Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

  • Replies 105
  • Created
  • Last Reply

எல்லாரும் வடிவா கவிதை எழுதுகினம். எனக்கும் எழுத ஆசைதான். முடியாமல் இருக்கே

கறுப்பிக்கு கவிதை எழுதத் தெரியாதா?

பொய் சொல்லத் தெரியுதே....... பொய்தானே!

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க புதிய முயற்ச்சியை காணவில்லை? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டி போட்டிருக்கறீங்க சாத்திரி ஓடி வருவார்

Link to comment
Share on other sites

சாத்து இல்லாட்டி என்ன நிரோ ஒரு படத்தைப்போட்டிட்டுத் தொடங்க வேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

  • 1 month later...

எங்கே புதிய முயற்சியை காணவில்லை எம் போன்ற புதிய எழுத்தாளர்களுக்

இது தேவையான ஒரு முயற்சி என்று நினைக்கின்றேன் இது

மீண்டும் வருமா?

Link to comment
Share on other sites

எங்கே புதிய முயற்சியை காணவில்லை எம் போன்ற புதிய எழுத்தாளர்களுக்

இது தேவையான ஒரு முயற்சி என்று நினைக்கின்றேன் இது

மீண்டும் வருமா?

அட களத்தில இப்படி ஒண்டிருக்கா..............? கஜந்தி நீங்களே ஒரு படத்தை போடுங்கள் :P

Link to comment
Share on other sites

அட களத்தில இப்படி ஒண்டிருக்கா..............? கஜந்தி நீங்களே ஒரு படத்தை போடுங்கள் :P

நீங்கள் போட்டால் நான் முயற்சி செய்கின்றேன்

இந்த நக்கள் தானே கூடாது நண்பா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நான் ஒரு படத்தை இணைக்கிறேன்.... (யாரும் கோவிக்க மாட்டீங்க தானே...?) எங்க பார்ப்போம் உங்க கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள் பார்ப்போம்..... (களத்தை விட்டு ஓடாமல் இருந்தால் சரி)

makal.jpg

இதற்கு நான் ஒரு கவிதை தருகிறேன்... நீங்களும் எழுதுங்கள் ....

//

இன்று நீ

நாளை நானும்

உனக்குப் பக்கத்தில்

படமாக...!

//

படத்தின் இணைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் தந்த உத்தமியே அம்மா-எனை

உடன் அழைத்து சென்றிருக்கலாமே

மனிதமில்லா இவ்வுலகில் வாழ-எனை

ஏன் விட்டு சென்றாய் தாயே!

Link to comment
Share on other sites

  • 4 months later...

இந்த இடம் பெயர்வுதான் இறுதியாக இருக்க வேண்டும்.

இன்னும் ஓடுவதற்க்கு இடமில்லை.................................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தன் மழலைகளுக்கு உறவுகளை அறிமுகப்படுத்திவைக்கும் உறவு அம்மா

ஆனால் என் வாழ்வில்....?

"இவர்தான் உன் அம்மா"

என்றுஇப்படத்தைக்காட்டி அறிமுகம் செய்து வைத்தனர் என் உறவுகள்.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணின் விடுதலைகாய்.....

இன அழிப்பின் அடையாளச் சின்னங்களாய்

தளிர்களும் தளிர் தந்த மரங்களுமாய்

மண்ணிலே வீழ்ந்து கிடப்பதனை பாராயோ.

இதை உலகம் பார்த்தால்

என்ன தான் சொல்வார்கள்

பயங்கரவாதி என்று

பயமில்லாமல் சொல்வார்கள்.

குண்டு போட்டவனை கேட்டால்

இரண்டு புலியுடன் சேர்த்து

இரண்டு புலி குட்டியும் என்பார்கள்.

உணவுண்ணும் போதும் உறங்கும் போதும்

கொலை செய்யும் கொடுமை

அது கொடுமையிலும் கொடுமை

அதைத்தான் இன்று அழகாக செய்துவிட்டு

ஆடுகிறான் ஆனந்தமாய்

வெற்றியை குவித்ததென்று.

பால் கொடுத்த மார்பும்

குழந்தையை தாங்கிய தோளும்

பாலகரை உறங்கவிட்டு

பசியாறும் தருணமதில்

கழுகொன்று பறந்துவந்து -அந்த

உயிர்களை கருக்கியதன் கொடுமையென்ன.

