த்தம் கலைஞர் நல்லவர் என்பது அல்ல. ராஜதந்திர வழிகளில் இதுவும் ஒன்று. அவ்வளவே.

எமக்கு எல்லோரும் வேண்டும். ஆனால் ஆதரவு என்னும் பெயரில் எமக்கு வழிகாட்ட முற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது.

மற்றும் தேள்வடிவத் தாக்குதல் பற்றிய மேலதிக விளக்கம் தந்த சாத்திரிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சபேசன்.. அடிக்கடி நாம் நாம்.. என்கிறீங்களே.. யாரை நீங்கள் பிரதிநிதிக்கிறீர்கள்? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.