Jump to content

இளையராஜா எங்களின் சொத்து


Recommended Posts

ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து.

இளையராஜா எங்களின் சொத்து

ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது.

அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது.

என்னுடன் தினமும் பேசுகின்ற ஒருவனோடு எதற்கு நான் நேரில் சந்தித்து தனியாகப் பேச வேண்டும்?

நான் நேரில் சந்திக்கின்ற மனிதன் ராசையாவாகத்தான் இருப்பான். அந்த மனிதனை எனக்குப் பிடிக்காமல் கூடப் போகலாம்.

அவன் இளையராஜாவாக மட்டும் மேடையில் நின்று இசை மீட்ட, கூடி நின்று அமைதியாக தலையாட்டி ரசிக்கும் பல இலட்சம் பேர்களில் ஒருவன் நான் என்பதுதான் எனக்கு வேண்டும்.

இசை என்பதைத் தாண்டி வேறு எதுவாகவும் அவனைப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியிலே இருந்து வந்தான். ஆயினும் அவர்களுக்காக அவன் தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. அவர்களின் வாயில் மலம் திணிக்கப்பட்ட போதும், வல்லுறவுக்கு உட்பட்ட போதும் அவன் கொதித்து எழவில்லை.

அதற்காக அந்த மக்கள் அவனுடன் என்றைக்கும் கோபித்தது இல்லை. புறக்கணித்ததும் இல்லை.

ஆயினும் இப்படி ஒரு காட்சி திரையில் ஓடுகின்ற போது, எல்லாவற்றிற்கும் சேர்த்து அவன் தன்னுடைய இசையால் ஓவென்று கதறி அழுவான். அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும். இவன் தனக்காகத்தான் அழுகிறான் என்பது சம்பந்தப்பட்டவனுக்கு நிச்சயம் புரியும்.

பழசிராஜா என்று ஒரு படம். மலையாளத்தில் எடுக்கப்பட்டு பின் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் படத்திலே ஒரு காட்சி. மன்னன் போரிலே தோற்று, நாடு இழந்து, மனைவி மக்களோடு காட்டுக்குள் பின்வாங்குவான். காட்டுக்குள் நின்றபடி போரை நடத்தப் போகிறான் என்பதை சொல்கின்ற ஒரு வீரம் மிகுந்த காட்சி.

அந்தக் காட்சியில் வீரத்தைச் சொல்லாமல் சோகத்தை அவன் பாடினான். கதறி அழுதபடி ஒப்பாரி வைத்தான். இப்படிக் காட்டுக்குள் பின்வாங்காமல் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தோடு வீரச்சாவை அடைந்த இன்னொரு மன்னனுக்காக அவன் அழுகிறான் என்பது அவனை சுவாசிக்கின்ற எங்களுக்கு மட்டுமே புரியும்.

இதை விட அவனால் வேறு என்ன செய்ய முடியும்? அவன் ஒரு கவிஞன் என்றிருந்தால், வார்த்தைகளில் தன் சோகத்தையும், கோபத்தையும் வடித்திருப்பான். ஆனால் இவனோ இசையை படைப்பதற்காய் வந்திருப்பவன்.

வரிகளைத் தாண்டிய இசையால்தான் இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவான்.

அவனுடைய பாடல்கள் பெண் விடுதலையையும் சொல்லும், பெண்ணை அடங்கவும் சொல்லும், சாமியை பாடும், சாமி இருந்திட்டா காமி என்றும் சொல்லும், தமிழைப் போற்றும், 'ஓம் சிவோகம்' என்று வடமொழியிலும் அதிரும், காதலை ஒரு நேரம் போற்றும், மறு நேரம் தூற்றும். இப்படி அனைத்தையுமே அவனுடைய பாடல்கள் கொண்டிருக்கும்.

ஆயினும் அவனுடைய இசை எங்களுடையதாய் இருக்கிறது.

