Jump to content

கமல்ஹாசனின் கானமழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசனின் கானமழை

தேடிச் சோறுநிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி

என்னைப் புதிய உயிராக்கி – எனக்

கேதுங் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய அலைபேசியின் அழையோசையே இந்தக்கவிதைதான். கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரது திரைப்படங்கள், பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்!

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்!

எனக்கு பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனைப் பிடிக்கும். இசைஞானி இளையராஜாவும், கலைஞானி கமல்ஹாசனும் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் படிக்கையில் பாட்டுப்புத்தகம் வாங்கி வைத்து படிப்பது வழக்கம். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஆளவந்தான் பாட்டு புத்தகம் வைத்து படித்துக் கொண்டிருந்தோம். அதைப்பார்த்த ஆசிரியை பாட்டுப்புத்தகத்தை வாங்கி கிழித்துப்போட்டு விட்டார். மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் என்று அவங்களுக்கு தெரியாது.

கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியா கவிதை நான்!

kamalsong.jpg?w=300&h=198

கமல்ஹாசனின் குரலின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமான காந்தக்குரல். கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எல்லாமே தனித்துவமானவை. கமல்ஹாசன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களை தொகுத்துள்ளேன்.

  1. நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
  2. நரிக்கதை – மூன்றாம் பிறை
  3. விக்ரம், விக்ரம் – விக்ரம்
  4. கண்ணே தொட்டுக்கவா – விக்ரம்
  5. அம்மம்மா வந்ததிங்கு – பேர் சொல்லும் பிள்ளை
  6. தென்பாண்டிச்சீமையிலே – நாயகன்
  7. போட்டா மடியுது – சத்யா
  8. ராஜா கையவச்சா – அபூர்வ சகோதரர்கள்
  9. சுந்தரி நீயும் – மைக்கேல் மதன காமராஜன்
  10. கண்மனி அன்போடு – குணா
  11. போட்டுவைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன்
  12. சொன்னபடிகேளு – சிங்காரவேலன்
  13. சாந்துப்பொட்டு – தேவர்மகன்
  14. இஞ்சி இடுப்பழகி – தேவர்மகன்
  15. கொக்கரக்கோ – கலைஞன்
  16. தன்மானம் உள்ள நெஞ்சம் – மகாநதி
  17. எங்கேயோ – மகாநதி
  18. பேய்களை நம்பாத – மகாநதி
  19. எதிலேயும் வல்லவன்டா – நம்மவர்
  20. ருக்கு ருக்கு – அவ்வை சண்முகி
  21. காசுமேலே காசுவந்து – காதலா காதலா
  22. மெடோனா மாடலா நீ – காதலா காதலா
  23. ராம்…ராம்… – ஹேராம்
  24. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹேராம்
  25. ராமரானாலும் பாபரானாலும் – ஹேராம்
  26. கடவுள்பாதி மிருகம்பாதி – ஆளவந்தான்
  27. சிரி…சிரி…சிரி – ஆளவந்தான்
  28. ஆழங்கட்டி மழை – தெனாலி
  29. இஞ்சிருங்கோ – தெனாலி
  30. கந்தசாமி மாடசாமி – பம்மல் கே சம்மந்தம்
  31. ஏண்டி சூடாமணி – பம்மல் கே சம்மந்தம்
  32. வந்தேன் வந்தேன் – பஞ்சதந்திரம்
  33. காதல்பிரியாமல் – பஞ்சதந்திரம்
  34. ஏலே மச்சி மச்சி – அன்பே சிவம்
  35. யார்யார் சிவம் – அன்பே சிவம்
  36. நாட்டுக்கொரு சேதி சொல்ல – அன்பே சிவம்
  37. உன்னவிட இந்த உலகத்தில் – விருமாண்டி
  38. மாடவிளக்க – விருமாண்டி
  39. கொம்புலபூவசுத்தி – விருமாண்டி
  40. அன்னலட்சுமி – விருமாண்டி
  41. பாண்டி மலையாளம் – விருமாண்டி
  42. ஆழ்வார்பேட்டை ஆளுடா – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  43. கலக்கப்போவது யாரு – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  44. ஏலேய் நீ எட்டிப்போ – மும்பை எக்ஸ்பிரஸ்
  45. குரங்கு கையில் மாலை – மும்பை எக்ஸ்பிரஸ்
  46. ஓஹோசனம் ஓஹோசனம் – தசாவதாரம்
  47. அல்லா ஜானே – உன்னைப்போல் ஒருவன்
  48. தகிடுதத்தம் – மன்மதன் அம்பு
  49. கண்ணோடு கண்ணை – மன்மதன் அம்பு
  50. நீலவானம் – மன்மதன் அம்பு

kamal.jpg?w=150&h=203

இந்த 50 பாடல்களையும் பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. சில பாடல்களை கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பாடியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையிலும், முண்ணனி பாடகர் – பாடகிகளோடும் இணைந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் சிறந்த பாடகர் என்று இசையாளுமைகள் பலரும் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.

அன்று சொன்னான் பாரதி

சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

எந்தன் எண்ணம் என்றைக்கும்

தோல்வி என்பதை ஏற்றதில்லையடி!

