Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86.

[size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு வரை சிவசேனைத் தலைவர்கள் கூறிவந்தனர்.[/size][/size]

[size=3][size=4]தாக்கரே மறைவை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121117_paltakkre.shtml

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் தக்கரே ஆரம்ப காலத்தில்... ஈழத்தில் பாதிக்கப்படுவது இந்து தமிழர்கள் என்னும்... முறையில் எமது ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். பிற்காலத்தில், என்ன காரணமோ.... தெரியவில்லை, அமைதியாக இருந்துவிட்டார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இவர் கருத்து வெளியிட்டிருந்தாலும் அதற்கு முந்திய காலப்பகுதியில் இருந்தே எனக்கு இவரைப் பிடிக்கும். மராட்டியர்களின் இன உணர்வை வளர்ப்பதில் அக்கறையாக இருந்ததார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baltakre1.jpg

பால் தக்கரே இளமையில் இருக்கும் போது... எடுத்த படம்.

Shiv-Sena-chief-Bal-Thackeray.jpg

முதுமையில்....

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]இந்த அமைப்பை 'இந்து தீவிரவாத அமைப்பு' என அழைத்ததும் கூட அரசியல். [/size][/size]

[size=1]

[size=4]மறைவிற்கு அனுதாபங்கள் ![/size][/size]

Link to comment
Share on other sites

Shiv Sena Chief Bal Thackeray no mo...

SHARE THIS STORY

0

பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.

முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.

தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.

ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.

ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

0

மும்பை: மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்ததுடன் கடந்த அரை நூற்றாண்டு கால மகராஷ்டிரா அரசியலில் அசைக்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர்.

மகாராஷ்டிராவின் பூனேவில் 1926-ம் ஆண்டு பிறந்த பால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1966களில் மராட்டிய இனத்துக்கான சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவர். மகராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக சிவசேனாவை உருவாக்கியவர் பால்தாக்கரே. தமது கட்சிக்காக சாம்னா என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

1995-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பால்தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

பொதுவாக எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்காத பால்தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் மட்டுமே கருத்துகளை எழுதி வந்தார். அதுவே அவரது கட்சியினருக்கான கட்டளையாகவும் இருந்தது.

கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி சாம்னாவின் ஆசிரியராக, காலம்னிஸ்டாக வாழ்க்கையை நிறைவு செய்தவர் பால்தக்கரே. பால்தாக்கரேவின் மகன் உத்தவ்தாக்கரேதான் அரசியல் வாரிசாக சிவசேனாவை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தவிடமாட்டேன் என்பதுதான் பால்தாக்கரேயின் இறுதிப் போராட்ட அறிவிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே இன்று காலமானார். அவருக்கு வயது 86.

மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்டது சிவசேனா கட்சி. இந்து மத ஆதரவு கொள்கைகளை கொண்ட, சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே, 86.சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன் கிழமை மிகவும் மோசமான நிலையை அடைந்தார். மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் இல்லமான, மும்பை, பாந்த்ராவில் உள்ள, "மாதோஸ்ரீ'யின், இரண்டாவது மாடியில் உள்ள, அவரின் தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பை நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான, லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், பால் தாக்கரே உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.."தாக்கரே கவலைக்கிடமாக உள்ளார்' என்ற தகவல் பரவியதும், அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கட்சியினர், மாதோஸ்ரீ முன் கூடி, "ஜெய் பவானி... ஜெய் சிவாஜி...' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். அரசியல், சினிமா மற்றும் கலைத்துறை பிரமுகர்கள், மாதோஸ்ரீக்கு வந்த வண்ணம் இருந்தனர்.எனினும், அவர்கள் யாரும், தாக்கரேயை சந்திக்க முடியவில்லை. தனியறையில் இருந்த அவரை, சிவசேனா கட்சியின் செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ராஷ்மி மற்றும் லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமே கவனித்து வந்தனர்.கடந்த புதன் கிழமை, தாக்கரே உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த, உயிர் காக்கும், அவசர கருவிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் பால் தாக்கரே இன்று மாலை 3.33 மணியளவில் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அறிவித்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறினார். பால் தாக்கரேவின் இறுதி தகனம்நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பால் தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

