Jump to content

காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?


Recommended Posts

கள்ளச் சாமியள் எல்லாம் கடவுளின் வழியா காமத்தைக் காணுறானுகள். :icon_idea:

:D  :D  :D

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

கருத்துகளுக்கு நன்றி மல்லை, புங்கை, சாம்பவி, ஆமிக்காரன் மற்றும் தமிழ்சூரியன்.

கட்டுரையின் நோக்கம் கருதி காந்தியை கொஞ்சம் தள்ளி வைத்து விடலாம் என்று எண்ணுகிறேன் :)

பல பேர் தந்திரம் என்றாலே காமம் சார்ந்தது மட்டுமே என்று எண்ணுகின்றனர். அடிப்படையில் தந்திரம் பல்வேறு கூறுகளைக் கொண்டது. உலகம் முழுவதும் வியாபித்துக் காணப்படுகிறது. இந்து மத தந்திரம், புத்த மத தந்திரம், ஜென் மத தந்திரம்,சீக்கியம், மேற்கிந்திய தந்திரம் என பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக பயிற்சிக்கப்படுகிறது. தந்திரத்தின் ஒரு கூறே யோகம்(yoga).

யோகம் தந்திர வழிமுறையின் கூறு எனக் காரணம் என்ன ?

யோகாவைப் பற்றி தெரியவேண்டுமெனில் தந்திர மதம், வேத மதம் இவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி கொஞ்சம் தெரிய வேண்டும்.

தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைய நகரம் மெஹெர்கர். இதன் காலம் கி.மு.7000 (http://en.wikipedia.org/wiki/Periodization_of_the_Indus_Valley_Civilization) இந்நாகரீகத்தின்/ குடியேற்றத்தின்  எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இதுதான் ஆசியாவின் வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஆசியாவின் மிகப்பழைய மண்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன. சிந்து சமவெளியில் உள்ள ஹரப்பா மொகெஞ்சதாரோ வின் காலம் கி.மு. 5000. ஹரப்பா மொகெஞ்சதாரோவை விட 2000 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டது மெஹெர்கர். மெஹெர்கரில் பேசப்பட்ட மொழி பிராகுயி(Brahui) எனவும் சிந்துவெளி நாகரிகத்தில் பேசப்பட்ட மொழியின் நேர் வழித்தோன்றலாக பிராகுயி இருக்க கூடும் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.  பிராகுயி மொழி திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தது.  இந்த மொழி அப்படியே தமிழ் மொழியை ஒத்து உள்ளதாக மொழி அறிஞர்கள் கூற்று.

ஹரப்பா மொகெஞ்சதாரோவில் தந்திரம் தொடர்பாக காணப்படும் முக்கியமான சிலைகள்

1. லிங்கம்
2. யோனி தெரிய அமர்ந்துள்ள சக்தி அல்லது பெண் தெய்வம்
3. பசுபதி நிலையில் உள்ள சிவன் அல்லது மிருகங்கள் சூழ  யோகி நிலையில் உள்ள ஒரு சிலை

முதல் இரண்டும் தந்திர முறை வழிபாடு சிந்து சமவெளியில் இருந்ததை  சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்துகிறது. மூன்றாவது சிலையை ஒட்டி சில சந்தேகங்கள் நிலவுகின்றன. தொல்லியல் துறை நிபுணர் ஜான் மார்ஷல் இதை பசுபதி வடிவில் உள்ள சிவன் என்று கூறினார். ஆனால் தற்போதுள்ள ஹரப்பா மொகெஞ்சதாரோ திட்டக்குழு தலைவர் இது ஒரு யோக நிலையில் உள்ள சிலை என்று கூறுகிறார். பசுபதி நிலை என்றால் மூன்று முகம் இருக்க வேண்டும் ஆனால் இது அப்படி தெரியவில்லை என்பது பல ஆய்வாளர்களின் கூற்று.
IndusProtoSiva.png
பசுபதி சிலையை ஏன் ஆரிய நாகரீகம் என்று சொல்ல வேண்டும்?

ரிக் வேதத்தில் கால்நடைகளின் தலைவனாக பசுபதியை குறிப்பிடுகிறார்கள். ஹரப்பா மொகெஞ்சதாரோவில் காணப்படும் சிலையும் மிருகங்கள் சூழ உள்ளதால் இதை பசுபதி எனக் குறிப்பிட்டு இது வேத நாகரீகம் என்ற ஒரு கூற்றும் உண்டு.

