Jump to content

தென்கிழக்குச் சீமையிலே........... ( இறுதிப்பாகம் ) .


Recommended Posts

வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!!

இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை நாடிநிற்கும் ,

நேசமுடன் கோமகன்

http://www.yarl.com/...howtopic=107444

************************************************************************

640px-St-Paul-de-Vence_%28Lunon%29.jpg

செயின்ற் போல் டு வன்ஸ் ( SAINT - PAUL - DE -VENCE ) கோட்டை நீசில் இருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது . ஏறத்தாள 355 மீற்றர் உயரத்தில் உள்ள மலை உச்சி ஒன்றில் இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது . இந்தக் கோட்டையினுள்ளே நீசுவாசின் பழைய தலைநகரைப்போல ஒரு கிராமமே இருந்தது . இந்க் கிராமத்தின் மொத்த சனத்தொகையே வெறும் 3000 பேர்கள்தான் . இந்தக்கோட்டையின் உள்ளே இருக்கும் கிராமத்தவரை செயின்ற் போலுவாஸ் ( Saint-Paulois ) என்று அழைக்கப்படுகின்றனர் . கோட்டையின் நுளைவாயிலில் நாங்கள் நின்றபொழுது , எனக்கு யாழ்ப்பாணத்தின் சிதிலமான டச்சுக்கோட்டையே ஞாபகம் வந்தது . கோட்டை வாயிலும் அதன் சுற்று மதில்களும் கொத்தளங்களும் கண்ட கல்லினால் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

கோட்டையின் தெரு

576px-Saint-Paul_de_Vence_II_-_Jean-Charles_GUILLO.JPG

நாங்கள் உள்ளே நுளைந்தபொழுது வெளியே எரித்த வெய்யிலின் உக்கிரம் , நீசுவாக்களின் கட்டிடக்கலையினால் குளிராகவும் , இதமான காற்றாகவும் வீசியது . கோட்டையின் மேலிருந்து கீழே பார்க்கும்பொழுது சுற்றிவர பச்சை போர்த்திய சிறிய மலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன . நாங்கள் உள்ளே நடந்து சென்றபொழுது முதலில் பலவிதமான " ஆர்ட் கலறி " கடைகள் காணப்பட்டன . அதன்பின்பு சிறிய கிராமம் என் கண்முன்னே விரிந்தது . நீசுவாக்களின் பழைய நகரைப்போலவே மிகவும் குறுகலான தெருக்களும் , அந்தத் தெருக்கள் சதுரக்கற்கள் ( பவே , pavé ) வைத்து நிர்மாணிக்கப்பட்டிருந்தன . இப்படிப்பட்ட தெருக்கள் றோமர்களின் கட்டிடக்கலையின் எச்சசொச்சங்களாகும் . இவைகள் நடப்பதற்கு சிறிது சிரமமானாலும் , மிகவும் உறுதி வாய்ந்தவை .

