Jump to content

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!


akootha

Recommended Posts

From Life of Pi:

I applied my reason at every moment. Reason is excellent for getting food, clothing and shelter. Reason is the very best tool kit. Nothing beats reason for keeping tigers away. But be excessively reasonable and you risk throwing out the universe with the bathwater.

[size=5]However one may be wrong in his or her opinion, that opinion should be respected. Calling it as 'vithandaavaatham' does not make any good in any discussion - Akootha[/size] :D

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அடுத்து கொலை பற்றி, உண்மையில் பெரும்பான்மை தமிழர்கள் 'புலிகள் தான் கொன்றார்கள்' என உறுதியாக நம்பினால் ஏன் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள், கதைக்கின்றார்கள்?[/size][/size]

உண்மையில் ராஜீவ் கொலையைப் பற்றிக் கதைப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. அதன் பிறகு எத்தனையோ அவலங்கள் நடந்துவிட்டன என்பதுதான் காரணம்.

மீளவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பமுடியாத அதல பாதாளத்திற்கு வந்தாயிற்று. இனிப் போவதிற்குப் பாதை தெளிவாக இல்லையென்பதால் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணிகளை மறுத்தால்தானே இவ்வளவு காலமும் பயணம் செய்ததற்கு அர்த்தத்தைக் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் தெரிவு செய்த பாதையில் தடைக்கற்களாக இருந்தவை என்று நம்பி அப்புறப்படுத்திதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளவேண்டிய சிக்கலில் மாட்டிவிட வேண்டி வந்துவிடுமல்லவா.

Link to comment
Share on other sites

உண்மையில் ராஜீவ் கொலையைப் பற்றிக் கதைப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. அதன் பிறகு எத்தனையோ அவலங்கள் நடந்துவிட்டன என்பதுதான் காரணம்.

[size=1][size=4]நீங்கள் இந்த திரியின் தலைப்பே கவனிக்காமல் கருத்துக்களை முன்வைப்பது போலுள்ளது[/size] :([/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையான மக்கள் எப்போதும் எதிலும் தெளிவாகவே இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

எது சரி

வெற்றி என்றால் கை தட்டல்

தோற்றுப்போனால் நான் அவனில்லை

பெரும்பான்மை இது தானே???? :( :( :(

Link to comment
Share on other sites

மீளவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பமுடியாத அதல பாதாளத்திற்கு வந்தாயிற்று. இனிப் போவதிற்குப் பாதை தெளிவாக இல்லையென்பதால் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணிகளை மறுத்தால்தானே இவ்வளவு காலமும் பயணம் செய்ததற்கு அர்த்தத்தைக் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் தெரிவு செய்த பாதையில் தடைக்கற்களாக இருந்தவை என்று நம்பி அப்புறப்படுத்திதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளவேண்டிய சிக்கலில் மாட்டிவிட வேண்டி வந்துவிடுமல்லவா.

[size=4]இல்லை. இந்த உண்மையை வெளியில் கொண்டுவரும் பொழுது தமிழர்களுக்கு உரிமையும் கிடைக்கும் .[/size]

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]"பெரும்பான்மை மக்களுக்கு தமிழீழமும் வேண்டாம் " என கூறுபவர்களும் இவர்கள் தான். [/size][size=4]தென் சூடான் கூட பிரிந்தது. நிச்சயம் வட சூடான் (சூடான்) கூறி இருக்கும் " [/size][size=4]"பெரும்பான்மை மக்களுக்கு தென் சூடான் வேண்டாம் " என. [/size][/size]

[size=1]

[size=4]ஐ.நா. கூட தருச்மன் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட மறுக்கின்றது? ஏன்? உண்மைகள் வெளியே வரக்கூடாது என![/size][/size]

[size=1]

[size=4]இந்த திரியின் தொடக்கத்தில் பல கேள்விகளை அதன் எழுத்தாளர் முன்வைத்துள்ளார். இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்.[/size][/size][size=1]

[size=4]முடிந்தால் அதற்கு பதில்[/size][size=4]களை தாருங்கள் ![/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]நீங்கள் இந்த திரியின் தலைப்பே கவனிக்காமல் கருத்துக்களை முன்வைப்பது போலுள்ளது[/size] :([/size]

அவ்வளவு தூரத்திற்கு இன்னமும் மூளை பிசகவில்லை <_<

ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியபடி எதையும் எப்படியும் ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவ முனையலாம்.