நான்கு வேதத்தை எடுத்தால், காலத்தால் முற்பட்டது ரிக் வேதம் என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ரிக் வேதத்தில் "தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம், நல்ல மழை, நல்ல விளைச்சல், அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களை போற்றும் நோக்கிலே அமைந்தவை". இந்த வேதத்தில் யோகத்தில் முக்கியமான ஆசனம் பற்றியோ, சுவாசம் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. கடைசியாக தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தில் தான் யோகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.மு 7000 அளவில் மெஹெர்கரில் தந்திரம் வழிபாட்டில் இருந்துள்ளது. இப்பொழுது உள்ளது போலவே அப்பொழுதும் சிலர் யோக வழிபாட்டையும், சிலர் பாலியல் தொடர்பான வழிபாட்டையும் மேற்கொண்டுள்ளனர். அது கி.மு 5000 அளவில் யோகிகளின் அரசன் என அழைக்கப்படும் சிவனால் நெறிப்படுத்தப்படுகிறது. அப்பொழுது வேதம் என்பது கிடையாது. கி.மு 3000 ஆண்டுகளில் தான் அதர்வண வேதம் தொகுக்கப்படுகிறது.  ஆக சிந்து சமவெளியில் போற்றப்பட்ட மதம் தந்திரம். அதன் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே யோகம்.

யோகம்(யோகா) ஆரியர்களால் உருவாக்கப்படவில்லை / பயிற்சிக்கப்படவில்லை மாறாக இது தந்திரிகளால்(யோகிகளால்) உருவாக்கப்பட்டு பயிற்சிக்கப்பட்டது. யோகிகள் சாதியத்தை மறுப்பவர்கள், பூஜை புனஸ்காரங்களை வெறுப்பவர்கள். வேதே புரோகிதர்கள் சாதியத்தை ஆதரிப்பவர்கள்,  பூஜை புனஸ்காரங்களை போற்றுபவர்கள்.

இந்து மத யோகாவைப் பற்றி முதன் முதலில் "கத யோகா(Hatha yog)"  என்ற நூலை எழுதியவர் ஸ்வத்மரம. இவர் ஒரு யோகியே. தமிழ்ச் சித்தர்கள் எல்லாம் யோகிகளே அவர்கள் வேத புரோகிதர்கள் கிடையாது.

யோகாவைப் பற்றி கிட்டத்தட்ட என்பது புத்தகங்கள் எழுதிய சத்யானந்த சரஸ்வதியும்(founder of the Bihar School of Yoga), புத்த யோகா ஆசிரியுருமான லாமா யெச்சியும்(Lama Yeshe) யோகாவை இது ஒரு தந்திர முறை என்றே கூறுகிறார்கள். மேலும் சத்யானந்த சரஸ்வதி கூறுகையில் “இப்போது உள்ள இந்து மதம் தந்திரத்தை அடிப்படையாக கொண்டதே அதிகம் பேர் நினைப்பது போல் இது வேத முறையை கொண்டதல்ல”.

பிரபாத் ரஞ்சன் சர்க்கார்(http://en.wikipedia.org/wiki/Prabhat_Ranjan_Sarkar) கூறுகையில் நவீன இந்தியாவின் அடிப்படையான / இயற்கையான வழிபாட்டு முறை தந்திரம் தான் ஆனால் வெளி உலகுக்கு அது வேத முறையில் இருந்து வந்தது போல் காட்டப்படுகிறது.

ஆரிய குடியேற்றம் உண்மையிலே நிகழ்ந்து என்பதை மரபணு சோதனை மூலம் Dr. ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் நிருபித்து உள்ளார். அவரது பேட்டியை இங்கு காணலாம். http://www.rediff.com/news/2002/nov/27inter.htm

 

அவரது ஆராய்ச்சியின் முடிவு இதுதான்..

 

மொழிக் குழுமம்          இனம்                     இந்திய குடியேற்றம்     மதம்
ஆஸ்ட்ரலாய்ட்              ஆஸ்ட்ரலாய்ட்     கி.மு 60,000                       ஆன்மா கோட்பாடு
திராவிடன்                       திராவிடன்            கி.மு 10,000                        தந்திரம்
சீன-திபெத்தியன்            மங்கோலியன்     கி.மு 10,000 – 8000            தந்திரம்
இந்தோ-ஐரோப்பியன்    காக்கேசியன்       கி.மு 6000 – 4000               ரிக் வேதம்
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நண்பர்களுக்கு வணக்கம்....
இது ஒரு நல்ல பதிவூ....தொடர்ந்தும் உரையாடக் கூடியது....
எனக்கும் பங்களிக்க விருப்பம்.... ஆனால் நேரம் ஒரு பிரச்சனை...
 