கோட்டையிலுள்ள வீடுகளில் ஒன்று

473px-Saint-Paul%28Vence%29.jpg

கோட்டையின் கொத்தளங்களில் ஒன்று

nicevisit2012286.jpg

அந்தக்கிராமத்தின் வீடுகள் கூடுதலாக இரட்டை மாடிகளைக் கொண்டதாகவே இருந்தன . அதில் ரோமர்களின் கலைவண்ணமும் , நீசுவாக்களின் கலைவண்ணமும் போட்டிபோட்டு மிளர்ந்தன . நாங்கள் அந்தகிராமத்தின் சந்தபொந்துகளில் எல்லாம் நுளைந்து வந்தோம் . கோட்டையின் நான்கு புறக் கொத்தளங்கள் சிதிலமடைந்த்து இருந்தாலும் , பீரங்கிகள் பொருத்தியதற்கான மேடைகள் அங்கே காணப்பட்டன . நாங்கள் அங்கிருந்து கீழே பார்கும் பொழுது கோட்டையை நோக்கி வரும் பிரதான வீதி தெளிவாகவே எங்களுக்குத் தெரிந்தது . அப்பொழுது எனது கற்பனைக்குதிரையோ , இந்தக் கோட்டையின் கொத்தளங்களில் நின்று கோட்டைக்கு வரும் எதிரிகளின் படைகளை எப்படியெல்லாம் தகர்த்திருப்பார்கள் என்று சிறகு கட்டிப் பறந்தது . நாங்கள் கோட்டையை விட்டு வெளியேறும் பொழுது மதியம் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது . இதுவரை நேரமும் கோட்டைக்குள் குளிர்மையை அனுபவித்த நான் , வெளியே கோடை வெய்யிலின் அகோரத்தை உணரத் தொடங்கினேன் . எனது உடலெல்லாம் வியர்வையில் குளித்தது . சாத்தர் காரின் குளிரூட்டியைப் போட்டதின் பின்பே எனது வியர்வை என் சொல் கேட்டது .

எனக்கு வயிறு சுடத்தொடங்கீட்டிது . கார் கொஞ்சத்தூரம் போய் இருக்கும் பின்னாலை இருந்த என்ரை மனிசி காறை நிப்பாட்டுங்கோ சாத்தர் எண்டு கத்தீச்சிது . சாத்தர் காறை குத்தி அடிச்சுப்போட்டு பின்னாலை தலையை திரும்ப , சாத்தற்ரை மனுசி,

" ஏங்க......... பஞ்சுமிட்டாய் வாங்கலாங்க......... " .

எண்டு தொடங்க . என்ரையாள் ,

" இண்டைக்கு தும்பு முட்டாஸ் இலாட்டிக்கி கார் அரக்காது " .

எண்டுசொல்லிக் கொண்டு ரெண்டு பேரும் காறை விட்டு இறங்கீச்சினம் .

காருக்குப் பக்கத்திலை ஒருத்தன் தும்பு முட்டாஸ் கடை போட்டிருந்தாலை வந்த வினை . நான் எனக்கு வந்த விசருக்கு ஒரு சிகரட்டைப் பத்திக்கொண்டு இவையள் மூண்டு பேரையும் விடுப்பு பாத்தன் . எனக்கும் சிவசத்தியமாய் உண்மையிலை தும்பு முட்டாஸ் எப்பிடி செய்யிறதெண்டு தெரியாது . என்ரை மனிசி மூண்டு பேருக்கு தும்பு முட்டாஸ் ஓடர் குடுக்க , கடைக்காறன் தன்ரை ஆட்டுக்கல்லு மாதிரி இருந்த மிசினுக்குள்ளை சீனியை போட்டிட்டு மிசனை ஸ்ராட் பண்ணினான் . நான் இவன் என்ன குறளி வித்தை காட்டிறான் எண்டு கிட்டப் போய் பாத்தன் . மிசின் நல்லாய் சுத்தி சீனி றோஸ் கலரிலை தும்பு தும்பாய் வந்திது . ஒவ்வொரு தடியிலை அதை பெரிய உறுண்டையாய் சுத்தி கடைக்கறான் இவையிட்டை குடுத்தான் . என்னை விட்டிட்டு மூண்டு பேரும் தும்பு முட்டாஸை மேஞ்சினம் . சாதருக்கு தும்பு முட்டாஸ் மேஞ்சு வாயெல்லாம் ஒரே றோஸ் கலராய் இருந்திது .

தும்பு முட்டாசும் மெசினும்

Cotton-Candy.png

நாங்கள் போற வழியிலை சாத்தர் தூரத்திலை ஒரு தெரிஞ்ச மூண்டு அடுக்குமாடிக் கட்டிடத்தை காட்டினார் . அதுகள் ஒரு பெரிய கப்பல் போலை இருந்திதுகள் . இதுகள் என்னவெண்டு சாத்தற்ரை வாயைக் கிண்டினன் . அவர் சொன்னார் , முக்கியமாய் எண்ணை கோஸ்ரியளுக்கு கட்டினதாம் . அவையள் எப்பாவது இருந்துட்டு இங்கை வருவினமாம் . அதுகளின்ரை பராமரிப்புகள் முழுக்க லோக்கல் ஆக்கள் தானாம் எண்டு சொன்னார் . எனக்கு அதுகளைப்பாக்க எலிசபெத் 2 கப்பலின்ரை ஞாபகம்தான் வந்தீச்சிது .