Link to comment
Share on other sites

அவ்வளவு தூரத்திற்கு இன்னமும் மூளை பிசகவில்லை <_<

ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியபடி எதையும் எப்படியும் ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவ முனையலாம்.

[size=4]அப்படியானால் இந்த எழுத்தாளர் முன்வைத்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உள்ளனவா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது சரி

வெற்றி என்றால் கை தட்டல்

தோற்றுப்போனால் நான் அவனில்லை

பெரும்பான்மை இது தானே???? :( :( :(

மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா?

நான் சொல்ல வந்தது பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப தங்கள் தேவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.. இந்த யதார்த்தத்தை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து அரசியல் செய்வதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

ஒரு முக்கிய பதில்.

காவித் திரிந்தது தமிழின விரோதிகளின் கைக்கூலிகளும், அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் / கட்டுரையாளர்களும் தான். இவர்கள் தான் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனவர்கள்.

சாரி சார் தவறான பாதையில் வந்துவிட்டேன் :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

நான் சொல்ல வந்தது பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப தங்கள் தேவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.. இந்த யதார்த்தத்தை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து அரசியல் செய்வதுதான் நல்லது.

தாயக மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உள்ளனர் என்பது யாரும் அறிந்த விடயம். அவர்களின் செயல்பாடுகளை "பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்" என வர்ணித்தால் அதற்கும் அடக்கும் சிங்களவனிற்கும் என்ன வித்தியாசம்??

[size=4]இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது :icon_mrgreen:[/size]

Link to comment
Share on other sites

மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா?

[size=4]இன்றும் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்தாலும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார். இங்கு ஒரு சக உறவோ "[/size] [size=4]மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா? " என கேட்கிறார் :([/size]

Link to comment
Share on other sites

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். [size=5]அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை[/size].

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. [size=5]எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.[/size]

[size=5]சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.[/size]

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது[size=5] ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அப்படியானால் இந்த எழுத்தாளர் முன்வைத்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உள்ளனவா? [/size]

அவர் தன்னை முன்னிலைப்படுத்த பலவற்றைச் சொல்லியிருக்கின்றார். அவரது நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பது அவரது கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. சுப்பிரமணிய சுவாமியின் கோமாளித்தனமான அரசியல் செயற்பாடுகள் நிறைந்த ஜனதாக் கட்சியில் இருந்தவர்களுக்கு முக்கியம் கொடுப்பது நேர விரயம்.

Link to comment
Share on other sites

அவர் தன்னை முன்னிலைப்படுத்த பலவற்றைச் சொல்லியிருக்கின்றார். அவரது நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பது அவரது கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. சுப்பிரமணிய சுவாமியின் கோமாளித்தனமான அரசியல் செயற்பாடுகள் நிறைந்த ஜனதாக் கட்சியில் இருந்தவர்களுக்கு முக்கியம் கொடுப்பது நேர விரயம்.

[size=1][size=4]எது நேர விரயம் ? [/size][size=5]conspiracy theory [/size] [size=4]உடன் சம்பந்தப்பட்டாதால் நேர விரயம் என்கிறீர்களா? :D[/size][/size]

[size=1][size=4]ஒரு [/size][/size][size=4]இன[/size][size=1][size=4]ப்படுகொலையே இதில் சம்பந்தப்பட்டுள்ளது. புலிகளின் தடையில் இந்த சுவாமி முக்கிய பங்கு வகித்தவர். [/size][/size]

[size=1][size=4]இதை கேட்பது அதற்கு பதில் கூறுவது என்பது நேர விரயம் என்றால் ..... ^_^[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உள்ளனர் என்பது யாரும் அறிந்த விடயம். அவர்களின் செயல்பாடுகளை "பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்" என வர்ணித்தால் அதற்கும் அடக்கும் சிங்களவனிற்கும் என்ன வித்தியாசம்??