உங்களின் உயிர் தந்த

ஒவ்வோர் துளி இரத்தம்

எம் மண்ணின் விடுதலைகாய்

இம் மண்ணுகாய் உரமாகும்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே படத்தை காணவில்லை ? படம் போடும் விண்ணர் ஒருவரும் இல்லையா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்த மாதத்திற்கான் தலைப்பு இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

allai0419kx1ml.jpg

வெள்ளை உள்ளத்துடன் பொக்கை வாய்

பல்லை காட்டும் பச்சிளம் குழந்தையின்

தொல்லை தாங்கவில்லையென்றா

கள்ளை உட்கொண்ட காடையன் போல் காவு கொண்டாய்?

இல்லை உனக்கில்லை மன்னிப்பு - இனி

எல்லைப் பிரிக்காமல் - உன்னிடம்

பல்லை காட்ட நாங்களென்ன மானமென்ற

சொல்லை அறியாரோ?

காடையனே உன் கணக்கற்ற படைகள் கண்டு

நடைபினமாய் வாழ நாங்கள்

சோடை போனவர்கள் இல்லையடா

பாடை கட்டவே பதிலலிப்போம் நாளை

மேடையிலெ வெற்று கோசம் போட்டு

சாடையாலே பேசி சட்டென கால்பிடித்து

தாடையை சொறியும் தற்குறியோ நாங்கள் - இல்லை

கோடை இடியென எழுவோம்!

கொட்டும் மழையென கொட்டும் எங்கள் வீரம்

பட்டுடுத்தும் எங்கள் பாவையரும் பங்களிப்பர்

சொட்டு சொட்டென சொட்டும் உன் ரத்தம

எட்டு திக்கெட்டும் எட்டும் உன் மரண ஒலி!

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

allai0419kx1ml.jpg

ஆலமரத்தில் விளையாடிய ஒரு கூட்டு கிளிகள்

அனைத்தும் நச்சுப்பாம்பின் வலையில் சிக்கியதேனோ?

நாஙகள் அனைவரும் தமிழ் பேசுவோம் என்பதாலா?

கொடியவன் வருவான் என்று தெரிந்தும்

வேற்றிடம் செல்ல முடியாமல் போனதேனோ?

நாஙகள் வீரமிக்கவர்கள் என்பதாலா?

எனது குழந்தைகளும் எதிர்பார்த்திருக்கும்

தமிழக சகோதரன் வரமாட்டானா என்று!

நாங்களும் எதிர்பார்த்தோம்!எங்களுக்கு

பிள்ளைபாசம் காட்ட தாயக தமிழன்னை வரமாட்டாளா என்று?

தாயகமாம் தமிழ் நாட்டிலிருந்து

நற்செய்தி வரவில்லை!

தாயகத் தமிழனும்

அங்கே அடிமையாம்!

இந்தி பேசுபவனுக்கு!

ஏய் உலகமே!விழிதிறந்து பார்!

யாருக்கு கிடைக்கும் இந்த பிள்ளைபாசம்?

இறப்பின் போதும்

தாய் தந்தையருக்கிடையில் பாதுகாப்பாய்!

ஏய் உலகமே! காதுகொடுத்து கேள்!

இதுதான் சகோதரப் பாசம்!

சாவிலும் தொடரும் எங்களின் கட்டியனைப்பு!

ஒர் தட்டில் சோறுண்டு பார்திருப்பீர்கள்!

இதோ ஓரே பாயில் குடும்பத்தோடு

எங்களின் இறுதி யாத்திரை!

யார் முழுமனதோடு வேன்டுவார்

இந்த அகால நித்திரை?உயிருடன் இருக்கும்

நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்!

நாங்களும் பிணங்கள்தான் என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே இந்தப் படத்திற்கு எழுதுங்கள்....

girl_in_refugeecamp_744_624.jpg

இனி என்ன?

பெத்தவளும் போய்ட்டா?

பெத்தவனும் போய்ட்டான்?

நானே உலகமென்ரு வளைய வந்த

தம்பியும் போய்ட்டான்?

என் ஒற்றைக்கைப்பிடி சோற்றுக்கு

வாலாட்டும் எனது செல்ல

நாயும் போய்விட்டது?

இனி என்ன?

நான்கு சுவரும்

ஒற்றை கதவும்

என் துணையோ?

இல்லை

நிமிர்ந்து பார்க்க

பரந்த வானம் மட்டும் உண்டோ?

