Jump to content

ஆண்கள் எப்போது, வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22-teen-girls.jpg

ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...?

லண்டன்: பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.

6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.

இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.

வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.

அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.

பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்யப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம். கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நன்றி தற்ஸ்தமிழ்.

நீங்க எப்போ..... வயசுக்கு வந்தீங்க, என்று ஞாபகமிருக்கா....

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, நான்கு வயதிலேயே.... பூப்பெய்தும் அறிகுறி தென்பட ஆரம்பித்துவிட்டது.

அதுக்காக... பிஞ்சிலை பழுத்தது, என்று நீங்க நினைக்கப்படாது. :D:lol:

Link to comment
Share on other sites

வந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்க...............ஏனனில் நான் இன்னும் வரவில்லை :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்சில பழுத்ததோ இல்லையோ எண்டு தமிழ்ச்சிறி நீங்கள் சொல்லவே தேவை இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, நான்கு வயதிலேயே.... பூப்பெய்தும் அறிகுறி தென்பட ஆரம்பித்துவிட்டது.

அதுக்காக... பிஞ்சிலை பழுத்தது, என்று நீங்க நினைக்கப்படாது. :D:lol:

எனக்கும் தெரியலயப்பா

எப்ப இருந்து அசிங்கப்படுத்தின்னான் என்று சொல்லவும்

அவா எங்க இருக்கிறா என்றும் தெரியல. :wub:

வந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்க...............ஏனனில் நான் இன்னும் வரவில்லை :D:icon_idea:

இன்னுமா??????????????? :lol::D :D

Link to comment
Share on other sites

முடி வளருதல் போன்ற பௌதீக ரீதியான மாற்றங்கள் பதினைந்தின் இறுதியில்தான் ஆரம்பித்தது. மற்றும்படி நினைவு தெரிந்த நாளிலிருந்தே தயார் நிலையில்தான் இருந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடி வளருதல் போன்ற பௌதீக ரீதியான மாற்றங்கள் பதினைந்தின் இறுதியில்தான் ஆரம்பித்தது. மற்றும்படி நினைவு தெரிந்த நாளிலிருந்தே தயார் நிலையில்தான் இருந்தோம்.

வெரி, வெரி லேற் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிப் பையன்.. நான் வயசுக்கு வந்திட்டேன்..!

மூஞ்சியில்

புள்வெளி துளிர்க்கும்

காலிடை

காடு பற்றி வளரும்..

காட்டிடை

ஒற்றைத் தென்னை மரம்

ஓங்கி வளரும்

தேகம்

"ஓடிக்குளோன்" பூசாமலே

வாசம் வீசும்..!

கானகத்துக் குயிலிசை

காண்டாமிருகக் கத்தலாகும்

பறட்டைத் தலை

வாரி இழுக்கும்

இல்ல.. கொம்பு வைக்கும்

கசங்கிய சட்டை

"அயன்" பண்ணும்

அரைக்காற்சட்டை

பாதம் வரை

நீண்டு நீளும்..!

பக்கத்து வீட்டு

பருவப் பாப்பா

நடு நிசியில்

கனவில் வரும்..

ஆடைகள் ஈரமாகும்

இன்பப் பாய்ச்சல்

இடைக்கிடை நிகழும்..

இப்படித்தான்

அம்மா கருப்பை

தாண்டி வந்து

பன்னிரு ஆண்டில்

ஆனது..!

கூடவே...

பள்ளியில்

தூசணம்

பொழுது போக்காகும்

கை நடுவிரல்

சுட்டுவிரல் பெருவிரல்

அடிக்கடி

கூட்டம் போடும்...

கடைசி விரல்

நக அளவு

விட்டம் பார்க்கும்..

விஞ்ஞான பாடத்தில்

உயிரியல் பிடிக்கும்

அதிலும்

இனப்பெருக்கம்

ரெம்பப் பிடிக்கும்...!

இளையராஜா

ஏ ஆர் ரகுமான்

கிணுகிணுத்த

தென்னை மரம் சுற்றும்

பாடல்கள்

இன்னிசையாகும்

நாவலும்

கதைகளும்

கண்கள் தேடிப் படிக்கும்

கவிதைகள்

விரல்கள் தானே

கிறுக்கும்..