நாங்கள் வீட்டை சாப்பிட போய் இறங்க சாத்தற்ரை பொடிகார்ட் எங்களைக் காணாத கவலையிலை வீட்டு வாசலிலை நிண்டார் . நாங்கள் சாப்பிட்டுப்போட்டு வீட்டுக்கு பின்னாலை இருக்கிற சாத்தற்ரை தோட்டத்தை பாத்துக்கொண்டிருந்தம் . சாத்தர் மிளகாய் , வெங்காயம் தக்காளி , கத்தரி , தேசிக்காய் எண்டு எக்கச்சக்கம் காய்பிஞ்சுகள் வைச்சிருந்தார் . தான் வீட்டுச்சமையலுக்கு இதிலை இருந்துதான் காய்கறியள் எடுக்கிறவராம் . எனக்கு சாப்பிட்ட மயக்கம் கண்ணை சுத்தீச்சிது . சாத்தர் சொன்னர் ,

"கோ கொஞ்சத்தாலை உங்களுக்கு மொஸ்கோ காட்டப்போறன் எண்டு ".

நான் நினைச்சன் இவருக்கு என்னைக் கண்டபுழுகத்திலை உண்மையிலையே மரைகழண்டு போச்சுதோ எண்டு . நானும் மனிசியும் பின்னேரம் ஐஞ்சு மணி போலை மொஸ்கோ பாக்கப் போனம் .

சாத்திரி உண்மையிலேயே எங்களை மொஸ்கோவிற்க்குத்தான் அழைத்துச்செல்கின்றாரா என்ற சந்தேகம் என்னை வாட்டியபடி இருக்க நான் காரினுள் இருந்தேன் . எங்களது கார் ஒருசில நிமிடங்களை உள்வாங்கி ஓர் கதீட்ரலின் முன்னே நின்றது . அங்கே நான் கண்ட காட்சியை என் கண்கள் நம்ப மறுத்தன . அங்கே ஓர் செஞ்சதுக்கத்தைக் கண்டேன் . நான் உண்மையிலேயே செயின்ற் பீற்றேர்ஸ் பேர்க்கில் நிற்பது போலவே உணர்ந்தேன் .

ரஷ்சிய ஒர்தடொக்ஸ் கதீட்ரல்

480px-Nice_Cath%C3%A9drale_Saint-Nicolas.jpg

செயின்ற் நிக்கோலஸ் ஓர்த்தடொக்ஸ் கதீட்ரல் நிக்கோலாஸ் அலக்ஸாண்ட்றோவிச் அரசகுடும்பத்தின் நினைவாக 19 ம் நூற்றாண்டில் ரிசார் நிக்கோலா 2 னால் கட்டப்பட்டதாகும் . இந்தக் கதீட்றல் மேற்கு ஐரோப்பாவின் முதலாவது மிகப்பெரிய ஓர்த்தடொக்ஸ் கதீட்ரலாகும் . இது அச்சு அசலாக செஞ்சதுக்கத்தின் கட்டிடக்கலையையே கொண்டிருந்தது . அதனால்தான் சாத்திரி எங்களை வெறுப்பேற்றினாரோ தெரியவில்லை . மாலை நேரத்து சூரியன் தேவாலையத்தின் கோபுரத்தில் பட்டுத் தகதகத்தது . நாங்கள் ஆசைதீர மொஸ்கோவில் நின்று படங்களை சுட்டுத்தள்ளினோம் . நாங்கள் மறுநாள் பாரிஸ் செல்ல வேண்டியதால் அன்று இரவு எங்களைத் தங்களுடன் நிற்குமாறு சாத்திரி வற்புறுத்தினார் . நாங்கள் மூவரும் நாங்கள் தங்கியிருந்த மேர்க்கியூர் கொட்டேலுக்குச்சென்று எமது அறையை காலி செய்தோம் . அங்கும் சாத்திரி தனது தொலைபேசி இலக்கத்தை வாரவேற்பாளினியிடம் கொடுக்கத் தவறவில்லை . நாங்கள் மீண்டும் வீட்டை அடைந்தபொழுது சயந்தன் படையணி தங்களது சுற்றை முடித்துக் கொண்டு எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் .

