Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

ஐரோப்பிய தடைக்கு மனுவும் கனடிய தடைக்கு கண்டனமும் இடைக்காடரின் முயற்சிக்கு வாழ்த்தும் மயிலில் போய்விட்டது.

புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது. வேற்றின மக்களுக்குள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான ஆதரவை பெருக்க வேண்டும்.

வல்லினமற்ற மெல்லின மக்கள் நாம் என்று புரியவைக்க வேண்டும்.

அதுசரி ! அல்லிகா நான் இல்லாளன் இல்லத்தை ஆள்பவன் அல்ல. எல்லோரையும் எல்லை வரை ஆள்பவன் எல்லாளன்.

பெயரை மாத்தி விட்டீர்கள். பாத்து..ம்..மா... :roll: :roll:

விளக்கத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

புயலுக்கு ஒரு வரவேற்பு

--------------------- :idea: :idea:

புயல் புலியாகி வருகின்றாதோ...

புவியாளும் நாள் தெரிகின்றதோ..

எல்லைகளின் நாயகன் எனைத் தேட...

எதிரிகளின் குலை நடுநடுங்க...

காத்திருந்தவரை காற்றாய் இருந்தோம்..

புறப்பட்டவுடன் புயலாய் எழுந்தோம்..

சுற்றும் பூமி இனி எமைச் சுற்றட்டும்..

சுதந்திர வானில் கொடி பறக்கட்டும்..

புலிக்கு ஒரு காலை புவிக்கு ஒரு நாளை

புத்தனின் பூமி அறியட்டும்..

எழுச்சியுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:!: :!: :!: அடடா......

தமிழ், வரலாறு இரண்டும் கலந்து விளையாடும்

எல்லாளர் சபைக்கு வந்துவிட்டேனா..........

நல்லது, நல்லது

ஆதிவாசியாக......

யாம் உலவ வந்ததுபோல்

எல்லாளன் வடிவேற்று வந்தவரே!

வணங்குகிறோம்........ வரவேற்கிறோம்.

இனம்காக்கும் வரலாறும்இ இலக்கியப்பணியும்

தமிழர் நலங்காக்க புறப்பட்டது புரிகிறது.

வாழ்த்துக்கள்....

:lol::lol::D:D:D:D:D:D :P :P :P அவைக்கு வந்தவர் ஆதிவாசி......

Link to comment
Share on other sites

தந்தனத் தந்தன தாளம்

தகிக்கும் நல் ஞானம்

கொண்டு வளர் பூமியில்

கொலுவிருக்கும் நம் சபையில்

அனுமனின் வடிவே..

ஆதியின் வாசியே..

இளமையின் உருவே

ஈதலின் சிறப்பே

உதவியில் உலகே

ஊடலில் மடுவே

எண்ணத்தின் நிறைவே

ஏந்தலின் அருளே

ஐயனின் கொடையே

ஒன்றின் நிறைவே

ஓர்மத்தின் சிறப்பே

ஒளடதத்தின் வலிவே

வருக வருக வென்று (வாழைப்பழம் தந்து) :roll: :roll: வரவேற்கின்றோம்.

வாழைப்பழத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணமுறு தமிழ்மகளின்

எண்ணமுறு பெருவேந்தே!

தொண்மையுறு வரலாறும்,

திசையொளிரும் பெரும் புறமும்

திண்மையுற வாழ்ந்த கோவே!

எல்லாள வடிவெடுத்து

எழுச்சியுூட்ட வந்த வேளே!

வில்லாண்ட அர்ச்சுனனாய்

வைத்த குறி தப்பாது

சொல்லாண்டு சேதி செப்பி

சொந்தநாடு காத்திடுக!

:? :? :? :? இருகரம் கூப்பி வரவேற்கும்

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

வளம் மிகு வல்வைப் பதியில்

வண்ணத் தமிழின் காவலராய்

யாழின் இசை மீட்ட-இப்புவியில்

யாருமிலை எனுனிலை மாற்றி

புலியின் கொடி பறக்கும் எனும்சேதி

புல்லர்க்கு பகன்ற வீரம்

தமிழணங்கின் தலைக்கவசம்

தக தகக்க வெழுந்த வீரம்

தரணி நிலை நாளும்

தளராது சேதி சொல்லும்

வல்வை சகாறாவால்

வந்ததே தமிழுக்கு சகாயம் -என்றே

வரவேற்கின்றோம் எம் சபைதனைக்கே

வல் வில் திறம் மேவிய..

