Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

வாழ்த்துக்கள் கௌரிபாலன், கவிதை மிகவும் அருமையாக இருந்தது.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

தெரியல - ஏன் இப்பிடிலாம் என்று-!

மத்தும்படி - நிறைய இடைவெளி - உணரபடலாமோ - ஏதோ வகையில்!

அது - உணர்வுபூர்வமான விடயங்களில் பங்களிப்பது - நிறைய - கவி எழுதுறவங்களுக்கு - நேர விரயமாய் படுதோ என்னமோ- தெரியல!

பட்- எப்போதும் கலந்து கொள்ளுறன் - இந்த தலைப்பில்! 8)

Link to comment
Share on other sites

முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

நேரமின்மை காரணமாக கடந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் கலந்து என்னால் முடிந்தளவு எனது பங்களிப்பைச் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இவ்வாறான வாய்ப்பை அளித்த சாத்திரி அவர்களுக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

Link to comment
Share on other sites

என் முயற்சி!.......

நேரம் வந்தாச்சு!

------------------

ஊர்கூடி மண்மீட்க ...

உறுதி மொழி எடுக்குது பார்

இனி போர் என்று நீ வந்தால்

புதைகுழி உனக்கு தயார்!

வாளெடுத்த சிங்கம் வெல்ல

வரிபுலி விடுமா?

வந்து வந்து நீ கொன்று போக - தேசம்

சிந்திய கண்ணீரை துடைத்து துடைத்து

உன்னிடம் செருப்படி வாங்குமா?

நீயழுதாய் -நான் அழுதேன்

நாம் அழுதோம் ஏனடா?

கூட இருந்துவிட்டே - உன்

கூட்டின்மீது குண்டு எறிந்தவன் யாரடா?

களை ஒழித்து பயிர் செய்யும்

காலம் வந்தாச்சு!

இனி கவலைக்கு விடை கொடு

கரிகாலன் பூமி எமை

ஆளும் நேரம் வந்தாச்சு!

Link to comment
Share on other sites

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

Link to comment
Share on other sites

எனது மனைவியின்தங்கை திடீரென இறந்துவிட்ட காரணத்தால் பத்திரிகை காரர்களுடன் சரியாக கதைத்து இந்த வேலைகளை என்னால் செய்ய முடியாமல் போய் விட்டது அதன் காரணமாகவே எனது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய தொடரும் இந்த வாரம் ஒரு பேப்பரில் வெளிவரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.... என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல...... :oops: :oops:

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா- :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகப்பிரசங்கி என்பதாகவே இருக்கட்டும்.அது என் பிரச்சனை!

ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுசுபுதுசாக அர்த்தம் கண்டுபிடிக்கும் உங்களோடு, நான் போட்டி போடவரவில்லை. ஆனர்ல அனுப்பி வைக்கப்பட்டது என்பதற்கும் பிரசுரிக்கப்படும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும்.

சாத்திரிக்கு அவ் ஊடகங்களோடு நெருக்கம் இருப்பதால் அவர் இங்கே தெரிவு செய்பவை பிரசுரிக்கப்படும் என்பது நிதர்சனம். ஆனால் அவற்றை உடனே பிரசுரிக்கவேண்டும் என்ற கணக்கில் சாத்திரியை றீல் என்ற கணக்கில் கேட்டதற்குத் தான் நான் பதில் எழுதினேனே தவிர யார் முகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

நீர் நகைச்சுவையாக எழுதியிருப்பின் அதற்கு வருத்தங்கள்!

Link to comment
Share on other sites

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

அப்பிடியா எல்லாள மகராஜா

நான்கு நாள் முதல் பரிசு பெற்றது என்று ஒரு கவிதை அறிவிக்கப்பட்டால் - ஐந்தாவது நாளே அது பிரசுரமாகுமா?

அப்போ - ஏற்கனவே அச்சில் ஏற்றப்பட இருந்த விடயங்கள் என்று அதுக்கு - எதுவும் கிடையாதா?

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன....

ஓ இதுவா - உங்க நெருப்பு கோவத்துக்கு காரணம்-?

அதை முதலில சொன்னா என்னவாம்?

என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல......

அப்பிடியா - அப்போ - நீங்க என்னவகையான வேட்டு விடுவீங்க?

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

இவ்ளோ ஆவேசபட்டுடு - கடைசியில நகைசுவைன்னு முடிக்கிறீங்க - நல்லாதான் இருக்கு!

ஏன் - பொறுமை உங்களிடம் - கம்மியா?

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா

சரி - இப்போ விளங்கிட்டுது! 8)

Link to comment
Share on other sites

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

அப்பிடியா எல்லாள மகராஜா

நான்கு நாள் முதல் பரிசு பெற்றது என்று ஒரு கவிதை அறிவிக்கப்பட்டால் - ஐந்தாவது நாளே அது பிரசுரமாகுமா?

