Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

வணக்கம் உறவுகளே

இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...!

சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்கு அல்லது படத்துக்கு ஏற்றவாறு நீங்கள் கவிதை அமைக்க வேண்டும். இதில் சிறந்த கவிதைகளை ஆசிரியர் செல்வமுத்துவும் இரசிகையும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதை ஒரு பேப்பர்இ எரிமலை மற்றும் வேறு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் எரிமலை வெள்ளிவிழா கொண்டாட இருப்பதால் அதிலும் சில கவிதைகள் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தர முன்வந்த செல்லமுத்து அவர்களிற்கும் வேலை பழு மத்தியிலும் உதவ முன் வந்த ரசிகைக்கும் நன்றிகள்

நன்றி

இந்த மாதத்திற்கான் தலைப்பு இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

allai0419kx1ml.jpg

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளின் கனவு

தாய்க்குருவி கண்ட கனவுதான் என்ன???

தந்தைக்குருவி தன்சுகமான சுமையை கண்ட கனவு என்ன??

இளம் குஞ்சும் அப்பாவின் நெஞ்சில் தூங்கிய போது கண்ட கனவுதான் என்ன??

பிஞ்சும் தன் தாயின் பாலை சுவைக்கக் கண்ட கனவுதான் என்ன??

அழகான இந்தக் கூட்டுக்குள் இருந்த குருவிகளின் கனவோ சொல்லில் அடங்காது.

அடங்காது அடங்காது அடங்காது.

குருவிகளின் கனவோ கனவாகிவிட்டது.

குருவிகள் ஆனந்தமாக தம் நித்திரைக்குச் சென்றன

அம்மாக்குருவியும் அப்பாக்குருவியும் தம் இறகுக்குள் நித்திரையாக்கின

ஐயகோ அரக்க மிருகங்கள் அழகான கூட்டை அழித்தது

சிதைத்தது குஞ்சுகளைக் கிழித்தது வதைத்தது

குஞ்சுகளின் கனவுகளோ கனவாகிவிட்டது. இது கனவாகிவிடாதா???

சிங்களதேசதில் தமிழர்களின் குருதி மலிவுவிற்பனையில்?

எட்டப்பர்களும் அதைப்பருகப் போட்டியாம்?

ஸ்ருதி

*************************

Link to comment
Share on other sites

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

Link to comment
Share on other sites

அந்த படத்துக்கு - என் முயற்சி!

இதோ......

முக்கி முனகி .....

மூச்சடக்கி ....

முதுகெலும்பு நோக

ஒருவரை ஒருவர் சுமந்து வாழ்ந்த .....

அழகான கூட்டின் மீது - அடி அல்ல.

இடி விழுந்து போனது!

இறப்பில் கூட இறுக அணைத்தபடி.......

இருக்கே பார் - இந்த

கொஞ்சி வாழ்ந்த குடும்பம் தலையில் ......

கொள்ளி பிறர் வைத்துபோக விட்டது

என் தவறா - உன் தவறா?

இடு காட்டில் இனி உன் சந்ததி ........

வாழ்வு என்றாகுமோ........

அவருடல் எரிந்த மீதிதான் ......

இனிவரும் உன் வாரிசுக்கு விளையாட்டு.......

பொருள் என்றாகுமோ?

நான்கு மாச குழந்தையின் உடலும்......

குண்டு சிதறல் கிழிக்க பார்த்திருக்கிறாய்..

முட்டாக்கு போட்டு முகம் மறைத்தால்.......

மொட்டைதலைகள் ஆட்சி - உன்னை விடுமா என்ன?

நீயும் செத்துபோக போகிறாய்- உண்மை!!

8)

Link to comment
Share on other sites

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

ஓம் மணிவாசன். பாடலையும் இணையுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

அப்ப அழுங்கோ :cry:

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

மேலே இரண்டு கிழமைக்கு ஒருக்கா என்று போட்டுள்ளது. கீழே மாத்த மறந்துட்டன். இப்ப மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

படத்திற்கான என்னுடைய கவிதையை இத்துடன் இணைக்கிறேன்

பாரே பார்

பாரே உந்தன் இதயம் உள்ள

பக்கம் கையை வைத்துப் பார்

வாயே பேச முடியாக் குழந்தை

பாயில் கிடக்கும் நிலையைப் பார்

அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர்

அல்லற் பட்டு மடிவதைப் பார்

அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி

அலைபவர் துயர முகத்தைப் பார்

பால்மணம் மாறாப் பாலகன் கூடப்

புலியாய் மாறிய புதினம் பார்

பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்

பகுத்து அறிந்து பதில்தரப் பார்

சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ

சினக்கும் மெத்தப் படித்தவர் நீர்

சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ

சிந்தித் தெமக்குப் பதில்தரப் பார்

வன்முறை செய்ய வேண்டாம் என்று

வக்கிர அரசைக் கேட்டுப் பார்

முடியா விட்டால் மூலையில் நின்று

மறவர் படையின் வீரம் பார்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கு

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

Link to comment
Share on other sites

மேற்கோள்:

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

இப்படி இனியும் நாங்க இருக்கவேன்டியதை - தவிர்க்க சொல்லி படம் சொல்லுதோ என்னமோ?

யார் கண்டார் - இந்த முயற்சியும் - புலம்பெயர் தமிழர் பரப்புரையின் ஆரம்பத்துக்கு உதவலாமோ என்னமோ? 8)

Link to comment
Share on other sites

அருமையான முயற்சி சாத்திரி. இனி கவிதைப்போட்டியும் தொடங்கியாச்சு. மட்டுநிறுத்தினார்களுடன் சொல்லி முதல் பக்கத்திலே நிற்க கூடியதாக செய்தால் தேடிபிடிக்கும் கஷ்டம் ஏற்படாது.

Link to comment
Share on other sites

இதுவரை 4 பேர்தான் எழுதியுள்ளார்கள்.

திங்களுடன் முதல் சுற்று முடிவடைவதால் இன்னும் கவிதை அனுப்பாதவர்கள் அனுப்பவும்.

Link to comment
Share on other sites

அல்லை அழுத கண்ணீர்....

---------------------------

அன்னை முலைப்பால் குருதியாய்

அருவி வெட்டி கடலில் வீழ்ந்ததோ?

அல்லை அழுத கண்ணீர்

கால்வாய் வழிந்து வாசல் நிறைத்ததோ?

காலனுக்கும் கலங்கா காற்று

ஓ வென்று கதறி அழுததோ?

ஓடும் நீராய் உறைந்த கடல்

உதிரத்தால் கழுவிக் கொண்டதோ?

விதிர்த்துப் போன விண்ணகமும்

செங்குழம்பாய் விறைத்துப் போனதோ?

நிஷ்டை கலைந்த புத்தனின் கண்கள்

நிற்காது பெருகிக் கொண்டதோ?

கரைதனை உதைத்துப்போன ஓடைபோல

மனந்தனை உதைத்துப் போனாரோ?

கால்தனை நனைத்துப் போன குருதியைக் கழுவ

கருணையோடு யார் வருவாரோ?

இரவின் சேலையை அவிழ்த்துப் போட

கிழக்கின் சூரியன் வந்தானோ?

இதயத்து வேதனையை அகற்றிப் போட

இறங்கி யார் வருவாரோ?

( அல்லைப் பிட்டியில் இறந்து போன மக்களுக்கு இதய அஞ்சலியுடன் )

-எல்லாள மஹாராஜா-

(என்னை எழுத வேண்டி யாசித்த இரசிகைக்கு யோசனையுடன்....)

அப்படியே கவிதை போட்டிக்கும் ஒரு கவிதை எழுதலாமே??

நட்புடன்

இரசிகை

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::lol::lol:

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

:lol: நன்றி ரசிகை செல்வமுது அத்துடன் சாத்திரிக்கும் மனமார்ந்த நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::D:D

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

வாழ்த்துக்களிற்கு நன்றி மகாராஜா...ஆதிவாசி கையில் வைத்திருந்ததனை அணிய வைத்துவிட்டீர்கள். இனி அவர் ஆட்டம் பார்க்க சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும், :lol:

அது சரி முருகன் எப்போது கள்ளியை மணம் முடித்தார்.. :?: :lol:

Link to comment
Share on other sites

கௌரிபாலனுக்கு வாழ்த்துக்கள்.

எல்ஸ் கிழவா எங்கே? எப்படி?...

ஆதிவாசியை மாட்டலாம் என்று அலையிறது ஓவராப்போச்சு....

ஆதிவாசியின் குணம் தெரிந்தும் விளையாடுறீர்....!!!!!

டும்..டும்..டும்...

எல்லாளன் கட்டளைப்படி ஆதிவாசியை ஆடவைக்க வந்த

எல்லாளனின் அந்தப்புரத்து அழகிகளை வேர்கட்டி ஆடவிட்டு

au399230.jpg

ஆளை விடுடா சாமி என்று ஓட்டம் எடுக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.