எதைப் பாடினாலும், அது சொல்லுகின்ற கருத்தை புறந்தள்ளி விட்டு, இசையை மட்டும் கொண்டாடுகின்ற பண்பாடு மிகுந்த கூட்டத்தை படைத்த அற்புதம் அவன்.

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா' என்று அவன் பாடுவான். தாயகம் தானாக கண் முன் விரியும். ஊரைப் பற்றிப் பாடாத மற்றைய பாடல்களும் ஊரையே ஞாபகப் படுத்தும்.

எங்கள் ஊரையும், காலத்தையும், அதைச் சுற்றிய ஞாபகங்களையும் அவனின் பாடல்களைக் கொண்டே நாங்கள் நிரப்பி வைத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி அவனின் அன்பு மனைவி இறந்தார் என்னும் செய்தி வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு புத்தகத்தில் 'மனைவி இறந்த பின்பு ஆண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வது இல்லை' என்கின்ற ஒரு ஆய்வைப் படித்துத் தொலைத்திருந்தேன்.

இந்த சோகத்தில் இருந்து அவன் எப்படி மீளப் போகிறான் என்று மனம் தவியாய் கிடந்து தவித்தது.

அவனுக்கு தெரிந்தது எல்லாம் இசைதானே. அவன் தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். அதுவரை தனக்குத்தானே போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகளை விலக்கி விட்டு, தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கப் புறப்பட்டான்.

தன்னுடைய தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளை பார்ப்பதற்காய் கடந்த ஒரு ஆண்டாக உலகத்தை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.

அவன் எங்கள் வீட்டிலே ஒருவன். எங்களின் உறவாய் இருப்பவன். எத்தனையோ தடவைகள் எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடாமல் காப்பாற்றி வருகின்ற வைத்தியன். மூன்று தலைமுறைகளாய் நாம் அவனுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

வெறும் கூலி கொடுத்து இந்த கடனை நாங்கள் அடைத்து விட முடியாது.

அவன் எங்களுக்காய் தெருவில் இறங்கவில்லை, கொடி பிடிக்கவில்லை, அறிக்கை விடவில்லை என்று அவன் மீது எந்தக் கோபமும் எனக்கு இல்லை. இதை நாங்கள் அவனிடம் கேட்கவும் இல்லை. இசையால் மனதிற்கு ஆறுதலைக் கொடுக்கின்ற வேலையைத்தான் அவனுக்கு கொடுத்தோம்.

அவன் தன்னுடைய வேலையை மிகச் சரியாகவே செய்கிறான்.

எங்களின் போராட்டத்தின் நியாயங்களை அவன் பேசாது விட்டாலும், நியாயங்களில் அவனுடைய இசையும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பண்பாடு மிக்க, நாகரீகம் மிக்க தனித்துவமான இனம் என்பதை அவனுடைய இசை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இளையராஜா எங்களின் சொத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முடிவோடை தான் இருக்கிறிங்கள் போல.. :rolleyes::D:icon_idea:

Link to comment
Share on other sites

இளையராஜா எங்களின் சொத்து அதனால அவர வித்து நாங்க ஜனங்க கிட்ட வாங்க போறம் நல்ல மொத்து.... டண்டணக்கா ஆ டனக்குனக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எழுதின உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியல்ல?ஐயோ ஐயோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா சொத்துத்தான்

அப்படியென்றால்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்து கொண்டிருந்து

இளையராசாவின் வருகையின் பின்னால்

இளையராசா போல் இசையை கெடுக்கமாட்டேன் என ஒதுங்கிய விசுவநாதன் (ராமமூர்த்தி)??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா சொத்துத்தான்

அப்படியென்றால்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்து கொண்டிருந்து

இளையராசாவின் வருகையின் பின்னால்

இளையராசா போல் இசையை கெடுக்கமாட்டேன் என ஒதுங்கிய விசுவநாதன் (ராமமூர்த்தி)??????????