காமத்திலிருந்து கடவூளுக்கு என ஓசோவின் தமிழ் நுhல் ஒன்று உள்ளது... இது உண்மையிலையெ from sex to super consciousness என்பதை தவறாக மொழிபெயர்த்திருக்கின்றார்கள்...
உண்மையிலையே காமத்திலிருந்து உயரந்த விழிப்பு நிலைக்கு என வந்திருக்க வேண்டும்....
இன்னும் பல முணர்பாடுகள் தவறான விளக்கங்கள் உள்ளன....
நேரம் கிடைக்குமு; பொழுது எனழுதுகின்றேன்...
காமத்தினுடுhக கடவூளைக் காண முடியாது...
ஆனால் கடவூள் தன்iமையை உணரலாதம் என்பதே ஓசோவின் போதனை...

இதை ஒரு நுhலகா "நான் ஒரு கடவூள்" என வெளியிட்டிருக்கன்றேன்....

பார்க்கவூம் நன்றி

Link to comment
Share on other sites

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....


--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

 

Link to comment
Share on other sites

 

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....

--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

வேறு வழியால் கடவுளை கண்டவர்கள் எவரும் இல்லை. அப்படிக் கண்டவர்கள் எவரும் இருந்தால் சொல்லுங்கள்.

காமம் ஒன்றே கடவுளைக் காண்பதற்கான வழி. அவ்வழியில் போகும்போது நீங்களே கடவுளாகின்றீர்கள். எமது தாய்தந்தையர் கடவுளாகி எம்மைப் படைத்தனர் நாங்கள் கடவுளாகி எமது பிள்ளைகளைப் படைக்கின்றோம். கடவுள் மனிதனை இப்படித்தான் படைகின்றரார். கடவுள் என்பது இவ்விடத்தில் காமம் என்னுமொரு இடத்தில் வேறு வடிவமாக இருக்கின்றது. ஒரு மின்கலத்தில் + - இருக்கின்றது அது இரண்டும் இணையும் இடம் கடவுள், கடவுள் அங்கே வெளிச்சத்தைப் படைகின்றார். இப்படியாக கடவுள் எங்கும் எதிலும் நிறைந்து இருக்கின்றார். இவற்றை எல்லாம் சிந்தித்துத்தான் காம நிலையை குறிப்பிடும் சிவலிங்கம் எமது முழுமுதற் கடவுள் வடிவமாக இருக்கின்றது. தனித்த ஒரு நிலை கடவுள் இல்லை. எதிலும் இணையும் நிலையே கடவுள், அதிலிருந்தே எல்லாம் பிறக்கின்றது. இதற்கு எதிரான வழியே ஆட்டுக்குள் மாட்டை விடும் வழி.

Link to comment
Share on other sites

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

 

ஆனால், நீங்கள் காமம்தான் உச்சம் =கடவுள் என்று நினைத்தால், ஜமாயுங்கோ.

 

ஓஷோ ஒர் கோர்ப்பரேற் மோசடிச் சாமியார்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் புத்திசாலியாகவும் படித்தும் இருந்ததால், படித்தவர்களையும் ஏமாற்ற முடிந்தது/முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புணர்தலின் உச்ச நிலையை அடையும் நிலையில், தற்காலிகமாக, மனதின் உணர்வுகள் அனைத்தும் ஒரு நிலைப்படுகின்றன! :o

 

இந்த நிலை சில வினாடிகள் மட்டுமே நீடிக்கின்றது!

 

இந்த நிலையானது, ஞானிகள் கூறுகின்ற 'பரமானந்த நிலையை' ஒத்திருக்கின்றது என்று ஒரு கருத்து உண்டு!

 

ஒருவரது மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும், காமத்துக்கும் உள்ள 'தொடர்பு' இவ்வளவும் மட்டும் தான்! 

 

காமம் என்பது, மேலும் மேலும் இச்சையைத் தூண்டுமேயல்லாது, இச்சைகளைத் துறந்து, மேல்நிலை நோக்கிச் செல்லுவதற்கு உதவாது என்பது தான் எனது கருத்தாகும்!