அப்போ - ஏற்கனவே அச்சில் ஏற்றப்பட இருந்த விடயங்கள் என்று அதுக்கு - எதுவும் கிடையாதா?

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன....

ஓ இதுவா - உங்க நெருப்பு கோவத்துக்கு காரணம்-?

அதை முதலில சொன்னா என்னவாம்?

என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல......

அப்பிடியா - அப்போ - நீங்க என்னவகையான வேட்டு விடுவீங்க?

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

இவ்ளோ ஆவேசபட்டுடு - கடைசியில நகைசுவைன்னு முடிக்கிறீங்க - நல்லாதான் இருக்கு!

ஏன் - பொறுமை உங்களிடம் - கம்மியா?

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா

சரி - இப்போ விளங்கிட்டுது! 8)

என்ன சொல்ல வாறீர் .... விளக்கமாகச் சொன்னால் உமக்கு விளக்கம் தருகின்றேன்....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

தயவு செய்து இதில் அரட்டை அடிக்காமல் ஒரு தொடர் கவிதை நிகழ்ச்சியாக நடக்க விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி உங்கள் ஒத்துழைப்புக்கு.

வணக்கம் :lol:

Link to comment
Share on other sites

அகப்பை

பிடித

பெண்ணே

நீயும்

ஆயுதம்

தூக்கிறாய்

நீயும்

அங்கே

அடுப்பு

ஊதிய

பெண்ணே

நீயும்

சங்கு

எடுத்து ஊதி

முழங்குகிறாய்

அங்கே

பறை

எடுத்து

பெண்ணே

நீயும்

போர்

முரசு

கொட்டுகின்றாய்

அங்கே

பெண்

அடிமை

விலங்கை

நீயும்

உடைத்து

எறிகிறாய்

நீயும்

அங்கே

தானைத்

தலைவர்

வழியில்

நீயும்

சுகந்திரம்

காண

துடிக்கின்றாய்

அங்கே

தியாகி

திலிபனின்

கனவை

நீயும்

நினைவு

ஆக்குகின்றாய்

நீயும்

அங்கே

புறநானுற்று

காலத்து

பெண்ணைவிட

நீயும்

பகை

முடிக்கப் நீயே

புறப்படுவிட்டாய்

அங்கே

தமிழ்

பெண்கள்

மானம்

காக்க நீயும்

புதுமை

பெண்ணாக

புறப்பட்டு

விட்டாய் அங்கே

இந்தகவிதை போட்டிக்காக எழுதவில்லை. இங்கு நல்ல பல கவி வித்துவான்கள் இருகிறார்கள். நான் இந்ததளத்தில் ஒரு சிறிய கொசு :lol: . சிறிய முயற்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

பெண்ணே!!!

பெண்ணே

அடுப்படியில் ஊது குழலோடு அன்று

தாய் மண்ணை மீட்க சுடு குழலோடு இன்று.

மங்கையவள்

மறைந்து வெட்கித்தலை

குனிந்த காலம் அன்று

நேருக்கு நேர் நிமிர்ந்த தலை இன்று

தையலாள்

பகைவனை புறமுதுகு காட்டி

ஓட வைக்கும் காலம் இன்று

இது தலைவனின் காலம்

பூக்களிற்கும் வீரம்

அரும்பாகி ஆலமரமாகி விட்டது.

***********************

ஸ்ருதி

Link to comment
Share on other sites

முடிந்துவிடும் மூடர்களின் ஆட்டம்

குழல்களின் முனைகள் சொல்கின்றன

விடிந்துவிடும் தமிழீழ தேசம்

குழலியரின் விழிகள் சொல்கின்றன

விலகிவிடும் எமைச்சூழ்ந்த சோகம்

மனதிலுள்ள தாகம் சொல்கின்றது

கருகிவிடும் எதிரியின் தேகம்

உடலிலுள்ள வேகம் சொல்கின்றது

ஒடுங்கிடும் துரோகிகளின் கொட்டம்

உமதணி நீட்டம் சொல்கிறது

நடுங்கிடும் விரோதிகள் கூட்டம்

நும்விடுதலை நாட்டம் சொல்கின்றது

பூவென்று பாடிய பாவலர்களின்று

புயலென்று கண்டு கொள்வார்கள்

நிலவென்று நிறுவிய கவிஞர்களின்று

அது சுடும் என்று வந்து சொல்வார்கள்

சேயைப் பெற்று சிறப்பெய்தியவர்கள்

தீயை ஏந்திச் செல்கின்றார் - எம்

நோயைத் தீர்த்து தனித்தமிழீழத்

தாயை ஏந்தி வருவார்கள்.

Link to comment
Share on other sites

photo3817lm.jpg

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டும் திசை யெட்டும்

விடுதலை உணர்வு பொங்கட்டும்!

