Jump to content

பிட்சா


Recommended Posts

தமிழ் சினிமாவில் கார்பரேட் கம்பெனிகள் செய்ய முனையாத முயற்சிகளையெல்லாம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான் செய்வார்கள். ஆனால் சமீப காலமாய் அம்மாதிரியான சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களூம், வழக்கமான கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அட்டகத்தி போன்ற வித்யாச படத்தை எடுத்து வெற்றி பெற, இதோ அவரது அடுத்த வித்யாச படைப்பு.

த்ரில்லர், ஹாரர், படங்களைப் பார்த்து அதிர்ந்து போய், வாய் பிளந்து படம் பார்த்து மாமாங்கமாகிவிட்டது. அதிலும் தமிழில் அதை விட அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த பிட்சாவில் படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நடைபெறும் விஷயங்கள் உங்களை திரைக்குள்ளேயே இழுத்துவிடக்கூடிய அளவிற்கு சுவாரஸ்யம். மிகைப்படுத்தி சொல்வதற்காக சொல்லவில்லை. நிஜமாகவே இரண்டு மணி பத்து நிமிடப் படத்தில் வழக்கமான குத்துப் பாட்டில்லை, கவர்ச்சிக் காட்சிகள் கிடையாது, அபத்த காமெடிக் காட்சிகள் கிடையாது இப்படி பல கிடையாதுகளோடு ஒரு படத்தை சீட்டின் நுனிக்கு நம்மை வரவழைத்து படம் பார்க்க வைகக் முடியுமா? என்று கேட்டீர்களானால் நல்ல திரைக்கதை, சுவாரஸ்யமான கதை சொல்லல், நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் இருந்தால் நிச்சயம் முடியும் என்று இந்த டீம் அடித்து சொல்லியிருக்கிறது.

tamil-cinema-pizza-tamil-movie-hd-wallpapers-posters-stills13.jpg

இப்படத்தின் கதை என்று எதையாவது சொன்னால் அது படம் பார்க்கும் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன்.படம் பார்த்து கதையை தெரிந்து கொள்ளுங்கள்.

விஜய்சேதுபதிக்கு இப்படம் திருப்புமுனையாய் அமையும் என்பது நிச்சயம். ஆரம்பக் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸ் வரை மிக இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார். குறிப்பாக அந்த அமானுஷ்ய பங்களாவில் தனியொரு ஆளாய் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் காட்சிகளில் எல்லாம் பரிதாபத்தையும், நம் முதுகு தண்டில் லேசான சில்லிப்பையும் வரவழைக்கிறார்.

tamil-cinema-pizza-tamil-movie-hd-wallpapers-posters-stills01.jpg

ரம்யா நம்பீசன். க்யூட்டாக இருக்கிறார்.அதிலும் ஒரு பாடல் காட்சியில் அவருக்கும், சேதுவுக்கும் இடையே ஆன நெருக்கம் படு இயல்பு. நரேன், ஓவியர் வீரசம்மர், சிம்ஹா, ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தான். வழக்கமாய் ஒரே இடத்தில் படமெடுத்தால் நமக்கு சலிப்பு வந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. இந்தப் படத்தில் சுவாரஸ்யத்திற்கான அபாயமே ஒரே லோகேஷனில் படமெடுத்தால்தான் என்பதால் அந்த நாற்பது நிமிடங்களும் வெறும் டார்ச்சை மட்டும் வைத்துக் கொண்டு மனுஷன் ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறார் பாருங்கள் அப்படி ஒரு ஆட்டம். வாழ்த்துக்கள் கோபி. இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தமிழில் முதல் 7.1 டிஜிட்டல் மிக்ஸிங்கில் வெளிவந்திருக்கும் படம். இம்மாதிரியான படங்களுக்கு இசை மிக முக்கியம். அதை உணர்ந்து மிக அருமையான பின்னணியிசையை கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் மட்டுமே முழுவதுமாய் வருகிறது. மற்றபடி ஹிட் பாடலான “தினக்குதே” வை உபயோகித்த இடம் இன்னும் சுவாரஸ்யம். லியோவின் எடிட்டிங் படு ஸ்மூத். குறிப்பாய் அந்த பங்களாவில் நடக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோரின் உழைப்பு அடி தூள்.

tamil-cinema-pizza-tamil-movie-hd-wallpapers-posters-stills09.jpg

எழுதி இயக்கியவர் நாளைய இயக்குனர் முதல் பகுதியில் வெற்றி பெற்று இரண்டாவதாய் வந்த கார்திக் சுப்புராஜ். இவரது துரு, ப்ளாக் அண்ட் வொயிட் போன்ற குறும்படங்கள் பேசப்பட்டவை. இவரது முதல் திரைப்படம் இது. ஆனால் படம் பார்த்தால் சொல்ல மாட்டீர்கள் அவ்வளவு அழகான மேக்கிங். இம்மாதிரியான படத்திற்கு என்ன தேவையோ அதை கேட்டு வாங்கி சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நம்மை தயார்படுத்தியவர், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் கதைக்குள் போய், நம்மை படத்தின் கதையோடு ஒன்றி விடச் செய்து விடுகிறார். குட்டிக் குட்டி டயலாக்குகள், ஸ்டைலான மேக்கிங் என்று ஜெட் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. தடதடக்கும் வேகத்தோடு கூட்டிக் கொண்டு போனவர் க்ளைமாக்ஸின் போதுதான் லேசாய் சுருதி குறைந்தார்.

இந்த படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. இருக்கிறது அதெல்லாம் நம் கண்ணில் படாமலேயே போய்விடக்கூடிய அளவிற்கு படம் நம்மை ஆக்ரமிப்பதால் டோண்ட் நீட் டூ ஒர்ரி. க்ளைமாக்ஸை நோக்கிப் போகும் போது கொஞ்சம் நீளும் காட்சிகள், வீரசம்மரின் கேரக்டர் எல்லாம் தேவையில்லாததாய் தோன்றினாலும் படத்தை பார்த்து முடிக்கும் போது 3அவை படத்திற்கு கொடுத்த இம்பாக்ட் நியாயப்படுத்திவிடும். நிச்சயம் எதிர்பார்க்காமல் போய் பார்த்தால் ஒரு ஆச்சர்ய பொக்கே காத்துக் கொண்டிருக்கிறது. டோண்ட் மிஸ். தயவு செய்து படம் பார்த்தவர்கள் கதையை வெளியே சொல்ல வேண்டாம்.

http://www.cablesankaronline.com/2012/10/blog-post_19.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.