இல்லை

என்னுடன் விளையாட

நட்சத்திரமும் வென்னிலவும்

மட்டுமே வருமோ?

இல்லை

இனி பசியார உணவுவென்பது

கிடைக்குமோ?

இல்லை

தாகம் தீர்க்க

தண்ணீராவது

கிடைக்குமோ?

இல்லை

நச்சுக்காற்று தவிர்த்து

என் உயிர் தமிழ் மூச்சுக்காற்று

என்மீது எதெனும்

எப்போதேனும்

படுமோ?

இல்லை

பதுங்குகுழி புகு ந்தாலும்

நிலம் பறித்துக்க் கொல்வானோ?

இல்லை

பாடசாலை

நுழைந்தாலும் செல்

வீசிக்கொல்வானோ?

பதுங்க

அடர்ந்த கானகம்

மட்டும் உண்டோ?

இல்லை

கானகம் கண்டும்

விச கிழங்கு

உண்பேனோ?

இல்லை

நச்சு பாம்பு

தீண்டுமோ?

இல்லை

என் உயிர் காக்க

சுடுகுழல்

தாங்குவேனோ?

எவரேனும் வருவாரோ?

என் உயிர் காப்பாரோ?

Link to comment
Share on other sites

எங்கள் உயிர் உயிர் இல்லையா?

பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து

அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.

இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்

இறப்பெனில் சந்தோசம்.

அதை செய்த சிப்பாய்க்கு பதவி

உயர்வுகள் தானாக கிட்டும்.

பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே

இறந்து கிடப்பது தான் விதியா????

இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்

எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??

சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்

சர்வ தேசத்தின் பணியா??

காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு

இவரை துளைத்துள்ளது.

அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.

இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??

இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??

வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை

பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??

சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்

தெரிந்து கொண்டு இறப்போம்

ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

அவலச்சா வேண்டாம் எமக்கு அதுதான் விதி என்றால்

நாட்டைதா எம் உயிரை ஈடுவைத்து

அறியாத பிஞ்சுதான் உனக்கு குறியென்றால்

நீதான் உனக்கு உலகத்தில் பெரும் வீரன்

நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும்

காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் எம் மண் வீழா.

இப் பிஞ்சில் இருந்து கொட்டிய ஒவ்வொரு குருதிச் சொட்டும்

மொட்டாகி மலராகி நாளை உன்னைத் தாக்கும் கணையாகும்

புலத்திலும் எம் நிலத்திலும் இது நிச்சயம் நடக்கும்.

காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்..

அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள்...