போடட்டும் - குண்டு

போடட்டும்...- பின்

தமிழ் பெண்ணோடு

வீரம் கண்டு - எதிரி

மண்ணோடு சாயட்டும்!

போடும் வரையும்- யாரும்

தடையும் போடட்டும்...

தமிழ் மானம் கண்டு-பின்

தம் வாயை மூடட்டும் !

எட்டும் வரை எட்டி

வெற்றிப் புலிக் கொடி

வானை முட்டட்டும் !

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம்!

(என்று)

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டுத் திசை யெங்கும்

எதிரி சிதறி ஓடட்டும்

இல்லை- சாகட்டும்!

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம் !

Link to comment
Share on other sites

எழுந்தது பகைபுலம் பொடிபட

ஏந்திழை கைகள்

வீழ்ந்தது கொடுமுடி அரசின்

தீயிழை செயல்கள்

துடைத்திரு கண்ணீர் துயரறு

புதுயுகப் பெண்ணே

உயர்த்திடு திண்தோள் பகையொறு

பாரதி கண்ணே

விரித்திடு சிறகுறு எண்ணம்

விந்தைப் பெண்ணே

வீழ்த்திடு எதிர்படு தடைகள்

விலகும் நன்றே

நன்றே செய்வாய்

இன்றே செய்வாய்

நாளை என்பது என்றும் இல்லை

தாய்மை செய்யும் அன்பை அறிவாய்

தரணி சுமக்கும் பொறுமை அறிவாய்

காக்கும் தெய்வம் நீ அறிவாய் -உனை

காலம் வாழ்த்தும் இதை நீயறிக.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

காப்புக் கரங்களின் காப்பெடுப்பு.

ஏரிதழல் சொரியும் எதிரிகள் நோக்கி

கரிகுழல் காரிகை கனலும் காலம்.

வெறியொடு அலையும் வீணரைச் சரிக்க

சத்தியம் எடுக்கும் சரித்திரச் சடங்கு.

இத்தரை காத்து எத்தரைச் சாய்க்க

முத்திரை பதிக்கும் முதல் ஏந்தல்.

செத்திடும் வேதனை நித்தமும் ஆனதால்

சீறியே எழுந்த செம்புயல்கள். - இனிக்

கத்திடும் ஓலம் ஈழத்தில் கேட்காது - எழும்

கனலின் வெப்பத்தில் ஒப்பாரி கலையும்.

அய்யா சாத்திரி, அம்மா இரசிகை நாள் நேரம் பார்த்துப்

போட்டியில் குதிச்சிருக்கிறன் பரிசு எனக்குத்தான்.....

அது சரி என்ன பரிசு?

பேக்காட்டக்கூடாது.... எதென்றாலும் காசா வெட்டுங்கோ....

விடுதலையைப்பேசிப் பேசி நிறையப்பேர் நல்லா வந்திருக்கினம்

பாருங்கோ... வெற்றி பெறுகிற எனக்கு அப்பிடியே ஒருமேடை

ஒரு பட்டம் சேச்சே......

இதெல்லாம் நான் கேட்க மாட்டன் நீங்க தருவீங்கதானே!

பட்டம் பதவிக்காக ஆர்வமுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இறுதி நாள் வெள்ளிக்கிழமை (30/06/06) ஆதலால் கவிதைப் போட்டிக்கு கவிதை எழுத விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக உங்கள் கவிதைகளை பிரசுரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது கவிதைப் போட்டி முடிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இது இரண்டாவது கவிதைப் போட்டிக்கு தீர்ப்புச் செல்லும் நேரம். முதலாவதை விட இம்முறை கலந்துகொண்டோர் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருப்பினும் இன்னும் அதிகமானோர் பங்குபெறவேண்டும் என்பதே எல்லோரதும் ஆவல்.

அங்கே உறவுகள் துடிப்பதைப் பார்த்து உலகெங்கும் தமிழ் உள்ளங்கள் துடிக்கின்றன. உணர்வுள்ளவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேண்டும் போதெல்லாம் ஓங்கி எழுந்து உரத்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அந்தவகையில் கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ப எழுதிய கவிதைகள் அனைத்தும் அருமையானவையே. கருத்துச்செறிவு, கவிதை நயம், கையாண்ட முறைகள் அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன. அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

அனைவருடைய கவிதைகளும் நன்றாக இருந்தபோதிலும் நாம் ஒருவருடைய கவிதையையே முதலாவதாகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதன்படி நடுவர்களாகிய சகோதரி இரசிகையும், நானும் சேர்ந்து சுஜிந்தனுடைய கவிதைக்கு முதலிடம் கொடுத்துள்ளோம். பாராட்டுக்கள்!

ஒருங்கிணைப்பாளர் சாத்திரி அவர்களுக்கும் எமது நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் வந்து மற்றைய விபரங்களையும் கூறுவார் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

வணக்கம்.

இரசிகை, செல்வமுத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.