நான் சாத்திரி சயந்தன் வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் மீண்டும் இலக்கியத்திற்காக ஒன்று கூடினோம் . 1664 உம் இலக்கியமும் நன்றாகவே பற்றி எரிந்தன . இந்தப் பற்றி எரிதல் எனக்கு நன்றாகவே பயன்பட்டது . இலக்கியம் சம்பந்தமாகப் பல புரிதல்களை இந்த சந்திப்பு எனக்கு ஏற்படுத்தியது . அவர்கள் இருவரும் கறுப்பு வெள்ளை சாம்பலைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள் . நேரம் நள்ளிரவைத்த் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது . வெக்கை குறைந்து குளிர்மை எங்களின் வியர்வையைச் சுகப்படுத்தியது . நான் நித்திரை சொக்க நெளிந்து கொண்டிருந்தேன் . வீட்டின் நடுவே இருந்து சயந்தனுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருந்தது . நாங்கள் சாப்பிட்டுவிட்டு சயந்தனை அவர் நிற்கும் கொட்டேலில் கொண்டுபோய் விட்டோம் . நாங்கள் எல்லோரும் படுக்க அதிகாலை இரண்டு மணியாகிவிட்டிருந்தது .

எங்களுக்கு மதியம் 1 மணிக்கே எங்களது ரீ ஜீ வி பரிசுக்குப் புறப்பட இருந்தது . நான் படுத்த உடனேயே உடல் அசதியினால் தூங்கி விட்டாலும் , காலை எழுமணிக்கே எழுந்து விட்டேன் . சாத்திரி அந்த அதிகாலை வேளையிலேயே அருகேயுள்ள பேக்கறியில் குறசோண்ஸ்களை வாங்கி தோட்டத்து மேசையில் அடிக்கியிருந்தார் . அவைகளின் வாசம் என் நாடிநரம்பையெல்லாம் சூடேற்றியது . நான் ஓரு கபேயை போட்டுக்கொண்டு எனது சிகரட்பெட்டியை எடுத்துக் கொண்டு சாத்திரியிடம் வந்தேன் . சாத்திரி தான் போட்ட தேனீரை உறிஞ்சியவாறு ஒரு பேப்பறை உறிஞ்சிக்கொண்டிருந்தார் . அந்த அதிகாலைவேளை அதற்கே உரிய குணாம்சங்களைக் கொண்டு எனது கபேயுடன் என்னைச் சிலிர்க்க வைத்தது . கடிகரத்த்த்தில் நேரம் நகரநகர என்மனமோ நீஸை விட்டு நகரமறுத்து அடம்பிடித்தது . நாங்கள் மதியம்சாப்பிட்டு விட்டு புகையிரதநிலையம் செல்ல வெளிக்கிட்டோம் .

