Jump to content

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு


Recommended Posts

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

‘நேசம் கல்வித்திட்டம் 2012′ புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 12.11.2012 அன்று இந்து கலாசார மண்டபம் , நாவற்குடா , மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

திரு. ஆ. ஜனனன் (அமைப்பாளர் – Bright Future – Nesakkaram) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உ. ஜெகதீஸ்வர குருக்கள் (J.P) , அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் அடிகளார் , திரு.கிரிதரன் (பிரதேச செயலாளர் மண்முணை வடக்கு மட்டக்களப்பு) திரு .மு. கமலராஜா (சமுக சேவை உத்தியோகத்தர் மண்முணை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சிறப்புரைகளை வழங்கினர்.

DSCF3351.jpg

‘நேசம் கல்வித்திட்டம்’ சிறப்பபுச்சித்தியடைந்த 125மாணவர்களில் :-

நாவற்காடு – 2மாணவர்கள்

விழாவெட்டுவான் – 1மாணவர்

சுவிஸ்கிராமம் – 4மாணவர்கள்

கல்லடிவேலூர் – 3மாணவர்கள்

திருச்செந்தூர் – - 2மாணவர்கள்

நாவற்குடா – 8மாணவர்கள்

ஆரையம்பதி – 2மாணவர்கள்

செட்டிப்பாளையம் – 5மாணவர்கள்

மாங்காடு – 1மாணவர்

தேட்டாதீவு – 5மாணவர்கள்

ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33மாணவர்களுக்கும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபா சேமிப்பு வைப்பிலிட்ட சேமிப்பும் நேசக்கரம் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. மீதி 92 மாணவர்களு

DSCF3324.jpg

இம்மாணவர்களின் கௌரவிப்புக்கான உதவிகளை வழங்கிய பிரித்தானியா திரு.இளையதம்பி தெய்வேந்திரன் (குட்டியண்ணா) பிரித்தானியா கந்தையா ஜெபநேசன் Johnas (யேர்மனி) அம்பலத்தார் (யேர்மனி) ஆகியோருக்கு நேசக்கரமும் பயனடைந்த மாணவர்களும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

கல்வித்தரத்தில் நலிந்து போன மாணவர்களை அறிஞர்களாக உருவாக்க உங்கள் ஆதரவுகளை வழங்குமாறு இந்நேரத்தில் வேண்டுகிறோம்.

DSCF3315.jpg

நிகழ்வுச் செலவறிக்கை :-

மண்டபம்: – 5000,00ரூபா

பனர் :- 1640,00ரூபா

சிற்றூண்டி: – 7200,00ரூபா

நினைவுப்பரிசு :- 10550,00ரூபா

சேமிப்புவைப்பு :- 16500,00ரூபா

மொத்தச்செலவு :- 40890,00ரூபா.

இதர மாணவர்களுக்குமான கௌரவிப்பு முடிவுற்றதும் முழுமையான கணக்கறிக்கை வெளியிடப்படும்.

DSCF3342.jpg

DSCF3333.jpg

DSCF3343.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியக்கா பகிர்வுக்கு

வாழ்த்துகள் எல்லா மாணவர்களுக்கும்

உங்கள் அயராத & தன்னலமற்ற உழைப்பு உங்களின் மீதுள்ள மதிப்பை கூட்டிக்கொண்டே போகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் [/size][size=1]

[size=4]தன்னலம் கருதா சேவையாளர்களுக்கு தலைவணங்குகிறேன் [/size][/size]

Link to comment
Share on other sites

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை ஒண்டையுமே எதிர்பாக்காமல்.வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை இதை சிலபேர் இந்த்க் காலத்தில செய்யினம் ஆனால் காணாது.

நேசக்கரத்தின் அடிவேராக இருக்கும் அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை .

Link to comment
Share on other sites

சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..! நேசக்கரத்தின் சீரிய பணிகளுக்கும், உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்..!

Link to comment
Share on other sites

[size=4]எமக்கு முன் ப[/size]ந்து நிற்கும் செயல்பாடுகளுக்குள் மிக முக்கியமான ஒன்று.

[size=1][size=4]சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். [/size][/size]

[size=1][size=4]தொடரட்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். உதவியவர்களுக்கு மிக மிக நன்றி.

பல இடர்களுக்கு மத்தியிலும் அயராது உழைக்கும் நேசக்கரத்திற்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும்.