[size=4]இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது :icon_mrgreen:[/size]

அடக்குமுறை இல்லையென்றோ, மக்கள் அவலங்களுக்குள் இல்லையென்றோ கூறவில்லை. தமிழ்மக்கள் உரிமைகளுடன் வாழ சுயநிர்ணய உரிமைவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான வழி வன்முறைப் போராட்டம் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அத்தோடு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முன்பிருந்த நம்பிக்கையும் இப்போது இல்லை. இதெல்லாம் கூட்டமைப்புக்கும் நன்றாகத் தெரியும். தெரியாமல் இருப்பவர்கள் பழைய காலத்தில் உறைந்து நிற்பவர்கள்தான்.

[size=4]இன்றும் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்தாலும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார். இங்கு ஒரு சக உறவோ "[/size] [size=4]மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா? " என கேட்கிறார் :([/size]

கேள்வியின் அர்த்தம் புரியாவிட்டால் இப்படித்தான் குழப்பம் வரும். மக்கள் எப்போதுமே வாழ விரும்புகின்றார்கள். அதற்காக அடிமையாக வாழவேண்டும் என்று விரும்புவதில்லை. உரிமைகள் வேண்டி நிற்கும் மக்களை மீளவும் பலியெடுக்கும் அரசியல் எடுபடாது.

[size=1][size=4]எது நேர விரயம் ? [/size][size=5]conspiracy theory [/size][size=4]உடன் சம்பந்தப்பட்டாதால் நேர விரயம் என்கிறீர்களா? :D[/size][/size]

[size=1][size=4]ஒரு [/size][/size][size=4]இன[/size][size=1][size=4]ப்படுகொலையே இதில் சம்பந்தப்பட்டுள்ளது. புலிகளின் தடையில் இந்த சுவாமி முக்கிய பங்கு வகித்தவர். [/size][/size]

[size=1][size=4]இதை கேட்பது அதற்கு பதில் கூறுவது என்பது நேர விரயம் என்றால் ..... ^_^[/size][/size]

[size=4]நம்பகத்தன்மையற்றவர்களால் வெளியிடப்படும் conspiracy theory பற்றி அலசுவது நேரவிரயம்தான்.[/size]

[size=4]புலிகளின் தடைக்கு முக்கிய காரணம் புலிகளின்றி வேறு ஒருவருமல்லர். அத்தோடு இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசோடு இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் இருந்தன. ஆனால் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் என்று அவர்களைத்தானே கேட்கும் நிலைமை உள்ளது![/size]

Link to comment
Share on other sites

அடக்குமுறை இல்லையென்றோ, மக்கள் அவலங்களுக்குள் இல்லையென்றோ கூறவில்லை. தமிழ்மக்கள் உரிமைகளுடன் வாழ சுயநிர்ணய உரிமைவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான வழி வன்முறைப் போராட்டம் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அத்தோடு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முன்பிருந்த நம்பிக்கையும் இப்போது இல்லை. இதெல்லாம் கூட்டமைப்புக்கும் நன்றாகத் தெரியும். தெரியாமல் இருப்பவர்கள் பழைய காலத்தில் உறைந்து நிற்பவர்கள்தான்.

[size=4]கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை ??[/size]

[size=4]அகிம்சை போராட்டத்தில் இருந்து தான் வன்முறை வந்தது ![/size]

கேள்வியின் அர்த்தம் புரியாவிட்டால் இப்படித்தான் குழப்பம் வரும். மக்கள் எப்போதுமே வாழ விரும்புகின்றார்கள். அதற்காக அடிமையாக வாழவேண்டும் என்று விரும்புவதில்லை. உரிமைகள் வேண்டி நிற்கும் மக்களை மீளவும் பலியெடுக்கும் அரசியல் எடுபடாது.