என்மனது என்னிடத்தில் இல்லை . சிலவேளைகளில் பிரிவுகள் என்றுமே என்மனதில் கோடுகிழித்தால் போல ஆழ உழப்பட்டுவிடுகின்றன . இந்த தென்கிழக்குச் சீமைப்பயணமும் அவ்வாறே எனக்குத் தோன்றியது . சாத்திரியிடம் ஏற்கனவே எனக்குப் பழக்கம் இருந்தாலும் , இந்தப் பயணமே சாத்திரி என்ற மனிதனை எனக்கு அறிமுகப்படுத்தியது . என்னால் பலவிடையங்களை கிரகிக்க இந்தப்பயணம் உதவியது . எமது கார் புகையிரதநிலையத்தில் நுளைந்தபொழுது பெரிய கூட்டம் இருக்கவில்லை . சிறிது நேரத்தில் ரீ ஜீ வி ஆடிஅசைந்து வளைந்து நெளிந்து புகையிரத நிலைத்திற்குள் நுளைந்தது . சாத்திரியின் முகம் என்னைப்போலவே இறுகிக் காணப்படது . நாங்கள் ஏறிய ரீஜீவி மெதுவாக நகர்ந்து வேகமெடுக்கத் தொடங்கியது . எனது மனமோ தென்கிழக்குச் சீமையின் இனிய நாட்களை அசைபோட்டுக் கொண்டிருந்தது .

பட இணைப்பு

மொஸ்கோவில் ஒரு காட்சி

576px-La_Cathedrale_Orthodoxe_Russe_Saint-Nicolas_2.jpg

கிராமத்தின் வீடுகளின் காட்சி

nicevisit2012274.jpg

கோட்டை கொத்தளத்தின் வெளிப்பார்வை

nicevisit2012285.jpg

கோட்டை சுவரும் கிராமத் தெருவும்

nicevisit2012281.jpg

எண்ணை கோஸ்ரியளுக்கு கட்டின கப்பல் அடுக்குமாடி தொடர்

nicevisit2012262.jpg

முற்றும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடைசிப் பந்தியை வாசித்தவுடன் நானும் உங்களுடன் வந்தது போலவும் பிரிவின் சுமை என்னை அழுத்தியது போலவும் உணர்ந்தேன் கோமகன். இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எண்ணியிருந்தேன்.முடிந்துவிட்டது என்னும் போது இனிமேல் இத்தொடர் வராது என்று கவலை இக்கணம் வந்தது.நன்றி.

Link to comment
Share on other sites

வாஅழ்க்கையே ஒரு பயணம்தான கோமகன்.அதில் மிகவும் மனதைப் பாதிக்கும் விடயம் பிரிவுகள்.மனம்கனக்க வைத்தௌ இருத்திப்பகுதி.இன்னொரு தொடருடன் விரைவில் வாருங்கள்.மிக நல்ல ஒரு எழுத்தாளன் நீங்கள்.எனக்கு உங்கல் எழுத்துக்கல் மிகவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருந்தது, உங்கள் சீமைப்பயணம் கோமகன்!

உங்கள் மாதிரி ஒரு பதிவாளரும், சாத்திரியைப் போன்ற ஒருவரும், நான் பிரான்ஸ் வந்த காலங்களில் இருக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கம், எனக்கு ஏற்படுமாறு, உங்கள் பதிவும், சாத்திரியின் விருந்தோம்பும் பண்புகளும் இருக்கின்றன!

இப்போதெல்லாம், ஐரோப்பா என்னை ஈர்ப்பது குறைந்து விட்டது!

நாம் பிறந்து வளர்ந்த, வெம்மை கலந்த காற்றும், பரந்த வெளிகளும், இயல்பாகவே என்னை ஈர்க்கும் கடல்களும், என்னை, இங்கே நங்கூரமிட வைத்துவிட்டன!

