Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

எனக்கு சில விசயங்கள் பிரியல..

ஒன்று

கனடா உங்களுக்கு சொந்த நாடு கிடையாது... நீங்க எதிலிகளாக போய் செட்டிலாகி போய்விட்டீர்கள்.. ஓக்கே.. அங்கிட்டு தமிழ்நாட்டு தமிழன் யாரும் கிடையாதா..? அவருதான் சொல்லுகிறாரு யாராவது ஒருத்தன் வந்தா போதும் என்று..?

புரட்சியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில்? தமிழ்நாட்டுத் தமிழன் பார்க்க வேண்டும் என்றால் கனடாவில் முடியாதா? அதற்கு யாரிடம் அனுமதி வாங்கவேண்டும்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

நீங்கள் மூன்று மாதமாக திட்டமிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த ஒரு பிறந்த நாள் விழாவை திடீரென்று ஒரு மாதம் தள்ளிப் போட வேண்டி ஏற்படுகிறது.

இதனால் உங்களுக்கும் உங்களின் குடும்பம், உறவினர்களுக்கும் ஏற்படக் கூடிய பொருளாதார இழப்பை ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்த இழப்பு உங்களுக்கு நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்களை இட்டு ஒரு சிறிய அலசல் செய்து பாருங்கள்.

அதன் பின்பு இதே கணக்கை இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் செய்யுங்கள்.

பின்பு எதிரி எங்கள் மீது தொடுத்திருக்கின்ற பொருளாதார யுத்தம் பற்றி ஓரளவு விளங்கக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில ரிக்கெட் வித்துப் புடுங்கினது புடுங்கினது தான். அது எங்கப் போகப் போகுதென்றே யாருக்கும் தெரியாது..???!

இந்த நிகழ்ச்சியை பின்போடச் சொல்லிச் சொல்லி இப்ப 4.. 5 வாரங்கள் ஆச்சுது. அப்பவே அதைச் செய்திருந்தால்.. மாற்று ஏற்பாடுகள் நடந்திருக்கும். மேலும் இன்னும் அதிக ரசிகர்களை உள்வாங்கி இருக்கலாம். அதிக நிதி கிடைச்சிருக்கும்.

இந்த இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பகுதி நிகழ்ச்சி செய்திருந்தால்.. அது கூட வரவேற்கப்பட்டிருக்கும். அதிக மக்கள் பங்களிப்பு இருந்திருக்கும். அதைக் கனடிய அரசினூடு பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிச்சிருக்கலாம்.

இப்படி எதுவுமே.. மக்கள் நலன்சாராதுள்ள ஒரு நிகழ்ச்சி.. குழம்பங்களை விதைக்கக் கூடிய வகையில்.. அதுவும் மாவீரர் தின ஏற்பாடுகள்.. மற்றும் சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் நோக்கிய நகர்வுகள் அதிகரித்துள்ள நிலையில்.. இந்த நிகழ்ச்சியை விடாக்கண்டன் தொடாக்கண்டன் என்று இளையராஜா நடத்துவது.. இளையராஜா றோவுக்கும் சிங்களப் புலனாய்வாளர்களுக்கும் வேலை செய்யுறாரோ என்று தான் சந்தேகிக்க வைக்கிறது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அதிமேதாவிகளிடம் ஒரு கேள்வி?

இதில் இளையராஜாவை ஆதரித்தும்,எதிர்த்தும் எழுத வேண்டியதன் நோக்கம் என்ன?

தொழிலால் ஒரு இசைக்கலைஞன் அதுவும் வேறு நாட்டைச்சேர்ந்த ஒருவர் தன் தொழிலை செய்வதை தடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நிகழ்ச்சி ஒழுங்குசெய்தவர்கள் மீது நடவடிக்கை,விமர்சனம் வைப்பதை விடுத்து இளையராஜாவை கேள்வி கேட்க எமக்கு என்ன உரித்து இருக்கு?

இளையராஜா என்ன தமீழத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவரா? இல்லை ஏதும் பங்காளரா?

இளையராஜா மாவீரர்மாதம்,வாரம் இல்லை நாள் அனுஸ்டிக்க என்ன அவசியம் இல்லை அதை சொல்ல யாருக்கு என்ன அருகதை இருக்கிறது? இளையராஜா தான் விரும்பினால் பங்களிப்பது செய்வது வேறு மற்றும்படி இளையராஜாவோ அல்லது,தமிழகத்தமிழனோ இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை தமிழகத்தில் நடக்கும் ஏதும் போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் குரல்கொடுத்திருக்கிறீர்களா? அவர்களுக்காக எப்பவும் வீதியில் இறங்கி போராடினீர்களா? அப்படி இருக்க உங்களுக்கு என்ன அருகதை????

