Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86.

[size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு வரை சிவசேனைத் தலைவர்கள் கூறிவந்தனர்.[/size][/size]

[size=3][size=4]தாக்கரே மறைவை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121117_paltakkre.shtml

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் தக்கரே ஆரம்ப காலத்தில்... ஈழத்தில் பாதிக்கப்படுவது இந்து தமிழர்கள் என்னும்... முறையில் எமது ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். பிற்காலத்தில், என்ன காரணமோ.... தெரியவில்லை, அமைதியாக இருந்துவிட்டார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இவர் கருத்து வெளியிட்டிருந்தாலும் அதற்கு முந்திய காலப்பகுதியில் இருந்தே எனக்கு இவரைப் பிடிக்கும். மராட்டியர்களின் இன உணர்வை வளர்ப்பதில் அக்கறையாக இருந்ததார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baltakre1.jpg

பால் தக்கரே இளமையில் இருக்கும் போது... எடுத்த படம்.

Shiv-Sena-chief-Bal-Thackeray.jpg

முதுமையில்....

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]இந்த அமைப்பை 'இந்து தீவிரவாத அமைப்பு' என அழைத்ததும் கூட அரசியல். [/size][/size]

[size=1]

[size=4]மறைவிற்கு அனுதாபங்கள் ![/size][/size]

Link to comment
Share on other sites

Shiv Sena Chief Bal Thackeray no mo...

SHARE THIS STORY

0

பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.

முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.

தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.

ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.

ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

0

மும்பை: மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்ததுடன் கடந்த அரை நூற்றாண்டு கால மகராஷ்டிரா அரசியலில் அசைக்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர்.

மகாராஷ்டிராவின் பூனேவில் 1926-ம் ஆண்டு பிறந்த பால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1966களில் மராட்டிய இனத்துக்கான சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவர். மகராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக சிவசேனாவை உருவாக்கியவர் பால்தாக்கரே. தமது கட்சிக்காக சாம்னா என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

1995-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பால்தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

பொதுவாக எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்காத பால்தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் மட்டுமே கருத்துகளை எழுதி வந்தார். அதுவே அவரது கட்சியினருக்கான கட்டளையாகவும் இருந்தது.

கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி சாம்னாவின் ஆசிரியராக, காலம்னிஸ்டாக வாழ்க்கையை நிறைவு செய்தவர் பால்தக்கரே. பால்தாக்கரேவின் மகன் உத்தவ்தாக்கரேதான் அரசியல் வாரிசாக சிவசேனாவை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தவிடமாட்டேன் என்பதுதான் பால்தாக்கரேயின் இறுதிப் போராட்ட அறிவிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே இன்று காலமானார். அவருக்கு வயது 86.

மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்டது சிவசேனா கட்சி. இந்து மத ஆதரவு கொள்கைகளை கொண்ட, சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே, 86.சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன் கிழமை மிகவும் மோசமான நிலையை அடைந்தார். மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் இல்லமான, மும்பை, பாந்த்ராவில் உள்ள, "மாதோஸ்ரீ'யின், இரண்டாவது மாடியில் உள்ள, அவரின் தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பை நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான, லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், பால் தாக்கரே உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.."தாக்கரே கவலைக்கிடமாக உள்ளார்' என்ற தகவல் பரவியதும், அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கட்சியினர், மாதோஸ்ரீ முன் கூடி, "ஜெய் பவானி... ஜெய் சிவாஜி...' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். அரசியல், சினிமா மற்றும் கலைத்துறை பிரமுகர்கள், மாதோஸ்ரீக்கு வந்த வண்ணம் இருந்தனர்.எனினும், அவர்கள் யாரும், தாக்கரேயை சந்திக்க முடியவில்லை. தனியறையில் இருந்த அவரை, சிவசேனா கட்சியின் செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ராஷ்மி மற்றும் லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமே கவனித்து வந்தனர்.கடந்த புதன் கிழமை, தாக்கரே உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த, உயிர் காக்கும், அவசர கருவிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் பால் தாக்கரே இன்று மாலை 3.33 மணியளவில் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அறிவித்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறினார். பால் தாக்கரேவின் இறுதி தகனம்நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பால் தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

