Jump to content

அய் நா தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறியது -விசாரணை அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை.

பிறகு ஏன் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு அலுவலகம் மக்கள் பணத்தில் உங்களுக்கு???????????ஈ

இதே நிலையை தமிழர் சார்ந்தும் எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போமே..............

நாசமாப்போவார்

வீதி வீதியாய்

இரவு பகலாய்

நின்று அழுது கெஞ்சினோமே...............

தடுங்கள் என்று.......

அந்த மக்களை விட்டு நீங்கள் போகும் முதல்

கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார்களே போகவேண்டாம்.

அழிவுக்கு துணை போகவேண்டாம்.

எங்கள் எல்லோரையும் அழிக்கப்போகின்றான் என.

எங்கள் கைகளைக்கட்டிவிட்டு

அழிவுக்கு தோள் கொடுத்து

முதுகால் அழித்துவிட்டு...........

அதுக்கும் மக்கள் பணத்தில் கூட்டம் போட்டு அறிக்கை விடுகிறார்கள்.

இந்த வாழ்க்கைக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம்...........

இதற்கு பரிகாரமாக எதையும் செய்யவேண்டாம்

ஐனநாயக முறைப்படி ஒரு தேர்தல்

நீங்கள் எப்படி வாழப்போகின்றீர்கள் என.

அதையாவது செய்வீர்களா???

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

bankemoon-seithy-20121017-150.jpg

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது.இந்த நிலையில் இது தொடர்பில் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமது உள்ள குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

என்ன விலை கொடுத்தேனும் விடுதலைப்புலிகளை ஒழிப்பது என இலங்கை அரசு திடமாக இருந்தது : ஜோன் ஹோம்ஸ்

2012-11-15 10:06:53

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது என்று ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் கசிந்துள்ள நிலையிலேயே ஜோன் ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருந்தாலும் கூட எந்தவித மாற்றத்தினையும் செய்திருக்க முடியாது.

மோதல் சம்பவத்தின்போது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் எவருக்கும் உறுதியான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மீது மாத்திரமே முற்று முழுதான குற்றச்சாட்டுக்களை வைப்பதையும் ஏற்க முடியாது. ஆனாலும் இவ்விடயத்தில் சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர் என்பதை மட்டும் கூற முடியும்.

என்ன விலையை கொடுத்தாவது இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை. ஆகையால் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைக்கு ஐ.நா.தே முழுப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சங்கடமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்க தேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

அத்தருணத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் எம்மால் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்ளவும் முடியும். ஆனாலும் நாம் தேறுவிதமாக செயற்பட்டிருந்தால் இலங்கை அரசும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதையும் எம்மால் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesar...al.php?vid=1629

இது முற்றிலும் உண்மையான விடயம் .இப்படி ஒன்று நடந்துவிடுமோ என்று அஞ்சித்தான் காலம் காலமாக பயங்கரவாத செயல்களை (கொலை கொலை கொலை ) நிற்பாட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி எழுதி வந்தோம் ,கெடு குடி சொற்கேளாது .

யுத்தம் தொடங்கமுன்னரே அந்த யுத்தத்தை நியாய படுத்துவதற்கான ஏற்பாடுகளை உலகம் முழுக்க சிறிலங்கா அரசு தொடங்கிவிட்டிருந்தது .இவ்வளவு அழிவும் ஒருநாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ நடக்கவில்லை ,ஒரு வருடங்கள் நடந்த யுத்தம் .பொது மக்கள் அழிவுகளை தடுக்க விரும்பியிருந்தால் அதற்கு எத்தனையோ வசதிகள் இருந்தன ஆனால் அத்தனையும் புறம் தள்ளிவிட்டு கடைசிவரை நாங்கள் தான் வெல்லுவம் என்று நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் புலிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

அதைவிட கொடுமை உலகம் எங்கும் வீதியில் நின்று மக்களை காப்பற்ற சொல்லி எவனும் கத்தவில்லை புலிகளை அங்கீகரிக்க சொல்லி தலைவரின் படத்துடன் போய் நின்றார்கள் ,உலகம் திரும்பியும் பார்க்கவில்லை .இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

Link to comment
Share on other sites

[size=4]சிந்திக்கவும்: ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்த வீட்டோ அதிகாரத்தால் எந்த நன்மையையும் இல்லை.