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கும்வரை, நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தந்த கோவுக்கு நன்றிகள்....மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னும் அதிகம் எழுதச்சொல்லித்தான் கேட்பேன். ஆனால் உங்கள் நேரப்பிரச்சனை தெரியும் என்பதால் இந்தளவு சுவாரசியத்துடன் மிகத்தேர்ந்த,இலகுநடையில், அழகான படங்களுடன் கிழக்குச்சீமையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள் கோமகன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ திரைப்படம் பற்றியதோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன். இன்று முழுமையாக எல்லாப்பகுதிகளையும் வாசித்தேன். சயந்தன், சாத்திரி ஆகியோரும் இணைந்திருந்தமை கதையின் எல்லாப்பகுதிகளையும் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது. சாத்திரியின் வீட்டிற்கும், சாத்திரி வாழும் நகரிற்கும் நானும் சென்றுவந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா? இசைக்கலைஞன் கேட்டதுபோல் சாத்திரி, மற்றும் உங்கள் பிள்ளைகள் பற்றியெதுவும் விபரணம் காணாதது கண்டு அவர்களை வேறொங்கோ விட்டு வந்தீர்களோ என்று நினைத்தேன் (கோமகனின் வயது தெரியவில்லை, குழந்தைகள் இன்னும் இல்லையானால் மன்னிக்கவும்).

கதையை வாசித்தபோது அதில் ஒருநிலையில் நீங்கள் மழையில் நனைந்தபோது நானும் நனைந்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

பல அரிய தகவல்களும் கதையில் உள்ளன. Formula Honda போட்டிபற்றி இணையவனும் முன்பு எழுதினார். சயந்தன், சாத்திரியின் மேலதிக கதைநீட்சிகளும் சுவாரசியமாய் உள்ளன. கதையில்வரும் புகையிரதப்பயணம் அதிகம் பிடித்தது. கனடா, அமெரிக்காவைவிட ஐரோப்பா சற்று வித்தியாசமானது. வாய்ப்புக்கிடைத்தால் சாத்திரியின் இடத்திற்கு நானும் சென்றுவரவிரும்புகின்றேன். துறைமுகப்பட்டிணம் அழகாய் உள்ளது.

வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

உங்கள் கடைசிப் பந்தியை வாசித்தவுடன் நானும் உங்களுடன் வந்தது போலவும் பிரிவின் சுமை என்னை அழுத்தியது போலவும் உணர்ந்தேன் கோமகன். இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எண்ணியிருந்தேன்.முடிந்துவிட்டது என்னும் போது இனிமேல் இத்தொடர் வராது என்று கவலை இக்கணம் வந்தது.நன்றி.

பிரிவுகள் என்றுமே கனதியானவை . அதுவும் நேர்அலைவரிசையில் இருப்பவர்களது பிரிவுக்கு வீரியம் கூட . உங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுமே :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா?

இது எப்ப..

--

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசையிருந்தது. சிறுவயதில் கடலோடு கிடந்தாலும் அப்பொழுது தோன்றியதில்லை. ஆனால் கடலை விட்டு விலக விலக.. அந்த ஆசை பூதாகாரமாக வளர்ந்து விட்டது. ஒரு நள்ளிரவில் கடற்கரையில் அலைகளை அளைந்து கொண்டு படுக்க வேண்டும் (தனியத்தான்) என்பதுதான் அது. அந்த ஆசை நீஸில் நிறைவேறியது. கூடவே இலேசான மழையும்.. மேலேயும் தண்ணீர், அருகேயும் தண்ணீர்..... உள்ளேயும் தண்ணீர்...

நன்றி சாத்திரி, நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இவ்வளவு நாளும் தொடரை பொறுமையாக எழுதி முடித்ததற்கு நன்றி[சகாறா அக்கா மாதிரி இடையில் விடாமல் :lol: ] ஆனால் முடிவை அவசரப்பட்டு முடித்த மாதிரி எனக்குத் தெரிகின்றது

Link to comment
Share on other sites

வாஅழ்க்கையே ஒரு பயணம்தான கோமகன்.அதில் மிகவும் மனதைப் பாதிக்கும் விடயம் பிரிவுகள்.மனம்கனக்க வைத்தௌ இருத்திப்பகுதி.இன்னொரு தொடருடன் விரைவில் வாருங்கள்.மிக நல்ல ஒரு எழுத்தாளன் நீங்கள்.எனக்கு உங்கல் எழுத்துக்கல் மிகவும் பிடிக்கும்.

