Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

நான் சொல்ல வந்த விடயம்... என் இனமில்லாத, எம் இரத்த உறவு இல்லாத ஒருவனால், ஆதரவு தான் தெரிவிக்க முடியுமே தவிர, எங்களுக்காகப் போராட வேண்டிய தேவை அவனுக்கில்லை... அப்படி அவன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்

சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம்.

குறிப்பிட்ட அந்தக் காலத்தில் பிஜேபி அரசு அடக்கியே வாசித்தது. (அரசிற்குள் இருந்த ஆதரவாளர்கள் காரணம்) தங்களது நன்மைக்காக இந்திய நடுவண் அரசை பாவிக்க (சாயி பாபா மூலம் ) சந்திரிக்கா கூட்டணி செய்த முயற்சியால் வெற்றி பெற்றார்கள்.

எமது தேவைக்காக பால் தாக்கரேயையும் நாங்கள் பாவிக்கவில்லை.

காலத்தே பயிர் செய்யாது விடுவது, பொதுவாக எமது இனத்திற்குள்ள மகா முட்டாள்தனமே.

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

Link to comment
Share on other sites

அருமையாக சொன்னீர்கள் ரகுநாதன்.இங்கு உலாவும் பல போலிகள் மத்தியில் நீங்கள் ஒரு நேர்மையான தமிழ்தேச நேசிப்பாளர் என்பதை நான் பலதடவை தங்கள் கருத்துக்களில் இனங்கண்டிருக்கன்.

Link to comment
Share on other sites

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

அதெல்லாம் எங்களுக்கு தெரியும் அதனால தான் ஆதரிக்கிரம் அவர் மட்டும் மும்பையில் இல்லாமல் போய் இருந்தால் இந்துக்கள் எல்லாவ்ருமே அங்கு இருந்து விரட்டப்பட்டு யுப்பார்கள்

இந்து மதத்தை காத்த தலைவர் தாக்கரே வாழ்க வன்முறைக்கு வன்முறை தான் சரியான பதில் என்று உணர்த்திய தலைவன் தாக்கரே வாழ்க

Link to comment
Share on other sites

ரகுநாதன்

உங்கள் கருத்து சரியாக இருந்தாலும், காலத்தே ஈழத் தமிழரின் விடியலுக்காக அவரையும் பாவித்திருக்க வேண்டும் (இந்துத்துவா அடிப்படைவாதம்) என்பதே எனது கருத்து. நமக்காக யாரும் சிலுவை சுமக்கப் போவதில்லை. நாம்தான் கண்ணீர் சிந்துகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அஞ்சலி செலுத்துமளவிற்க்கு...........இவர் எமக்கு யோக்கியமானவர் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு இந்துவா அவருக்கு மரியாத செய்றன் that's all

இப்பிடி பாக்கப்போனால் கருணாவும் ஒரு இந்து.........அவன் செத்தாலும் அஞ்சலி செலுத்துவீர்களோ?

Link to comment
Share on other sites

எனோட மொழிக்காகவும் என்னோட மதத்திற்காகவும் என்னோட தாய் நாடிர்க்காவும் எவன் பாடுபட்டு இருக்கிறானோ அவனுக்கு நான் அஞ்சலி செலுத்துவான் லட்சோபலட்சம் இந்துக்களை பாதுகாத்த அவருக்கு நான் அஞ்சலி செலுத்திரன் ஆட்டுக்குள்ள மாட்டையும் மாட்டுக்குல ஆட்டையும் கொண்டு வந்து படிக்காத முட்டாள் மாதிரி கேனத்தனமா கேள்வி கேட்டால் ஒண்டுமே செய்ய முடியா

20 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்திலும் ஒட்டுமொத்த பாம்பையும் கடைகளை அடைத்தும் இந்தியாவின் ஆளும்கட்சியில் இருந்து எதிர்கட்சியினர் வரையும் உலகெல்லாம் பறந்து வாழும் இந்துக்களும் அஞ்சலி செலுத்திய ஒரு கட்சித்தலைவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது பால் தாக்கரே இந்துக்களை பாதுகாத்தாரா?????? யாரிடமிருந்து?

Link to comment
Share on other sites

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

நன்றி ரகு அண்ணா. எனது அதே பார்வை. இவரையும் இவர் சார்ந்த சிவ சேனையையும் பிடிப்பதேயில்லை. செத்தவரை தூற்றுவது மனித நாகரிகம் அல்ல என்பதால் இத்துடன் விட்டு விடுகிறேன். சிவ சேனை, தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புபவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். பலரது அநியாய சாவுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுமை எனும் பெயரில் இந்துமதத்திலிருந்து மதம் மாறுபவர்களை எந்த பன்னாடைகளுக்கும் தெரியவில்லை? அதை நிறுத்த வக்கில்லை! வீபூதியும் குங்குமமும் நெற்றியில் வைத்து வியாபாரம் செய்யும் சகுனிகள்.