Link to comment
Share on other sites

காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....

--------------------------------

 

ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

 

http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

 

சோறு - வயிற்றுப்பசிக்கு, காமம் - உடற்பசிக்கு. இவை இரண்டையும் மனத்தை அடக்குவதன்மூலம் கட்டுப்படுத்தலாம், ஆனால் நிறுத்தமுடியாது. ஆதாரம் என்னிடம் இப்போது இல்லாவிடினும் படித்ததில் சேதாரமின்றி என் மனதில் பதிந்தது.

காமத்தால் கடவுளை அடையமுடியுமெனில், திருமணமானபின்னும் எதற்காகக் கோவிலுக்குச் செல்கிறோம்? இருக்குமிடத்திலேயே கடவுளை அடையலாமே....?

 

Link to comment
Share on other sites

தாந்திரீகத்தில் உள்ள சில நன்மைகள்:
 
ஒரு விசயத்தை ஒருவர் செய்வதை விட இருவர் சேர்ந்து செய்யும் பொழுது இலக்கை அடையும் சாத்தியம் அதிகம்.
 
ஆண் பெண் இணைவு இயற்கையானது. மிகவும் நெருக்கமான இணைவு. ஆன்மீக பாதையில் இருவரும் பலவற்றை பகிர்ந்து ஒருமுகமாக ஒருமனத்தோடு ஒருவருக்கு ஒருவர் துனையாக பயனிக்கலாம்.
 
உடல், மனம், சிந்தனைகள் இணையும் போது எத்தகைய ஆன்மிக பலம் !
 
தனியே சாதகம் செய்யும் பொழுது பலவிதமான challenges இற்கு ஒருவர் முகம் கொடுக்க வேண்டிவரும். இதில் பலர் தோல்வி அடைந்து சாதகத்தைக் கைவிடும் நிலைக்கு செல்வர். 
 
ஆனால் தாந்திரீகத்தில் நல்ல துணை வாய்க்கும் போது ஒருவருக்கு ஒருவர் துணையாக challenges ஐ எதிர்கொள்ள முடியும். உடல் எல்லையைத் தாண்டிய ஆன்மீக நிலைய அடையக்கூடியதாக இருக்கலாம்.
 
இங்கு முக்கியமானது இருவரினதும் ஆன்மீக நிலை. [ spiritual state ]
Link to comment
Share on other sites

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

 

ஆனால், நீங்கள் காமம்தான் உச்சம் =கடவுள் என்று நினைத்தால், ஜமாயுங்கோ.

 

 

ஆன்மீக நிலையை அடைய வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு மனிதர்கள் பலவித வழிமுறைகளைக் கையாண்டனர். அகோரிகள், கபாலிகர்கள், வேதமோதுபவர்கள், யோகிகள்....இன்னும் பல வடிவம். இவற்றுள் நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட வழிபாட்டு முறையே தந்திரம். இந்த  தந்திர முறையில் நம் முன்னோர்கள் கடவுள் என்று வழிபட்டது பாலியல் உறுப்புகளையே .... அதை ஆயும் நோக்குடன் தான இந்தக் கட்டுரை எழுதப்பட்டது...

Link to comment
Share on other sites

புணர்தலின் உச்ச நிலையை அடையும் நிலையில், தற்காலிகமாக, மனதின் உணர்வுகள் அனைத்தும் ஒரு நிலைப்படுகின்றன! :o

 

இந்த நிலை சில வினாடிகள் மட்டுமே நீடிக்கின்றது!

 

 

இந்த ஒரு நொடி மட்டும் இருக்கும் நிலையை எப்படி நீட்டிப்பது ?? அதை நீடிக்க என்ன செய்ய வேண்டும் ? அதை நீடிப்பதால் என்ன பலன் ??? இந்தக் கேள்விகளுக்கான பதிலே தந்திர வழிபாடு.

 

ஒழுக்கம் பற்றிய இன்றைய புரிதல்களை ஓரம் கட்டிவிட்டு சற்று உற்று நோக்குவோமானால் தந்திரத்தின் எல்லைகள் விரியும்..... 

Link to comment
Share on other sites

நட்புடன் நண்பர்களுக்கு வணக்கம்.
நாம் எல்லாவற்றையூம் அரைகுறையாகவே புரிந்து வைத்திருக்கின்றே ம்.