வீட்டோ அதிகாரம் பெற்றவர்கள் உலக ரவுடிகள், தாதாக்கள் மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு அடிபணித்து நடக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் போர் தொடுப்பார்கள். இவர்களுக்கு வேண்டியவர்கள் போர் தொடுத்தால் வேடிக்கை பார்ப்பார்கள் வேண்டாதவர்கள் போர் தொடுத்தால் வீட்டோ அதிகாரத்தோடு ஓடி வருவார்கள். உலக ரவுடிகளுக்கு சேவகம் செய்யும் பொம்மைதான் இந்த ஐ.நா மன்றம்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111301

Link to comment
Share on other sites

இனப்படுகொலைகள் நடந்துகொண்டிருந்தபோது, இதே ஜோன் ஹோம்ஸ் தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் பார்க்காமலே அழித்துவிடுவேன் என்று சொல்லியிருந்தவர்.

Link to comment
Share on other sites

121113163833_sri_lanka_war_civilians_killed_304x171_humanrightswatch_nocredit.jpg

சிங்களவருக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள் நேரடியானகவும், இந்தியாவிற்க்கு சேவகம் செய்த தமிழர்கள் மறைமுகமாகவும், இந்த மீழமுடியாத எம்மின அழிவிற்க்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்னும் உண்மை உறைக்கும் போது.. இது மாதிரி செய்திகளை பார்த்து வெதும்பத்தன் முடிகிறது....

Link to comment
Share on other sites

இந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் ICCல் விசாரிக்கபடவேண்டியவர்.

[size=4]வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது.- [/size][size=4]இதை அவர் ஐ.நாவுக்கு அறிவித்தாரா?[/size]

[size=4]வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருந்தாலும் கூட எந்தவித மாற்றத்தினையும் செய்திருக்க முடியாது. - [/size][size=4]இலங்கை மாறுமோ இல்லையோ ஐ.நா வெளியே அறிவிக்காத்து இந்த அதிகாரியின் குற்றம். அதாவது தான் வேண்டுமென்றேதான் விபரங்களை மறைத்தேன் என்கிறார்.[/size]

[size=4]மோதல் சம்பவத்தின்போது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் எவருக்கும் உறுதியான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. [/size][size=4]- ஐ நா உண்மையை கண்டு பிடிக்க உதவ போகிறாரா அல்லது இலங்கையை காப்பாற்ற இன்னமும் தொடந்து மறுப்புக்களில் ஈடுபட போகிறாரா. ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று நினத்து இவர் எப்படி இலங்கையின் கொலைகளுக்கு உதவ முடியும்?[/size]

[size=4]மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மீது மாத்திரமே முற்று முழுதான குற்றச்சாட்டுக்களை வைப்பதையும் ஏற்க முடியாது. ஆனாலும் இவ்விடயத்தில் சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர் என்பதை மட்டும் கூற முடியும். - [/size][size=4]குற்றம் இழைப்போரை தெரிந்த்திருவர் அவற்றை ஐ.நா வில் ஆவணப்படுத்தியிருக்கிறாரா? இல்லை இது வரையில் அவற்றை வெளிவிட என்ன தங்களால் பொறுத்து இருக்கிறார்?[/size]