நீங்கள் மாவீரர் பெயரைச்சொல்லி வியாபாரம் செய்வதற்கு இளையராஜாவை எதுக்கு இதற்குள் இழுப்பான். அவர் தன் தொழிலை செய்கிறார். எய்தவனை விட்டு அம்பை எதுக்கு நோவான்?

மே19க்கு பின்னர் ஆளாளுக்கு தேசியத்தலைவர் என்று அறிக்கை விட்டு உள்ளதையும் கெடுப்பது தான் எம் அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

Link to comment
Share on other sites

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

நெடுக்கின் கருத்துடன் உடன்படவேண்டி இருக்கிறது..! :unsure:

இளையராஜா கச்சேரி எதிர்ப்புக்கு அடுத்த கட்ட்டமாக தமிழகத்தில் விமானநிலையங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

  1. கூடங்குளம் அணு உலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, தி.நகரில் பொருட்கள் வாங்க வந்திறங்கும் ஈழத்துப் பயணிகளை எதிர்த்தல்.
  2. முல்லை-பெரியார் அணைப் போராட்டம் நடக்கும்போது, அதைக் கவனியாது சாமத்திய வீட்டுக்கான பொருட்களை வாங்க வரும் ஈழமக்களை எதிர்த்தல்.
  3. மணல் கொள்ளை நடைபெறும்போது அதைக் கவனியாது தமிழகத்திற்கு கோயில் சுற்றுலா வரும் ஈழமக்களை எதிர்த்தல்..!

அனைவரும் கலந்துகொள்ளவும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ இசை நிகழ்வுபற்றி நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளா்கள் சீமானுடன் முதற்சுற்று சந்திப்பு: - நிகழ்வு பிற்போடப்படலாம்..!

[Tuesday, 2012-10-30 07:50:59]

தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.

அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.

இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் - நாம் தமிழர் இயக்கம்

http://seithy.com/breifNews.php?newsID=69252&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்லுற விசுகு அண்ணை தானே கார்த்திகைமாதம் நட்டக்கவுள்ள புங்குடுதீவு ஒன்று கூடலுக்கும்,பிரான்சில் நடக்கவிருக்கும் ஊர்விழாக்களுக்கும் நவம்பர் ஒரு கிழமை தானே மாவீரர்வாரம் என்ற கேள்வி எழுப்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமோ?

மற்றவர்கள் எல்லாம் என்ன பே******ளோ??????? :wub:

எந்த நேரத்திலும் இந்த அறிக்கையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அதை வைத்தே தமது சுய லாபநட்டங்களை மறைமுகமாக செய்வதையும் வரவேற்கவில்லை.

உங்களுக்கான பதில் ஏற்கனவே மேலே எழுதப்பட்டுள்ளது.

என்னுடன் கருத்தாடியவருக்கு எழுதப்பட்ட வசனமே அது.

இடையில் வந்து தொப்பி எனக்கும் தான் என்பவரை நான் தடுக்கமுடியாது. அவர் நீங்கள்கீழே குறிப்பிடுபவராகவே இருந்திட்டுப்போகட்டும்.

:o :o :o

நான் சபேசனுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்

இடையில் புகுந்து அதை திசை திருப்பும்முன் நீங்கள் தான் அதை அறிந்திருக்கணும் :( :( :(

இதே கேள்வியைக்கேட்டவருக்கு

அதற்கான பதிலும் மேலே எழதப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் வாசிக்கவில்லை.

எல்லா மக்களும் நவம்பர் மாதத்தை ஒரு ஆடம்பரமற்ற மாதமாக இருக்க முடிவெடுத்தால்

நிச்சயம் நானும் அதை ஆமோதிப்பேன். சங்கமும் அதை பரீசிலிக்கும் என்றும் முன்பும் எழுதியிருந்தேன். அதையும் நீங்கள் வாசிக்கவில்லை. அல்லது............???

Link to comment
Share on other sites

இதுவரைக்கும் நடந்ததில் எதனை இளையராஜா தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்..??????!