இங்கையும் எனக்கு அதே குழப்பம்தான் வருது :lol: . நீங்கள் கட்டுமரமா டோரா படகா :lol: ?? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் வண்டுமுருகன் :) :) .

Link to comment
Share on other sites

நன்றாக இருந்தது, உங்கள் சீமைப்பயணம் கோமகன்!

உங்கள் மாதிரி ஒரு பதிவாளரும், சாத்திரியைப் போன்ற ஒருவரும், நான் பிரான்ஸ் வந்த காலங்களில் இருக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கம், எனக்கு ஏற்படுமாறு, உங்கள் பதிவும், சாத்திரியின் விருந்தோம்பும் பண்புகளும் இருக்கின்றன!

இப்போதெல்லாம், ஐரோப்பா என்னை ஈர்ப்பது குறைந்து விட்டது!

நாம் பிறந்து வளர்ந்த, வெம்மை கலந்த காற்றும், பரந்த வெளிகளும், இயல்பாகவே என்னை ஈர்க்கும் கடல்களும், என்னை, இங்கே நங்கூரமிட வைத்துவிட்டன!

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கும்வரை, நன்றிகள்!

எந்தத்துறையில் நங்கூரம் பாய்ச்சினாலும் , எண்ணங்களால் நாங்கள் ஒன்றுபட்டவர்கள்தானே . உங்கள் சத்தான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் புங்கையூரான் .

Link to comment
Share on other sites

நல்ல பதிவு தந்த கோவுக்கு நன்றிகள்....மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்...

நன்றி புத்தா . உங்கடை சிட்ணி கோசிப்பை விடவா எனது பதிவுகள் நல்லது :D ?? அதைப்போல ஒரு தொடர் ஒன்று வேண்டும் புத்தா :) :) :) .

Link to comment
Share on other sites

முடிச்சுட்ட்டீங்களா கோமகன் அண்ணன் :o ?? ரொம்ப சாட் ஆ இருக்குங்க அண்ணன் :( . எங்க ஆளுங்கெல்லாம் ரெம்ப மொக்கையா பயணக்கதைன்னு பிளேடு போடுவாங்க :lol: . பட் நீங்க ஒரு டாக்கடர் மாதிரி காமடியையும் வரலாற்றையும் நன்னா மிக்ஸ் செய்ஞ்சு அசத்தீட்டீங்க :) . நீங்க சொன்னபுறம்தான் சாத்திரி அண்ணனை நேரில பாக்கணும் போல இருக்குங்க :lol: உங்க கிறியேட்டிவிட்க்கு என்னோட வாழத்துங்க அண்ணன் :) .

Link to comment
Share on other sites

நான் இன்னும் அதிகம் எழுதச்சொல்லித்தான் கேட்பேன். ஆனால் உங்கள் நேரப்பிரச்சனை தெரியும் என்பதால் இந்தளவு சுவாரசியத்துடன் மிகத்தேர்ந்த,இலகுநடையில், அழகான படங்களுடன் கிழக்குச்சீமையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள் கோமகன் அண்ணா. :)

நான் மனச்சோர்வடைகின்ற நேரங்களில் எல்லாம் தனிப்பட்டமுறையில் உங்கள் கள அனுபவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி என்னைத் தூக்கி விடுபவர்களில் நீங்களும் ஒருவர் . உங்கள் நேரத்திற்கு மிக்கநன்றிகள் ஜீவா :) :) .

