Jump to content

இரண்டன்றி வேறில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size]

[size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size]

[size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size]

[size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size]

kaathalar+1.jpg

[size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size]

[size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size]

[size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size]

[size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size]

love+1.jpg[size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size]

[size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size]

[size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size]

[size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size]

[size=3]தந்தைக்கு தாயிற்கு உற்றதுக்கு மறைத்த காதல்[/size]

[size=3]எந்தை நீ என்றாள் என்னவனே மன்னவனே என்றாள்[/size]

pen.jpg[size=3]முந்தை வினை நான் உன்னை கண்டது என்றும்[/size]

[size=3]கந்தையான என் வாழ்வை களிப்பிக்க வந்தவன் நீ என்றாள்[/size]

[size=3]சித்திரமே சிறு பெண்ணே சிங்காரக் கண்ணே[/size]

[size=3]எத்திறமும் கொண்டவளே என்னை நெஞ்சில் சுமந்தவளே[/size]

[size=3]நித்திரை கொள்ள விடாது என்னில் நீக்கமற நிற்பவளே[/size]

pechchu.jpg[size=3]உத்தரத்தெழும் மூச்சு காற்றனவளே என்றான் அவன்[/size]

[size=3]கற்பனையில் பிறந்த காதல் கண்கள் வழி நுழைந்த காதல்[/size]

[size=3]தற்பெருமை கொள்ளாக் காதல் தரணிக்கு தெரியாக் காதல்[/size]

[size=3]சிற்றின்ப ஆசை இல்லாக் காதல் சிறுக சிறுக வெளியே வந்தது[/size]

[size=3]உற்பத்தி ஆனது உபத்திரவம் உலகக் கண்கள் ஊடுருவியதாலே[/size]

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg[size=3]எத்தனை கண் கொண்டு பார்த்தாலும் ஏந்திழை யிவள்[/size]

[size=3]பத்தரை மாற்று பசும்தங்கம் தான் மாசொன்றும் இல்லை[/size]

[size=3]சித்தத்தை குளிர்விக்கும் அழகு சிந்தையில் நிர்பாளிவள்[/size]

[size=3]இத்தனை இருந்து என்ன இவளோர் கீழ்சாதியாம்.[/size]

[size=3]வெண் சீர் பற்கள் கண் சீர் அழகுள்ளாள்[/size]

[size=3]பண் சேர் பேச்சுள்ளாள் பகட்டேதும் இல்லாதாள்[/size]

images+%25281%2529pechchu.jpg[size=3]மண் பார்த்த நடைகொண்டாள் மங்கைக்குள் அரசொத்தாள்[/size]

[size=3]விண் சேர் தேவரெல்லாம் வியந்து பார்க்கும் வித்தகிதான்[/size]

[size=3]அற்புதப் பெருமைகள் அத்தனையும் தன்னகத்தே கொண்டவள்[/size]

[size=3]நற் பண்புகளின் உறைவிடம் என்றேநன் றானவள்[/size]

[size=3]சிற்பத்தை ஒத்தநிலை யழகு நிறைந்தே உள்ளவள் - இவள்[/size]

[size=3]உற்பத்தி ஆனது தான் ஊர் ஒதுக்கும் சாதியாம்[/size]

[size=3]ஊரவர் பார்த்தாதால் காதல் உருவாகியது புயலாக[/size]

[size=3]பாரவர் பார்த்ததால் காதல் பயப்படத்தான் செய்தது[/size]

[size=3]சீராக சென்ற காதலை சிதைக்க சிலர் வந்தனர்[/size]

makan.jpg[size=3]சேராது சேர விடோமென்று செகத்தினில் கூறி நின்றனர்[/size]

[size=3]தனயனின் வீடு சேர்ந்து தந்தையைக் கலந்து அங்கே[/size]

[size=3]தினமொரு வகையாக் கூறி சீற்றத்தைத் தீயாய் மூட்டி[/size]

[size=3]தனத்தினை அழித் தாயினும் தையலை அழிக்க வேணுமென்று[/size]

saathi.jpg[size=3]மனமதை உருவாய் ஏற்றினர் மக்கட் பண்பிலாதார்[/size]

[size=3]தந்தையின் மன மறிந்த தனையனும் வெகுண் டெழுந்து[/size]

