Jump to content

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!


akootha

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்

ஈழத்தவருக்கு பெரும் துரோகம் செய்தார்

பெரும் அழிவைக்கொடுத்தார்

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அவர் கொல்லப்பட்டபோது

புலிகளே தமிழரது தாகங்களை நிறைவு செய்பவர்களாக இருந்தனர்.

அந்தவகையில் புலிகளே செய்திருப்பார்கள் என்று தமிழர் மட்டுமல்லாது உலகமே நம்பியது.

புலிகளும் அதை நேரடியாக மறுத்ததில்லை.

ஒரு துன்பவியல் நிகழ்வு என்பதே பதிலாக இருந்தது

அப்படியே தான் அது இனி இருக்கும் . .

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அப்படி ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டது..

ஒருவர் போனால் அதைவிட மோசமான இன்னும் பலர் எதிரிகளாக வருவார்கள்.

போட்டுத்தள்ளினால் எதிரிகள் குறைவார்கள் என்று நினைத்தது எவ்வளவு மடமையானது என்பது இப்போதாவது புரியவேண்டும். ஆனால் நமது பக்கம் எதுவித தவறும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்குமட்டும் எதுவும் புரியாது..

Link to comment
Share on other sites

ராஜீவின் ஒரு கொலைக்கு விலை முழு புலிகளின் அழிவும் நாற்பதினாயிரம் பொதுமக்களின் உயிரும் .

எம்மவருக்கு என்றுமே விளங்காத சூத்திரம் இது .

Link to comment
Share on other sites

ராஜீவின் ஒரு கொலைக்கு விலை முழு புலிகளின் அழிவும் நாற்பதினாயிரம் பொதுமக்களின் உயிரும் .

எம்மவருக்கு என்றுமே விளங்காத சூத்திரம் இது .

அப்பாவி மக்களை கொல்ல அரசாங்கங்களை விட போராளிக் குழுக்களுக்கு சுலபம். அதை எல்லோரும் செய்ய மாட்டார்கள். குறிப்பா புலிகள் அப்பாவி மக்களை கொல்ல மாட்டார்கள். இலங்கையில் ஒரு குண்டு வெடித்தா வெறும் பத்து பேர் பலியாகுவினம் ஆனால் இந்தியாவில் அதே குண்டுக்கு ஆயிரத்திற்கும் மேல ஆனால் புலிகள் மக்களை அழிக்கும் வேலைய செய்யவில்ல. பெரும் ராணுவத்திற்கு சண்டை செய்தவர்கள் இதச் செய்ய விரும்பல. அதற்கு கடைசி யுத்தமே சாட்சி. அப்பிடி பார்த்தால் நீங்கள் மாலைதீவை கைப்பற்ற முயற்சி செய்ததற்க்காக வவுனியா முழுதும் மாலைதீவுப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கும். அனால் மாலைதீவின் படை அதைச் செய்ய முயலவில்லை. சந்தோசப் படுங்கோ அண்ணா

[size=2]

542910_522214977790478_1949724979_n.jpg[/size][size=2]

கேவலம் கெட்ட இந்தியா என்ற நாடு இல்லாவிடின் இது வெகு விரைவில் நடக்கும் இந்த இனவெறியனுக்கு.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவை புலிகள் கொன்று இருக்கா விட்டால் அது தமிழர்களுக்கே அவமானம்...ராஜீவை புலிகள் கொல்லவில்லை என இங்கே சொல்பவர்கள் இனி மேல் என்னத்தை சாதிக்கப் போயினமோ தெரியவில்லை[அவர்கள் புலிகளை அவமானப்படுத்துகிறார்கள்]...ராஜீவ் கொலையை காரணமாய் வைத்து தான் இந்தியா எம்மை அழித்தது என்பது எம்மை நாமே ஏமாற்றும் நாடகம்...உலக நாடுகள் தங்கட சுய நலத்திற்காய் தான் எங்களை அழித்தது...உலக நாடுகளது சூழ்ச்சிக்கும்,இராஜ தந்திரந்திற்கும் புலிகள் பலியாகி விட்டார்கள் என்பதே உண்மை

புல்லுருவிகளால் வீழ்ந்தது தான் தமிழனின் வரலாறு!

கட்டப் பொம்மனுக்கு, ஒரு எட்டப்பன்!

பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

தமிழனின் கண்கள், தமிழனால் குருடாக்கப் படுவது தான் நமது வரலாறு!