அப்படிக் கெடுக்கமாட்டேன் என்று சொன்னவர் தனது பிழைப்புப் பழுதான கோபத்தில் சொல்லியிருப்பார்.

Link to comment
Share on other sites

இரண்டு வியாபாரிகளுக்கிடையே வியாபாரப் போட்டி.. நடுவில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் மாவீரர்கள்.. சிக்கிப்பட்டிருப்பவர்கள் இளையராஜா, விஸ்வநாதன், சீமான், செல்வமணி.. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிக் கெடுக்கமாட்டேன் என்று சொன்னவர் தனது பிழைப்புப் பழுதான கோபத்தில் சொல்லியிருப்பார்.

இவரைப்போல் இசையமைக்க தன்னாலும்முடியும என நினைத்தாலே இனிக்கும என்றொரு படத்துக்கு இசையமைத்து வெற்றி பெற்றுத்தான் ஒதுங்கினார்.

அதற்காக இளையராசா எமது சொத்தல்ல என்று நான் சொல்லவில்லை.

இளையராசா எமது சொத்து என்று முதன் முதலில் இங்கு எழுதியதே நான் தான்.

ஆனால் சபேசனின் இந்த முடிச்சு சரியல்ல என்பதற்காகவே வேறு ஒருவரை உதாரணம காட்டினேன்.

எங்களாலும் இப்படிடி முடிச்சு போட்டு எழுதிக்கொண்டிருக்க முடியும்...........?

புரிந்தால் சரி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வியாபாரிகளுக்கிடையே வியாபாரப் போட்டி.. நடுவில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் மாவீரர்கள்.. சிக்கிப்பட்டிருப்பவர்கள் இளையராஜா, விஸ்வநாதன், சீமான், செல்வமணி.. :blink:

இசை ஏன் இதற்குள் நின்று புலம்புகிறீர்கள்?

நவம்பர் 3 மக்கள் தீர்ப்பு எல்லா வியாபாரிகளையும் திருத்தும். நாங்கள் அமைதி காப்போம். இப்போதைக்குச் சிறந்த வழி அதுதான்

இசைக்கு மொழி இல்லை

Link to comment
Share on other sites

இளையராஜா சரியான திமிர் பிடிச்சவர் சக கலைஞர்களை மதிக்க தெரியாதவர்

Ar ரஹ்மான் தான் தமிழரின் சொத்து இளையராஜா இசை யானி என்ற பட்டதிக்கு மட்டும் தான் தகுதி உடையவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா சரியான திமிர் பிடிச்சவர் சக கலைஞர்களை மதிக்க தெரியாதவர்

Ar ரஹ்மான் தான் தமிழரின் சொத்து இளையராஜா இசை யானி என்ற பட்டதிக்கு மட்டும் தான் தகுதி உடையவர்

முடியல சுண்டல் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

மற்ற இசை அமைப்பாளர்களோடு இசைஞானியோடு ஒப்பிட்டுக் கொண்டு வாதிடுவது வீண் வேலை.

ரசிக்கக் கூடிய வித்தியாசமான இசையை தந்த நிறைய இசை மிகச் சிறந்த அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவர்கள்.

இசைஞானி மண்ணின் இசையை தந்தார். தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருந்த இசையை தேடிக் கண்டுபிடித்து தந்தார். எங்களின் அடையாளத்தை மீட்டு எடுத்தார். இசை என்னும் ஆயுதத்தை எடுத்த ஒரு போராளி அவர்.

இதுவே அவரை எங்களவர் என்று ஆக்கியது.

Link to comment
Share on other sites

அவர் ஏன்னா சும்மாவா செய்தார் காசுக்காக செய்தார் அவர போய் தமிழரின் சொத்து எண்டெல்லாம் பில்ட் up கொடுக்க முடியா :D

பெரியார் படத்திக்கு இசையமைக்க சொல்லி கேட்ட பொழுது மறுத்தவர் எல்லாம் எப்பிடி தமிழரின் சொத்து?