[size=3]எந்தையே இங்கே இருப்பது இரு சாதியே[/size]

[size=3]மந்தையைப் போல இங்கே மதிகேட்டவர் வந்து[/size]

[size=3]முந்தைத் தவமதழிக்க உரைத்தனர் கேளாதீர் என்றான்[/size]

[size=3]பெண்களில் நல்லாள் அவள் பேதையை விரும்பினேன்[/size]

narasinkam.jpg[size=3]கண்களைப் போல அவளைக் காப்பதாய் வாக்குரைத்தேன்[/size]

[size=3]எண்களில் அடங்காது எந்தன் ஏந்திழையாள் பெருமைசொல்ல[/size]

[size=3]எண்ணங்களில் அவளே என்னுள் ஏகமாய் நிறைந்துமுள்ளாள்[/size]

[size=3]சாதி என்ற ஒன்று இங்கே சதிராடி எமைப் பிரித்தல்[/size]

[size=3]நீதி இல்லை நிம்மதியுமில்லை உங்களுக்கும் எங்களுக்கும்[/size]

[size=3]ஆதியான இறைவன் அளித்தது ஆண்பெண்சாதி இரண்டுமே[/size]

[size=3]ஓதி உங்களை உருவேற்றினார் ஓரம் போங்க ளேன்றான்[/size]

[size=3]மகன் எவ்வளவுதான் மதியுரை பகர்ந்த போதிலும்[/size]

[size=3]அகம் முழுவதும் அடுக்கினர் மொழி கேட்டதால்[/size]

[size=3]முகம் மலராது சிந்தையில் சினம் கொண்டு தீப்பறக்க[/size]

[size=3]நகம் கொண்டுடல் கிழித்த நரசிங்க மொத்தான்[/size]

[size=3]இங்கு மட்டு மல்ல அங்கும் அதே தான்[/size]

[size=3]சங் கறுப்பேன் என்று கண்கள் குருதி யொக்க[/size]

[size=3]பொங்கிய சினத்தோடு பேதையை அடித்த தந்தை[/size]

[size=3]அங்கவள் தாயையும் ஆக்கினைகள் செய்தார்[/size]

[size=3]இப்படி ஆனது இவர்கள் காதல் கதை[/size]

[size=3]எப்படி நாங்கள் இங்கே வாழ்ந்திடல் கூடுமென்றே[/size]

[size=3]செப்படி வித்தை செய்யும் செகத்தினில் இருந்துநாமும்[/size]

[size=3]இப்படி என்னுமுன்னே மறைந்திடலே தகுமென்றாய்ந்தனர்[/size]

burn.jpg[size=3]தகுமேன் றாய்ந்து தமக்குள்ளே தனித்தொரு முடிவு கண்டு[/size]

[size=3]வேகு மிந்த உடல் மட்டுமே கொண்டது சாதி[/size]

[size=3]ஆகுமோ அது வந்தெம் ஆருயிர் ஆத்மா பிரித்திடலென்றே[/size]

[size=3]ஆகுதியாக்கினர் தம்முடல் இருவரும் தீக்குள்ளே[/size]

pei.jpg

[size=3]தீயினில் இருவரும் கருகிய பின்னரே வந்தனர்[/size]

[size=3]வாயிலும் தலையிலுமடித்தே புலம்பினர் பெற்றோ ருற்றோர்[/size]

[size=3]ஆயினும் அன்னவர் இருவர் மீண்டுதான் வருவாரோ யில்லையே[/size]

[size=3]உயிரது போனபின் தான் உருவாகியதோ இந்தவறிவு[/size]

[size=3]செகத்தினில் இருந்து சாதிய மொழியட்டும்[/size]

[size=3]அகத்தினில் இருந்து அன்புமலர் மலரட்டும்[/size]

[size=3]முகத்தினில் இருந்து முறுவல் தானரும்பட்டும்[/size]

[size=3]தேகத்தினால் இருந்து சாதிப்பேய் தொலைந்தே போகட்டும்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வல்வையூரான்!

சின்ன ஒரு அறிமுகம், தாருங்களேன்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வல்வையூரான்!