கடந்த 1926ம் ஆண்டு பால் தாக்கரே பிறந்தார். 1926 ம் ஆண்டு அரசியல் வார இதழை துவக்கினார். கார்ட்டூன் வரைவதில் பால் தாக்கரே, பத்திரிகை ஒன்றில், கார்ட்டூனிஸ்டாக அறிமுகமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 196ம் ஆண்டு சிவசேனா கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சிக்கு சாம்னா பத்திரிகையை துவக்கினார். இதில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை பால் தாக்கரே எழுதி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது தாக்கரே அமைச்சர் பொறுப்பு ஏதும் ஏற்கவில்லை. பம்பாய் என்ற, அந்நகரின் பெயரை, மும்பா தேவி நினைவாக, மும்பை என, மாற்றியதில், தாக்கரேயின் பங்கு அதிகம்.தாக்கரேவுக்கு பிந்து தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உத்தவ் தாக்கரே அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் சிவசேனா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் அமைதி காக்கும்படி, உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். பால் தாக்கரேவின் காலமானதை தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., இரங்கல்: பால் தாக்கரே காலமானதற்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் ஷா நவாஸ் ஹூசைன் கூறுகையில், பால் தாக்கரே புலி போல் வாழ்ந்தவர், அவர் இந்திய அரசியலில் முக்கிய தலைவர். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்திற்கு பா.ஜ., இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறினார். பால் தாக்கரே காலமான‌து மிகுந்த மனவேதனை அளிப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, எதிர்கட்சிக்கு பிரதமர் அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Dinamalar

உண்மையான இந்துவாக வாழ்ந்து காட்டியவர் இந்துகளுக்கு மிகப்பெரிய இழப்பு

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

மராட்டிய சிங்கம் இந்திய இந்து மத காவலர் பால்தாக்ரேவிட்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

உண்மை சிறி அண்ணை நான் அவர் மீது பற்று வைத்துள்ளேன். மராட்டியம் மராட்டியருக்கே என்ற உண்மைய உரத்து கூறியவர் இந்திகளுக்கு சவாலாக இருந்தவர். இந்துகள் மீது பாசம் உள்ளவர் அதைப் பார்த்து என்றாலும் தமிழ் நாட்டு தமிழர் திருந்துவர் என்று நினைப்பவன் நான்.
Link to comment
Share on other sites

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான கருத்து, இதையே எழுதவேண்டும் என்றிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வெள்ளத்தில் 10 மணி நேர இறுதி ஊர்வலம்... அரசு மரியாதையுடன் பால் தாக்கரே உடல் தகனம்!

18-bal-thackeray-funeral-4-300.jpg

[size=3]

[size=4]மும்பை: மும்பையில் நேற்று காலமான சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னதாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பால்தாக்கரேவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

உடல்நலக் குறைவால் காலமான பால்தாக்கரேவின் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சிவாஜிபூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாஜிபூங்கா வரை சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பால்தாக்கரேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். இதனால் மாலை 5 மணிக்குத்தான் சிவாஜிபூங்காவை அடைய முடிந்தது. வழியில் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனில் சிறிது நேரம் பால்தாக்கரேவின் உடல் வைக்கப்பட்டது[/size][/size][size=3]

[size=4]மும்பை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றாக முடங்கியது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கவில்லை. திரும்பிய இடங்களிலெல்லாம் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.[/size][/size][size=3]

[size=4]திரை உலகப் பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் குவிந்தனர். மும்பை நகரில் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.[/size][/size][size=3]

[size=4]சிவாஜி பூங்காவில் மாலை 6 மணி அளவில் முழுமையான அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உத்தவ் தாக்கரே தீ மூட்ட பால்தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.[/size][/size][size=3]

[size=4]பெல்காமில் பந்த்[/size][/size][size=3]

[size=4]இதனிடையே மகராஷ்டிரா மாநில எல்லையான கர்நாடகத்தின் பெல்காம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது,[/size][/size][size=3]

[size=4]கர்நாடக மாநிலத்தின் ஒருபகுதியாக பெல்காம் இருந்தாலும் பால்தாக்கரே போன்றவர்கள் மகராஷ்டிராவுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். இந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில் பால்தாக்கரே மறைவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பால் அங்கு பதற்றம் நிலவியது.[/size][/size][size=3]

http://tamil.oneindia.in/news/2012/11/18/india-sena-chief-bal-thackeray-begins-last-journey-164814.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி வணக்கம்

எமக்காக குரல் கொடுக்க இருக்கும் ஒரு உறவு என்ற நம்பிக்கையை எம்மனதில் தானே வளர்த்துவிட்டு

இறுதி நேரத்தில் எம்மை தானாகவே கைவிட்டவர்.

