Jump to content

போராட்டத்தின் பாதைகள் மாறலாம்! ஆனால் போராட்டம் மாறாது!


Recommended Posts

[size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் தொடர்பாக மனித உரிமைகளை காக்க ஐ.நா. தவறிவிட்டதாக பி.பி.சி. செய்த[/size][size=2][size=4]ி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 2009 ல் நடந்த இறுதி யுத்தத்தின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட தவறிவிட்டது. என ஐ.நா. வெளியிட்ட ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4][size=5]சிந்திக்கவும்:[/size] ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்த வீட்டோ அதிகாரத்தால் எந்த நன்மையையும் இல்லை.

வீட்டோ அதிகாரம் பெற்றவர்கள் உலக ரவுடிகள், தாதாக்கள் மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு அடிபணித்து நடக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் போர் தொடுப்பார்கள். இவர்களுக்கு வேண்டியவர்கள் போர் தொடுத்தால் வேடிக்கை பார்ப்பார்கள் வேண்டாதவர்கள் போர் தொடுத்தால் வீட்டோ அதிகாரத்தோடு ஓடி வருவார்கள். உலக ரவுடிகளுக்கு சேவகம் செய்யும் பொம்மைதான் இந்த ஐ.நா மன்றம்.

உலக நாடுகளின் கண்முன்னே இலங்கையில் அப்பாவி மக்கள் இலட்ச கணக்கில் கொல்லப்படும் பொழுது மனிதாபிமானம் இல்லாது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன ஐநா மன்றமும் மற்றைய வல்லரசு நாடுகளும். ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் 35 வருடகால சுதந்திர போராட்டத்தை நசுக்க துணை புரிந்த கயவர்களே இவர்கள். இவர்களது வெற்று அறிக்கை யாருக்கு வேண்டும். இந்த அறிக்கையினால் பிறக்க போகும் பயன்தான் என்ன? உலகத்தை ஏமாற்ற கொடுக்கப்படும் அறிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன லாபாம்.

சிங்கள இன பயங்கரவாதத்திற்கு எதிராக போராடித்தானே கடந்த 35 வருடங்களாக மாவீரர்களும், போராளிகளும், பொது மக்களும் தங்களது இன்னுயிர்களை இழந்தார்கள். அந்த போராட்டத்திற்கு ஆனா தீர்வை சொல்லாமல் வெறும் அறிக்கைகளால் பயன் என்ன விளையப்போகிறது. [/size][/size]

[size=2][size=4]இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தனி தமிழ் ஈழமே. அதை பெற்றுகொடுக்க ஐநாவும், வல்லரசு நாடுகளும் தாயாராக வேண்டும் அதை விட்டு வெற்று அறிக்கைகளிலும் தீர்மானங்களினாலும் எந்த பிரோஜனமும் இல்லை. [/size][/size]

65316_418203318246201_1368761943_n.jpg

[size=4]தமிழீழம் பெற்று கொடுக்க இவர்கள் தயார் இல்லை என்றால் மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை எதிர்பார்க்கட்டும். விரைவில் தொடரும் ஈழ விடுதலை போராட்டம். ஈழமக்களின் தாகம் தனி தமிழ் ஈழம். விடுதலை போராட்டத்தை யாராலும் நசுக்கி விட முடியாது. தனி தமிழ் ஈழம் பிறக்கும் வரை போராட்டம் தொடரும். போராட்டத்தின் பாதைகள் மாறலாம்! ஆனால் போராட்டம் மாறாது! விடியல் ஏற்ப்படும் வரை போராட்டம் தொடரும்![/size]

[size=2][size=5]...யாழினி...[/size][/size]

[size=2][size=5]முகநூல் ஊடாக [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.