[size=4]என்ன விலையை கொடுத்தாவது இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது. - [/size][size=4]இதை அவர் வந்த முடிவுக்கான சம்பவங்களை, அவரின் நாட் குறிப்பை உடனே ஐ.நா விடன் கையளிக்க வேண்டும். இவர் இலங்கைக்கு எதிராக களத்து அதிகாரிகள் மாதிரி புத்தகம் எழுத தன் நேரத்தை செல்விட வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கவில்லை. நேரம் தாமதிக்காமல் ஐ.நாவில் கூட்டத்தை கூட்டி தான் அறிந்தவற்றை வெளியிட வேண்டும். [/size]

[size=4]இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை. - [/size][size=4]இந்த நிலைமை பற்றி பொது காரிய தரிசிக்கு இவர் தெரியப்படுத்தினாரா?. பொது காரியதரிசி மாற்று உத்திகள் பற்றி இவரிடம் பேசினாரா அல்லது இவருக்கு நிலைமைகளை சரிசெய்யதக்க ஆலோசனை குழு அமைக்க முயற்சித்தாரா?[/size]

[size=4]ஆகையால் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைக்கு ஐ.நா.தே முழுப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. - இவர் ஐ.நாவுடன் சேர்ந்து பொறுப்பு ஏர்கவேண்டியவர்களின் நாடு, பெயர், விபரங்களை உடனே வெளியிடவேண்டும்.[/size]

[size=4]ஆனாலும் நாம் தேறுவிதமாக செயற்பட்டிருந்தால் இலங்கை அரசும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதையும் எம்மால் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். - இலங்கையின் முடிவுகளை இலங்கைக்காக தான் எடுத்தேன் என்பது போல பேசுவது பொறுப்பற்ற தன்மை. இவர் செயல் நேரம் பொறுப்பை மறுத்திருப்பத்தால் இவரின் சம்பளப்பணம் மீளபெற்றப்பட்வேண்டும். [/size]

Link to comment
Share on other sites

121113163833_sri_lanka_war_civilians_killed_304x171_humanrightswatch_nocredit.jpg

சிங்களவருக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள் நேரடியானகவும், இந்தியாவிற்க்கு சேவகம் செய்த தமிழர்கள் மறைமுகமாகவும், இந்த மீழமுடியாத எம்மின அழிவிற்க்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்னும் உண்மை உறைக்கும் போது.. இது மாதிரி செய்திகளை பார்த்து வெதும்பத்தன் முடிகிறது....

பி கு.. எமது சுதந்திரப்போரின் போது ஜனநாயகம் வேண்டும் என‌ நிண்டோரும், எப்படி எண்டு தெரியாது ஆனால் சமாதானம் வேண்டும் என இருந்தவர்களும்.. இந்த கொடூரத்துக்கு துனை கொடுத்த தூன்கள் எண்டால் மிகையாகாது...

Link to comment
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களை யுத்த பிரதேசத்தில் இடுந்து வெளியேற்ற இலஞ்சம் மற்றும் உல்லாசமாக இருப்பதற்கு பெண்கள் மற்றும் இலவச விடுமுறை ஏற்பாடுகள் கூட இலங்கை அரசால் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

[size=5]சர்வதேச மூன்றாம் தர விசாரணையை கோரும் இலங்கை தமிழ் கட்சி [/size]

[size=6]Tamils demand foreign probe after Sri Lanka war report[/size]

[size=5]"Now that the UN has come with this report we want action," party spokesman M. A. Sumanthiran said.[/size]

[size=5]"There should be an international inquiry. The government as the main accused party cannot be involved in the investigation."

Sri Lanka has resisted previous calls for an independent probe and instead appointed a domestic commission to recommend measures to prevent Sri Lanka from slipping back into ethnic war.

"We would like to see reparations, restitution and justice for the people who suffered," Sumanthiran said.