இதற்கு முள்ளிவாய்க்காலும் விதி விலக்கல்ல! :o

Link to comment
Share on other sites

இராஜதந்திர Space இல் இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது மை லார்ட்..! :D

[size=4]நேரம் கிடைத்தால் இது பற்றி விளக்கமாக எழுதுங்கள். [/size]

Link to comment
Share on other sites

[size=4]ஒரு மக்களாட்சி நாட்டில், அதுவும் அமேரிக்கா போன்ற பணக்கார நாட்டில் கூட இந்த [/size][size=5]conspiracy theories[/size]க்கு குறைவில்லை

[size=4]இந்தியா போன்ற நாட்டில் ஆளையே ...... நிலை உள்ளது. அமெரிக்காவில் ஓரளவிற்கு சுதந்தரமாக கூறலாம். அப்படிப்பட்ட ஒரு தளம் இது: [/size]http://whatreallyhappened.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர Space இல் இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது மை லார்ட்..! :D

இராஜ தந்திர‌ம்,மண்ணாங்கட்டி என்று எழுதி எங்களை நாங்களே ஏமாத்த வேண்டியது தான் ^_^

Link to comment
Share on other sites

[size=4]பொதுவாக சமபலத்தில் உள்ளவர்கள் மத்தியில் அவர்கள் ஆயுத போராட்டத்தை விரும்புவதில்லை. உதாரணம் உருசியா + அமேரிக்கா இல்லை சீனா + இந்தியா. எனவே இவர்கள் விரும்புவது இராசதந்திர போர். [/size]

[size=1]

[size=4]அதேவேளை பலம் வேறுபடும் இடங்களில், மலையும் மடுவும், யுத்தம் திணிக்கப்படும். மேற்குலகம் தலைமையில் ஈராக் மீது இல்லை அப்கானிஸ்தான் மீதான யுத்தம். [/size][/size]

[size=1]

[size=4]எமது விடுதலை போராட்டமும் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் போரை முன்னெடுப்பதை விட்டு உண்மையான இராசந்திர போரை கையில் எடுத்திருப்பார்கள்.[/size][/size]

Link to comment
Share on other sites

இராஜ தந்திர‌ம்,மண்ணாங்கட்டி என்று எழுதி எங்களை நாங்களே ஏமாத்த வேண்டியது தான் ^_^

புலிகளுக்கு இராஜதந்திரம் தெரியாது என்பதுதானே இங்கை பெரிய புராணமா இருக்கு? :rolleyes::D

Link to comment
Share on other sites

ராஜீவ் மற்றது பிரேமதாஸா ஆகியோரை கொன்றதால் சில நேரம் போராட்டம் நீண்டு இருக்கலாம் ஆனால் அவர்களை விட மோசமானவர்களை அவர்களின் படுகொலை சந்திக்க வைத்து விட்டது.

Link to comment
Share on other sites

[size=4]ஈராக் மீது அது அணு ஆயுதம் செய்வதாக மேற்குலகம் சோடித்தது. பின்னர் அதை "ஆதாரமாக" ஐ.நா. முன்னால் வைத்தது. வெற்றியும் கண்டது. [/size]

[size=1][size=4]பின்னர் தனது நேசப்படைகளை அனுப்பி பல இலட்சம் மக்களை கொன்றது. [/size][/size]

[size=1][size=4]ஆகவே எது உண்மை என்பது பலத்தால் மறைக்கப்படலாம். [/size][/size]

[size=4]நிச்சயம் அங்கே ஈராக்கிலும் சிலர் சதாம் ஹூசனை இன்றும் திட்டலாம். 'அணு ஆயுதம்' தயாரிக்க முனைந்த படையால் நாம் இவ்வாறு அழிக்கப்பட்டோம் என்று. இல்லை பெரும்பான்மை சியா முஸ்லீம்களை சதாம் அழித்தார், அதனால் தான் இந்த அழிவு என்று. [/size]

[size=1]

[size=4]ஒரு செல்வந்த நாடாக, பல நண்பர்களை கொண்டு இருந்தும் சதாமால் ஒன்று செய்ய முடியவில்லை. ஈராக்கின் இராணுவ பலமோ இல்லை இராசதந்திரமோ அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. [/size][/size]

Link to comment
Share on other sites

புலிகள்தான் ராஜீவை முடித்தவர்கள் என்றால் கிட்டண்ணா பொய் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.. :huh:

இப்போது எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், எம்மவர் சொல்வதை நம்புவோமா.. இல்லை இந்திய உளவுத்துறை சொல்லுவதை நம்புவோமா? :rolleyes:

தடயவியல் மூலம் நிரூபிக்கப்படாத ஒரு கொலைக் குற்றத்தை நான் புலிகளின் தலையில் போட மாட்டேன்! :rolleyes:

