Jump to content

பேருந்து சாரதி பெண் பயணிக்கு விட்ட குத்து (எச்சரிக்கை: காட்சி இணைப்பு, மோசமான வார்த்தை பிரயோகம்)


Recommended Posts

அமெரிக்காவில் பேருந்து சாரதி ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. பெண் பயணி சாரதி அருகில்சென்று தாக்கியதும் சீற்றமடைந்த சாரதி தனது இருக்கையை விட்டு எழுந்துவந்து பயணி முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினார்.

"நீ ஒரு ஆண் போல் நடந்துகொண்டால் அதற்கேற்ற வகையில் என்னால் பதில்தரமுடியும்" என்று பெண் பயணியை தாக்கிய பின் "அவள் ஒரு பெண்" என வேறு பயணி சத்தமிட்டபோது பதிலளித்தார். பெண் பயணி மீது கையினால் முகத்தில் ஓங்கி குத்தியபின் அவரது உடமைகளை பேருந்துக்கு வெளியே எறிந்து, அவரையும் பேருந்திலிருந்து இழுத்து வெளியேற்றுவதற்கு சாரதி முயன்றுள்ளார்.

மேற்படி சம்பவத்தின் பின் சாரதி சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில் செய்யும் இடங்களில் உணர்ச்சிவசப்பட்டால் இப்படியான ஆபத்துக்களில் நீங்களும் சிக்கலாம். எனவே, அவதானமாய் இருங்கள்.

http://youtu.be/OIp36uI1lYk

uppercut.gif

இதுபற்றிய முழுமையான செய்தியை அறிவதற்கு: http://www.cbc.ca/ne...king-video.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி... இந்த மொங்கு, மொங்குறானே... :o .

உண்மைதான்... போக்குவரத்து, வேலை இடங்களில், சில பெண்கள் தங்களில், தப்பை வைத்துக் கொண்டு....

சரியெண்டு சாதிக்க வெளிக்கிடும் போது.... வருகின்ற ஆத்திரத்தை கட்டுப்படுத்த, பலத்த பிரயத்தனம் எடுக்க வேண்டி இருக்கும் :huh: .

அந்தச் சாரதிக்கு, நெடுக்ஸின் "பிளட் குறூப்பாக" இருக்குமோ... :D:lol:

Link to comment
Share on other sites

பயணி மோசமாக நடந்துகொண்டாலும் சாரதி உணர்ச்சிவசப்பட்டு இருக்ககூடாது. கனடா நாடு என்றால் பயணிகள் பிரச்சனை ஏற்படுத்தினால் உடனடியாகவே பேருந்தை நிறுத்திவிட்டு போக்குவரத்து காவல்துறையை அழைக்கலாம். போக்குவரத்து காவல்துறை பயணியை கவனித்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

அடப்பாவி... இந்த மொங்கு, மொங்குறானே... :o .

உண்மைதான்... போக்குவரத்து, வேலை இடங்களில், சில பெண்கள் தங்களில், தப்பை வைத்துக் கொண்டு....

சரியெண்டு சாதிக்க வெளிக்கிடும் போது.... வருகின்ற ஆத்திரத்தை கட்டுப்படுத்த, பலத்த பிரயத்தனம் எடுக்க வேண்டி இருக்கும் :huh: .

அந்தச் சாரதிக்கு, நெடுக்ஸின் "பிளட் குறூப்பாக" இருக்குமோ... :D:lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மதிநுட்பமான செயற்பாடு அல்ல. கொக்கரிக்கும் பெண்களுக்கு ஈடாக ஆண்களுக்கும் கொக்கரிக்கிறதோ கை நீட்டிறதோ மதிநுட்பம் கிடையாது. இந்த சூழலில் பேரூந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனர் பணிப்புறக்கணிப்பு செய்வதோடு.. காவல்துறைக்கு அறிவித்திருப்பதே சிறந்த மதிநுட்பமாக விளங்கி இருக்கும்.

இப்போ.. சம்பந்தப்பட்ட பெண்ணின் குற்றம் அந்த ஓட்டுனரின் செயலால் குறைத்து மதிப்பீடு செய்யப்படும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மேலும் அவருக்கு அனுதாபமும் ஓசி விளம்பரமும் கிடைக்கச் செய்துள்ளது..!

தவறிழைக்கும் பெண்களை மிக சாதுரியமாகக் கையாண்டு சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டுமே தவிர ஆண்கள் சட்டத்தை அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக கையில் எடுப்பது பெண்கள் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் ஆண்கள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பையுமே கூட்டும்..! அது தான் இங்கு நிகழ்ந்துள்ளது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு தெரிந்த ஒரு கொதிப்பிடிச்ச பிள்ளையும் ரொறன்டோ போக்குவரத்து சபைக்குள் சாரதியாக இருக்கிறார்...அடிக்கடி தமிழ் பெண்கள் செய்யும் லூட்டிகளை பற்றி சொல்லிக் கிடந்து சிரிப்பார்..கேக்கிற எங்களுக்கே ரொம்ப எரிச்சலாக இருக்கும் போது அதை நேரடியாக பேஸ் பண்ணுவர்களுக்கு எப்படி இருக்கும்....எப்ப வேலையை விட்டுட்டு ஓடி வாறரோ தெரிய இல்லை..

Link to comment
Share on other sites

எமக்கு தெரிந்த ஒரு கொதிப்பிடிச்ச பிள்ளையும் ரொறன்டோ போக்குவரத்து சபைக்குள் சாரதியாக இருக்கிறார்...அடிக்கடி தமிழ் பெண்கள் செய்யும் லூட்டிகளை பற்றி சொல்லிக் கிடந்து சிரிப்பார்..கேக்கிற எங்களுக்கே ரொம்ப எரிச்சலாக இருக்கும் போது அதை நேரடியாக பேஸ் பண்ணுவர்களுக்கு எப்படி இருக்கும்....எப்ப வேலையை விட்டுட்டு ஓடி வாறரோ தெரிய இல்லை..

இங்கை உடனே ஸ்ரைக் தான் ஆனால் நம்ம நாட்டில் தமிழ் பெண்கள் அமைதியானவர்கள்.

இங்கை சனமே பேசிப்போடும் யாரும் சேட்டை விட்டா. பஸில் போன் பேசுவதோ பாட்டு சத்தமா ஹெட்போனில் கேற்பதே கஷ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சொட் தான் ஆனால் அவக்கு தான் பல்லு செட்டா மாத்த வேண்டி இருந்து இருக்கும்,.

நான் சொன்னது அவவுக்கு விழுந்த்தைதான் .இந்தக் கறுப்பியல் வாயத்திறந்தாலே மனுஷன் செத்தான் :(

Link to comment
Share on other sites

பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு கருதி மேலதிக பாதுகாப்பு மூடி ஒன்று (Bus Driver Shield) கடந்த சில வருடங்களின் முன் டொரோண்டோ போக்குவரத்து சபை மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மூடி பயணிகள் நேரடியாக சாரதியுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்வதை தடுக்கிறது. இது பலமான கண்ணாடியை மேற்பகுதியாக கொண்டது.

3505552147_18847cd88c_b.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.