மகாகவி பாரதியாரின் வசனகவிதை மேல் கமல்ஹாசனுக்கு காதல் அதிகமென நினைக்கிறேன். கமலின் நிறையப் பாடல்களில் வசனநடையைக் காணலாம். வசனநடையில் வந்த பாடல்களை எல்லாம் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். கமல்ஹாசனின் பாடல்களுக்கிடையே உரையாடல்களும் அதிகம் வரும். சென்னைவட்டார வழக்கில் ‘ராஜா கையவச்சா, காசுமேலே, ஆழ்வார்பேட்டை ஆளுடா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை!

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!

ஓடிஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை!

anbesivam.jpg?w=85&h=109

அன்பேசிவம் படத்தில் ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல’ பாடலில் வரும் ‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற வரிகளை அலைபேசியில் எனது குரலில் பதிந்து அழையோசையாக வைத்திருந்தேன். நிறையப்பேர் அது கமல்ஹாசனின் குரல் என்றெண்ணியதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் பிற நடிகர்களுக்காக பாடிய பாடல்களும் சிறப்பானவை. அஜித்திற்காக உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்புவாயினில்’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

துடிக்குது புஜம்! ஜெயிப்பது நிஜம்!

விரைவில் விஸ்வரூபம் படப்பாடல்கள் மதுரையிலிருந்து முதலில் ஒலிக்கப் போகிறது. கமல்ஹாசன் நம்ம வைகைகரையைச் சேர்ந்தவர் எனும்போது பெருமையாய் இருக்கிறது. நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

அபூர்வசகோதரர் கமல்ஹாசன்

நன்றிவிகடன்.காம்

http://maduraivaasagan.wordpress.com/2012/11/07/%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/

Link to comment
Share on other sites

அவரின் முதல் பாடல் "பன்னீர் புஷ்பங்களே.. கானம் பாடு.." இது "அவள் அப்படித்தான்" படத்தில் வந்தது. மிக நல்ல பாடல்.. பட்டியலில் விடுபட்டுள்ளது..!

Link to comment
Share on other sites

அந்தரங்கம் படத்தில் வரும் 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்' முதல் பாடலும் விடுபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அந்தரங்கம் படத்தில் வரும் 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்' முதல் பாடலும் விடுபட்டுள்ளது.

ஓம் தப்பிலி.. இந்தப் பாடல்தான் முதல் பாடலாக இருக்க வேண்டும்..!

Link to comment
Share on other sites

ஞாயிறு ஒளிமழையில் -இதுதான் முதல் பாட்டு என நினைக்கின்றேன் .முதல் கதாநாயகனாக நடித்த படமும் இதுதான் .

முதன் நாள் முதல்காட்சி ராணி தியேட்டரில் பார்த்தேன்.கதாநாயகி தீபா .போஸ்டரில் இருந்ததை பார்த்து படத்திற்கு போனால் அதில் ஒன்றும் இல்லை . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவர் தேவராஜன் மாஸ்டர்.[/size]

[size=5]'அந்தரங்கம்' படத்தில் இடம்பெறும் 'ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்'[/size]

[size=5]என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவர் தேவராஜன் மாஸ்டர்.[/size]

[size=5]'அந்தரங்கம்' படத்தில் இடம்பெறும் 'ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்'[/size]

[size=5]என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.[/size]

பழைய ஆட்கள் சொன்னால் உண்மைதான்

Link to comment
Share on other sites

உல்லாசம் படத்தில் வரும் "முத்தே முத்தம்மா" பாடலும், சதிலீலாவதியில் வரும் "மாருகோ, மாருகோ" பாடலும் தொகுப்பில் இல்லை.

ஆனால் தனக்குப் பிடித்த 50 பாடல்கள் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். இவை கட்டுரை எழுதியவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கமலஹாசனின் பிறந்தநாள்.. நல்ல நடிகன், நன்றாகப் பாடுவார். கடவுள் நம்பிக்கை கிடையாது. திருமணத்தில் நம்பிக்கையற்றவர்!

இதுக்கெல்லாம் மேலாக ஸ்ருதியின் தகப்பன் :icon_mrgreen:

அவரது விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கமலஹாசனின் பிறந்தநாள்.. நல்ல நடிகன், நன்றாகப் பாடுவார். கடவுள் நம்பிக்கை கிடையாது. திருமணத்தில் நம்பிக்கையற்றவர்!

இதுக்கெல்லாம் மேலாக ஸ்ருதியின் தகப்பன் :icon_mrgreen:

அவரது விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக காத்திருக்கின்றேன்.

கிருபனின் விஸ்வரூபம் விமர்சனத்துகாக காத்திருப்பு.

Link to comment
Share on other sites

  • 1 month later...

சூப்பர் சிங்கர் 20/20 இற்கு கமலஹாசன் விரைவில் வரவுள்ளார் .ஆவலுடன் பார்த்திருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

கமலின் நாயகன் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்திய படம் அந்த படமும் அதில் வந்த ஒரு பாடலும்தான் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கமலின் நாயகன் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்திய படம் அந்த படமும் அதில் வந்த ஒரு பாடலும்தான் .

 

"நீ சிரித்தால் தீபாவளி" பாடலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலகாசன் இத்தனை பாடல்கள் பாடியிருப்பது எனக்குப் புதிய செய்தி. நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.