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நீர் அணைத்தீர்

பெற்று வளர்த்து சீராட்டித ;தாலாட்டி

தங்கள் அ;டி தழைக்க திருமணமும் - செய்திங்கு

ஆசைக்கு ஒன்றெண்டு அருமையாய் இரண்டு பெத்து

வாழ்க்கை எனும் ஓடம் அன்பெனும் கடலினிலே

அலைகளையும் கடந்து பயணித்திருக்கையிலே

பேரிடி ஒன்று வருகின்றதென்று தம்

குஞ்சுகளைக் காப்பாற்ற தந்தையும் தாயும்

சுற்றி அணைத்து குஞ்சுகளை காப்பாற்ற

முனைந்தனையோ

நம்முயிர் அணைந்தாலும்

நம் குஞ்சுகள் தப்பிப் பிழைத்துவிடும்

என்றே அணைத்தாலும் எதிரியின்

எறிகணையில் மரத்தோடு ப+வும் பிஞ்சும்

உதிர்ந்து விழுந்து இங்கு

வாழ்க்கை கடலது இரத்தத்தில் தோய்ந்ததம்மா

மனிதநேயம் கொண்ட உலகமிதா

கொல்லும் அவனுக்கு ஆயுதமும்

உதவிப்பணமும் கொடுத்து அப்பாவித்தமிழனையே

இரையெடுக்கும் உலத்துக்கெங்கே மனிதநேயம்

கண்ணிருந்தும் கண்ணின்றி. காதிருந்தும் காதின்றி

வாயிருந்தும் வாயின்றி வாழுமிந்த வரட்டுலகம்

குடும்பம் இது உனக்கு என்ன கொடுமை செய்ததென்று

மூன்று நிலையும் கெட்டு நின்றாய்

தமிழனாய் பிறந்ததாலோ தமிழுரிமை கேட்டதாலோ

அஞ்சாத்தமிழர் நாம் உரிமையுடன் வாழ்வோம் நாம்

அஃதின்றேல் உயிரை விட்டிடுவோம் - என்று

அஞ்சாமல் எதிரியின் எறிகணையை அணைத்தீரோ

மனிதநேயமற்ற உலகினிலே வாழ்ந்தென்ன என்று

பூவையும, பிஞ்சையும் அழைத்துச் சென்றீரேர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்னய்யா நீர்...? கவிதை எழுத நாங்கள தயார் தான் ஆனால் நீங்கள் தந்த கருப் படம் கவிதைக்குரியதல்ல.. கண்ணீருக்கு உரியது... உமக்கு இப்படிப்பட்ட இழப்புகள் இல்லை போலும்... எமக்கு...... நண்பர்களின் இறந்த உடல்கள்....... மச்சான் தண்ணி தாடா.. என்று கேட்டவனுக்கு ஏதும் செய்ய முடியாமல் பார்த்த கணங்கள்.... எம்மடியில் எம் கண்களுக்கு முன்னால் குடும்பத்துடன் கண் மூடிய கண்ணீர் கதை.. எல்லாமே மீண்டும் ஞாபகம் வருகுதே சாத்திரி...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழா ஈழத்தமிழா நிமிர்ந்து பார்

இங்கே கூண்டோடு கொல்லப்பட்ட உற்றானின் குடும்பம்்

வீழ்ந்து கிடக்கின்றது குருதி சிந்தி

சற்றே யோசித்துப்பார் - நீ எவ்வளவு சுயநலமானவன் என்று

அன்றிலிருந்து இன்று வரை - நடக்கும் இன அழிப்பு

காந்தி வழிப்போராட்டம் - அன்றைய வடிவம்

ஆயுத வழிப்போராட்டம் - நேற்றைய வடிவம்

எம் தமிழ் உறவுகளின் ஒற்றுமைக்கான போராட்டம் - இன்றைய வடிவம்

சிங்கள இன வெறியரின் துாக்குத்தண்டனை - நாளைய போராட்டம்

அறத்தமிழன் - அன்று

மறத்தமிழன் - இன்று

ஒற்றுமை - தமிழன் கேள்விப்படாத வார்த்தை

காட்டிக்கொடுப்பு - தமிழனிற்கு பிடித்த பொழுதுபோக்கு

தாய்க்குரங்கை பசிக்காகக் கொன்ற புலி

தனது தீனிக்காக துாக்கி்ச் சென்ற போது ஈன்றது - ஒரு குட்டியை

அதனை அறிந்த புலி தாய்க்குரங்கை புசிக்காது - அணைத்தது

அக்குட்டியை - இது என்ன கனவா

நியமான உண்மை

தந்தையை அரவணைத்த படி மீளாத உறக்கம் - ழூத்த குட்டி

தாயை அரவணைத்த படி மீளாத உறக்கம் - கடைக்குட்டி

குடும்பப்பாதுகாவலராய் கடமை செய்த பெற்றோரே

உங்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் - குடும்பமே ஒரு கோயில் என்று

அடே பாவிச்சிங்களவா - ஏன் கொன்றாய்

ஒரு அழகான குருவியின் குடும்பத்தை

எம்புலி மறவருடன் போராடமுடியாத நீ - ஏன் காட்டினாய்

உனது கீழ்த்தர மிருக குணத்தை - உனக்குக்கேட்கவில்லையா

அக்குருவிக்குஞ்சுகளின் கதறல்

அடே பாவிச்சிங்களனே கடவுள் உன்னை மன்னித்தாலும்

எம் தமிழனை மன்னிக்கமாட்டான் - ஏனெனில்

நீ செய்வது அநீதி என்று தெரிந்திருந்தும்

ஒற்றுமை இன்றி இருந்து விட்டான் - சுயநலமாய்

எம் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிய மாவீரரே

பலியாகிய எம்தமிழ் உறவுகளே - கேளுங்கள்

உங்களின் விடுதலை தாகத்தை அணையாது காப்போம்

ஒற்றுமை எனும் பலம் கொண்டு

நன்றி

எமதனைவரினதும் பணி அவர்களின் கனவை நனவாக்குவதே.

இன்றைய சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரித்து எம்தமிழ் மறவர் கைகளை பலப்படுத்துவோம்.

இவர்களைப் போல் படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் உறவுகளின் படுகொலைகளிற்கு நீதி கோட்போம்

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.