சின்ன ஒரு அறிமுகம், தாருங்களேன்! :o

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

அறிவிப்பாளர் என்றால்... வானொலி அறிவிப்பாளரா, மேடைநிகழ்ச்சி அறிவிப்பாளரா?

வழமையாக அறிவிப்பாளர் தான்... மற்ற‌வர்களை பேட்டி எடுப்பார்கள்.

சற்று வித்தியாசமாக... நாம் உங்களை பேட்டி எடுக்கப் போகின்றோம் :lol::D:icon_idea:

ஸ்ரார்ட் மியூசிக்....smiley-music021.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாழ் குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது :D

நன்றிகள் சுந்தல் வரவேற்புக்கு.

அறிவிப்பாளர் என்றால்... வானொலி அறிவிப்பாளரா, மேடைநிகழ்ச்சி அறிவிப்பாளரா?

வழமையாக அறிவிப்பாளர் தான்... மற்ற‌வர்களை பேட்டி எடுப்பார்கள்.

சற்று வித்தியாசமாக... நாம் உங்களை பேட்டி எடுக்கப் போகின்றோம் :lol::D:icon_idea:

ஸ்ரார்ட் மியூசிக்....smiley-music021.gif

நான் ஒரு வானொலி மற்றும் தொலைக்க்காட்சி அறிவிப்பாளர் தமிழ் சிறி

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வையூரான். வாருங்கள். தாங்கள் ஒரு அறிவிப்பாளர் என்பதால், தங்களை இனம் காட்டலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வையூரான்,

வருக .... வருகவென வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

நல்வரவு வல்வையூரான் .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையூறான் நீங்கள் எந்த ஊர் வானலையில் இருக்கிறீகள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

தன்னடக்கமாய் மலர்ந்த உங்கள் அறிமுகம்............ மேலும் அறியும் ஆவலுடன்.

உங்களின் கவிதை வளம் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை

நன்றிகள் வந்தியத்தேவன்.

வணக்கம் வல்வையூரான். வாருங்கள். தாங்கள் ஒரு அறிவிப்பாளர் என்பதால், தங்களை இனம் காட்டலாமே?

வணக்கம் Eas. நன்றிகள் உங்கள் வரவேற்பிற்கு. என்னை இனங்காட்ட என் ஒப்பத்தின் கீழ் உள்ள இணைப்புக்களைச் சொடுக்கலாமே.

வணக்கம் வல்வையூரான்,

வருக .... வருகவென வரவேற்கின்றோம். :)

வணக்கம் தமிழரசு. நன்றிகள் உங்கள் வரவேற்பில உளம் குளிர்ந்தேன்.

நல்வரவு வல்வையூரான் .............

நன்றிகள் தமிழ்சூரியன்.

வல்வையூறான் நீங்கள் எந்த ஊர் வானலையில் இருக்கிறீகள் :D

நான் தமிழ்த்தாய் வானொலியில் (ttrlive) இருக்கின்றேன்.

வணக்கம் வாங்கோ

வணக்கம் நந்தன். நன்றிகள் உங்கள் அழைப்புக்கு.

வணக்கம் வாங்கோ வல்வை

வணக்கம். நன்றிகள் உங்கள் வரவேற்பிற்கு வரணியான்.

வணக்கம் வாங்கோ.. :)

வணக்கம் ஜீவா. வரவேற்பிற்கு நன்றிகள்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

தன்னடக்கமாய் மலர்ந்த உங்கள் அறிமுகம்............ மேலும் அறியும் ஆவலுடன்.

உங்களின் கவிதை வளம் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

வணக்கம் கறுப்பி. என்னை பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கவி சற்று நீண்டுவிட்டது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள் வல்வையூரான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை.

வணக்கம் குமாரசாமி

வணக்கம்.. வாருங்கள் வல்வையூரான்..!

வணக்கம் இசைக்கலைஞன். மகிழ்ந்தேன் உங்கள் வரவேற்பால்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம்.  திமுக உடையதா   ??🤣
    • யூன் 4ம் திக‌தி உண்மையான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியும்   இது ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லாய் பார்க்கிறேன்...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் காணொளி மூல‌ம் உண்மையை வெளியிட‌லாம்............................. ஏன் நேர‌ம் ஒதுக்கி எழுத்தின் மூல‌ம் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவான்😁....................................
    • இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.  
    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.