Link to comment
Share on other sites

பெரியார் படத்திற்கு இசை அமைக்காமல் ராமராஜ்ஜியம் படத்திற்கு இசை அமைத்த இளையராஜாவை பெரியாரின் மீது பேரன்பு வைத்திருக்கும் எனக்கு பிடிக்கிறது அல்லவா? இதனால்தான் அவர் தமிழரின் சொத்து

Link to comment
Share on other sites

இவர் தமிழரின் சொத்து என்றால் ஒரு 50 இசை நிகழ்ச்சிகளை நடாத்தி சில அகதிகளுக்கு உதவி இருக்கலாமே.அப்படி செய்யவில்லை.செய்ய மனம் வரவில்லை. ஆகவே இசைஞானி என்ற பட்டமே இப்போதைக்கு போதுமானது.

Link to comment
Share on other sites

<p>இளையராஜாவை அவர் தந்த இசையின் ஊடாகவும், அது எங்களின் மீது ஏற்பட்ட தாக்கத்தின் ஊடாகவும் மட்டுமே நாம் பார்க்க முடியும்

அவருடைய பேட்டிகளை படித்தாலே "என்னடா இந்த மனிசன்" என்று எனக்கு தோன்றுவது உண்டு. மேடைகளிலும் அவர் சில வேளை சங்கடப்படும்படியாக நடப்பது உண்டு. ராசையா என்னும் மனிதன் ஆயிரம் குறைகளைக் கொண்டவனாக இருக்கட்டும்.

அவர் தமிழ் மக்களுக்கு தந்த இசையின் ஊடாக மட்டுமே நான் அவரைப் பார்க்கிறேன். ஒரு நல்ல இசையை தருகின்ற மேதையாக அவர் தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய பெரும் பங்களிப்பை செய்கிறார்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணா: அண்மைக்காலமாக யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருப்பவர்களில் சுண்டலும், நீலமேகமும் முதன்மையானவர்கள். அவர்கள் எமது சொத்து.. :icon_mrgreen:

சபேசன்: சுண்டல் தன்ரை பொழுதுபோக்குக்கு எழுதிறார் அவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? ^_^

சுண்டல்: :blink:

நீலமேகம்: :unsure:

நுணா: அதெப்பிடி.. அவையள் சொத்து என்றால் தங்கட வருமானத்திலை பாதியை நாட்டுக்கு குடுப்பினமா? :mellow:

சுண்டல்: அடப்பாவிகளா.. அடிமடியிலயே கை வைக்கிறாங்களே.. :mellow:

சபேசன்: சுண்டல் யாழுக்கு வாறதே வேறை வேலையா.. இவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? :lol:

நீலமேகம்: கொக்காமக்கா.. சும்மா ஓரமா நிக்கிறம்.. இழுத்து நடுச்சந்தியில விட்டு நாறடிக்கிறாங்களே..! :huh:

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கருவையே எடுத்துக்கொண்டால்

நேற்றுக்கூட சுண்டல் தாயக வளர்ச்சித்திட்டம் ஒன்றுக்கு 200 ஈரோக்களை தருவதாக அறிவித்தார்

அது அவரது இந்த மாத வருமானத்தில் 10 வீதமாக இருக்கலாம்.

இதுவரை இளையராசா என்ன குடுத்துள்ளார் என அறியத்தந்தால் நாமும் ஒரு திரி தொடங்கி கும்பிடுவோமல்லவா??

(இளையராசா சொத்தில் அரைவாசி தந்தால் ஈழம் உலக வரைபடத்தில் பணக்காற நாடாகிவிடும். அந்த ஆசையெல்லாம் எமக்கில்லை) :lol:

Link to comment
Share on other sites

இசையின் கருவையே எடுத்துக்கொண்டால்

நேற்றுக்கூட சுண்டல் தாயக வளர்ச்சித்திட்டம் ஒன்றுக்கு 200 ஈரோக்களை தருவதாக அறிவித்தார்

அது அவரது இந்த மாத வருமானத்தில் 10 வீதமாக இருக்கலாம்.