வரவேற்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பூ நீ சொன்னது சிந்தப்பூ...(பாடல்)

அன்னையைத் தமிழ் வாயால் "மம்மி" என்றழைத்தாய்

"அம்மியை" அன்னிய வாயால் என்னவென்றழைப்பாய்...

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? - அப்போ(து)

வீட்டிலிருப்பவன் என்ன சுப்பனா?..

தமிழா நீ பேசுவது "டமிலா" இல்லை "தமிழா"

எல்லாளன் அவர்களுக்கு, 'இது தமிழா நீ பேசுவது தமிழா!' என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த கவிஞரான காசி ஆனந்தன் எழுதிய கவிதை. தமிழ் மீது காதல் கொண்டதினால் தான் இக்கவிதையிலிருந்து சிலவரிகளினை நான் இணைத்துள்ளேன். தயவு செய்து தமிழைப் பழிக்கவேண்டாம்.

எல்லாளனின் கருத்துக்களினை நான் விருப்பிபடிக்கிறனான். அழகிய தமிழில் எழுதும் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஐயையோ... தவறாக விளங்கிக் கொண்டீர்களே...

கவிஞர் காசி அண்ணனின் கவினுறு நறுக்குகளில் காதல் கொண்டவன் நானும்.

தமிழைப் பழிக்கவில்லை. டமில் பேசும் தமிழரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். :cry: :cry: :cry:

பனிக்கும் கண்களுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உலகம் உருண்டை என்பார்கள்.... அது சரியாகத்தான் இருக்கின்றது. என்னால் கொஞ்ச ஆட்களைத்தான் சந்திக்க முடிந்திருக்கின்றது.

ஏனென்றால் நான் இன்னும் பாலை வனத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒட்டகத்தில் பயணிக்கும் -எல்லாள மஹாராஜா- :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன் புத்தனின் சரணங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏ லொள்ளரே" இங்கே பாலைவனம் சோலைவனம் என்று லொள்ளடிக்காமல், துட்ட கைமுனியிடம் இழந்த தமிழர் ஆளுமையை கைப்பற்றுவதில் முயற்சியெடும் வீரரே! :P

அல்லிகா

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளமகாராஐா

ஒரு கலக்குத்தான் கலக்குறீங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

:P :lol:

Link to comment
Share on other sites

கரி(யானை) யதனில்

கால் தடங்கி வீழ்ந்ததென்ன...?

துட்டனிடம்

துண்டாகிப் போனதென்ன..?

தமிழிற்கே

தலை குனிவை தந்ததென்ன..?

தள்ளாத வயதினில்

உனக்கு வில்லெதற்கு...?

பொல்லோடு

பொடிநடையாய் போய்விடு! :twisted:

Link to comment
Share on other sites

ஆனந்த மார்க்கத்தை அருளியவனே! நீ சரணா கதி அடைந்ததனால் தான் சிங்களவர் உனை மறந்தார்..உன் மார்க்கம் மறந்தார்... துன்மார்க்கத்தினராய் .. உன்மத்தம் கொண்டு உயிர் வாங்கி.. உதிரம் குடித்துத் திரிகின்றார்.

இன்னொரு முறை நீ பிறக்க வேண்டும். இச்சிறு மதியாளரின் பாவங்களை நீ துடைக்க வேண்டும்.

வேண்டுதலுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அல்லிகா ! தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் .. என் "தம்பி" இருக்கையில் தமிழர் ராஜ்ஜம் மீண்டும் கைவரப் பெறுவதில் ஏதும் ஐயமும் உளதோ?

நம்பிக்கையுடன் -எல்லாள மஹாராஜா- :):lol:

Link to comment
Share on other sites

சுபித்திரன்....

கலங்கின குட்டை தானே தெளியும். முடிந்தளவு கலக்கிவிடுவோம். தானே தெளிந்து விடும்.

பின்னர் தான் தெரியும். ஷேக்ஷ்பியர் சொன்னதைப்போல "ஆழ் கடலின் அடியில் தான் எத்தனை விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் இருக்கின்றன. பாலை வனத்தின் புழுதிக்காற்றில் தான் எத்தனை மணம் கமழும் மலர்கள் மலர்ந்து வீணே போகின்றன"

என்பதைப்போல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும், எத்தனை அரிய இரத்தினங்கள் யாழ் களத்தில் மின்னப்போகின்றன என்று பார்ப்போமே. :?: :?:

வைரங்களை எண்ணப்போகும் ஆர்வத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

Link to comment
Share on other sites

தம்பி நீர் கெளரி பாலனா? இல்லை குளறு படி பாலனா?