Link to comment
Share on other sites

அவர்களின் மதமாற்றங்களில் இருந்து அவர்களின் இனப்பெருக்கங்களில் இருந்து அவர்களின் மிரட்டல்களில் இருந்து அவர்களின் வியாபர அச்சுறுத்தல்களில் இருந்து மும்பை யை ஆக்கிரமித்திருந்த இஸ்லாமிய தாதாக்களிடம் இருந்து அடிமைப்பட்டு சோம்பேறிகளாக போய்க்கிண்டிருந்த மகாராஷ்டிரா மக்களை தட்டி எழுப்பியவன் மாராத்திய மொழிக்கு புத்தியிர் கொடுத்தவன் அவன் மும்பையின் புலி

Link to comment
Share on other sites

இது எமது நிலம் மரத்தியம் எமது தாய் மொழி இந்து சமையம் எமது மதம் தூங்கி கொண்டிருக்கும் மாரத்தியர்களே விழித்தெழுங்கள் என்று சாம்னா பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதி எழுதி மக்களை விழிப்படைய வைத்தவன்

Link to comment
Share on other sites

எனோட மொழிக்காகவும் என்னோட மதத்திற்காகவும் என்னோட தாய் நாடிர்க்காவும் எவன் பாடுபட்டு இருக்கிறானோ அவனுக்கு நான் அஞ்சலி செலுத்துவான் லட்சோபலட்சம் இந்துக்களை பாதுகாத்த அவருக்கு நான் அஞ்சலி செலுத்திரன் ஆட்டுக்குள்ள மாட்டையும் மாட்டுக்குல ஆட்டையும் கொண்டு வந்து படிக்காத முட்டாள் மாதிரி கேனத்தனமா கேள்வி கேட்டால் ஒண்டுமே செய்ய முடியா

20 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்திலும் ஒட்டுமொத்த பாம்பையும் கடைகளை அடைத்தும் இந்தியாவின் ஆளும்கட்சியில் இருந்து எதிர்கட்சியினர் வரையும் உலகெல்லாம் பறந்து வாழும் இந்துக்களும் அஞ்சலி செலுத்திய ஒரு கட்சித்தலைவர்

சரியான கருத்து சுண்டல் அடிக்கடி உணர்ச்சி வசப் பட்டு நல்ல கருக்களை எழுதுகிறீர்கள். ஏன் முஸ்லிம்மக்களில் ஏழைகள் இல்லையா. கிறிஸ்தவ மக்களில் ஏழைகள் இல்லையா முதலில் அவர்களுக்கு உதவி செய்யட்டும் அப்புறமா இந்துக்களை காப்ற்றலாம். சிவசேனா இல்லை என்றால் மும்பை எப்பவோ முஸ்லீம்ஸ் கையில் நம்ம கிழக்கு மாகான சபை போல போய் இருக்கும்
Link to comment
Share on other sites

இப்ராஹீம் ராவுத்தர் என்ற நிழல் உலக தாத இந்துக்கள் மேல் நடத்திய வெறி ஆட்டத்தைக்கண்டு வெகுண்டு எழுந்தவன்

Link to comment
Share on other sites

நமக்கு சிங்களவன் கொடுத்தது மத துவேசம், மொழி துவேசம், இனத்துவேசம், நிறத்துவேசம். அந்தனையும் அடங்கிய சிங்களவன் மாதிரி ஒரு வன்முறை வாதியும். எதோ நம்ம மொட்டைகள் மொட்டை அடிக்கிறார்கள். தாடி மீசையை ஒட்ட வழிக்கிறார்கள். இந்தாள் எல்லவற்றையும் சேர்த்து வளர்த்தார். மதவெறித் தக்கருக்கும், சமரசசன்மாக்கம் பேசும் தமிழருக்கு எப்படி ஒத்துவரும்? தமிழ் நாட்டு திராவிட கட்சிகளை தொடர்ந்து தாக்குபவர். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை மதிக்காத நாம் தக்கரின் சிவ சேனையை கும்பிடவா முடியும்?

இன உணர்வாக இன வெறியை ஊட்டமுடியாது. அடக்கப்பட்ட இனத்திற்கு விடுதலைக்கு மட்டும்தான் பாவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இனவெறி உங்களுக்கு இல்லை என்றால் மொழிப்பற்று உங்களுக்கு இல்லை என்றால் மண்பற்று உங்களுக்கு இல்லை என்றால் மதப்பற்று உங்களுக்கு இல்லை என்றால் வெக்கம் மானம் சூடு சுரணை உங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் எல்லாம் வெறும் ஜடம் எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என்றால் என் ஹகீம் தொடங்கி ஏனைய இஸ்லாமிய அமைச்சர்களுக்கு எதிராக கந்தஷஷ்டி கவசம் பாடிக்கொண்டு திரிகின்றீர்கள் திரி திரியாகா?