ஈழத்தமிழராய் பிறந்துவிட்டு போராடாமல் நீங்களும் நானும் இங்கை ஓடிவந்து இருந்து கொண்டு கதை பேசும்போது இந்தியத்தமிழன் அவர் செய்தால் என்ன விட்டால் என்ன.அவர் எதையும் செய்யாட்டியும் பரவாயில்லை நமக்கு எதிராக எதுவும் பேசாது இருந்தார்.ஆனால் உங்கள் போன்றவர்களின் பேச்சும் அதன் வழி செயற்பாடுகளும் அவரை எமக்கு எதிராகத்தான் திருப்பிவிடும்.எமக்கு எதிரானவர்களின் எண்ணிக்கையில் ஒன்றுகூடுமே தவிர வேறு எந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியவற்றவை உங்கள் வறட்டு வாதங்கள்.

அவர் காசுக்கு போடுற இசையை காசு கொடுத்துக் கேட்டு உங்க குடும்பங்களை சீரழிச்சதைத் தவிர.. இளையராஜா.. தமிழக பாமர மக்களுக்கே எதுவும் செய்யேல்ல..! இதில ஈழத்தமிழங்களுக்கு வெட்டி விழுத்தப் போறாராக்கும்..!

இசையைக்கேட்டு சீரழிஞ்ச முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.ஈழத்தமிழருக்கு அவர் வெட்டி விழுத்தினால் என்ன வெட்டாமல் விழுத்தினால் என்ன.அவரது இசையைக்கேட்க அவர் இசையை விரும்புவர்கள் pay பண்ணுகிறார்கள் போய்க் கேட்கிறார்கள்.இது ஒரு சேவயைப் பெறுவதற்காக செலுத்தும் பணம். அவர் இசை எனும் சேவையை வழங்குகிறார் அவரது ரசிகர்கள் பணம் செலுத்தி அதைப் பெற்கிறார்கள்.மாவீரர் நள்முழுக்க கனடா முழுக்க கடை திறந்துதான் இருக்கப் போகிறது.தமிழர்கள் தமக்கு தேவையனவற்ரை பெறத்தான் போகிறர்கள்.அதில் ஒன்று கூடுகிறது.இளையறாஜா இசை நிகழ்ச்சி.அவ்வளவே.இங்கு நீங்கள் குத்தி முறிய இதில் எதுவுமில்லை.

அவர் தன்ர பிள்ளைகளுக்கு பிழைப்புக் காட்ட வாறார். அதுக்கு நீங்க.. ஆதரவு அளிச்சு உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுதோ..???????!

தமக்கு எது தேவையோ அதை தேவைபட்டவர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்கிறார்கள்.எல்லாம் பண்டமாற்று மாதிரி வர்த்தகம்தான்.இதில் கவலைப்பட எதுவுமில்லை.தேவைப்பட்டவர்கள் மட்டும்தான் போகப்போகிறார்கள்.

சரியான சினிமா போதையில இருக்கீங்க... தெளிய காலம் எடுக்கும். :lol::icon_idea:

நீங்கள் என்ன கிளி ஜோசியம் பார்ப்பவரா? நான் என்ன போதையில் இருக்கிறன் என்று சொல்ல.?உங்களுக்கு வேறை கனக்க போதை இருக்கு.முதலாவது பொம்பிளைப் போதை.அதை தெளிச்சுக்கொன்டு வந்து மற்றவன்ர போதையைப் பத்தி கதைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

அதைத்தானே நெடுக்ஸ் அண்ணா நானும் சொல்கிறேன். இளையராஜா என்ற வியாபாரி தன் தொழிலை செய்கிறார் இதில் நமக்கு அவரை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கு?

இளையராஜா மட்டுமல்ல எந்த இந்திய,தமிழகத்தமிழனும் முதலில் தன்னை இந்தியனாகவே அடையாளப்படுத்துகிறான் அதன் பின்னர் தான் தமிழன் என்ற அடையாளம் நாம் தான் தொப்பிள்கொடி உறவு, இரத்த உறவு என்று வேஷம் போடுகிறோம்.

நாங்கள் தான் பொழுதுபோக்கைத்தேடி இளையராஜா பின்னால்,இந்தியச்சினிமா பின்னால் போகிறோமே தவிர நீங்கள் சொல்வது போல இளையராஜா இசைப்பிச்சை எடுக்கிறார் என்பது வடிகட்டின முட்டாள் தனம். ஈழத்தமிழரை நம்பியா இளையராஜா இல்லை,இந்திய,தமிழக சினிமா இருக்கிறது???? எவ்வளவு கீழ்த்தரமான கருத்து இது.!!!

இவ்வளவு பேசும் உங்களால் இல்லை ஈழத்தமிழனால் இளையராஜா இசையை அல்லது இந்திய சினிமாவை புறக்கணிக்க முடியுமா??????