Link to comment
Share on other sites

இறுதிப் பாகத்தை வாசித்து முடித்தேன்.. ஒரு அழகான அனுபவத்தொடராக இருந்தது.. ஆக்கத்திற்கு நன்றிகள் கோம்ஸ்.. :D

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ திரைப்படம் பற்றியதோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன். இன்று முழுமையாக எல்லாப்பகுதிகளையும் வாசித்தேன். சயந்தன், சாத்திரி ஆகியோரும் இணைந்திருந்தமை கதையின் எல்லாப்பகுதிகளையும் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது. சாத்திரியின் வீட்டிற்கும், சாத்திரி வாழும் நகரிற்கும் நானும் சென்றுவந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா? இசைக்கலைஞன் கேட்டதுபோல் சாத்திரி, மற்றும் உங்கள் பிள்ளைகள் பற்றியெதுவும் விபரணம் காணாதது கண்டு அவர்களை வேறொங்கோ விட்டு வந்தீர்களோ என்று நினைத்தேன் (கோமகனின் வயது தெரியவில்லை, குழந்தைகள் இன்னும் இல்லையானால் மன்னிக்கவும்).

கதையை வாசித்தபோது அதில் ஒருநிலையில் நீங்கள் மழையில் நனைந்தபோது நானும் நனைந்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

பல அரிய தகவல்களும் கதையில் உள்ளன. Formula Honda போட்டிபற்றி இணையவனும் முன்பு எழுதினார். சயந்தன், சாத்திரியின் மேலதிக கதைநீட்சிகளும் சுவாரசியமாய் உள்ளன. கதையில்வரும் புகையிரதப்பயணம் அதிகம் பிடித்தது. கனடா, அமெரிக்காவைவிட ஐரோப்பா சற்று வித்தியாசமானது. வாய்ப்புக்கிடைத்தால் சாத்திரியின் இடத்திற்கு நானும் சென்றுவரவிரும்புகின்றேன். துறைமுகப்பட்டிணம் அழகாய் உள்ளது.

வாழ்த்துகள்!

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை . ஆரம்பத்தில் சினிமாப்பாணியிலான தலைப்பாக இருக்கின்றதே என்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது . ஆனாலும் பிறான்சின் தென்கிழக்கு கோடியில் இருக்கும் இந்த துறைமுகபட்டினமும் , அதனை அண்டியுள்ள நகரங்களும் , உலகத்துச் செலவந்தர்களது உல்லாசபுரிதான் . அதனால் அதை ஊர்வழக்கில் " சீமையாக " உருவகித்து தொடரை நகர்த்தினேன் . இறுதியில் வாசகர் மனதில் " நெருடிய நெருஞ்சி " போல இந்தத்தலைப்பும் சென்றடைந்துள்ளதை என்னால் அனுமானிக்கக் கூடியதாக உள்ளது . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கலைஞன் :) :) .

Link to comment
Share on other sites

கோமகன் இவ்வளவு நாளும் தொடரை பொறுமையாக எழுதி முடித்ததற்கு நன்றி[சகாறா அக்கா மாதிரி இடையில் விடாமல் :lol: ] ஆனால் முடிவை அவசரப்பட்டு முடித்த மாதிரி எனக்குத் தெரிகின்றது

நான் உந்த விழையாட்டுக்கு வரேலை :lol: . நான் தொடர் எண்டு சொல்லி உங்கள் எல்லாரையும் செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டன் . உங்கடை கருத்துக்கு நன்றி அக்கை :) :) .

Link to comment
Share on other sites

இன்று தான் கோவின் கடைசித் தொடரை வாசித்தேன். கோ ஒரு தொடரை எழுதி முடிக்க ஒரு மெலனியம் எடுக்கும் எண்டாலும் பறுவாயில்லை நன்றாக எழுதியிருக்கின்றீர்கள், நன்றியும் வாழ்த்துக்களும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் வேண்டுகோளுக்கிணங்க, நடு இரவில் கடற்கரையில் சாத்திரி நிற்கும் படத்தை வெளியிடுகிறேன்

photo.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) இது சாத்திரியில்ல

2) நாடு ரோட்டில உச்சா போறமாதிரி இருக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கணும். அது கோமகன். ஏதோ நினைப்பில சாத்திரி என எழுதிட்டேன். மற்றது, அது நடுரோட்டு இல்ல. பக்கத்தில பாருங்கோ, அலையடிக்குது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.