இதுவரை இளையராசா என்ன குடுத்துள்ளார் என அறியத்தந்தால் நாமும் ஒரு திரி தொடங்கி கும்பிடுவோமல்லவா??

(இளையராசா சொத்தில் அரைவாசி தந்தால் ஈழம் உலக வரைபடத்தில் பணக்காற நாடாகிவிடும். அந்த ஆசையெல்லாம் எமக்கில்லை) :lol:

நான் சொல்ல முயன்றது ஒன்று.. அதாவது இளையராஜா நான் தமிழரின் சொத்து என்று சொன்னதாக ஞாபகம் இல்லை (கதையின்படி சுண்டலும் யாழ்களத்தின் சொத்து என்று சொல்லவில்லை. :D )

ஆனால் அவர்கள் சொத்து என்று ஒரு பகுதி சொல்வதும், சொத்தல்ல என்று மறுபகுதி சொல்வதும் வேடிக்கையானது. நடுவில் அசிங்கப்படுவது சுண்டலும், இளையராஜாவும் மட்டுமே என்பதைத்தான் சொல்ல வந்தேன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

இதுவரை இளையராஜா தமிழ் மண்ணுக்கு அதன் அடையாளமான இசையை கொடுத்தார். நாளையும் அதைத்தான் கொடுப்பார்.

ஒரு இனத்தின் இசை என்பது அதனுடைய பண்பாட்டின் பெரும் பகுதி. அதன் முக்கியத்துவத்தை அறிந்ததால் அப்படியான ஒன்றை தருபவனிடம் போய் வேறு விடயங்களை கேட்டுக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா: அண்மைக்காலமாக யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருப்பவர்களில் சுண்டலும், நீலமேகமும் முதன்மையானவர்கள். அவர்கள் எமது சொத்து.. :icon_mrgreen:

சபேசன்: சுண்டல் தன்ரை பொழுதுபோக்குக்கு எழுதிறார் அவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? ^_^

சுண்டல்: :blink:

நீலமேகம்: :unsure:

நுணா: அதெப்பிடி.. அவையள் சொத்து என்றால் தங்கட வருமானத்திலை பாதியை நாட்டுக்கு குடுப்பினமா? :mellow:

சுண்டல்: அடப்பாவிகளா.. அடிமடியிலயே கை வைக்கிறாங்களே.. :mellow:

சபேசன்: சுண்டல் யாழுக்கு வாறதே வேறை வேலையா.. இவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? :lol:

நீலமேகம்: கொக்காமக்கா.. சும்மா ஓரமா நிக்கிறம்.. இழுத்து நடுச்சந்தியில விட்டு நாறடிக்கிறாங்களே..! :huh:

:D

இசை இதை வாசித்து சிரித்துச் சிரித்தே வயிறு நொந்துவிட்டது.

இதைப்போலத்தான் செம கமெடி இசைஞானி விடயத்திலும்...

:lol:

Link to comment
Share on other sites

ஈழத் தமிழினம் நடந்த நிகழ்வுகளால் பெரும் மனச் சிக்கலுக்குள் ஆழ்ந்திருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அனைத்தையும் இந்த சம்பவங்களுக்குள்ளால் பார்க்கின்ற பலர் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் இன்று எமக்கு பரந்த பார்வை அவசியம். எம் இனத்தில் உள்ள துறைசார் வல்லுனர்களை, மேதைகளை தொடர்ந்து இயங்க விடுவது எமது மீட்சிக்கு முக்கியமானது.

தேசியம், மாவீரர் என்னும் பெயர்களில் இவர்களின் எல்லைகளை நாம் குறுக்குவது தமிழினத்திற்கு நன்மையாக அமையாது.</p>

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.