ஒரு இசை போட்டியில் கலந்து கொள்வதுக்கு கூட இந்திய இசையை இசைக்க,போட்டிகளில் பங்குபற்ற இந்தியா தானே போகிறீர்கள்? அந்தளவுக்கு கூட சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

Link to comment
Share on other sites

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

அவர்தனது வறட்டு வாதங்கள் வெல்ல யாற்ரை கூஜாவையும் தூக்குவார் ஜீவ.இதை நீங்கள் அவரின் முன்னைய பல கருத்தாடல்களில் அவதானிக்கவில்லையா? அவருக்கு பிரச்சினை அவற்ற வாதம் வெல்லணுமே தவிர வேற எந்த அக்கறையும் கிடையாது.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது காத்திகை மாதத்தில் கேளிக்கை நிகள்வுகள் நடத்தக்கூடாது என்ற கோசமோ அல்லது இளையராயாவுக்கு எதிரான கோசமோ.

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள இலங்கைத்தமிழன் போய் இளையராஜாவை இசை நிகழ்ச்சி நடத்தும்படி கேட்டால் அது இளையாராஜாவின் பிரச்சனையாகாகது. இவர்களின் கருத்தைப்பார்த்தால் கடைசிநேரத்தில் நவம்பர்மாதம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தேசீயவாதிகளுக்கு மூக்கு வேர்த்தது போல இளையராஜாவுக்கும் வேர்க்கவேண்டும் என்பதாக இருக்கின்றது.

ஏற்பாடு செய்தது இலங்கைத்தமிழன். இது பழைய கெத்துடன் இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. புதிதாக எவரும் இவ்வாறான நிகழ்ச்சி நடத்தி காசுபார்ப்பதை விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க கனடாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை. ஆனால் எதிர்ப்பு மட்டும் இளையராஜா மீது. இளையராஜாவை எதிர்ப்பவர்களின் அடிப்படையே மிக அருவருக்கத்தக்கது.

தமிழ்த்தேசியன் கேட்டது நியாயமான கேள்வி. ரொறன்ரோவில் தமிழர் என்றால் அது ஈழத்தமிழர்மட்டுமில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடத்த ரொறன்ரோ அதை அண்டியவிடங்களில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஏனைய மாநிலைத்தைச் சேர்ந்த இளையராஜா ரசிகர்களே போதுமானது. இனிவரும் காலங்களில் இந்தியக் கலைஞர்கள் நிச்சயம் இலங்கைத்தமிழர்கள் அல்லாத இந்தியர்களின் அனுசரணையுடனே வர விரும்புவார்கள். அப்படி வரும்போது மாவீரர் மாதமல்ல வாரம் நாள் என்று கூட எதையும் புடுங்க முடியாது. கனடா சாட்டப்படியும் இவ்வாறான காரணங்களை சொல்லி எந்த இடையூறும் விழைவிக்கமுடியாது. புலிகள் அமைப்பு அது சார்ந்த செயற்பாடு பயங்கரவாதப் பட்டியலின் கீழ்தான் கனடாவில் இந்த நிமிடம் வரை இருக்கின்றது. இது நீக்கப்படுவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை.

இந்தியர்கள் இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் செய்தார்கள். இலங்கைத்தமிழர் செய்த அரசியல் மறந்தாச்சா? போராட்டத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மேற்குநாடுகளில் அசைலம் அடித்ததை விடவா ஒரு அரசியல்? நாப்பது லட்சம் மக்ளுக்கான விடுதலையை வெறும் ரெண்டு மூன்று லட்சம் வன்னியின் வறிய மக்களின் தலைகளில் சுமத்தி விடுதலை பெற முற்பட்டதை விடவா ஒரு அரசியல்? நாங்கள் எப்படியாவது சர்வதேசத்தை கொண்டு காப்பாற்றுவோம் என்று தாயகப்போராட்டத்தை முள்ளிவாய்கால்வரை ஈழுத்துச்சென்று குழந்தை குட்டிகளை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? அரச கட்டுப்பாட்டிலும் மேற்குநாடுகளிலும் புலம்பெயர்ந்து ஏவல்த்தேசியம் செய்து மக்களை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? யுத்தத்துக்கென்று காசு சேர்த்து ஆட்டையை போட்டதை விடவா ஒரு அரசியல்? இன்னும் நூறு கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம். ஒரு விரல் என்னுமொருவனை சுட்டிக்காட்டமுன்பு நான்கு விரல் எங்கள் நெஞ்சையே சுட்டிக்காட்டகின்றது. நாங்கள் எங்களை நாங்களே தின்று புளிச்சல் ஏவறைவிடும் பரதேசிக்கூட்டம். தமிழ்நாட்டு அரசியல் வாதியானலும் சரி இலங்கைத்தமிழன் ஆனாலும் சரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளே ! இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் தெரியும் தன்னினத்தையே தனக்குள் குழிதோண்டிப்புதைக்கும் இந்தப் பரதேசிக் கூட்டத்தை வைத்த ஒரு மயிரும் புடுங்க முடியாது என்று. அதனால் தான் எத்தனை போர்க்குற்றம் செய்தாலும் சிங்களவனையே அனுசரித்து உலகநாடுகள் போய்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