கடந்த 1926ம் ஆண்டு பால் தாக்கரே பிறந்தார். 1926 ம் ஆண்டு அரசியல் வார இதழை துவக்கினார். கார்ட்டூன் வரைவதில் பால் தாக்கரே, பத்திரிகை ஒன்றில், கார்ட்டூனிஸ்டாக அறிமுகமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 196ம் ஆண்டு சிவசேனா கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சிக்கு சாம்னா பத்திரிகையை துவக்கினார். இதில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை பால் தாக்கரே எழுதி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது தாக்கரே அமைச்சர் பொறுப்பு ஏதும் ஏற்கவில்லை. பம்பாய் என்ற, அந்நகரின் பெயரை, மும்பா தேவி நினைவாக, மும்பை என, மாற்றியதில், தாக்கரேயின் பங்கு அதிகம்.தாக்கரேவுக்கு பிந்து தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உத்தவ் தாக்கரே அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் சிவசேனா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் அமைதி காக்கும்படி, உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். பால் தாக்கரேவின் காலமானதை தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., இரங்கல்: பால் தாக்கரே காலமானதற்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் ஷா நவாஸ் ஹூசைன் கூறுகையில், பால் தாக்கரே புலி போல் வாழ்ந்தவர், அவர் இந்திய அரசியலில் முக்கிய தலைவர். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்திற்கு பா.ஜ., இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறினார். பால் தாக்கரே காலமான‌து மிகுந்த மனவேதனை அளிப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, எதிர்கட்சிக்கு பிரதமர் அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Dinamalar

உண்மையான இந்துவாக வாழ்ந்து காட்டியவர் இந்துகளுக்கு மிகப்பெரிய இழப்பு

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

மராட்டிய சிங்கம் இந்திய இந்து மத காவலர் பால்தாக்ரேவிட்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

உண்மை சிறி அண்ணை நான் அவர் மீது பற்று வைத்துள்ளேன். மராட்டியம் மராட்டியருக்கே என்ற உண்மைய உரத்து கூறியவர் இந்திகளுக்கு சவாலாக இருந்தவர். இந்துகள் மீது பாசம் உள்ளவர் அதைப் பார்த்து என்றாலும் தமிழ் நாட்டு தமிழர் திருந்துவர் என்று நினைப்பவன் நான்.
Link to comment
Share on other sites

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான கருத்து, இதையே எழுதவேண்டும் என்றிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வெள்ளத்தில் 10 மணி நேர இறுதி ஊர்வலம்... அரசு மரியாதையுடன் பால் தாக்கரே உடல் தகனம்!

18-bal-thackeray-funeral-4-300.jpg

[size=3]

[size=4]மும்பை: மும்பையில் நேற்று காலமான சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னதாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பால்தாக்கரேவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

உடல்நலக் குறைவால் காலமான பால்தாக்கரேவின் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சிவாஜிபூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாஜிபூங்கா வரை சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பால்தாக்கரேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். இதனால் மாலை 5 மணிக்குத்தான் சிவாஜிபூங்காவை அடைய முடிந்தது. வழியில் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனில் சிறிது நேரம் பால்தாக்கரேவின் உடல் வைக்கப்பட்டது[/size][/size][size=3]

[size=4]மும்பை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றாக முடங்கியது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கவில்லை. திரும்பிய இடங்களிலெல்லாம் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.[/size][/size][size=3]

[size=4]திரை உலகப் பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் குவிந்தனர். மும்பை நகரில் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.[/size][/size][size=3]

[size=4]சிவாஜி பூங்காவில் மாலை 6 மணி அளவில் முழுமையான அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உத்தவ் தாக்கரே தீ மூட்ட பால்தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.[/size][/size][size=3]

[size=4]பெல்காமில் பந்த்[/size][/size][size=3]

[size=4]இதனிடையே மகராஷ்டிரா மாநில எல்லையான கர்நாடகத்தின் பெல்காம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது,[/size][/size][size=3]

[size=4]கர்நாடக மாநிலத்தின் ஒருபகுதியாக பெல்காம் இருந்தாலும் பால்தாக்கரே போன்றவர்கள் மகராஷ்டிராவுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். இந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில் பால்தாக்கரே மறைவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பால் அங்கு பதற்றம் நிலவியது.[/size][/size][size=3]

http://tamil.oneindia.in/news/2012/11/18/india-sena-chief-bal-thackeray-begins-last-journey-164814.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி வணக்கம்

எமக்காக குரல் கொடுக்க இருக்கும் ஒரு உறவு என்ற நம்பிக்கையை எம்மனதில் தானே வளர்த்துவிட்டு

இறுதி நேரத்தில் எம்மை தானாகவே கைவிட்டவர்.