ஆனால் எழுதும் பொழுது முழுமையாக அறிந்தவர்கள் போல எழுதுகின்றே ம். செயற்படுகின்றே ம். ஆகவேதான் விளைவூகள் எதிர்மறையாக இருக்கின்றன.

இது நமது போராட்டங்களுக்குமு; பொருந்தும்.

 

நான் ஓசோவை மொக்குத்தனமாக நம்பி பின்பற்றவில்லை...
அவர் கூறியதை புரிந்து கொள்ள முயற்சித்தேன். அதை அனுபவத்தில் அறிய முயற்சித்தேன்.

 

பெரும்பாலானவர்கள் கடவூளையூம் கடவூள் தன்மையையூம் ஒன்றாகப் போட்டு குழுப்புகின்றீரு;கள்.
கடவூள் என்பது ஒரு கற்பனை.
கடவூள்  தன்மை என்பது நம்மால் புரிய முடியாத வெளிப்படுத்த முடியாத  ஒரு உணர்வூ. அனுபவம்.

இதை தனியாக முயற்சிப்பதனுடாகவூம் அறியலாம்.
இணைந்தும் அறியலாம். அது அவரவர் ஆற்றலைப் பொருத்த விடயம்.
 

எதையூம் அடக்குவதனாலோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதனாலோ புரிந்தோ அறிந்தோ கொள்ள முடியாது.
நமது விழிப்பு நிலையையூம் பிரக்ஞையையூம் வளர்ப்பதன் மூலம் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியிருப்பதையூம் ஆழமாகப் புரிந்து கொள்ளலாம்.
 

காமத்தின் உச்ச ஓகாசத்தில் பரவசநிலையில் நம:து தன்முனைப்பு இல்லாது போய்விடுகின்றது.... நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும்  துடிப்புடன் இயங்குகின்றன.... மனதில் எண்ணங்கள் இல்லாமல் செல்கின்றது..
இவ்வாறான நிலையை காமத்தினுடாகவூம் அடையலாம்..
தியானத்தினுடாகவூம் அடையலாம்.
யோகாவினுடாகவூம் அடையலாம்.
தெரிவூ நம்முடையது.

 

ஆனால் காமத்தினுடாக அடைய  சிறிது கணமே; நிலைத்திருப்பதால் சிற்றின்பம் என்கின்றே ம். ஏனெனில் உடனடியாக பழைய மனநிலைக்கு தன்முனைப்புடன் வந்துவிடுவோம்.

ஆனால்தியானதினுடாக அடையூம் பொழுது நமக்குள் உருவாகின்றது... வளர்சின்றது.... எதிலும் நாம் தங்கியிருக்கவில்லை....ஆகவெ பேரின்பம் எனப்படுகின்றது.

 

இந்தியாவின் கஜிரோ கோவில்களுக்கு சென்றிருக்கின்றே;ன.
அதன் வெளியே நீங்கள் அறிந்தபடி எல்லாவிதமான உடலுறவூ மன இச்சைகள் ஆசைகள் என்பன சிலைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலின் உள்ளே ஒன்றுமில்லை. வெறுமையான இடமே இருக்கின்றது. சில கோயில்களில் ஊச்சியிலிருந்து ஒளி வருகின்றது.
இதன் அர்த்தம் நமது மன ஆசைகளை; இச்சைகளை அனுபவித்து அல்லது புரிந்து கொள்வோமானால் நம் மனதிலிருந்து காய்ந்த இலைகளால உதிர்ந்து கொட்டிவிடும்.
அப்பொழுது நம்மை; நாம் அறியலாம் என்கின்றனர்.
 

ஆனால் சமூகம் ஆதிக்க கருத்துக்கள் நம்மை நாம் அறிவதற்கு தடையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக காமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அது தொடர்பான எதிர்மறை பார்வையை நமக்குள் விதை;துள்ளது. ஆகவே காம உறவில் குற்றவூணர்வில்லாமல் சுதந்திரமாக இயங்க முடியாதுள்ளது. இவ்வாறான குற்ற உணர்ச்சிகளை பயன்படுத்தி சமூக ஆதிக்க சக்திகளும் மத நிறுவனங்களும் தாம் விரும்பியபடி நம்மை வழிநடத்துகின்றனர்.
 