அழகு

இருக்கோ இல்லையோ

மனம்

அடிக்கடி

கண்ணாடியில்

லயித்துக் கொள்ளும்..!

ஆபத்து..

தெரிந்தும்

கைகள் விட்டு

சைக்கிள் பறக்கும்

கார்கள் உறுமும்

பாடல் உரக்கக் கத்தும்..

காது செவிடானாலும்

அவள் காதில் விழனும்

மனம் கட்டளை போடும்..!

பாவை அவள்

யாராய் இருப்பினும்..

வாசம்

தேடி நுகரும்

பரிசம்

மின்சாரம் பிறப்பிக்கும்

மூளை

கிறுகிறுக்கும்

உடல்

காற்றில் பறக்கும்

மனம்

தனிமை விரும்பும்..!

பொதுவெளியில்

மங்கையர் முன்

தலைகள் கவிழும்..

கிணற்றடியில்

கண்கள் மேயும்..

யன்னல் இடைவெளிகள்

திரைகளாகும்

அட்டைப் படங்கள்

கசங்கலாகும்...!

இவைதாம்

அறிகுறிகள்

ஆணது

பூப்பெய்தலுக்கு..!

அது

ஏழிலும் வரலாம்

எழுபதிலும் நிகழலாம்..!

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கவிதையாலேயே சொல்லிவிட்டார். இதுக்குப் பிறகும் வேறு விளக்கம் தேவையா? தேவையானவர்கள் இப்போதும் 10 வயதில் இருக்கின்றார்கள் அல்லது ஒண்ணும் தெரியாத பாப்பாவாக இருப்பார்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நெடுக்கு

வழி மறித்து விட்டீர்

இனி எதை எழுதுவார் ஏனயோர்??? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், எல்லா சரியாத்தான் நடந்திருக்குப் போல கிடக்கு!

பிறகு ஏன் இந்தச் சந்நியாசம்?

கவிதை, அருமை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், எல்லா சரியாத்தான் நடந்திருக்குப் போல கிடக்கு!

பிறகு ஏன் இந்தச் சந்நியாசம்?

கவிதை, அருமை! :D

எல்லாம் ஒழுங்கா இருந்து மனசை.. உடலை அடக்கிப் போறது தான் சந்நியாசம். ஒன்றுமே இல்லாமல் போவது.. பிழைப்புயாசகம்..! :lol::D

Link to comment
Share on other sites

ஆறு வயசில் வயசுக்கு வாரான்கள் என்பது உண்மைபோலத்தான் இருக்கு.. :unsure: பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகேக்குள்ளைதான் தெரியுதே.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்க...............ஏனனில் நான் இன்னும் வரவில்லை :D:icon_idea:

தமிழ்சூரியன் வயசுக்கு வரவில்லை என்று, அப்பவே... நினைச்சன்.

வயசுக்கு வந்தவுடன், எங்களுக்கு சொல்லி அனுப்புங்கள்..... ஜாம், ஜாம்.... என்று ஒரு கொண்டாட்டம் வைப்போம் :D.

பின்சில பழுத்ததோ இல்லையோ எண்டு தமிழ்ச்சிறி நீங்கள் சொல்லவே தேவை இல்லை :D

சுமோவுக்கும்... என்னைப் பற்றி தெரிந்து விட்டதா.... :lol:

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் வயசுக்கு வரவில்லை என்று, அப்பவே... நினைச்சன்.

வயசுக்கு வந்தவுடன், எங்களுக்கு சொல்லி அனுப்புங்கள்..... ஜாம், ஜாம்.... என்று ஒரு கொண்டாட்டம் வைப்போம் :D.

நல்லது சிறி அண்ணா வயதுக்கு வருவதற்கு என்ன செய்யவேண்டும் ????..............விளக்கம் தேவை .....[படங்களுடன் ] :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரியலயப்பா

எப்ப இருந்து அசிங்கப்படுத்தின்னான் என்று சொல்லவும்

அவா எங்க இருக்கிறா என்றும் தெரியல. :wub:

விசுகு நீங்க, வயசுக்கு வந்திட்டீங்கள் என்று, எப்ப... உணர்ந்தீங்கள்.