"No one can say that these allegations should not be investigated."[/size]

http://www.ndtv.com/article/world/tamils-demand-foreign-probe-after-sri-lanka-war-report-292827

Link to comment
Share on other sites

[size=5]தான் முதலில் விட்ட பிழைகளை இலங்கையில் திருத்தும் இரண்டாம் சந்தர்ப்பம் ஐ.நா.வுக்கு உள்ளது [/size]

[size=6]UN has a second chance to right wrongs on Sri Lanka[/size]

[size=5]THERE is little doubt that in 2009 the government of Sri Lanka pulled off one of the nastiest episodes of mass killing since the Rwandan genocide - and got away with it. Tens of thousands of civilians were massacred, with barely a trickle of Syria-like imagery emerging from the battle zone.[/size]

[size=5]In a new report released in New York, the UN has shouldered its portion of responsibility for this bloody catastrophe. It is a heavy burden indeed.[/size]

http://www.theaustralian.com.au/opinion/world-commentary/un-has-a-second-chance-to-right-wrongs-on-sri-lanka/story-e6frg6ux-1226517687166

Link to comment
Share on other sites

இதே வேலை அறிக்கையின் பல பகுதிகள் கருப்பு மையினால் அழிக்க பட்டிருக்காம்

Link to comment
Share on other sites

[size=4]சிந்திக்கவும்: ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்த வீட்டோ அதிகாரத்தால் எந்த நன்மையையும் இல்லை.

வீட்டோ அதிகாரம் பெற்றவர்கள் உலக ரவுடிகள், தாதாக்கள் மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு அடிபணித்து நடக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் போர் தொடுப்பார்கள். இவர்களுக்கு வேண்டியவர்கள் போர் தொடுத்தால் வேடிக்கை பார்ப்பார்கள் வேண்டாதவர்கள் போர் தொடுத்தால் வீட்டோ அதிகாரத்தோடு ஓடி வருவார்கள். உலக ரவுடிகளுக்கு சேவகம் செய்யும் பொம்மைதான் இந்த ஐ.நா மன்றம்.[/size]

http://www.yarl.com/...howtopic=111301

ஐ.நா என்ற அமைப்பு தேவையில்லை என்று நாம் கூறி எதுவும் நடக்க போவதில்லை. ஐ.நா எமது பிரச்சினையில் தலையிடுவதும் அதற்கு ஆதரவாக உலக நாடுகள் நடப்பதும் தவிர்க்க முடியாதது.

ஆனால் அமெரிக்கா எல்லா நேரமும் ஐ.நா வின் பதிலை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. தமக்கு தேவை ஏற்படின் ஐ.நா வை மீறி தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அமெரிக்காவின் ஆதரவு கூட தனிப்பட்ட முறையில் எமக்கு இல்லை. :( எண்ணெய் வளம் எமது நாட்டில் இருந்திருந்தால் ஏற்கனவே ஐ. நாவை மீறி அமெரிக்கா எமது நாட்டு பிரச்சினையில் தலையிட்டிருக்கும். :(

Link to comment
Share on other sites

இது ஐ.நாவின் அரசியல் சாரா அதிகாரிகளின் அறிக்கை. இதில் சீன, ருசிய எதிர்ப்பு இல்லை. எனவே, கூட்டமைப்பு, (தமிழ் நாட்டு, ஈழ, இலங்கை) கம்யூனிஸ்கட்சிகள், சீனா-ரூஸ்சியாவை எம்மீது அக்கறை கொள்ள வைக்க முடியும் என்று நப்புவோர் ஆகியோர் ஒன்று சேர்ந்து இப்பொது தமிழ் மக்களுக்கு சேவையாற்ற நல்ல சந்தர்ப்பம். இவர்கள் இந்த அறிக்கையின்பால் இரு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, பாதுகாப்பு சபையில் இலங்கைமீது ICC விசாரணை நடத்த தேவையான பிரேரணைகளை கொண்டுவர உதவும் படி அழுத்த வேண்டும். இவர்களிடன் நேரடி தொடர்ப் இல்லாத எம்மை போன்ற யாழ் உறுப்பினர்கள், சீனா-ரூசியாவின் கவனத்தில் இந்த அறிக்கைபட இவர்களின் ராஜதந்திர அலுவலகங்களுக்கு மின்னல் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