Link to comment
Share on other sites

நல்லது செய்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நான்காவதாகவும் அதற்கு அடுத்த படமும் தெளிவில்லை அல்லது அது எடுத்த கோணம் சரியில்லை .. படம் எடுப்பதற்காகவும் யாரையாவது பிடித்து பயிற்சி கொடுக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் மேன்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

கருத்திட்ட உடையார் , புங்கையூரன் ,விசுகு ,லியோ ,கோமகன் ,நந்தன் ,இசைக்கலைஞன் ,அகூதா ,தப்பிலி ,தமிழ்சூரியன் ,சாத்திரி ,குமாரசாமி, புத்தன் அனைவருக்கும் நன்றிகள்.

நான்காவதாகவும் அதற்கு அடுத்த படமும் தெளிவில்லை அல்லது அது எடுத்த கோணம் சரியில்லை .. படம் எடுப்பதற்காகவும் யாரையாவது பிடித்து பயிற்சி கொடுக்கவும்

நல்ல கமரா ஒன்று தானம் செய்தீங்களெண்டா உங்கள் கோணப்படி வீடியோவும் எடுத்துத் தருவோம். ஒரு கமறா எடுத்துத்தாறீங்களோ ? :wub: வாழ்க உங்கள் போராட்டம். :mellow:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சித்தாண்டி வந்தாறுமூலை 21 மாணவர்கள் கௌரவிப்பு

நேசக்கரம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை , குமாரவேலியர்கிராமம் , பூலாக்காடு , கிரான், மாவடிவேம்பு , கதிரவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 21மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 22.11.2012 அன்று சித்தாண்டி வந்தாறுமூலை மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாடசாலை அதிபர் திரு.எஸ்.பஞ்சலிங்கம் , பிரதி அதிபர் திருநாவுக்கரசு , கிராமியசங்கச்செயலாளர் யோகநாயகி , நேசக்கரம் வந்தாறுமூலை இணைப்பாளர் வினாயகமூர்த்தி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து மாணவர்களுக்கான நினைவுப்பரிசினை வழங்கிக் கௌரவித்தனர்.

012.jpg

DSCF3385.jpg

DSCF3435.jpg

DSCF3437.jpg

DSCF3420.jpg

அம்பாறையில் 33 மாணவர்கள் கௌரவிப்பு.

24.11.2012அன்று அம்பாறை மாவட்டத்தில் நேசம் கல்விதிட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கபட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 33 மாணவர்களுக்கான கௌரவிப்பு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட பதில் கல்வி இணைப்பாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக பிரதி கோட்டகல்விப்பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் , பாடசாலை அதிபர்கள் , பிரதேச சபை தவிசாளர் திரு V. புவிதராஜன் கிராமசேவகர் திரு S.பார்த்தீபன் உட்பட brightfuture nesakkaram இணைப்பாளர் திரு.ஜெனனன், கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் வாமன் , மகளீர் மேம்பாட்டு இணைப்பாளர் செல்வராணி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்களுக்கான நினைவுப்பரிசுகளும் சேமிப்புக்கணக்குப் புத்தகமும் வழங்கப்பட்டது. சிறப்புச்சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் நிகழ்வின் நிறைவில் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

DSCF3452.jpg

DSCF3536.jpg

DSCF3537a.jpg

DSCF3493.jpg

Link to comment
Share on other sites

கல்லாறு பகுதியில் நேசக்கரம் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

Brightfuture Nesakkaram கழுவாஞ்சிக்குடி , பெரியகல்லாறு , பாண்டிருப்பு , கல்முனை , எருவில் , குறுமன்வெளி , வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் நேசம் இலவச கல்வித்திட்டத்தில் பயனடைந்து புலமைப்பரிசில் சித்தியடைந்த 36மாணவர்களுக்கான கௌரவிப்பு கல்லாறு மெதடிஸ்த தமிழ்பெண்கள் பாடசாலை மண்டபத்தில் 02.12.2012 அன்று நடைபெற்றது.
DSCF3658.jpg
Brightfuture Nesakkaram உபதலைவர் உதயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன், கௌரவ அதிதிகளாக கல்லாறு மெதடிஸ் த மிஷன் தமிழ்பெண்கள் பாடசாலை அதிபர் திரு.எம்.சந்திரசேகரன் , கிராம உத்தியோகத்தர் ஞானசிறி , பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளரும் துறைநீலாவணை பாடசாலை அதிபர் திரு.விஜயநாதன் , பட்டிருப்பு Brightfuture Nesakkaram ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் மற்றும் Brightfuture Nesakkaram விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜோன்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSCF36511.jpg

DSCF3638.jpg

DSCF3627.jpg

DSCF3612.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.