Jump to content

யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS

(கு.சுரேன்)

cf1(1).jpg

அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார்.

இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

cf2(1).jpg

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/52521-2012-11-11-16-38-36.html

cf3(1).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]வாழ்த்துக்கள் செந்தூரன்[/size]

Link to comment
Share on other sites

[size=4]இனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் !![/size]

Link to comment
Share on other sites

சாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் செந்தூரன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் செந்தூரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரா..

இன்னும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் செந்தூரன்.

Link to comment
Share on other sites

இனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்....[/size]

Link to comment
Share on other sites

3487_425922280794268_1478497304_n.jpg

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை

அதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் சர்வதேச ரீதியாக சாதனை புரிந்த மாணவர்களான இ.செந்தூரன், அ.அபிநந்தன், இ.இளங்கீதன் ஆகியோருக்கு ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு பின் பான்ட் வாத்தியங்கள் இசைக்க கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவ முதல்வர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சகிதம் கே.கே.எஸ் வீதி வழியாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதனை தொடர்ந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வந்த ஆசிரியர் குழாம் அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து தமிழரின் பெருமையை உலகறிய வைத்த செந்தூரன் அவர்களை சந்தித்து தமது பாராட்டுக்களையும் நினைவுப் பரிசிலையும் வழங்கி கௌரவித்தமை எமது கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாகும். இதன் பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதன் முதல் நிகழ்வாக கல்லூரி அதிபரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இவ் உரையில் அதிபர் சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தியதுடன் இது போன்று எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களும் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து சாதனையாளர்கள் மூவரும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், எமது கல்லூரியின் யாழ் பழைய மாணவர் சங்கத்தினால் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டது. இதன் பின் எமது கல்லூரியின் பழைய மாணவரும், தற்போதைய யாழ் வலய உதவி உடற்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.சண்.தயாளன் அவர்களினால் சிறிய கருத்துரை ஒன்று வழங்கப்பட்டதுடன் அவரினால் செந்தூரன் அவர்களுக்கு நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டது. அதனை அடுத்து செந்தூரனின் வகுப்பு மாணவர்கள் சார்பாக அவருடைய வகுப்பாசிரியர் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதன் பிற்பாடு சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காரணமாக இருந்த இம் மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள் திரு.க.சுவாமிநாதன், திரு.சொ. ஹரிசங்கர், மற்றும் பயிற்றுநர் திரு.செ.றமணன் ஆகியோரும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இதன் பின்னர் சாதனை மாணவர்களது உரை இடம் பெற்றது. இவ் உரைகளில் தாம் பெற்ற சவால்கள், அனுபவங்கள் போன்றவற்றை இங்கு குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சமயம் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் மண்டபத்திலே திரையிப்பட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் யாழ் பழைய மாணவர் சங்க விளையாட்டுக் குழு சார்பாக திரு.தர்மகுலசிங்கம் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. இதன் பின் இறுதி நிகழ்வாக பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.