அகுத்தாவுக்கு தேவையான சீனா, ருசியா அலுவலக தொடர்புகளை எடுத்துத்தர முடியுமாயின் நாம் மின்னல் அஞ்சல்கள் அனுப்பி வைக்கலாம். எமது நோக்கம் புதிய அறிக்கையில் தெளிவாக்கியிருப்பதன் படி, இலங்கை விசாரணை செய்யும் அங்கத்தவர்களை மிரட்டி தனது பக்கம் தீர்ப்புகளை கொண்டு செல்லாமல் இருப்பதற்கு, சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உதவும் படி அவர்களை கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இது முற்றிலும் உண்மையான விடயம் .இப்படி ஒன்று நடந்துவிடுமோ என்று அஞ்சித்தான் காலம் காலமாக பயங்கரவாத செயல்களை (கொலை கொலை கொலை ) நிற்பாட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி எழுதி வந்தோம் ,கெடு குடி சொற்கேளாது .

யுத்தம் தொடங்கமுன்னரே அந்த யுத்தத்தை நியாய படுத்துவதற்கான ஏற்பாடுகளை உலகம் முழுக்க சிறிலங்கா அரசு தொடங்கிவிட்டிருந்தது .இவ்வளவு அழிவும் ஒருநாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ நடக்கவில்லை ,ஒரு வருடங்கள் நடந்த யுத்தம் .பொது மக்கள் அழிவுகளை தடுக்க விரும்பியிருந்தால் அதற்கு எத்தனையோ வசதிகள் இருந்தன ஆனால் அத்தனையும் புறம் தள்ளிவிட்டு கடைசிவரை நாங்கள் தான் வெல்லுவம் என்று நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் புலிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

அதைவிட கொடுமை உலகம் எங்கும் வீதியில் நின்று மக்களை காப்பற்ற சொல்லி எவனும் கத்தவில்லை புலிகளை அங்கீகரிக்க சொல்லி தலைவரின் படத்துடன் போய் நின்றார்கள் ,உலகம் திரும்பியும் பார்க்கவில்லை .இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

100% படித்த மேற்கத்தையவர்களுக்கு மேற்கூறிய பதாகைகளில் சொல்வது விளங்கவில்லை என்று நீங்கள் யாருக்கு பூ சுத்துகிறீர்கள்?? ஒரு ஊர்வலமோ பிரச்சாரமோ செய்யாத சிரியாவில் உள்ள கரிசனை ஏன் தமிழ் மக்கள் மீது ஏற்படவில்லை என யோசித்திர்களா? அரசு பிழை விட்டதோ பிரபாகரன் பிழை விட்டதோ என்பது இரண்டாம் பட்சம். 9/11 ல் அமெரிக்காவுக்கு அடித்தவுடன் ஐ.நாவின் படையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப முடிகிறது. லிபிய மக்களை காப்பாற்ற பின்புலத்தில் ஆயுதங்கள் கொடுக்க முடிகிறது. ஆனால் வன்னி மக்களை காப்பாற்ற மட்டும் இதோ கப்பல் வருகிறது என படம் காட்டத்தான் முடிந்ததா?

புலிகள் தான் பிழை விட்டார்கள் எனும் குறுகிய, கருகிய மனநிலையில் நிற்காமல் உலக மக்களுக்கு உதவும் நிறுவனமாக இருக்கும் ஐ.நா வின் பாரபட்சத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் சுயநலத்தையும் சுட்டிக்காட்ட முனையுங்கள்.சொந்த மக்களுக்கு உலகம் செய்த அநியாயங்களை கேட்க முயலுங்கள்.

Link to comment
Share on other sites

http://youtu.be/VgLpT2s64cI

http://youtu.be/fIxR2J4KbMg

சரி தமிழர் வீதியில் நின்று போராடியது தான் மேற்குலகுக்கு விளங்கவில்லை என்றால் MIA சொன்னது கூடவா விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

இதேகதைகளைத்தான் நம்பியார், கொம்ஸ், பூனே வரைக்கும் பேசி புலிகளை அரக்கர்களாக காட்டி இலங்கை கொடுத்த பணத்துக்காக உழைத்தவர்கள்.