அல்லது, அதுக்கு முதலே.... மேய்ச்சலுக்கு, கிளம்பிட்டீங்களா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடி வளருதல் போன்ற பௌதீக ரீதியான மாற்றங்கள் பதினைந்தின் இறுதியில்தான் ஆரம்பித்தது. மற்றும்படி நினைவு தெரிந்த நாளிலிருந்தே தயார் நிலையில்தான் இருந்தோம்.

வெரி, வெரி லேற் :o

பதினைந்தின் இறுதியில் முடி வளர்ந்தது என்றால்.... புங்கை சொன்னமாதிரி சரியான லேற்.

மற்றப் பெடியள், மீசை முளைக்கவில்லையா.... என்று பகிடி பண்ணியிருப்பார்களே தப்பிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிப் பையன்.. நான் வயசுக்கு வந்திட்டேன்..!

மூஞ்சியில்

புள்வெளி துளிர்க்கும்

காலிடை

காடு பற்றி வளரும்..

காட்டிடை

ஒற்றைத் தென்னை மரம்

ஓங்கி வளரும்

தேகம்

"ஓடிக்குளோன்" பூசாமலே

வாசம் வீசும்..!

கானகத்துக் குயிலிசை

காண்டாமிருகக் கத்தலாகும்

பறட்டைத் தலை

வாரி இழுக்கும்

இல்ல.. கொம்பு வைக்கும்

கசங்கிய சட்டை

"அயன்" பண்ணும்

அரைக்காற்சட்டை

பாதம் வரை

நீண்டு நீளும்..!

பக்கத்து வீட்டு

பருவப் பாப்பா

நடு நிசியில்

கனவில் வரும்..

ஆடைகள் ஈரமாகும்

இன்பப் பாய்ச்சல்

இடைக்கிடை நிகழும்..

இப்படித்தான்

அம்மா கருப்பை

தாண்டி வந்து

பன்னிரு ஆண்டில்

ஆனது..!

கூடவே...

பள்ளியில்

தூசணம்

பொழுது போக்காகும்

கை நடுவிரல்

சுட்டுவிரல் பெருவிரல்

அடிக்கடி

கூட்டம் போடும்...

கடைசி விரல்

நக அளவு

விட்டம் பார்க்கும்..

விஞ்ஞான பாடத்தில்

உயிரியல் பிடிக்கும்

அதிலும்

இனப்பெருக்கம்

ரெம்பப் பிடிக்கும்...!

இளையராஜா

ஏ ஆர் ரகுமான்

கிணுகிணுத்த

தென்னை மரம் சுற்றும்

பாடல்கள்

இன்னிசையாகும்

நாவலும்

கதைகளும்

கண்கள் தேடிப் படிக்கும்

கவிதைகள்

விரல்கள் தானே

கிறுக்கும்..

அழகு

இருக்கோ இல்லையோ

மனம்

அடிக்கடி

கண்ணாடியில்

லயித்துக் கொள்ளும்..!

ஆபத்து..

தெரிந்தும்

கைகள் விட்டு

சைக்கிள் பறக்கும்

கார்கள் உறுமும்

பாடல் உரக்கக் கத்தும்..

காது செவிடானாலும்

அவள் காதில் விழனும்

மனம் கட்டளை போடும்..!

பாவை அவள்

யாராய் இருப்பினும்..

வாசம்

தேடி நுகரும்

பரிசம்

மின்சாரம் பிறப்பிக்கும்

மூளை

கிறுகிறுக்கும்

உடல்

காற்றில் பறக்கும்

மனம்

தனிமை விரும்பும்..!

பொதுவெளியில்

மங்கையர் முன்

தலைகள் கவிழும்..

கிணற்றடியில்

கண்கள் மேயும்..

யன்னல் இடைவெளிகள்

திரைகளாகும்

அட்டைப் படங்கள்

கசங்கலாகும்...!

இவைதாம்

அறிகுறிகள்

ஆணது

பூப்பெய்தலுக்கு..!

அது

ஏழிலும் வரலாம்

எழுபதிலும் நிகழலாம்..!

