Jump to content

இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே!!! உங்களை நாம் கைவிடப் போவதில்லை- உதவி செய்ய முற்படும் புலம்பெயர் தமிழர்கள்.

http://www.newjaffna...php?id=MjMxNzc=

இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??! உண்மையில் இது பாதிக்கப்பட்ட உறவுகளின் மீதான கருசணையின் நிமித்தம் விடுவிக்கப்பட்ட கோரிக்கையா.. நிச்சயமாக இது அவர்களின் மீட்சிக்கு உதவி நிற்குமா..????!

நியூயாவ்னா என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த.. முன்னாள் பெண் போராளிகள் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவத் தயாராக உள்ளனர் என்ற இந்த அறிவிப்பு.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட உறவுகள் வறுமை.. வருமானமின்மை காரணமாக தவறான வழியில் செல்லாது.. புலம்பெயர் மக்களைத் தொடர்பு கொண்டு உதவி பெற உதவுமா..??! இதனை யார் வழிநடத்துகிறார்கள்..???!

இந்தக் கோரிக்கையின் பின்னால் நிஜமாகவே மக்கள் பற்று உள்ளதா.. இதன் பின்னாடி எந்தப் புலம்பெயர் அமைப்புக்களாவது பொறுப்பு நிற்கின்றனவா.. அல்லது இது ஏதேனும் உள்நோக்கம் கொண்டதா.. என்பதை தயவுசெய்து இவற்றோடு தொடர்பில் உள்ளவர்கள்.. உறுதி செய்து கொள்வதவன் மூலம்.. பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஏமாற்றங்களையும் துன்பங்களையும் வஞ்சகங்களையும் சந்திப்பதில் இருந்து அவர்களைக் காக்க உதவும்.

மேற்படி இணையம்.. யாழின் கறுப்புப் பட்டியில் இருப்பதால்.. அதன் செய்தி நேரடியாக இங்கு இணைக்கப்படவில்லை ஆயினும்.. ஆதாரத்திற்காக இணைப்பை மட்டும் வழங்குகிறோம்.

இப்படியான ஒரு கோரிக்யையை ஒத்த கோரிக்கையோடு நாற்சந்தியில் ஒரு திட்டத்திற்கான தலைப்பை ஆரம்பித்தவர்கள் என்ற வகையில் இதனை இங்கு முன்வைக்கிறோம். இதனை மக்களுக்காக தெளிவுபடுத்தக் கூடியவர்கள் தெளிவுபடுத்துவது நன்று. மேற்படி அறிவிப்பு உண்மையிலேயே சமூக நோக்கம் கொண்டது எனின் வரவேற்கப்பட வேண்டும்.

நேசக்கரமும் இதனை ஒத்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது.

மற்றும்படி.. மேற்படி இணையத்தளக் கோரிக்கைகளுக்கும் எமக்கும் எமது நட்புவட்டத்திற்கும் கூட.. எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் யாழுக்கு வெளியில்.. இதனை இன்னும் கொண்டு செல்லவில்லை..!

Link to comment
Share on other sites

[size=4]மேற்படி இணையம்.. யாழின் கறுப்புப் பட்டியில் இருப்பதால்.. அதன் செய்தி நேரடியாக இங்கு இணைக்கப்படவில்லை ஆயினும்.. ஆதாரத்திற்காக இணைப்பை மட்டும் வழங்குகிறோம்.
[/size]

[size=4]ஆம், இவ்வாறான செயல்பாடுகள் உள்ள சிலரை தெரிந்து கருப்பு பட்டியலில் இட்டுள்ளனர். சில செயல்பாடுகளை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படும். [/size]

[size=4]இந்த மாதிரியான செய்திகள், இணைப்புக்கள் எல்லாம் இந்த மாத இறுதியில் இல்லாமல் போய்விடுவதும் வழமை. [/size]

Link to comment
Share on other sites

மின் அஞ்சலில் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

நல்லவிதமாக செயல்பட்டு, உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைத்தால் நன்றே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.