Link to comment
Share on other sites

புலிகள்தான் ராஜீவை முடித்தவர்கள் என்றால் கிட்டண்ணா பொய் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.. :huh:

இப்போது எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், எம்மவர் சொல்வதை நம்புவோமா.. இல்லை இந்திய உளவுத்துறை சொல்லுவதை நம்புவோமா? :rolleyes:

தடயவியல் மூலம் நிரூபிக்கப்படாத ஒரு கொலைக் குற்றத்தை நான் புலிகளின் தலையில் போட மாட்டேன்! :rolleyes:

கிருபன் அண்ணா சொன்னது போல்

ராஜீவு குண்டுத்தாக்குதலில் பலி என்பதி சந்தோசம் தான் வந்தது அதன் பின்விளைவு என்ன என்பது பற்றி சிந்திக்கும் வயதும் இல்லை அறிவும் இல்லை. ( ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது ராஜீவை கொன்றவர்கள் மொத்த குடும்பத்தையும் கொல்லாததன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் அழிவு என்பதை 100% நம்பினேன் இன்னும் நம்புகிறேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எப்படியும் நிறுவலாம். conspiracy theories நிறைய உலகத்தில் இருக்கின்றது..

ஒவ்வொன்றிற்கும் விலை இருக்கின்றது என்பதை உணராமல் செய்யப்ப்பட்ட முக்கியமானவற்றில் ஒன்றுதான் ராஜீவ் கொலையும். 2008 மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி வைக்கப்பட்ட கோரிக்கையையும் தட்டிக்கழித்து 2009இல் முள்ளிவாய்க்காலில் பேரழிவை தமிழீழப் போராட்டம் சந்தித்து தற்போது எதுவித அரசியல் உரிமைகளும் இல்லாமல் இருப்பதுதான் ராஜீவ் மரணம் கொடுத்த கூலி!

ராஜீவ் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது கவலை வரவில்லை, தவறு நடந்துவிட்டது என்றெல்லாம் சிந்திக்கவில்லை. மாறாக மிகுந்த சந்தோஷமே ஏற்பட்டது என்பதும் உண்மைதான்.

ராஜீவ்

ஈழத்தவருக்கு பெரும் துரோகம் செய்தார்

பெரும் அழிவைக்கொடுத்தார்

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அவர் கொல்லப்பட்டபோது

புலிகளே தமிழரது தாகங்களை நிறைவு செய்பவர்களாக இருந்தனர்.

அந்தவகையில் புலிகளே செய்திருப்பார்கள் என்று தமிழர் மட்டுமல்லாது உலகமே நம்பியது.

புலிகளும் அதை நேரடியாக மறுத்ததில்லை.

ஒரு துன்பவியல் நிகழ்வு என்பதே பதிலாக இருந்தது

அப்படியே தான் அது இனி இருக்கும் . .

இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே வகைதான்

ஆனால் அதற்கு நீங்கள் மீண்டும் தாங்கள் எழுதியுள்ளது

விசுகு இப்படித்தான் எழுதுவார் என நீங்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து வந்தது.

ஆளைப்பார்க்காமல் கருத்தை பார்ப்பவன் என்கின்ற தங்கள் உருவகம் இதில் தொக்கி நிற்கின்றது. :(

அப்படி ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டது..

ஒருவர் போனால் அதைவிட மோசமான இன்னும் பலர் எதிரிகளாக வருவார்கள்.

போட்டுத்தள்ளினால் எதிரிகள் குறைவார்கள் என்று நினைத்தது எவ்வளவு மடமையானது என்பது இப்போதாவது புரியவேண்டும். ஆனால் நமது பக்கம் எதுவித தவறும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்குமட்டும் எதுவும் புரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே வகைதான்

ஆனால் அதற்கு நீங்கள் மீண்டும் தாங்கள் எழுதியுள்ளது

விசுகு இப்படித்தான் எழுதுவார் என நீங்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து வந்தது.

ஆளைப்பார்க்காமல் கருத்தை பார்ப்பவன் என்கின்ற தங்கள் உருவகம் இதில் தொக்கி நிற்கின்றது. :(

ராஜீவ் கொல்லப்படவேண்டும் என்பது அநேகரது வேண்டுதல் என்பது எதிர்ப்பவர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளவேண்டும் என்று கருத்தியல் சிந்தனை உள்ளவர்களுக்குப் பொதுவானது. தொப்பி பொருந்தியுள்ளது என்று உங்கள் கருத்தின் மூலம் சொல்லுவதாகவே பார்க்கின்றேன்.