Link to comment
Share on other sites

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

Link to comment
Share on other sites

[size=4]ஆதாரங்களுடன் இவை முன்வைக்கப்பட்டால் நன்று.[/size]

[size=4]இல்லாவிட்டால் நாம் அனைவருமே முட்டாள்கள் ஆக்கப்படுகின்றோம்.[/size]

Link to comment
Share on other sites

[size=4]ந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=5]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

இளையராஜா பாடினால் தாயக விடுதலை ஆதரவு சிதைந்து போகுமா?????????????

அவர்கள் யாராயிருந்தாலும் என்ன? எல்லாம் சொல்லவா வேணும்?? அவர்கள் நன்மை செய்யாவிடிலும் பறுவாயில்லை தீமை செய்யாவிட்டால் சரி.

[size=5]ஆட்களிட்டை சேர்த்த காசிற்கே விபரம் இல்லை, அதுக்கை இதுக்கு ஒரு விபரம் ????[/size]

Link to comment
Share on other sites

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

அர்ஜுன் அண்ணா.உங்களுக்கு ஒரு தகவலை எப்பிடி பப்ளிக்காய் வைக்கிறதெண்டு தெரியேல்ல.இப்பிடி ஊகமாய் எழுதுரதாலை உங்கட கருத்து அடிபட்டுப் போகுது உண்மையாய் இருந்தாலும்.உதாரணத்துக்கு இதில் எழுதியதில் நீங்கள் வடிவாக தெளிவாக எழுதுவதானால்

சீமான் எப்ப வந்து தங்கினார்?

குறிப்பீட்ட வர்த்தகர் வீடு எங்கை இருக்கு?

சாப்பாட்டுக் கடையின் பெயர்

எப்படி இயக்க காசை அடித்தார்

எப்படி இயக்கத்தின் காசு இவரிடம் போனது

அவருடன் மற்ற தமிழ்க் கடைக்காறர் எப்படி கூட்டு வைத்திருக்கார்,வியாபாரத்திலா நட்பிலா?

காணி எங்கை வேண்டி இருக்கார்(முகவரி)

கடையின் பெயர்

சிங்கப்பூரில் எப்படி வேலை செய்தார்

பெயர்

இப்படி எல்லாதகவல்களையும் புட்டு புட்டு வைத்து ஆதார பூர்வமாக எழுதணும் அண்ணா.அப்பதான் உங்க தகவல்களுக்கு ஒரு நம்பகத்தன்மை வரும்.

Link to comment
Share on other sites

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

Link to comment
Share on other sites

[size=5]http://www.trinitytechinc.ca/ [/size]

[size=4]இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

Link to comment
Share on other sites

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

அதுதானே........ கனடிய இனம் ,கனடிய மொழி ,நாங்கள் கனடாக்காரர் ........[நிறத்தை தவிர]

Link to comment
Share on other sites

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

தமிழ்சூரியன்,

தீவிரமாக போர் நடைபெற்ற காலங்களிலும் கனடாவில் பல நூற்றுக்கணக்கான இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றினை ஒழுங்கு படுத்தியவர்களில் அநேகர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த அமைப்புகளும் தான். அவற்றின் பின்னும் மக்கள் தெருக்களில் பனியிலும் குளிரிலும் விறைக்க விறைக்க போராட்டத்துக்காக அணி திரண்டனர்.

இசை நிகழ்ச்சி பார்ப்பதால் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்பது மீது வைக்கப்படும் மிக கேவலமான ஒரு விமர்சனம் ஆகும். மக்கள் பற்றிய இத்தகைய தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கான போராட்டத்தினை நடத்தவும் முடியாது அல்லது மக்களுக்கான இசையை வெளிப்படுத்தவும் முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.