Jump to content

உருளைக்கிழங்கு போண்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது ஏதேனும் காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை போண்டா போல செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

[size=4]

23-aloobonda.jpg[/size]

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2

கடலை மாவு - 1 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை:[/size]

[size=4]முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, சிறிது மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக்கி, கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது போல் அனைத்தையும் செய்து கொள்ளவும்.[/size]

[size=4]இப்போது சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி!!![/size]

[size=4]http://tamil.boldsky...nda-002205.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு போண்டா எனக்கு பிடிக்கும்.-

ஆனால் போண்டா உருண்டையாக பொரிக்க சொல்லி இருக்கு பட்............ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு போண்டா எனக்கு பிடிக்கும்.-

ஆனால் போண்டா உருண்டையாக பொரிக்க சொல்லி இருக்கு பட்............ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கே

கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் சரிதானே ............. அதேபோல வேற வடிவில் இருந்தால் என்ன போண்டா சுவை வந்தால் சரிதானே :D

Link to comment
Share on other sites

உருளைக்கிழங்கு போண்டா எனக்கு பிடிக்கும்.-

ஆனால் போண்டா உருண்டையாக பொரிக்க சொல்லி இருக்கு பட்............ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கே

சும்மா எல்லாத்துக்கும் கேள்வி கேட்ககூடாது கறுப்பி :D

Link to comment
Share on other sites

உருண்டையிலாத போண்டாவை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இண்டைக்கு உருண்டையில்லாத போண்டாவை ஏற்று கொண்டால் நாளை லட்டும் உருண்டை இல்லாமல் போகும்.

செஞ்சால் உருண்டையா செய்யுங்கோ இல்லையெனில் போண்டாவே வேண்டாம்.

உருண்டையான போண்டாவை விரும்புவோர் சங்கம், மற்றும்

கண்ணா போண்டா தின்ன ஆசையா சங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருண்டையிலாத போண்டாவை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இண்டைக்கு உருண்டையில்லாத போண்டாவை ஏற்று கொண்டால் நாளை லட்டும் உருண்டை இல்லாமல் போகும்.

செஞ்சால் உருண்டையா செய்யுங்கோ இல்லையெனில் போண்டாவே வேண்டாம்.

உருண்டையான போண்டாவை விரும்புவோர் சங்கம், மற்றும்

கண்ணா போண்டா தின்ன ஆசையா சங்கம்

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போண்டா எனும் போது, யாழ் இந்துவில், கான்டீன் வைத்து இருந்த போண்டா நடராஜாவின் நினைவு தான் வருகின்றது.

மஞ்சள் நிறத்தில், தினமும் ஒரே சுவையில் (சரியான அளவில் உப்பு, உறைப்பு) வரும். மிகவும் பிரபல்யம் ஆனதால் விரைவில் முடிந்து விடும்.

நல்ல பழக்கம் உள்ளவர்களுக்கு, கீழே ஒளித்து வைத்து எடுத்து கொடுப்பார் நடராயர்.

என்ன, கடன் மட்டும் கிடையாது. கேட்டால், தந்தால் உன்னை இங்க பாக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நீ வர வேண்டும். அது தான் முக்கியம் என்று ஒரு போடு வேற நடராஜா, போடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருண்டையிலாத போண்டாவை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இண்டைக்கு உருண்டையில்லாத போண்டாவை ஏற்று கொண்டால் நாளை லட்டும் உருண்டை இல்லாமல் போகும்.

செஞ்சால் உருண்டையா செய்யுங்கோ இல்லையெனில் போண்டாவே வேண்டாம்.

உருண்டையான போண்டாவை விரும்புவோர் சங்கம், மற்றும்

கண்ணா போண்டா தின்ன ஆசையா சங்கம்

:lol::D இதை நானும் உண்போர், குடிப்போர் & அக்கபோர் சங்கங்களினாலும் வண்மையாக கண்டிக்கிறேன்

Link to comment
Share on other sites

போண்டா எனும் போது, யாழ் இந்துவில், கான்டீன் வைத்து இருந்த போண்டா நடராஜாவின் நினைவு தான் வருகின்றது.

மஞ்சள் நிறத்தில், தினமும் ஒரே சுவையில் (சரியான அளவில் உப்பு, உறைப்பு) வரும். மிகவும் பிரபல்யம் ஆனதால் விரைவில் முடிந்து விடும்.

நல்ல பழக்கம் உள்ளவர்களுக்கு, கீழே ஒளித்து வைத்து எடுத்து கொடுப்பார் நடராயர்.

என்ன, கடன் மட்டும் கிடையாது. கேட்டால், தந்தால் உன்னை இங்க பாக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நீ வர வேண்டும். அது தான் முக்கியம் என்று ஒரு போடு வேற நடராஜா, போடும்.

போண்டா என்ற தலையங்கத்தை பார்த்து யாழ் இந்து கண்டீன் நடராஜாவின் போண்டாவை பற்றி எழுதுவம் என்று வந்தால் இந்த பதிவு இருக்கு ,ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் .நன்றிகள் நாதமுனி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போண்டா சாப்பிட்டு கனநாள். விரைவில்... செய்து பார்க்க வேணும். நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜுன்,

உருண்டை போண்டா வேண்டுவார், நம்ம கறுப்பி தந்திருக்கும் பக்குவத்தினை பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15014#entry231421

Link to comment
Share on other sites

நேற்று மாலை வேளையில் தேநீருடன் சாப்பிடுவதற்கு கொஞ்சம் உறைப்பு அதிகமாக போட்டு செய்திருந்தேன் நல்ல இருந்தது :)

இணைப்புக்கு நன்றி தமிழரசு அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜுன்,

உருண்டை போண்டா வேண்டுவார், நம்ம கறுப்பி தந்திருக்கும் பக்குவத்தினை பாருங்கள்.

http://www.yarl.com/...014#entry231421

இதையும் தேடி எடுத்து இணைத்த :) ஒரு சபாஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் தேடி எடுத்து இணைத்த :) ஒரு சபாஷ்

உருண்டை தந்த கறுப்பி வாழ்க :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.