ஒரு தடவை ஒரு வேலைக்கு மட்டும், இலங்கை 50,000 யூரொ வரை கொடுக்கிறது. நம்ம எலிப்புழுக்கை சும்மா காயுது.

Link to comment
Share on other sites

[size=4]கையெழுத்து போடுவதால் இல்லை கடிதங்கள் எழுதுவதால் என்ன பயன் ? என பொதுவாக நாம் கேட்பதுண்டு. [/size]

[size=1]

[size=4]இந்த அறிக்கையை வெளியில் விட கேட்டும் நாம் கையெழுத்து / கடித வேட்டைகள் செய்தோம். எனவே எமது பரப்புரைக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

d_2098-01.jpg

ஐநாவாவது கொய்னாவாவது..? ஒரு சோப்பு போட கோஸ்றியலுக்கு கைவலிக்க 4 திரி வரைக்கும் நீட்டித்த கள உறவுகளை நினைத்தால் ரொம்ப வேதனையா கிடக்கு... <_< <_<

டிஸ்கி:

போகட்டும் சிங்களத்தின்ட எதிர்வினைய பார்ப்பம்..

30 வருட கால பயங்கரவாதத்தினை முறியடித்து உலக நாடுகளுக்கெல்லாம் முன்னுதரணமாக இருக்கும் எமது நாட்டை எதிர்த்து பல புலம் பெயர் புலி பயங்கரவாதிகளுக்கும் அவர் அதரவாளர்களுக்கும் ஐநா செவி சாய்த்து விட்டதற் போலவே எமது இலங்கையர் கருதுகிறார்கள்..பயங்கரவாதத்தினை முறியடித்து நாட்டை அபிவிருத்தி பணியில் சென்று கொண்டு இருப்பதை சகிக்க முடியாத புலி ஆதரவாளர்களின் பிடிக்குள் ஐ.நா சபை வந்து விட்டதையே இதை காட்டுகிறது..ஆயினினும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முறியடிக்க எமது மக்கள் தயாராக உள்ளனர்.. ஐநா உட்பட ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் எமது

220px-A._gigantea_Aldabra_Giant_Tortoise.jpg

நாடு சுதந்திரமான இறை ஆமை உள்ள நாடு இதில் வெளி சக்திகள் தலையிட முடியாது (அது எந்த ஆமை என்று தெரிந்தால் நானே அடித்து தின்று போடுவன்)

இப்படிக்கு ...

விமல் வீர(கோவண) வம்ச.. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடி படுகொலை சூத்திரதாரி நம்பியார் பற்றி ஐ.நா.அறிக்கையில் இல்லை

Published on November 15, 2012-5:20 pm · No Comments

ஐநா உள்ளக அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பற்றி எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. இது தொடர்பில், இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பான் கீ மூனின் பேச்சாளர் நழுவியுள்ளார்.

சிறிலங்காவில், போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது ஐநா பொதுச் செயலாளரின் பிரதிநிதியாக சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார் ஆவார்.

போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்திருந்தார். ஆனால், விஜய் நம்பியாரின் உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர், படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுடன் கூட வந்த குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் அச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐநா உள்ளக அறிக்கையின் அவர் தொடர்பிலான குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

விடுதலைப்புலிகளின் தளபதிகளையும் அரசியல் பிரிவு தலைவர்களையும் சரணடையுமாறு கூறி அவர்களை படுகொலை செய்த சூழ்ச்சியில் விஜய் நம்பியார் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னர் சிற்றி பிரஸ் விஜய் நம்பியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அக்குற்றச்சாட்டு இந்த அறிக்கையில் இடம்பெறாமை பற்றி ஐநா பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால், அவரோ இதுபற்றி இன்னொரு சந்திப்பில் பதிலளிப்பதாகக் கூறி நழுவியுள்ளார். இதேவேளை, நேற்று இடம்பெற்ற உள்ளக அறிக்கை கையளிப்பு நிகழ்வில் விஜய் நம்பியார் பங்குபற்றவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.thinakkathir.com/?p=43471