மேலும் அரசியல் ரீதியாக உரிமைகளையும் அதிகாரத்தையும் அடைவதை விடுத்து இந்தப் போட்டுத்தள்ள வேண்டும் என்ற கருத்தியல் இப்போதும் உள்ளதால்தான் நேற்றும் ஒரு கொலை நடந்தது. இப்படியான கொலைகள் மூலம் எதிர்பார்த்த எதையுமே கொலைகளைத் தூண்டியவர்கள்/நடாத்தியவர்கள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்..

எனவே கொலைக் கலாச்சாரத்தை அகற்றாமல் முன்னேற்றம் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொல்லப்படவேண்டும் என்பது அநேகரது வேண்டுதல் என்பது எதிர்ப்பவர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளவேண்டும் என்று கருத்தியல் சிந்தனை உள்ளவர்களுக்குப் பொதுவானது. தொப்பி பொருந்தியுள்ளது என்று உங்கள் கருத்தின் மூலம் சொல்லுவதாகவே பார்க்கின்றேன்.

மேலும் அரசியல் ரீதியாக உரிமைகளையும் அதிகாரத்தையும் அடைவதை விடுத்து இந்தப் போட்டுத்தள்ள வேண்டும் என்ற கருத்தியல் இப்போதும் உள்ளதால்தான் நேற்றும் ஒரு கொலை நடந்தது. இப்படியான கொலைகள் மூலம் எதிர்பார்த்த எதையுமே கொலைகளைத் தூண்டியவர்கள்/நடாத்தியவர்கள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்..

எனவே கொலைக் கலாச்சாரத்தை அகற்றாமல் முன்னேற்றம் இல்லை..

நூற்றிப் பத்து வீதம், உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்! சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது!

Link to comment
Share on other sites

[size=4]இராஜீவை கொன்றவர்கள் கொன்றதற்கு வேறு காரணம் உள்ளது. அது இந்திய பொருளாதார வளர்ச்சி இல்லை தனிப்பட்ட ஊழல் (போர்ப்ஸ்) விவகாரமாக இருக்கலாம். [/size]

[size=1][size=4]ஆனால் கொன்றவர்களுக்கு அதை யாரின் தலையிலாவது கட்டவேண்டிய தேவையும் இருந்தது. அதை இலாவகமாக புலிகள் தலை மீது வெற்றிகரமாக கட்டிவிட்டனர். [/size][/size]

இதில் ஒரு பகுதி உண்மை மறைந்துள்ளது.

அந்தப் பயங்கரவாதியின் கொலையில் புலிகளின் பங்கு இல்லவே இல்லை என்பது - உரியவர்களுக்கு மிகத் தெளிவாக பல தடவைகள் சொல்லப்பட்டிருந்தது.

முக்கிய ஒரு கேள்வி!!!!

செய்யாத குற்றத்துக்காக ஒரு இனத்தையே அழிக்க போகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் பொதி சுமந்தார்கள்?

ஒரு முக்கிய பதில்.

காவித் திரிந்தது தமிழின விரோதிகளின் கைக்கூலிகளும், அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் / கட்டுரையாளர்களும் தான். இவர்கள் தான் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் ஒரு கொலை நடந்தது. ..

உங்களது கருத்துப்படி கொலையாளியை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள்

எனவே சட்டத்தை மதிப்பவராகிய தாங்கள் உடனடியாக பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது கருத்துப்படி கொலையாளியை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள்

எனவே சட்டத்தை மதிப்பவராகிய தாங்கள் உடனடியாக பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

ஒரு கொலை நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது எந்தத் தரப்பால் செய்யபட்டிருக்கும் என்று ஊகத்தின் அடிப்படையில் இணையச் செய்தித் தளங்களிலும், இதே திரியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எவரும் எவரையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அடையாளம் கண்டுகொண்டதாகவும் எழுதவில்லை. இதனை விளங்காது பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற உங்கள் அறிவுரை மிகவும் பாமரத்தனமானது விசுகு ஐயா.

விரும்பினால் இந்தத் திரியிலும், முகநூலிலும் உள்ள விடயங்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்து நீங்களே சொல்லிவிடுங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

இதில் ஒரு பகுதி உண்மை மறைந்துள்ளது.

அந்தப் பயங்கரவாதியின் கொலையில் புலிகளின் பங்கு இல்லவே இல்லை என்பது - உரியவர்களுக்கு மிகத் தெளிவாக பல தடவைகள் சொல்லப்பட்டிருந்தது.