[size=4]இலண்டனில் இன்று பேசிய தமிழ் அரசியல் பிரநிதிகள் கேட்டது - போர்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு. [/size]

[size=4]ஆம், மக்கள் உரிமையுடன் வாழ அதை அவர்களின் பிரதிநிகள் கேட்கிறார்கள். வாங்கள் சேர்ந்தே உழைப்போம் ![/size]

Link to comment
Share on other sites

[size=4]

நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது [/size]வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம் தலையாய கடமையாகும்.

புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம் வரலாற்று நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேணிப்பாதுகாக்கின்றனர், அவற்றைக் கொண்டாடுவதின்மூலம் நினைவுகளைப் புதிப்பித்து தம் பிற்சந்ததியினரிடம் ஒப்படைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

[size=4]நாம் அந்தப்பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நம் இளம்தலைமுறையினருக்கும் கற்றுக்

கொடுக்கவேண்டும். [/size]

[size=4]அந்தவகையில் நமது முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை நாம் பல்வேறுவழிகளிலும் ஆவணப்படுத்திப் பதிவுசெய்தல் வேண்டும். அந்தவகையில் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியின் "கொலைக்களங்கள்" , ஐ.நா.பணியாளராகிய Gordon Weiss அவர்களின் "The Cage " என்ற நூல், அண்மையில் வெளியிடப்பட்ட பிபிசி நிருபர் Frances Harrison அவர்களின் " Still Counting the Dead " என்பன குறிப்பிடத்தக்கன. [/size]

[size=4]எனினும் இவர்கள் எல்லோரும் வெளியாட்கள். தாம் பல்வேறு வழிகளில் பெற்ற தகவல்கள், சில நேரடி அனுபவங்களைக்கொண்ட அவர்களின் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டவை அவை.[/size]

[size=4]எனினும் இந்த இனஅழிப்பினால் நேரடியாகப்பாதிக்கப்பட்ட, அந்த இறுதிக்கால அவலவாழ்வில் பங்குகொண்டு,

துன்பப்பட்ட ஈழத்தமிழ்மக்களின் சாட்சியங்கள், அவர்களின் பார்வையில், கன்ணோட்டத்தில், பதிவுசெய்யப்படல்

முக்கியமானது. அந்தவகையில் முதல் ஆவணப்படுத்தலாக வெளிவந்திருப்பது கலாநிதி N மாலதி அவர்களின்

" A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State" என்ற நூலாகும்.

[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110877

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இலண்டனில் இன்று பேசிய தமிழ் அரசியல் பிரநிதிகள் கேட்டது - போர்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு. [/size]

[size=4]ஆம், மக்கள் உரிமையுடன் வாழ அதை அவர்களின் பிரதிநிகள் கேட்கிறார்கள். வாங்கள் சேர்ந்தே உழைப்போம் ![/size]

மிகவும பிளவுபட்டு, சிதைவுண்டிருக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான பயணம் மிகவும் நீண்டதாகத்தான் இருக்கப்போகின்றது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தன்னலமற்று, இதயசுத்தியுடன், அதிகாரங்களுக்கு ஆசைப்படாமல் செயற்படுகின்றார்களோ அவர்களுடன் எமது உழைப்பு எப்போதும் தொடர்ந்துதான் இருந்து வந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

மிகவும பிளவுபட்டு, சிதைவுண்டிருக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான பயணம் மிகவும் நீண்டதாகத்தான் இருக்கப்போகின்றது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தன்னலமற்று, இதயசுத்தியுடன், அதிகாரங்களுக்கு ஆசைப்படாமல் செயற்படுகின்றார்களோ அவர்களுடன் எமது உழைப்பு எப்போதும் தொடர்ந்துதான் இருந்து வந்திருக்கின்றது.

[size=4]நல்லது அது தொடரட்டும். மக்கள் நிம்மதியாக ஆனால் சுதந்திரமாகவும் வாழட்டும். [/size]

Link to comment
Share on other sites

இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது

[size=6]http://tamilnet.com/art.html?catid=79&artid=35733[/size]

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது! - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.

இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை அவப்பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அண்மைய நாட்களில் கூட சிங்களத்தின் அடிமையாக விளங்கிவரும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் நடத்திக்காட்டிய அற்புத காட்சிப்படுத்தல்களும் முன்நாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களை கொன்றது புலிகள் தான் என்றும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் உப்புச்சப்பற்று வெளிவந்திருந்தது.

தற்போது அதனையும் இத்தனை ஆண்டுகால மர்ம முடிச்சுக்களையும் அவிழ்க்கும் முயற்சியில் ராஜீவ் சர்மா என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்" என்ற புத்தகம் உதவுகின்றது. இதனை தமிழில் ஆனந்தராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதிலிருந்து....

"ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிராசனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேச சதி என்ற சக்கரத்தின் இன்நெரு கம்பிகும்!" என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஷாஹீத் பெருமான் செரோமணி அகாலிதல் அமைப்பின் தலைவரான மகந் சேவா தாஸ் சிங் அளித்த வாக்கு மூலம் தான் அது. அதைமட்டும் அப்படியே தருகிறோம்.

மகந் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர்(ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர் கோட் மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவலகமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான் பிரமமந்திரி சந்திரசேகரை சந்தித்தேன். நான் லண்டனிற்கு புறப்படுவதாக சந்திரசேரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். பஞ்சாப்பில் வன்முறையை நிறுத்திவிட்டு பஞ்சாப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு சென்றேன். இருவரும் தேநீர் அருந்தினோம். அந்த இடத்தில் ஏற்கனவே 10அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தொலைத் தொடர்பிற்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான. பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொர்பு கொள்வதற்காக பயண்படுத்தப்படும் கருவிகளின் செயற்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம் மேல் தளத்தில் கூடியிருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்பல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ.ஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ.இன் ஆர்.எம்.ரதியும் இருந்தார். நான் பிறநபர்களின் பெயர்களை கேட்கவில்லை.

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர்மனதை மாற்றினேன். ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக் கொள்வதோடு வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறினார். எனக்கு சந்திரா சாமியிடம் தொடர்பு உள்ளது என்றார். சந்திரா சாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றி கேட்டபோது தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியை கொல்லப்போவது இல்லையென முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன். சௌகான் என்னிடம் 3கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திரசேகரிற்கு. நான் அங்கிருந்து கிழம்பும் போது இந்தியத் தலைவர்கள் ஆன சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா சந்திராசாமி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன் சர்தார் வல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்தாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸபிஸ் ரவரில் நடந்தது. அந்தக் கூட்டம் காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது ராஜீவ்காந்தியை அழிப்பது ஆகிய விசயங்கள் சம்மந்தப்பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விசயங்களை நான் ராஜீவ்காந்தியிடம் (பெப்ரவரி 10௧991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விசயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்து விட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு வேர்த்துக் கொண்ட்ட ஆரம்பித்தது. அவர் கோபம் அடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991 பெப்ரவரி 14 அல்லது 15இல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதேயளவு ஆபத்தான விசயத்தை நான் அவரிடம் தெரித்ததாகவும் ராஜீவ் கூறினார்.

சௌகானிற்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்திருந்தனர். ராஜீவ்ஜீயின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார் என்று விலாவாரியாக விபரிக்கிறது அந்த வாக்கு மூலம்.

எஸ.ஐ.டி. விசாரனைக்கு நேர்மாறான விசயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிசன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையை கிளப்பலாம்!

சிங்களத்தின் முற்றுமுழுதான பிடிக்குள் அகப்பட்டிருக்கும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் அண்மையில் நிகழ்த்திய நாடகத்தை இந்த புத்தகம் உடைத்தெறிந்துள்ளது. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

(நன்றி ஜூனியர் விகடன்.)