இவர் மீது தனிப்பட மரியாதை கிடையாது விடினும் இவரை விரும்பும் ஒரு தொகுதி மக்களுக்காக இறுதி அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

பால் தாக்கரே அரசியல் தொடங்கியதே "மும்பையில் இருந்து தமிழரை விரட்டியடிப்போம்" என்ற இயக்கத்தில் தான் .பின் மும்பையில் தமிழனின் பலம் விளங்கி வாயை மூடிவிட்டார் .

பல வருடங்களின் பின் புலிகளும் இந்துக்கள் என்று கேள்விப்பட்டுத்தான் ஆதரவை கொடுத்திருந்தார்.

அவ்வளவு விளக்கம் யாழில் இருக்கும் பலர் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பற்றி அவர் ஓரிரு கருத்துக்கள் தான். அதற்குள்ளேயே நீங்கள் ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கும் திறமைசாலியாக இருப்பதையிட்டு பெருமிதடைகின்றேன். அவருக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது என்ற கொள்கையோடு, அதை நடைமுறைப்படுத்துதாக யார் நடந்து கொண்டாலும் அதை ஆதரிக்கவே செய்ததாக நான் நம்புகின்றேன்.ஒரு 3ம் மனிதன் அவ்வளவு தான் ஆதரவு கொடுக்க முடியும் என நினைக்கின்றேன். இதற்காகத் தன் படையைக் கொண்டு வந்து போரிட முடிந்தால், அது பெரிய உபகாரமே தவிர, அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து நாங்கள் நிற்பது முட்டாள்தனம். ஏனென்றால் எங்களுக்கு எப்படி எங்கள் இனம் பெரிதோ, அவருக்கு மராட்டியர்களும், அவர்களின் இனம் தான் பெரிது. அவரில் பிடித்தது, தன் கொள்கையில் இறுதிவரை பயணித்தார் . தங்களை வீரசிவாஜி வம்சம் என்று பெருமிதம் கொள்வதால் தான் இப்படி சிவசேனை வளர்ந்தது. அந்த வளர்ச்சியால் தான் என்னவோ, ராஜராஜ சோழனை முன்னிலைப்படுத்த இந்திய அரசு தடை போடுகின்றது. அவரின் புகழை மறைக்கின்றது. ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது. அவர் தன் இனம் மீது கொண்ட கொள்கை, பற்றுறுதி, மற்றும் அவர் கொண்டிருந்த மதநம்பிக்கையில் எனக்குச் சிவசேனை மீதும், அவர் மீதும் பற்று உண்டு. வன்முறை செய்தார், அது செய்தார் என்றார் என்றால் யாராவது சொன்னால், ” கல்லறியத்தக்கவர்கள் யார் என்று நானும் யேசு மாதிரிக் கேட்க வேண்டிவரும்....

Link to comment
Share on other sites

பால் தாக்கரேவின் பாசிச அரசியலைக் கண்டிச்சு அவரது மரணத்தை இரங்கல்களை போடாதவன் என்ற ”வரலாற்றுப் பழி” என் மீது கவிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் “அவன் ஒரு சோதாப்பயல்” என்று பதிவு செய்து வைத்துவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது.

பிஜேபி அரசில் நமது பிரச்னையை `அடக்கியே வாசித்தார்கள்.

புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதைத் தடுத்தது, சந்திரிகா / ரத்வத்தை ஆகியோர் சத்திய சாயிபாபா மூலம் ஆளும் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்த விடயம்... என் இனமில்லாத, எம் இரத்த உறவு இல்லாத ஒருவனால், ஆதரவு தான் தெரிவிக்க முடியுமே தவிர, எங்களுக்காகப் போராட வேண்டிய தேவை அவனுக்கில்லை... அப்படி அவன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.