இதைப் புரிந்து கொண்டால் தெரிவூ நம்முடையது.
நாம்  மந்தைக் கூட்டங்களாக பின்தொடரப்போகின்றே மா...
அல்லது சுதந்திரமான மனிதர்களாக கூட்டுறவூடன் இணைந்து  செயற்படப்போகின்றே மா....
தெரிவூ செய்யூங்கள்....
நன்றி

Link to comment
Share on other sites

காமத்தின் மூலம் குழந்தையை உருவாக்கி படைப்புத்தொழிலைச் செய்வதனால் நாங்களே கடவுள் ஆகிறோம்.

அதுதான் உண்மை :wub::icon_idea::lol:

Link to comment
Share on other sites

காமத்தின் மூலம் குழந்தையை உருவாக்கி படைப்புத்தொழிலைச் செய்வதனால் நாங்களே கடவுள் ஆகிறோம்.

அதுதான் உண்மை :wub::icon_idea::lol:

hahaha :D  :D

Link to comment
Share on other sites

இனிய நண்பர்களே,

 

காமம் எனும் சொல், இன்றைய காலத்தில் “கலவி” என்பதுடன் பெரிதும் சேர்ந்தே இருக்கிறது. இது காலத்திரிபு.

 

மேலும், எளிமையும் தூய்மையுமான உள்ளம் ப்ரபஞ்ச மகா சக்தி உறையும் ஆலயம். இதற்கு தந்திரம் எதற்கு? மந்திரம் எதற்கு? உள்ளத்தில் எளிமையையும் வாக்கினில் தூய்மையையும் வெறும் வார்த்தைகளில் அன்றி, வாழ்க்கையில் கடைப்பிடித்து பாருங்கள். இயற்கையின் மகாசக்தியை நீங்களே உணர்வீர்கள். எழுத்திலோ, வார்த்தைகளிலோ அதை விபரிக்க முடியாது.

 

நூல்களை வாசித்தும், மந்ர தந்ரங்களால் பூசித்தும் காண்வொண்ணா மகா சக்தியை திருப்புகழிலும் அருணகிரியார் பாடியுள்ளார்.

 

தலம் : திருச்சிராப்பள்ளி

 

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

 

 

ம்.

நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்தும், பூரித்தும் கும்பகம் செய்யும் யோகியர் கூட காண வொண்ணா சக்தி.

 

மேலும், யோக அப்பியாசங்களை விருப்புடன் பழகுவோர் எளிமையாக இருத்தல் வேண்டும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. இதையே பின்வரும் பாடல் அழகாக தருகிறது. இதில் தமிழின் அழகை பாருங்கள்:

 

“ஓடி  ஓடி  ஓடி  ஓடி  உட்கலந்த ஜோதியை

         நாடி  நாடி  நாடி  நாடி  நாட்களும் கழிந்துபோய்

வாடி  வாடி  வாடி  வாடி  மாண்டுபோன மானிடர்

        கோடி  கோடி  கோடி  கோடி  எண்ணிறந்த கோடியே

 

காணவேணும்  என்றுநீர்  கடல்மலைகள் ஏறுவீர்

        ஆணவமதல்லவோ   அறிவிலாத மூடரே

வேணுமென்று  ஈசர்பாதம்  மெய்யுளே  விளங்கினால்

       காணலாகும் நாதனை கடந்து நின்ற ஜோதியே

 

புத்தகங்களைச்  சுமந்து  பொய்களைப்  பிதற்றுவீர்

      செத்திடம்  பிறந்திடம்  தெங்கனென் றறிகிலேர்

அத்தனைய   சித்தனை   யறிந்துநோக்க வல்லீரேல்

     உத்தமத்து ளாயஜோதி  யுணரும்யோக  மாகுமே

 

நாலுவேத மோதுவீர்  ஞானமென்று  சொல்லுவீர்

     பாலினோடு  நெய்கலந்த  பான்மையை  யறிவிரோ

ஆலமுண்ட  கண்டனு  மகத்துளே  யிருக்கையில்

    காலனென்று சொல்லுவீர்  கனாவிலு  மங்கில்லையே.