44 வருடம் ஒப்பாரும் மிக்காரும் இன்றி சிங்களத்தையும் என் காலடியில் போட்டு ஆட்சி செய்த நான் ..தமிழருக்கு தலை குனிவா?

பகைவனும் என் வீரத்தை மெச்சி 2000 வருடங்கள் என் சமாதிக்கு வீர வணக்கம் செய்தது... தமிழருக்கு தலை குனிவா?

வெல்லமுடியாத என் வீரம் கண்டு நயவஞ்சகத்துடன் தனிப்போருக்கு துட்டன் எனை அழைத்தபோது சூழ்ச்சி என்றறிந்தும்...

"தன் மகன் முதுகில் வேல் பாய்ந்து இறந்தான் என்று கேட்டு அவனுக்கு பால் கொடுத்த முலை அறுத்து எறிவேன்" என்று போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் வேலேந்தி வீரனாக இறந்தான் என்று அறிந்து உவகை கொண்ட வீரத் தமிழ் குடியில் பிறந்து....

தனிப்போருக்கு மறுத்தான் தமிழ் மன்னன் என்ற இழி சொல்லுக்குப் பயந்து தள்ளாத வயதிலும் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த நான்.... தமிழருக்கு தலை குனிவா?

சிங்களவரின் சீர்மையையே சொல்லப்புகுந்த என் மறைவின் பின் 2 நூற்றாண்டுகளின் பின்னே எழுதிப்போந்த பொய்யின் வடிவமாம் மஹாவம்சத்திலேயே என் கீர்த்தி மறைக்க விரும்பாது மாற்றானும் போற்றி விதந்துரைத்த புகழ் கொண்ட நான் ...தமிழருக்கு தலை குனிவா?

அன்றி அன்று விட்ட தமிழ் ராஜ்ஜத்தை இன்று வரை மீட்டெடுக்க வக்கில்லாது வெறுங்கதை பேசுவதில் வீணே காலத்தைக் கடத்தும் நீங்கள் ....தமிழருக்கு தலை குனிவா?

வெறுங்கதை பேசி...வீணே சோம்பி கிடந்து ...சோத்துக்கு அலையும் நீங்கள்...... தமிழருக்கு தலை குனிவா? இல்லை நானா?

சீரிய அறம் இழந்தான்... செவ்விரத்தம் இழந்தான்.. சிந்திக்கும் திறனும் இழந்தானோ தமிழன்....

முதுமையில் கோலூன்றுவது இழிவன்று... முழுமையின்மையால் அரற்றித் திரிவது தான் இழிவு... :evil: :evil:

ஆற்றாமையில் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

மட்டுறுத்துனர் மதன்... நீங்கள்

மற்றவருக்கு உறுத்தினரோ... இல்லை... உரித்தினரோ...

உள்ளபடியே அன்பு கொண்ட உளத்தினரோ...

யாழ் களம் சிறக்க.... யாப்பெழுதி...

யாமிருக்கப் பயமேன் -என

கை கொடுக்கும் தோழனுக்கு...

சபை நிறைந்த வரவேற்பளிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

â¨É¸û þÉõ §À¡§Ä ÀÐí̾ø þƢšÌõ

ÒĢ¢Éõ ¿£ ±É¢ø ¦À¡Õ¾¢¼ šáö.....±É

þý¨¨È Ðð¼ý ÝúԼý «¨Æò¾§À¡Ðõ...

¾Á¢ú Áì¸Ç¢ý ±¾¢÷¸¡Äõ ¸Õ¾¢ «¾ü¸¡É ºÁÂõ ºó¾÷ôÀõ

À¡÷òÐ측ò¾¢Õ츢ȡý ჾó¾¢ÃÁ¢ì¸ ¿õ ¾¨ÄÅý

þÅý «ý¨È ±øÄ¡Çý «øÄ.......

Link to comment
Share on other sites

வரலாறு கற்றுக் கொடுத்திருக்கின்றது.

முருகா நீயே கிபீருக்குப் பயந்து தலைக்கவசத்துடன் பதுங்கித் திரியும் :):lol::lol: போது .....

மானுடர் நாம் எம்மாத்திரம்? முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :o:o:o:o

சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

கவிதை நடை நொண்டாமலும் நகை சுமையாகவும் இல்லாதிருக்கும் வரை சேமமே....

நொ(நோ)ண்டப் பயத்துடன்

-எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.