[size=4] எமக்கு வெள்ளைகார துரை [/size] [size=4] இல்லை கிந்திய நாட்டாண்மை சொன்னது தான் தெய்வ வாக்கு :icon_idea:[/size][size=1]

[size=4]தமிழன் சொன்னால் நம்பவே மாட்டோம் :rolleyes:[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எமக்கு வெள்ளைகார துரை [/size][size=4]இல்லை கிந்திய நாட்டாண்மை சொன்னது தான் தெய்வ வாக்கு :icon_idea:[/size]

[size=1][size=4]தமிழன் சொன்னால் நம்பவே மாட்டோம் :rolleyes:[/size][/size]

conspiracy theories களை மிகச் சிறுபான்மையினர் எப்போதும் நம்புவார்கள். ஆனால் இவை கொலையில் குற்றம்சாட்டப்பட்டு இன்னமும் சிறையில் வாடுபவர்களுக்கோ, அல்லது அக்கொலை மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கோ எதுவித பயனையும் தராது.

தமிழ் மக்கள் வடகொரியர் போன்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று இப்போதும் ஒரு கூட்டம் இருப்பதில் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் எப்போதும் எதிலும் தெளிவாகவே இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

Link to comment
Share on other sites

conspiracy theories களை மிகச் சிறுபான்மையினர் எப்போதும் நம்புவார்கள். ஆனால் இவை கொலையில் குற்றம்சாட்டப்பட்டு இன்னமும் சிறையில் வாடுபவர்களுக்கோ, அல்லது அக்கொலை மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கோ எதுவித பயனையும் தராது.

தமிழ் மக்கள் வடகொரியர் போன்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று இப்போதும் ஒரு கூட்டம் இருப்பதில் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் எப்போதும் எதிலும் தெளிவாகவே இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

[size=4]பிரச்சனையே இதுதான். நான் பெரும்பான்மை மக்கள், தமிழர்கள் புலிகள் கொலை செய்யவில்லை என்றே நம்புவார்கள் என்கிறேன். நீங்கள் இல்லை என்கிறீர்கள். [/size]

[size=4]எப்படி உங்கள் கூற்று சரியோ அப்படியே எனது கூறும் சரி. [/size][size=1] [/size]

[size=4]நீங்களும் மூளைச்சலவைக்கு உள்ளாகி உள்ளீர்கள். நானும் உள்ளாகியுள்ளேன் :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிரச்சனையே இதுதான். நான் பெரும்பான்மை மக்கள், தமிழர்கள் புலிகள் கொலை செய்யவில்லை என்றே நம்புவார்கள் என்கிறேன். நீங்கள் இல்லை என்கிறீர்கள். [/size]

[size=4]எப்படி உங்கள் கூற்று சரியோ அப்படியே எனது கூறும் சரி. [/size]

[size=4]நீங்களும் மூளைச்சலவைக்கு உள்ளாகி உள்ளீர்கள். நானும் உள்ளாகியுள்ளேன் :D[/size]

பெரும்பான்மை மக்கள் நம்பவில்லை என்று நீங்கள் நம்புவதற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் வெறும் விதண்டாவாதத்தின் மூலம் கற்பனைகளை உண்மையாக்கமுடியாது என்பதற்கு தற்போதும் சிறையில் வாடும் முருகன் போன்றவர்கள் ஆதாரமாக உள்ளார்கள்.

From Life of Pi:

I applied my reason at every moment. Reason is excellent for getting food, clothing and shelter. Reason is the very best tool kit. Nothing beats reason for keeping tigers away. But be excessively reasonable and you risk throwing out the universe with the bathwater.

Link to comment
Share on other sites

பெரும்பான்மை மக்கள் நம்பவில்லை என்று நீங்கள் நம்புவதற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் வெறும் விதண்டாவாதத்தின் மூலம் கற்பனைகளை உண்மையாக்கமுடியாது என்பதற்கு தற்போதும் சிறையில் வாடும் முருகன் போன்றவர்கள் ஆதாரமாக உள்ளார்கள்.

[size=4]நீங்கள் ஒரு மென்மையான பக்கத்தை மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள், சிறை யில் உள்ளவர்கள். அவர்களுக்காகவும் பெரும்பான்மை தமிழர்கள் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர். [/size]

[size=1]

[size=4]அடுத்து கொலை பற்றி, உண்மையில் பெரும்பான்மை தமிழர்கள் 'புலிகள் தான் கொன்றார்கள்' என உறுதியாக நம்பினால் ஏன் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள், கதைக்கின்றார்கள்?[/size][/size]

[size=1]

[size=4]இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு இராஜீவ் அண்ட் குடும்பம். அவர்கள் ஒன்றும் காந்தி குடும்பம் அல்ல என்பதும் பெரும்பான்மை இந்தியர்களே ஏற்ற ஒன்று. [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.