இவர் மீது தனிப்பட மரியாதை கிடையாது விடினும் இவரை விரும்பும் ஒரு தொகுதி மக்களுக்காக இறுதி அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

பால் தாக்கரே அரசியல் தொடங்கியதே "மும்பையில் இருந்து தமிழரை விரட்டியடிப்போம்" என்ற இயக்கத்தில் தான் .பின் மும்பையில் தமிழனின் பலம் விளங்கி வாயை மூடிவிட்டார் .

பல வருடங்களின் பின் புலிகளும் இந்துக்கள் என்று கேள்விப்பட்டுத்தான் ஆதரவை கொடுத்திருந்தார்.

அவ்வளவு விளக்கம் யாழில் இருக்கும் பலர் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பற்றி அவர் ஓரிரு கருத்துக்கள் தான். அதற்குள்ளேயே நீங்கள் ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கும் திறமைசாலியாக இருப்பதையிட்டு பெருமிதடைகின்றேன். அவருக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது என்ற கொள்கையோடு, அதை நடைமுறைப்படுத்துதாக யார் நடந்து கொண்டாலும் அதை ஆதரிக்கவே செய்ததாக நான் நம்புகின்றேன்.ஒரு 3ம் மனிதன் அவ்வளவு தான் ஆதரவு கொடுக்க முடியும் என நினைக்கின்றேன். இதற்காகத் தன் படையைக் கொண்டு வந்து போரிட முடிந்தால், அது பெரிய உபகாரமே தவிர, அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து நாங்கள் நிற்பது முட்டாள்தனம். ஏனென்றால் எங்களுக்கு எப்படி எங்கள் இனம் பெரிதோ, அவருக்கு மராட்டியர்களும், அவர்களின் இனம் தான் பெரிது. அவரில் பிடித்தது, தன் கொள்கையில் இறுதிவரை பயணித்தார் . தங்களை வீரசிவாஜி வம்சம் என்று பெருமிதம் கொள்வதால் தான் இப்படி சிவசேனை வளர்ந்தது. அந்த வளர்ச்சியால் தான் என்னவோ, ராஜராஜ சோழனை முன்னிலைப்படுத்த இந்திய அரசு தடை போடுகின்றது. அவரின் புகழை மறைக்கின்றது. ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது. அவர் தன் இனம் மீது கொண்ட கொள்கை, பற்றுறுதி, மற்றும் அவர் கொண்டிருந்த மதநம்பிக்கையில் எனக்குச் சிவசேனை மீதும், அவர் மீதும் பற்று உண்டு. வன்முறை செய்தார், அது செய்தார் என்றார் என்றால் யாராவது சொன்னால், ” கல்லறியத்தக்கவர்கள் யார் என்று நானும் யேசு மாதிரிக் கேட்க வேண்டிவரும்....

Link to comment
Share on other sites

பால் தாக்கரேவின் பாசிச அரசியலைக் கண்டிச்சு அவரது மரணத்தை இரங்கல்களை போடாதவன் என்ற ”வரலாற்றுப் பழி” என் மீது கவிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் “அவன் ஒரு சோதாப்பயல்” என்று பதிவு செய்து வைத்துவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது.

பிஜேபி அரசில் நமது பிரச்னையை `அடக்கியே வாசித்தார்கள்.

புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதைத் தடுத்தது, சந்திரிகா / ரத்வத்தை ஆகியோர் சத்திய சாயிபாபா மூலம் ஆளும் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்த விடயம்... என் இனமில்லாத, எம் இரத்த உறவு இல்லாத ஒருவனால், ஆதரவு தான் தெரிவிக்க முடியுமே தவிர, எங்களுக்காகப் போராட வேண்டிய தேவை அவனுக்கில்லை... அப்படி அவன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.