:lol::D

ஆண்களுக்கு ஏற்படும் பருவமாற்றத்தை.... அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து மேய்ந்து, எல்லாவற்றையும் தவற விடாமல் எழுதிய நெடுக்ஸ் திறைமைசாலிதான். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வயசில் வயசுக்கு வாரான்கள் என்பது உண்மைபோலத்தான் இருக்கு.. :unsure: பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகேக்குள்ளைதான் தெரியுதே.. :rolleyes:

ஆறு வயசிலை வயசுக்கு வாறவர்கள், பிற்காலத்தில் வயாகரா குளிசை பாவிக்க வேண்டி வருமோ என்ற அச்சமும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்க, வயசுக்கு வந்திட்டீங்கள் என்று, எப்ப... உணர்ந்தீங்கள்.

அல்லது, அதுக்கு முதலே.... மேய்ச்சலுக்கு, கிளம்பிட்டீங்களா? :D:lol:

சிறி

என்னை விட்டுங்க...

எழுதினா பல நாற்றங்கள் வெளியில வந்திடும் :D

அது தான் தங்கள் நோக்கமோ தெரியவில்லை. :lol:

ஆனால் உங்கள் கேள்விக்கு ஒன்றை மட்டும் பதிலாக எழுதமுடியும்

கிராக்கி அதிகம் இருந்ததால் பிராட்டிகல் செய்து கொண்டே இருந்ததால் ஒவ்வொரு பருவமும் நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால் எழுதினால் அல்லது அத்தாட்சி வைத்தால் யாழ் நாறிடும்.

இத்துடன் நிறுத்துவது தான் நமது கௌரவத்துக்கு நல்லது.

***ஏதாவது கேள்வி இருந்தால் 1ந்திகதிக்கு முன் கேளுங்கள். அடுத்த 31வரை எல்லாவற்றையும் நிறுத்தப்போகின்றேன்.

Link to comment
Share on other sites

பதினைந்தின் இறுதியில் முடி வளர்ந்தது என்றால்.... புங்கை சொன்னமாதிரி சரியான லேற்.

மற்றப் பெடியள், மீசை முளைக்கவில்லையா.... என்று பகிடி பண்ணியிருப்பார்களே தப்பிலி.

எல்லாரும் கேலி பண்ணுவார்கள்.

மீசையும் இல்லாமல் கட்டையாக இருப்பேன். ஒருத்தியும் கணக்கில எடுக்க மாட்டாளுகள். வகுப்பில இருந்த பெட்டைகள் எல்லாம் என்னை விட உயரம். அடையாள அட்டை எடுக்கும் பொழுது எண்ட உயரத்தை அளக்க, கூடப் படித்த மாணவிதான் உதவி செய்தாள். சுவரில் சாய்ந்து நின்ற என்னை அவள் அளக்கும் பொழுது, கண்ணுக்கு முன்னால் குத்திட்டு நின்றதைக் கண்டு அதிர்ந்து போனேன். அவ்வளவு கட்டை.

A /L இற்கு வந்த பிறகு பெரும் மாற்றம். நல்ல உயரமான வளர்த்தி. வகுப்பிலும் உயரமானவன். மீசையும் அரும்பத் தொடங்கியது. அதற்கு பசு நெய் பூசி அழகாக வளர்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கேலி பண்ணுவார்கள்.

மீசையும் இல்லாமல் கட்டையாக இருப்பேன். ஒருத்தியும் கணக்கில எடுக்க மாட்டாளுகள்.

ஏனப்பா சிறி

உனக்கே இது நல்லா இருக்கா

இப்படி சொந்தக்கதை சோகக்கதையை சொல்லி அழ வைச்சிட்டீரே.......... :lol::D :D

Link to comment
Share on other sites

இப்படி சொந்தக்கதை சோகக்கதையை சொல்லி அழ வைச்சிட்டீரே.......... :lol::D :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவரில் சாய்ந்து நின்ற என்னை அவள் அளக்கும் பொழுது, கண்ணுக்கு முன்னால் குத்திட்டு நின்றதைக் கண்டு அதிர்ந்து போனேன். அவ்வளவு கட்டை.

[size=4]இந்த நகசுவைக்காகத் தான், உங்களைச் சீண்டினேன், தப்பிலி![/size][size=4] [/size]

[size=4] :Dநல்லாருக்கு![/size][size=4] :D[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.