மாராத்திய மண் நாங்கள் ஆண்ட மண் வீரத்தின் விளை நிலமாம் படை எடுத்து வந்த எதிரிகளை எல்லாம் துவசம் செய்தானே மன்னர்களின் மன்னன். மா மன்னன் சிவாஜி ஆண்ட மண் இது மராத்தியர்களின் மொழி கலை கலாச்சாரத்தை கொண்ட மண் இது ஒரு வேலை உணவுர்க்கும் வேலைக்கும் அல்லாடி திரிகின்றானே என் மண்ணின் மைந்தன் அவனுக்கு எங்கும் எதிலும் முன்னிரிமை கொடு ஏன் என்றால் இது எண்கள் பூமி நாங்கள் ஆண்ட பூமிஎன்று கர்ஜித்தான் அவன்

அவன் Thavaru என்றால் எங்கள் போராட்டமும் தவறு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ராஹீம் ராவுத்தர் என்ற நிழல் உலக தாத இந்துக்கள் மேல் நடத்திய வெறி ஆட்டத்தைக்கண்டு வெகுண்டு எழுந்தவன்

சுண்டல்,

அது இப்ராகீம் ராவுத்தர் இல்லை. தாவுத் இப்ராகீம். நீங்கள் சொல்லும் இப்ராகீம் ராவுத்தர் தமிழ்ப் பட உலகில் முண்ணனி தயாரிபாளர்களில் ஒருவர். தாவுத் இப்ராகீம் 1993 மும்பய் தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமானவன். இன்றுவரை டுபாய் நாட்டில் பாக்கிஸ்த்தானிய புலநாய்வு அமைப்பின் பாதுகாப்பிலிருக்கிறான். ஆனாலும் கூட இன்றுவரைக்கும் பொலிவூட் முழுதும் அவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. பல படங்களுக்குத் தயாரிப்புப் பணம் கூட அவனது ஆட்கள் மூலம்தான் கொடுக்கப்படுகிறது.

1992 மும்பய் இந்து முஸ்லீம் கலவரத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தனது முஸ்லீம் மக்களுக்காக அவன் குண்டுகளை வெடிக்கவைத்தான். அப்படிப் பார்க்கும்போது அவன் கூட தனது மக்களுக்காகத்தான் போரிட்டிருக்கிறான். என்னைப்பொறுத்தவரை தாவுத் இப்ராகிமுக்கும் பால் தாக்கரேயுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. இருவருமே மத அடிப்படைவாதிகள்.

Link to comment
Share on other sites

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா

ஆம் அவர் விஜிய காந்தின் நெருங்கிய நண்பர் தமிழ் திரை உலகமே அவர்களின் நட்பைக் கண்டு பொறாமை கொண்டது இபொழுது இருவரும் எதிரிகள் மீண்டும் தவறுக்கு மனம் வருந்துகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பால்தாக்கரே இறுதி சடங்கு[/size]

[size=4]

bal-003.jpg[/size]

[size=4]

bal-004.jpg[/size]

[size=4]

bal-005.jpg[/size]

[size=4]

bal-006.jpg[/size]

[size=4]

bal-007.jpg[/size]

[size=4]

bal-008.jpg[/size]

[size=4]

bal-008.jpg[/size]

[size=4]

bal-009.jpg[/size]

[size=4]

bal-0010.jpg[/size]

[size=4]

bal-0011.jpg[/size]

[size=4]

bal-0011.jpg[/size]

[size=4]

bal-0012.jpg[/size]

[size=4]

bal-0013.jpg[/size]

[size=4]

bal-0014.jpg[/size]

[size=4]

bal-0015.jpg[/size]

[size=4]

bal-0016.jpg[/size]

[size=4]

bal-0017.jpg[/size]

[size=4]

bal-0018.jpg[/size]

[size=4]

bal-0019.jpg[/size]

[size=4]

bal-0020.jpg[/size]

பட‌ங்கள் நக்கீரனிலிருந்து....

Link to comment
Share on other sites

காலம் காலமாக முஸ்லிம்களின் படையெடுப்பால் அடிமைப்பட்டு கிடந்த மாரட்டிய இந்துக்களை மீட்டவர்

அடிச்சா திரும்ப அடி

உதைச்சா உதை இது தான் அவரின் கொள்கை அகிம்சை எல்லாம் காந்தி காலத்தோட சரி என்று கூறியவர்

Mgr க்கு கூடிய கூடத்தை விட அதிகம் இவரின் இறுதி சடங்கிற்கு இதுவே சாட்சி இந்துகள் இவர் மேல் வைத்த பற்றிற்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.