-----------------------------------------------------------------------------------------------

http://www.sangam.org/PIRABAKARAN/Part33.htm

Link to comment
Share on other sites

[size=4]இந்தக்கொலை சம்பந்தமாக இறுதிவரை கட்டை பஞ்சாயமே நடந்துள்ளது. [/size][size=1]

[size=4]ஒரு சுயாதீன விசாரணை நடந்தால் மட்டுமே சந்தேகங்கள் முழுமையாக தீரும். [/size][/size]

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உலகத்தையே சுற்றி கடலில் சொந்த முயற்சியில் ஆயுதம் கொண்டுவந்தவர்கள் செய்யாத குற்றத்தை செய்யவில்லை என்று சரிவர முக்கியமானவர்களுக்கு எடுத்துச் செல்லமுடியவில்லையா?

அப்போ ஏன் பாலசிங்கம் அண்ணை அப்படி ஒரு பேட்டி கொடுத்தவர்?

உதயன் ஆசிரியர் 2000 இன் ஆரம்பபப் பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியிலிருந்த ரோ முக்கியஸ்த்தர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இவர் மூலம் புலிகளின் தலமையை அணுகியிருக்கிறது இந்திய உளவுத்துறை. புலிகளின் தலமைக்குத் தெரியாமல் கொலை நடந்திருந்தது தெரிந்திருந்தும்கூட, புலிகளின் தலமையிடமிருந்து ஒரு மன்னிப்புப் போன்ற கருத்து வெளியிடப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று வித்தியாதரன் மூலம் கிளிநொச்சிக்குத் தூது அனுப்பப்பட்டது. தமிழ்ச் செல்வனும், பாலசிங்கமும் இதை தலைவரிடம் வலியுறுத்தி சர்வதேச செய்தியாளர் மாநாடொன்றினை நடத்துமாறு தலைவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு நடந்த மாநாட்டில் இந்தியச் செய்தியாளர் ஒருவர் தனக்குச் சொல்லித்தரப்பட்ட கேள்வியைக் கேட்க, பாலசிங்கமும் தலைவரிடம் இப்படிக் கூறுங்கள் என்று சொல்கிறார். தான் எதிர்பார்த்த பதிலை தலைவர் கூறியதும் இந்தியா அன்றே புலிகளை அழிக்க நாள் குறித்தது.

ஆக, புலிகள் செய்யாத ஒரு கொலைக்காக அந்த இயக்கம் மட்டுமல்லாமல், அந்த இயக்கத்தை நம்பியிருந்த ஒட்டுமொத்தத் தமிழினமே முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டது.

அப்படியானால் கொன்றவர்கள் யார்/??

Link to comment
Share on other sites

உதயன் ஆசிரியர் 2000 இன் ஆரம்பபப் பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியிலிருந்த ரோ முக்கியஸ்த்தர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இவர் மூலம் புலிகளின் தலமையை அணுகியிருக்கிறது இந்திய உளவுத்துறை.

புலிகளின் தலமைக்குத் தெரியாமல் கொலை நடந்திருந்தது தெரிந்திருந்தும்கூட, [size=5]புலிகளின் தலமையிடமிருந்து ஒரு மன்னிப்புப் போன்ற கருத்து வெளியிடப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்[/size] என்று வித்தியாதரன் மூலம் கிளிநொச்சிக்குத் தூது அனுப்பப்பட்டது.

தமிழ்ச் செல்வனும், பாலசிங்கமும் இதை தலைவரிடம் வலியுறுத்தி சர்வதேச செய்தியாளர் மாநாடொன்றினை நடத்துமாறு தலைவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு நடந்த மாநாட்டில் இந்தியச் செய்தியாளர் ஒருவர் தனக்குச் சொல்லித்தரப்பட்ட கேள்வியைக் கேட்க, பாலசிங்கமும் தலைவரிடம் இப்படிக் கூறுங்கள் என்று சொல்கிறார். தான் எதிர்பார்த்த பதிலை தலைவர் கூறியதும் இந்தியா அன்றே புலிகளை அழிக்க நாள் குறித்தது.

[size=1]

[size=4]ஒருவர் தெரியாததை அறியவும் மற்றையவர் தெரிந்ததை பகிரவும் இந்த களம் வழிசமைத்து தருகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள் இரகுநாதன். [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.