Link to comment
Share on other sites

ஐ.நா வின் வரலாற்றை எடுத்துப்பார்த்தா தெரியும் என்னத்தை வெட்டி கிழித்தவர்கள் என்று .ஏன் வரலாறு எமது கண் முன்பே நடந்த அநியாயங்கள் எத்தனை எத்தனை ,ஐ ,நா கை கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்ததுதான் அனைத்தும் .(ருவாண்டா ,போஸ்னிய ,ஈராக், பட்டியல் வெகு நீளம் )

இவர்கள் வந்து எங்களை காப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயா புலிகள் போரை தொடங்கினார்கள் ?.மற்றவன் பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நான் அடிபிடிக்கு இறங்கலாமா ?

இப்போ வரும் அறிக்கை ஐ .நா சொல்ல முதல் நாம் அறிந்ததுதானே .

இப்ப ஏன் வருகின்றது .போரை முடித்து ஏதாவது தீர்வை கொடுக்கும் என்று உலகம் எதிர்பார்த்தது .சிறிலங்கா கேட்பதாக இல்லை .இனி இப்படியான அறிக்கைகள் மூலம் அடக்க பார்ப்பார்கள் ,அடுத்து சில தடைகளை கொண்டுவருவார்கள் .அதற்கும் சிங்களம் முரண்டுபிடித்தால் தான் அடுத்து நாம் கேட்கும் இன அழிப்பு ,போர் குற்றம் எல்லாம் .

"எல்லாம் எல்லாருக்கும் தெரியும் அதை புரிந்துகொள்ளுங்கள் "

Link to comment
Share on other sites

[size=4]"எமது ஆயுதப்போராட்டம் சாதிக்கவேண்டியதை 2002 இல் சாதித்து விட்டது" - திருமுருகன்.

'முழு சிங்கள ஆயுத இராணுவத்தை அழுத்தாலும் எம்மை ஒரு நாடாக உலகம் அங்கீகரித்து இருக்காது" - திருமுருகன்[/size]

[size=4]"2009 ஆம் சமாதான பேச்சு வார்த்தை இருந்திருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்திருக்காது" - திருமுருகன் [/size]

[size=4]'உலக மயமாக்கல் என்பதில் பேச்சுவார்த்தை என்பது போராடும் இனங்களை நசுக்கும் ஆயுதம்" - திருமுருகன்[/size]

http://www.yarl.com/...howtopic=111341

Link to comment
Share on other sites

[size=4]எமது அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது ஒரு வரலாற்று நிகழ்வு. காரணம், அதுவரை நடந்து வந்த படுகொலைகள், இனவழிப்பு கொள்கைகள். [/size]

[size=1]

[size=4]வெற்றிகரமாக ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை என்ற சமநிலை வரை வந்து வென்று நின்றது. நியாயமான கௌரவமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிங்களமும் சர்வதேசமும் அதை எம்மை எமது மக்களை அழிக்கும் நகர்வாக கொண்டனர். [/size][/size]

[size=1]

[size=4]இன்றுவரை ஐ.நா. தொடக்கம் உலக தலைநகரங்கள் எல்லாம் எமது மக்களின் பிரச்சனை பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்றால், அதற்கும் அந்த முள்ளிவாய்க்காலும் ஆயுதப்போராட்டமும் தான் காரணம். இதுவரை எமது மக்கள் போராட்டம் ஓயாமல் உள்ளது என்றால் அதற்கும் அந்த முள்ளிவாய்க்காலும் ஆயுதப்போராட்டமும் தான் காரணம். அவைகள் இருந்திருக்காவிட்டால் இதை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன். [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.