 

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நண்பர்களுக்கு ஓசோவின் பின்வரும் ஆங்கில சொற்பொழிவைக் கேட்டால்...
காமத்திற்கு; தியானத்திற்குமான உறவைப் புரிந்து கொள்ளலாம்...
நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி! ஆகக்குறைந்தது ஒரு தாந்தரிக யோக முறையைப்பற்றியாவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக யாராவது விளக்கலாமே. பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்ணுமே புரியலே காமத்தின் போது ஏன் கடவுளை நினைக்கணும் :(  ,அவரைப் பாக்கிறதுக்கு தானே

தனியா கோயில் கட்டியிருக்கு

Link to comment
Share on other sites

எனக்கு ஒண்ணுமே புரியலே காமத்தின் போது ஏன் கடவுளை நினைக்கணும் :(  ,அவரைப் பாக்கிறதுக்கு தானே

தனியா கோயில் கட்டியிருக்கு

அந்தக் கோயில் சிலைகளில் ஏன் காமக் குறியீடுகள் உள்ளன? ஏன் லிங்கத்தையும், யோனியையும் வழிபடுகிறார்கள்? இந்தக் கேள்வி உங்களுக்கு என்றாவது எழுந்தது உண்டா? தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின் கட்டுரையை ஒருமுறை படிக்கவும் :)

எல்லாம் சரி! ஆகக்குறைந்தது ஒரு தாந்தரிக யோக முறையைப்பற்றியாவது ஸ்டெப் பை ஸ்டெப்பாக யாராவது விளக்கலாமே. பிளீஸ்.

 

விளக்கலாம் தான். அப்புறம் என்னையும் செக்ஸ் சாமியாருன்னு சொல்லிடுவங்கனு ஒரு பயம் :)

Link to comment
Share on other sites

  • 2 months later...

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே
(தொல்காப்பியம், புற. 27)

கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம்.
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு
கடு>கடினம்
கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு

கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)

சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது.  லிங்க வழிபாடு சிவ வழிபாடாக மாற்றம் கொள்வதற்கு முன்னே ஆண்குறி வழிபாடு வேளாண்மையோடும் போரோடும் தொடர்பு கொண்ட இன்றியமையச் சடங்காக இருந்துள்ளது. தொல்காப்பியர் கந்தழி எனக் குறிப்பது ஆண்குறி வழிபாடே ஆகும் (கன்றாப்பூர் நடுதறி என அப்பர் கூறியது இதையே) . கந்தழி என்பது லிங்க வழிபாட்டை குறிப்பது என்று பல ஆய்வாளர்களால் முன்மொழியப்படுகிறது. அதையொட்டிய சில விவரங்கள்


"இந்த வழிபாட்டின் தொன்மையான பதிவுகள் வேதத்திலே காணப்படுகின்றன. ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் வேத மரபின் ருத்ரனுக்கும், லிங்க வழிபாட்டிற்குமான தொடர்பு குறித்து குறிப்பிடுகையில், “ஸ்தாணு – (வேர் சொல் ஸ்த – நிற்பது) -ஒரு கம்பம்- ருத்ரனின் குறியீடாகும். அது மேல்நோக்கி நிற்பதென்பது பிரபஞ்சத்தினூடே ருத்ரன் நெகிழ்வற்று நிற்பதைக் குறிப்பதுடன் விந்துவினை மேல்நோக்கி செலுத்துவதனையும் குறிப்பதாகும். ஸ்தாணு எனும் கம்பம் எனும் இந்த சித்திர உருவாக்கம், விறைப்படைந்த ஆண்குறியினை எதிர்மறையாக விலக்கிடும் (negation) முரணான (paradox) உருவாக்கமாகும்….ஸ்தாணுவின் செங்குத்தான தன்மை ருத்ர-சிவனின் யோகித்துவத்தின் குறியீட்டாகும். இந்த குறியீட்டு உருவக கம்பம் உயிரினை உருவாக்கும் விசைக்கும் அதனை விலக்கிக் கட்டுப்படுத்துவதற்கும் இடையிலான விறைப்பினைக் குறிப்பதாகும்.” என்கிறார். (க்ராம்ரிஸ்ச், The Presence of Siva,1981, பக்.119)

(பிற்கால) கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான த £ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த பழம் இலக்கியங்களில் இந்த அச்சானது சுற்றிச்சுழலும் ஒரு அரைப்பு இயந்திரத்தின் அச்சாகும். பின்லாந்து தேசத்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்தைய நம்பிக்கைகளில் உலக சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலில் (kaleval) இந்த பிரபஞ்ச அச்சு வருகிறது. இப்பாடலில் அது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ என்பது முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்ட பிரபஞ்ச மரம். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். அதர்வண வேதம் ஸ்கம்பத்தினை பூமியையும், ஆகாயத்தையும் ஆதாரமாக கூறப்படுகிறது."

source :http://www.tamilpaper.net/?p=3758

 

மேலும் இது பற்றிய விபரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.